Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசபடைகளுடன் இணைந்து தாக்குதல் நடத்தும் கருணா குழு!

Featured Replies

அரசபடைகளுடன் இணைந்து தாக்குதல் நடத்தும் கருணா குழு!

தமிழகத்தில் வைத்து அம்பலப்படுத்துகிறார் இலங்கை பிரதியமைச்சர் ராதாகிருஸ்ணன்.

இராமேஸ்வரம் ஓக. 02

இலங்கை அரச படைகளுடன் இணைந்து கருணா குழுவினர் பல தாக்குதல்களை நடத்தி வருகின்றனர் என தமிழத்தில் வைத்துத் தெரிவித்திருக்கும் பிரதியமைச்சர் ராதாகிருஸ்ணன், இதனால் அப்பாவிப் பொதுமக்கள் பலரும் உயிரிழக்க நேரிடுகின்றது என்றும் குறிப்பிட்டிருக்கின்றார்.

தனிப்பட்ட பயணமொன்றை மேற்கொண்டு தமிழகத்தின் இராமேஸ்வரம், கோஸ்வாமி மடத்தில் குடும்பத்தினருடன் தற்சமயம் தங்கியிருக்கும் தொழிற்கல்வி மற்றும் தெழில்நுட்ப பயிற்சி பிரதி அமைச்சர் பி. ராதாகிருஸ்ணன், நேற்று இராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் சுவாமி தசிசனம் செய்தார். இந்தச் சந்தர்ப்பத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த அவர், ஈழத் தமிழர்களின் பல் வேறுபட்ட பிரச்சினைகள் குறித்து எடுத்தியம்பினார் எனத தமிழக நாளேடுகள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.

ராதாகிருஸ்ணன் தெரிவித்தார் என நாளேடுகளில் வந்த செய்திகள் வருமாறு :-

இலங்கையில் இனப்பிரச்சனை தீவிரமாகியுள்ளது. இராணுவ கெடுபிடிகளும் அதிகரிதுவிட்டது. தமிழர்கள் நிம்மதி, உயிருக்கு உத்தரவாதம் தேடியே இந்தியாவிற்கு அகதிகளாக வருகின்றனர்.

உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் பாதுகாப்பு;ப படைகளினால் தமிழர் பகுதியிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர். இலங்கையிலேயே உள்நாட்டு அகதிகளாக வாழும் ஒன்றரை இலட்சம் தமிழர்களின் வாழ்க்கைக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை.

இனப்பிரச்சினைக்கு யுத்தத்தால் தீர்வு காண முடியாது. சமாதானம் அரசியல் பேச்சு மூலம்மாகத்தான் தீர்வு காணமுடிம்;. இலங்கை அரசு இதில் அதிக அக்கறைகாட்டி வருகிறது.

இலங்கை இராணுவத்துடன் புலிகளிடமிருந்து பிரிந்து சென்ற கருணா குழுவினர் இணைனந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதானல் சில நேரங்களில் அப்பாவி தமிழர்களும் பாதிக்கப்படுகின்றனர்.

இலங்கையில் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படுவதற்கு இந்தியா தலையிட வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம். நாம் இந்திய வம்சாவளியை சேர்ந்தவன் என்பதால் இந்திய அரசு இதில் தலையிட வேண்டும் என்று தனிப்பட்ட முறையிலும் கேட்டுக் கொள்கிறேன்;.

இந்திய அரசால் கச்சதீவு இலங்கை அரசிற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இருநாட்டு மீனவர்களும் மீன் பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்திய - இலங்கை கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் இலங்கை இராணுவத்தினரால் தாப்பப்படுவது கண்டிக்கத்தக்கது. அரசின் நடவடிக்கையை மீறி சில நேரங்களில் கடற்படையினாரல் துப்பாக்கி சூடு நடத்தப்படுகிறது. இதற்கு வேறு பல காரணங்களை கடற்படையினர் கூறுகின்றனர். இது தொடரக்கூடாது. கச்சத்தீவில் இருநாட்டு மக்களும் கலந்து கொண்டு திருவிழா கொண்டாடும் நிலை உருவாக வேண்டும்;. இரு நாட்டு மீனவர்களும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் பாக்ஜலசந்தி, மன்னார்கடல் பிராந்தியத்தில் ஒற்றுமையுடன் மீன் பிடித் தொழில் செய்வதற்கான சூழ்நிலை உருவாக்க நடவடிக்கை எடுப்பது குறித்து இலங்கை மீன் வளத்துறை அமைச்சரிடம் பேசுவேன். என்று அவர் உறுதியளித்தார்.

இதே சமயம் நேற்று முன் தினம் அகதிகளாக வந்த ஈழத்தமிழரும் இதே கருத்தை தெரிவித்துள்ளனர்.

யாழ். மற்றும் நெடுந்ததீவைச் சேர்ந்த ஏழு பெண்கள் எட்டுக் குழந்தைகள் உட்பட 26 ஈழத்தமிழ் அகதிகள் அங்கிருந்து படகில் புறப்பட்டு நேற்று முன் தினம் அதிகாலை தமிழகத்தை வந்தடைந்தனர்.

அகதியாக வந்த யோகநாதன் (வயது 47) என்பவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் :

இலங்கையின் இராணுவத்தினருடன் சேர்ந்து கருணா குழுவை சேர்ந்தவர்களும் தமிழர்களை தாக்குகின்றனர். அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவது அதிகரித்து விட்டது. உணவுப் பொருட்களின் விலையும் பன்மடங்கு அதிகரித்துவிட்டது. இலங்கை இராணுவத்தினரின் நடவடிக்கைகளுக்குப் பயந்து தான் நாம் இங்கு அகதிகளாக வந்துள்ளோம். என்றாh.

நன்றி : சுடர் ஒளி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.