Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நாகா மற்றும் ஈழ விடுதலையில் "இந்து"வின் இரட்டை வேடம்: பெரியார் முழக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாகா மற்றும் ஈழ விடுதலையில் "இந்து"வின் இரட்டை வேடம்: பெரியார் முழக்கம்

தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்று, ஓயாது எழுதி வரும் "இந்து" பார்ப்பன நாளேடு (ஜூலை 30 ஆம் நாள்), நாகாலாந்து இயக்கத்தினருடன் பேச்சுவார்த்தையைப் பொறுப்புடன் நடத்த வேண்டும் என்று இந்திய அரசுக்கு "அறிவுரை" கூறுகிறது என்று பெரியார் திராவிடர் கழகத்தின் உத்தியோகப்பூர்வ வார ஏடான "புரட்சி பெரியார் முழக்கம்" சாடியுள்ளது.

பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் விடுதலை க.இராசேந்திரனை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் பெரியார் முழக்கம் (ஓகஸ்ட் 2) இதழில் இது தொடர்பில் இடம்பெற்றுள்ள கட்டுரை விபரம்:

நாகா விடுதலைக்குப் போராடும் நாகா தேசிய சோசலிஸ்ட் கவுன்சிலுக்கும் இந்தியாவுக்குமிடையே இன்று (ஜூலை 31) ஆம் நாளுடன் முடிவுக்கு வந்துள்ள போர் நிறுத்த ஒப்பந்தம், மீண்டும் தொடருவதற்கு இப்போது பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

நாகா தேசிய இன விடுதலைப் போராட்டம் பற்றிய ஓர் அறிமுகம்

இந்து சாதி அமைப்பிலிருந்து முழுமையாக வேறுபட்ட தனித்துவ மிக்கவர்கள் நாகா தேசிய இன மக்கள். நீண்டகாலமாக அங்கே கிராம நிர்வாக அமைப்பு முறை தான் நிலவியது.

19 ஆம் நூற்றாண்டின் இறுதியில், அசாம், மணிப்பூர் பிரதேசங்களைத் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த பிரிட்டிஷ் ஆட்சி, அதன் வழியாக நாகலாந்தையும், தனது ஆட்சிக்குக் கீழே கொண்டு வந்தது. ஆனாலும், தனது காலணி நிர்வாக அமைப்பை, நாகர்கள் மீது பிரிட்டிஷ் நிர்வாகம் திணிக்கவில்லை.

பிரிட்டிஷ் இந்தியா காலத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் நாகாலாந்துக்குப் பொருந்தாது என்ற நிலையே நீட்டித்தது. மணிப்பூர் மாநிலத்தில் கூட நாகர்கள் வாழ்ந்த பகுதி பழங்குடியினர் பகுதியாக அறிவிக்கப்பட்டு, மணிப்பூர் ஆட்சி நிர்வாகத்திலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தது. இந்து சாதி அமைப்பின் ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமூகமாக நாகா சமூகம் இருந்ததைப் புரிந்து கொண்ட பிரிட்டிஷார், தங்களது நிர்வாக அதிகாரக் கட்டமைப்பின் கீழ், கொண்டு வராமல், நாகா கிராம நிர்வாக முறையை அங்கீகரித்தனர்.

1947 இல் பிரிட்டிஷார், இந்தியாவை விட்டு வெளியேற முடிவு செய்த போது இந்தியாவில் இடைக்கால அரசு ஒன்று ஏற்படுத்தப்பட்டது. பிரிட்டிஷார், ஆலோசனைப்படி, இந்தியாவின் இடைக்கால நிர்வாக கவுன்சிலும், நாகா தேசிய கவுன்சிலும் கலந்து பேசி 9 அம்சங்கள் அடங்கிய ஒப்பந்தத்தை உருவாக்கிக் கொண்டன. நாகர்கள் வாழக்கூடிய பகுதிகளை இணைத்த "நாகாலிம்" (அகண்ட நாகாலாந்து) அரசைப் பாதுகாப்பது என்றும், இந்த அரசுக்கு இந்தியா 10 ஆண்டு காலம் மட்டும், பாதுகாப்பு வழங்கும் என்றும், அதற்குப் பிறகு தங்களது எதிர்காலத்தை நாகர்கள் முடிவு செய்து கொள்ளலாம் என்றும் அந்த உடன்பாடு கூறியது.

