Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரதமரை நீக்கி இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்கும் மகா சங்கத்தினரின் கோரிக்கைக்கு எதிராக அரச தலைவர்கள் செயற்பட்டால் அது சாபமாக மாறும் - ஓமல்பே சோபித தேரர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரதமரை நீக்கி இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்கும் மகா சங்கத்தினரின் கோரிக்கைக்கு எதிராக அரச தலைவர்கள் செயற்பட்டால் அது சாபமாக மாறும் - ஓமல்பே சோபித தேரர்

(இராஜதுரை ஹஷான்)

இடைக்கால அரசாங்கம் தொடர்பில் மகாநாயக்க தேரர்கள் வழங்கியுள்ள ஆலோசனைகள் புறக்கணிக்கப்பட்டால் இதுவரை வழங்கப்பட்ட ஆசிர்வாதங்கள் அனைத்தும் சாபமாக மாறும் என்பதை அரச தலைவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

எதிர்க்கட்சியினரும் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் சுயநல அரசியல் நோக்கில் செயற்படக் கூடாது என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.

குறுகிய அரசியல் நோக்கிற்காக அரசியல்வாதிகள் தமிழ் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக கடந்த காலங்களில் கட்டவிழ்த்து விட்ட அடக்குமுறைகள்,இனவாத செயற்பாடுகளுக்கு பௌத்த மத தலைவர்களில் ஒருசிலர் துணை சென்றுள்ளமை வேதனைக்குரியது எனவும் அதிருப்தி வெளியிட்டார்.

ஆயிரம் பௌத்த தேரர்களின் பங்குப்பற்றலுடன்  சனிக்கிழமை (30) சுதந்திர சதுக்க வளாகத்தில் இடம்பெற்ற சங்கமகா பிரகடனத்திற்கான மகா சம்மேளனத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவின் தவறான நிர்வாகத்தினால் நாடு பாரிய விளைவுகளை எதிர்கொண்டுள்ளது.

நாகரீமான முறையில் ஆடையணிந்து வெளிநாடுகளில் யாசகம் பெறும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடியினை கருத்திற்கொண்டு நட்பு நாடுகள் மனிதாபிமான அடிப்படையில் இலங்கைக்கு உதவிக் கரம் நீட்டியுள்ளமை வரவேற்கத்தக்கது.

சமூக மட்டத்தில் தோற்றம் பெற்றுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபித்து தீர்வு காணவும், பிரதமர் உட்பட அமைச்சரவையை முழுமையாக பதவி நீக்குமாறும் மாகாநாயக்க தேரர்கள் கடந்த 4 ஆம் திகதி ஜனாதிபதியிடம் கூட்டாக அறிவித்தனர்.

எவ்வித பதிலும் கிடைக்காத காரணத்தினால் கடந்த 20 ஆம் திகதி  மகாநாயக்க தேரர்கள் மீணடும் ஜனாதிபதியிடம் இடைக்கால அரசாங்கத்தை வலியுறுத்தி கூட்டாக வலியுறுத்தினார்கள்.

இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்காவிடின் சங்க மகா பிரகடனத்தை அறிவிக்க நேரிடும் என அறிவித்ததை தொடர்ந்து ஜனாதிபதி இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிப்பதாக குறிப்பிட்டுள்ளார். அதுவும் தற்போது இழுபறி நிலையில் உள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை நீக்கி இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்குமாறு மகா சங்கத்தினர் முன்வைத்துள்ள கோரிக்கைக்கு புறம்பாக அரச தலைவர்கள் செயற்பட்டால் இதுவரை காலமும் வழங்கிய ஆசிர்வாதம் அனைத்தும் சாபமாக மாறும் என்பதை நினைவில் வைத்துகொள்ள வேண்டும்.

அரசாங்கத்தில் அதிகாரம் மிக்கவராக நிதி மற்றும் நீதியமைச்சர் அலிசப்ரி உள்ளார். ராஜபக்ஷ குடும்பத்தின் மோசடியை மறைப்பதற்காகவே அமைச்சர் அலி சப்ரிக்கு முக்கிய அமைச்சு பதவிகள் ஊடாக கப்பம் வழங்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் உண்மை பின்னணி தன்மை தற்போது கட்டம் கட்டமாக வெளிவருகிறது.

தமிழ் முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிராக அரசியல்வாதிகள் கடந்த காலங்களில் கட்டவிழ்த்து விட்ட இனவிரோதங்கள், அடக்குமுறைக்கு ஒருசில பௌத்த மத தலைவர்கள் துணைசென்றுள்ளமை வேதனைக்குரியது என்றார்.
 

 

https://www.virakesari.lk/article/126656

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

இதுவரை வழங்கப்பட்ட ஆசிர்வாதங்கள் அனைத்தும் சாபமாக மாறும் என்பதை அரச தலைவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

இதுவரை நாட்டில் ஓடிய இரத்த ஆற்றுக்கு இவர்களின் ஆசீர்வாதமே காரணம் என்கிறார்! நீங்கள் பிரித் ஓதி, நூல் கட்டி, ஆசீர் வழங்கி அனுப்பி வைத்த வீரர்களே எங்களையும், எங்கள் இருப்பிடங்களையும் சிதைத்தனர். அவர்களை வாழ்த்தி வரவேற்றவர்களும் நீங்களே, முன்னிருக்கைகளில் இருந்து விழா கொண்டாடியவர்களும் நீங்களே. இன்று உங்களால் இதை கூற முடியுமென்றால்; ஏன் அன்று இதை கூறி எங்கள் அழிவை, இன்றைய உங்கள் அழிவை தடுத்திருக்க முடியாது? உங்கள் தவறுகளுக்கு இன்று காரணம் கூறி, உங்களை நிரபராதிகளாக்கப் பார்க்கிறீர்கள். பாருங்கள் முடியுமா என்று?

