Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போதைப் பொருள் கடத்தில் வழக்கில் தொடர்புடைய இருவர் கைது - இலங்கையில் இருந்து அகதிகள் போல் வந்தவர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போதைப் பொருள் கடத்தில் வழக்கில் தொடர்புடைய இருவர் கைது - இலங்கையில் இருந்து அகதிகள் போல் வந்தவர்கள்

image.gif.c06aee5a1aa4d7b49f69875dd5ca4370.gif
BBCCopyright: BBC

இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வரும் இருவர் அகதிகள் போல் தமிழ்நாட்டுக்கு வந்த போது போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக உயிர் வாழ முடியாமல் தமிழ்நாட்டில் அகதியாக வந்ததாக இன்று காலை தொண்டி புதுக்குடி கடற்கரை பகுதிக்கு இருவர் வந்தனர். அவர்களிடம் மத்திய, மாநில உளவுத்துறையினர் மற்றும் கடலோர காவல் படை போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், இலங்கையில் போதைப் பொருள் வழக்கு நிலுவையில் உள்ளதால் யாழ்ப்பாணத்தில் இருந்து படகை திருடிகொண்டு தமிழ்நாட்டுக்கு தப்பி வந்தது தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இருவரும் இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் குருநகர் பகுதியை சேர்ந்த சீலன, அருள்ராஜ் என்பது தெரியவந்துள்ளது.

விசாரணையின் போது முன்னுக்கு பின் முரணாக தகவல் அளித்ததால் சந்தேகமடைந்த பாதுகாப்பு அதிகாரிகள் இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள போலீஸ் மற்றும் உளவுத்துறை அதிகாரிகளைத் தொடர்புகொண்டு இருவர் குறித்து தகவல் சேகரித்தனர்.

அப்போது, இருவர் மீதும் போதைப் பொருள் கடத்தல் வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

இருவரையும் மண்டபம் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கவில்லை. அவர்கள் மீது சட்டவிரோதமாக இந்தியாவுக்குள், கடவுச்சீட்டு இன்றி ஊடுருவியதாக தேவிபட்டினம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

https://www.bbc.com/tamil/topics/c40379e2n2zt?ns_mchannel=social&ns_source=twitter&ns_campaign=bbc_live&ns_linkname=626a6fbb6b7942142fe95cb7%26போதைப் பொருள் கடத்தில் வழக்கில் தொடர்புடைய இருவர் கைது - இலங்கையில் இருந்து அகதிகள் போல் வந்தவர்கள்%262022-04-28T10%3A52%3A10.391Z&ns_fee=0&pinned_post_locator=urn:asset:0f104c1f-aac4-474c-86c3-f37a6250b0e8&pinned_post_asset_id=626a6fbb6b7942142fe95cb7&pinned_post_type=share

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். குருநகரை சேர்ந்த இருவர் தமிழகத்தில் தஞ்சம்!

தமிழகம் சென்ற இரு இளைஞர்களுக்கு எதிராக போதைப்பொருள் கடத்தல் வழக்கு?

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இருந்து தமிழகம் சென்ற இரு இளைஞர்கள் மீதும் இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளமையால் , அவர்களுக்கு எதிராக வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குருநகர் பகுதியை சேர்ந்த இரு இளைஞர்கள் தமிழகம் , தனுஷ்கோடியை அண்மித்த தொண்டி பகுதியில்  நேற்று (வியாழக்கிழமை) அதிகாலை தமிழக கடலோர பாதுகாப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

குறித்த இருவரும் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அகதிகளாக தமிழகத்திற்கு தஞ்சம் கோரி வந்ததாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிவித்துள்ளனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது , குறித்த இருவருக்கும் எதிராக இலங்கை நீதிமன்றில் போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அதனால் இருவரையும் அகதிகளாக ஏற்காமல் அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

https://athavannews.com/2022/1279108

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.