ஆனால், இந்திய தேசியப் பார்ப்பனர்கள் வழக்கம் போல் தங்கள் திருவிளையாடல்களையே நடத்தினர். அரசியல் நிர்ணய சபையில் இந்த 9 அம்ச உடன்பாட்டுக்கு புதிய விளக்கங்கள் தரப்பட்டன. இந்திய அரசியல் அமைப்புக்குக் கீழே தான் அதற்குக் கட்டுப்பட்டே நாகலாந்து கிராம சபைகள் செயல்படும் என்றும், இதை இந்தியாவே நாகாலாந்து தேசிய கவுன்சிலைக் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக அமுல்படுத்தும் என்றும் முடிவு செய்தனர்.

அதன் பிறகு, நாகர்களின் பூர்வீகப் பிரதேசங்களை, இராணுவத்தின் மூலம் கைப்பற்ற இந்திய தேசியப் பார்ப்பன ஆட்சி ஆயத்தமானது.

1947 ஜூலை 19 இல் இந்தப் பிரச்சினையை காந்தியார் கவனத்துக்குக் கொண்டு போனபோது,

"நாகர்கள் விரும்பினால், இந்தியாவிலிருந்து பிரிந்து சுதந்திர நாடு அமைத்துக் கொள்ள முழு உரிமை உண்டு" என்று கூறினார். நாகர்களின் தேசத்தை இராணுவத்தின் மூலம் பறிப்பதைத் தாம் எதிர்ப்பதாகவும் காந்தி அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து, 1947 ஓகஸ்ட் 14 ஆம் நாள், நாகாலாந்து தேசிய கவுன்சில், நாகாலாந்தை சுதந்திர நாடாக அறிவித்து, அய்.நா., பிரிட்டன் மற்றும் இந்தியாவுக்கு இதைத் தெரிவித்தது.

இந்த சுதந்திரப் பிரகடனத்தை இந்தியா ஏற்க மறுத்தது.

சிலர் தவறான பாதைக்கு நாகாலாந்தை அழைத்துச் செல்வதாக இந்தியா குற்றம் சாட்டியது.

வாக்கெடுப்பு நடத்தி தீர்மானிக்கலாம் என்று நாகர்கள் முன் வைத்த கோரிக்கையையும் இந்தியா ஏற்க மறுத்தது.

1951 ஆம் ஆண்டு மே 16 ஆம் தேதி, நாகர்களே, ஒரு வாக்கெடுப்பை நடத்தினர். அதில் 99.9 சதவீதம் பேர், நாகாலாந்து சுதந்திர நாடாக வேண்டும் என்று வாக்களித்தனர்.

நாகா மக்களின் உணர்வுகளை அங்கீகரிக்க மறுத்த இந்திய தேசியப் பார்ப்பன ஆட்சி, இராணுவத்தை அனுப்பி நாகா தேசிய இனத்தை ஒடுக்கி, அவர்களின் சுதந்திரக் குரலை நசுக்க முயன்றது.

1956 இல் நாகா பிரச்னை தொடர்பான விவாதம் நாடாளுமன்றத்தில் வந்தபோது, அன்றைய பிரதமர் நேரு, நாகர்கள் உரிமை தொடர்பாக, அவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட சிறப்புரிமைகளை இந்தியா விரும்பினால், மாற்றியமைத்துக் கொள்ளும் என்று அறிவித்தார்.

இந்த நிலையில் - நாகர்கள் தங்களுக்கென ஒரு இராணுவத்தைக் கட்டி எழுப்பி, 1956 மார்ச் மாதத்தில் "நாகலாந்து தேசிய கூட்டமைப்பு" அரசைப் பிரகடனப்படுத்தினர்.