2 hours ago, கிருபன் said:

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் உண்மை பின்னணி தன்மை தற்போது கட்டம் கட்டமாக வெளிவருகிறது.

காலங்கடந்த ஞானம், கையை சுட்டுக்கொண்டபின் பிறந்திருக்கு.

2 hours ago, கிருபன் said:

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் உண்மை பின்னணி தன்மை தற்போது கட்டம் கட்டமாக வெளிவருகிறது.

அப்போ! கர்தினால் சொன்னபோது தாங்கள் அவர்களுக்கெதிராக ஆர்ப்பாட்டம் செய்ததேனோ? நீங்களும் ஐ. நா.வுக்கு போகத் தயாரா?

  • கருத்துக்கள உறவுகள்

“அலி சப்ரி இன்று அரசாங்கத்தின் ஆதிக்க சக்தியாக மாறிவிட்டார். அலி சப்ரிக்கு நாட்டை ஆளும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சகம் முழு நாட்டின் பணம். அதேநேரம் நீதி அமைச்சும் வழங்கப்பட்டுள்ளது. நீதியமைச்சர் பதவியை இராஜினாமா செய்தவரை மீண்டும் அங்கேயே ஏன் வைக்கிறார்கள்? காரணம் நமக்குப் புரிகிறது.

ராஜபக்ச குடும்பம் இதுவரை செய்த மோசடிகள், ஊழல்கள், திருட்டுக்கள் அனைத்தையும் மூடி மறைத்து அவர்களைக் காப்பாற்றும் ஒப்பந்தத்தில் அலி சப்ரி உள்ளார். அதற்கான இழப்பீடு இதுதான். இன்று, முழு நாடும் அலி சப்ரியின் கைதியாக உள்ளது. நாட்டுக்கான பொறுப்புகளை நிறைவேற்றுவதில் அரச தலைவர் தவறிவிட்டார் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

“நாட்டு மக்களுக்கு தர்மத்தின்படி பாதுகாப்பு அளித்து, நாட்டு மக்களின் வாழ்க்கை முறையைப் பாதுகாத்து, அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டிய அரசாங்கத்தின் பொறுப்பு இப்போது முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. அரசு தோல்வி. கோட்டாபய, மகிந்த ராஜபக்ச, உங்கள் வாக்குறுதிகள் அனைத்தும் இன்று உருளைக்கிழங்கு போல் நழுவிப் போய்விட்டது.

நீ தோற்று போனாய். இந்த தோல்வியை ஒப்புக்கொள். இந்தத் தோல்வியை ஏற்றுக்கொண்டு,  மகா நாயக்க தேரரின் கட்டளையை ஏற்றுக் கொள்ளுங்கள்.

மகாநாயக்க தேரர்களின் அறிவுறுத்தல்களின்படி செயற்படாவிட்டால் மகா சங்கத்தினருக்கு அறிவித்து கூட்டு சங்க மாநாட்டின் மூலம் அரச தலைவர், பிரதமர் மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஓமல்பே சோபித தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

இது சப்பிரி ஆட்களின் இணையத்தில் பிரதி பண்ணப்பட்டது.(யாழ் முசுலிம்) இதுவும் அந்த இடத்தில் இதே பிக்கரால் பேசப்பட்டதாக போடப்பட்டது....இதில் இருந்து என்ன தெரிகிறது...காவி மொட்டைகள் நினத்தால்

இந்த ஆர்ப்பாட்டம் ஊர்வலம் எல்லாமெ முடிவுக்கு வரும்...அதாவது இந்த இப்தார் விருந்து...இந்துக்கோவில் விரதம் எல்லாம் ,முள்ளிவாய்க்கால் கடை ..யாவும் ஒருநொடியில் காணாமல் ஆக்கப்படும்....இப்ப இந்த பிக்கர்களின் பிரச்சினை பொருளதாரம் மட்டுமே...பிச்சை எடுக்க ஆள் தேவை...அப்புறம் நீ யாரோ நான்  யாரோ....இதுக்கிள்ளை கக்கீமு ஏரோப்பிளேன் ஓட்டி இஸ்டாலினுக்கு நூல் விடுகிறார்..வந்தால் பங்கு போடுவம்..

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

“அலி சப்ரி இன்று அரசாங்கத்தின் ஆதிக்க சக்தியாக மாறிவிட்டார். அலி சப்ரிக்கு நாட்டை ஆளும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சகம் முழு நாட்டின் பணம். அதேநேரம் நீதி அமைச்சும் வழங்கப்பட்டுள்ளது. நீதியமைச்சர் பதவியை இராஜினாமா செய்தவரை மீண்டும் அங்கேயே ஏன் வைக்கிறார்கள்? காரணம் நமக்குப் புரிகிறது.

ஆளான ஆளெல்லாம் ஏறி விழுந்த குதிரையில் ஊழலை சுமந்துகொண்டு ஏறுகிறார். பாப்போம் எவ்வளவு தூரம் ஓட முடியுமென்று இந்த முரட்டுக்குதிரையில்! கம்பி எண்ணும்போது ஞானம் பிறக்கும். நீதியமைச்சராய் இருந்து நீதிக்கு ஆணி அடிச்சவர். ஊழலை மறைத்து, அதற்கு துணை போனவரே பெரிய ஊழல்வாதி. விடுதலைப்போர் வீழ்த்தப்பட்ட போது வி. முரளிதரன் நாட்டின் கதாநாயகன். போர் கதாநாயகர்கள் துரத்தப்படும்போது இவர் கதாநாயகன். இதுவும் மாறும் விரைவில். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.