ஆக்கிரமிப்பு இந்திய இராணுவத்துக்கு எதிராகப் போராட்டத்தைத் துவக்கினர். அடுத்த மூன்று மாதங்களில் நாகர்கள் பிரதேசங்களிலிருந்து, இந்திய இராணுவம் வெளியேற்றப்பட்டது.

மீண்டும், ஆயிரக்கணக்கான படைகளுடன் இந்தியா தனது ஆக்கிரமிப்பைத் தொடங்கியது.

1958-59 இல் ஆக்கிரமிப்பு இந்திய இராணுவத்தை பல்லாயிரக்கணக்கான நாகர்கள் சுற்றி வளைத்து,

அவர்களை சித்திரவதை முகாம்களில் அடைத்தனர். உணவு, தண்ணீர் கூட தரப்படவில்லை. பல இந்திய இராணுவத்தினர் இறந்தனர்.

நிலைமை மோசமாகவே பெட்ரண்ட்ரசல், மைக்கேல் காட் (இவர் காந்தியின் ஆரம்பகால நண்பர்) சமரசம் பேச முன் வந்தனர்.

இவர்கள் தலையீட்டினால் போர் நிறுத்தம் செய்து கொள்ள இந்தியா முன்வந்தது. ஆனாலும், 3 ஆண்டுகளிலேயே 1967 இல் போர் நிறுத்தம் முறிந்து சமாதான ஒப்பந்தம் சீர்குலைந்தது. தொடர்ந்து இந்தியா, நாகாலாந்தை, இந்துக்களின் நாடாக மாற்றி இந்தியாவுக்குள் இணைக்க திட்டமிட்டு காய் நகர்த்தியது.

இந்து மதத் தீவிரவாதிகளைக் கொண்டு போய் இறக்கி, மதமாற்றம் செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டது. இதற்கான பொறுப்பை ஒரு இந்து அமைப்பிடம் வழங்கினர். வளமான வனப்பகுதியான நாகா பிரதேசத்தில் மரங்களை வெட்டும் உரிமையை 99 ஆண்டுகளுக்கு அந்த இந்துமத அமைப்புக்கு இந்திய அரசு வழங்கி, நாகாலாந்துக்குள் அனுப்பி வைத்தது. மத மாற்றத்துக்காக பெரும் தொகையைத் திரட்டுவதற்காக, இந்த ஏற்பாட்டை செய்தனர். பள்ளிகளில் இந்து மதம் பாடமாக்கப்பட்டது. இதற்காக மத்திய இந்தியாவிலிருந்து பார்ப்பன ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்டனர்.

கிறித்துவ மதம் அன்னிய மதம் என்று அறிவிக்கப்பட்டு, கிறித்துவ மதப் பிரச்சாரம் தடை செய்யப்பட்டது. கிறித்துவ பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளுக்கு பைபிள் கதை சொல்லவும், கிறித்துவ முறைப்படி உடல் அடக்கம் செய்யவும் கூட தடை செய்யப்பட்டது.

கிறித்துவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு உரிமைகள் முழுமையாக மறுக்கப்பட்டன. கிறித்துவ நிறுவனங்கள் அழிக்கப்பட்டன. இந்த அழித்தொழிப்பு நடவடிக்கைகளுக்கு சட்ட வடிவம் தர 1978 இல் இந்திய நாடாளுமன்றத்தில் மதச் சுதந்திர மசோதா ஒன்று தனிநபர் மசோதாவாக அறிமுகப்படுத்தப்பட்டது. மதச்சார்பின்மைக்கு எதிரான இந்த மசோதா கடும் எதிர்ப்பினால் கைவிடப்பட்டது.

1975 இல் இந்தியா ஷில்லாங் ஒப்பந்தம் என்ற சரணாகதி ஒப்பந்தத்தை நாகாலாந்து மக்கள் மீது திணித்தது. மக்களிடமிருந்து அன்னியமாகிவிட்ட ஒரு சில நாகா தலைவர்கள் இதை ஏற்றுக்கொண்டாலும், நாகா மக்களிடம் செல்வாக்குள்ள தலைவராகத் திகழ்ந்த டி.எச்.மொய்வா மற்றும் சிஷி (இவர் நாகாலாந்து கூட்டாட்சி அரசில் வெளியுறவுத்துறை செயலாளராக இருந்தவர்) இதை ஏற்கவில்லை.

1980 இல் மொய்வா நாகர்களின் அகண்ட நாகாலாந்துக்கான "தேசிய சோஷலிஸ்ட் கவுன்சில்" என்ற அமைப்பை உருவாக்கினார்.

இந்திய இராணுவத்துக்கு எதிராக நாகா இராணுவம் தாக்குதலைத் தீவிரமாக்கியது.

1980 களின் மத்தியில் நாகர்களின் தாக்குதலை சமாளிக்க முடியாமல், இந்திய இராணுவம் திணறியது. அரசியல் ரீதியாக, கடும் பின்னடைவை சந்தித்தது, இந்திய தேசியப் பார்ப்பன ஆட்சி. இனியும், இராணுவத்தால் நாகர்களின் தேசிய விடுதலை உணர்வை நசுக்க முடியாது என்பதைப் புரிந்து கொண்ட இந்திய தேசியப் பார்ப்பன ஆட்சி, மூன்றாவது நாட்டின் முன்னிலையில் நிபந்தனையற்ற சமரசப் பேச்சு வார்த்தைக்கு அழைத்தது. இரண்டு ஆண்டுகள் திரை மறைவில் இதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் நடந்தன.

கடைசியாக 1997 ஜூலை 25 இல் போர் நிறுத்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது. ஜப்பான் உட்பட பல்வேறு நாடுகளில் நாகா தலைவர் மொய்வாவுடன், இந்தியாவின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைகள் நடத்தினர். போர் நிறுத்த ஒப்பந்தம் 2007, ஜூலை 31 ஆம் தேதியோடு முடிவுக்கு வருகிறது. பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அசாம், அருணாசல பிரதேசம், மணிப்பூர் மாநிலங்களில் நாகர்கள் வாழும் பகுதிகளைச் சேர்த்து அகன்ற நாகாலாந்து அமைக்கப்பட வேண்டும் என்ற தங்களது கோரிக்கையில் நாகாலாந்து சோஷலிஸ்ட் கவுன்சில் உறுதியாக உள்ளது.

10 ஆண்டுகாலமாக அமுலில் இருந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஜூலை 31-க்குப் பிறகும் நீட்டிப்பது பற்றி இரு தரப்பினரும் நாகாலாந்தில் திம்மாப்பூரில் கடந்த 10 நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இவ்வளவு காலமாக ஒசாக்கா (ஜப்பான்), பாங்காங் (தாய்லாந்து), புதுடில்லி போன்ற நகரங்களில் நடந்த பேச்சு வார்த்தை, இப்போது தான் முதன்முதலாக நாகாலாந்திலேயே திம்மாப்பூரில் நடப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்று, ஓயாது எழுதி வரும் "இந்து" பார்ப்பன நாளேடு (ஜூலை 30ஆம் நாள்), நாகாலாந்து இயக்கத்தினருடன் பேச்சுவார்த்தையைப் பொறுப்புடன் நடத்த வேண்டும் என்று அரசுக்கு அறிவுரை கூறுகிறது. இது "இந்து" வின் இரட்டை வேடத்தைக் காட்டுகிறது.

தேசிய இனங்களின் நியாயமான உரிமைகளை இந்திய தேசியப் பார்ப்பனியம் தனது காலடியில் நசுக்கி வரும் கொடிய அடக்குமுறைக்கு நாகாலாந்து தேசிய இனப் போராட்டம், சான்றாக நிற்கிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-புதினம்

எட்ட முடியாத இடத்தில் படை (சொறி) வந்தால் ஏதாவது கொண்டுதான் சொறிய வேண்டும். வந்திருக்கிறது கண்ணுக்குத் தெரிகிற இடத்திலல்லவா, களிம்பு பூசித்தான் குணப்படுத்த வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.