Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2,000 க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள், மற்றும் சிவில் சமூக அமைப்புகள்... ஹர்த்தாலுக்கு ஆதரவு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மே 6ஆம் திகதி நாடு தழுவிய ஹர்த்தாலுக்கு அழைப்பு!

2,000 க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள், மற்றும் சிவில் சமூக அமைப்புகள்... ஹர்த்தாலுக்கு ஆதரவு!

சுகாதாரம், போக்குவரத்து, ரயில்வே, மின்சாரம் மற்றும் கல்வித் துறைகளில் உள்ள நூற்றுக்கணக்கான தொழிற்சங்கங்கள் உட்பட 2,000 க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் நாளை (வெள்ளிக்கிழமை) நாடு தழுவிய ஹர்த்தாலுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம் தெரிவித்துள்ளது.

நாளை நடைபெறும் ஹர்த்தாலுக்கும் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் கூட்டுப் போராட்டத்துக்கும் பதில் கிடைக்காவிட்டால் மே 11ஆம் திகதி முதல் அரசாங்கம் வீட்டுக்குச் செல்லும் வரை தொடர் வேலை நிறுத்தமும் தொடர் ஹர்த்தாலும் தொடரும் என தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாளை ஆர்ப்பாட்டம் மற்றும் தொழிற்சங்கம் ஒன்றில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக ஆசிரியர் – அதிபர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பு இன்று தெரிவித்துள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் (CTU) பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டார்லின் மேலும் பல தொழிற்சங்கங்களுடன் இணைந்துகொள்ளவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும் அரசாங்கத்திற்கு தமது அதிருப்தியை வெளிப்படுத்த ராஜகிரிய சந்தியில் ஒன்று கூடவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாடு தழுவிய ரீதியில் நடைபெறும் ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கும் முகமாக இன்று நள்ளிரவு முதல் நாடு தழுவிய 24 மணித்தியால ரயில் தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பின் (RTUA) இணை அழைப்பாளர் எஸ்.பி.விதானகே தெரிவித்தார்.

இன்று நள்ளிரவு 12.00 மணிக்கு ஆரம்பிக்கும் பணிப்புறக்கணிப்பு நாளை நள்ளிரவு 12.00 மணிக்கு நிறைவடையும் என அவர் தெரிவித்துள்ளார்.

“40க்கும் மேற்பட்ட ரயில்வே தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் கைகோர்க்கும். 1,000க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள், ரயில்வே தொழிற்சங்கங்களுக்கு ஆதரவு அளிக்கும். வேலைநிறுத்தத்தின் போது, நாடு முழுவதும் ரயில்கள் இயங்காது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாடு தழுவிய ஹர்த்தாலில் ஈடுபடப் போவதில்லை என்றும், அனைத்து பேருந்து உரிமையாளர்களும் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஹர்த்தாலில் கலந்து கொள்வதற்கான சுதந்திரத்தை வழங்கியுள்ளோம் என்றும் மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் (IPPBOA) தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், 20 முதல் 25 கிலோமீற்றர் தூரம் வரை பயணிக்க போதுமான டீசலை வழங்கும் அதேவேளை, அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுக்கு இலவச போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் (LPBOA) முன்னதாக தெரிவித்துள்ளது.

இதேவேளை, பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்படவுள்ள பணிப்புறக்கணிப்புப் போராட்டத்திற்கு பல அத்தியாவசிய சேவைகளின் தொழிற்சங்க பிரதிநிதிகள் ஆதரவளிப்பதில்லை எனத் தீர்மானித்துள்ளதாக ஊடகப் பிரிவின் தலைவர் நேற்று தெரிவித்தார்.

https://athavannews.com/2022/1280125

  • கருத்துக்கள உறவுகள்

நாடளாவிய ரீதியில் வெள்ளிக்கிழமை ஹர்த்தால் - அரசாங்கத்திற்கு மீண்டும் 4 நாட்கள் கால அவகாசம்

(எம்.மனோசித்ரா)

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி வெள்ளிக்கிழமை (6) நாடளாவிய ரீதியில் ஹர்த்தால் முன்னெடுக்கப்படவுள்ளது. 

சகல பகுதிகளிலும் கடைகளை மூடி ஹர்த்தாலுக்கு ஆதரவளிக்குமாறு அனைவரிடமும் ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது. 

Articles Tagged Under: சம்மேளனம் | Virakesari.lk

நாளைமறுதினம் ஹர்த்தாலின் பின்னர் அரசாங்கத்திற்கு 4 நாட்கள் கால அவகாசம் வழங்குவதாகவும் , அதன் பின்னரும் பதவி விலகவில்லை எனில் 11 ஆம் திகதி முதல் தொடர் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாகவும் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

கடந்த ஏப்ரல் 28 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் உள்ளிட்ட பல தரப்பினராலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

அன்றைய தினம் பெரும்பாலான பகுதிகளில் கடைகள் மூடப்பட்டிருந்ததோடு , புகையிரத சேவைகள் முற்றாக ஸ்தம்பிதமடைந்திருந்தன.

வங்கி உள்ளிட்ட சில அரச திணைக்களங்களை சேவையாற்றும் அரச ஊழியர்களும் இதற்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர்.

இதன் போது ஏப்ரல் 28 ஆம் திகதி முதல் மே 6 ஆம் திகதி வரை போராட்ட வாரமாகவும் தொழிற்சங்கங்களினால் அறிவிக்கப்பட்டன.

அதற்கமைய போராட்ட வாரத்தின் நிறைவு நாளான நாளைமறுதினம் இவ்வாறு ஹர்த்தலில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போது அரச தாதிகள் சங்கம் , இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கம் , இலங்கை ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட சில தொழிற்சங்கங்கள் தாம் ஹர்த்தாலுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளன.

அத்தோடு மருத்துவ துறைசார் தொழிற்சங்கங்களும் ஹர்த்தாலுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ள போதிலும் , மக்களின் நலன் கருதி பணியில் ஈடுபடுவதாக கையெழுத்திடாமல் நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்க தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.

எனவே வைத்தியசாலை சேவைகளில் நோயாளர்கள் அசௌகரியங்களை எதிர்கொள்ள வேண்டியேற்படாது. எனினும் புகையிரதம், தபால், மின்சாரம் மற்றும் தனியார் போக்குவரத்து சேவை தொழிற்சங்கங்கள் இன்று வியாழக்கிழமை தமது முடிவை அறிவிப்பதாகத் தெரிவித்துள்ளன.

அதற்கமைய இல்லங்கள் , வியாபார நிலையங்கள், தொழிற்சாலைகளில் கருப்பு கொடிகளை ஏற்றுமாறும் , கருப்பு நிற ஆடையணிந்து அருகிலுள்ள நகர்பகுதிகளில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ளுமாறும் , பெருந்தோட்டத் தொழிலாளர்களை தொழிலுக்குச் செல்லாமல் எதிர்ப்பினை வெளியிடுமாறும் தொழிற்சங்க ஒருங்கிணைப்பு ஒன்றியம் கேட்டுக் கொண்டுள்ளது.

இதன் போது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வன்முறைக்கு இடமளிக்காது போராட்டத்தைப் பாதுகாத்து அரசாங்கத்தை விரட்டியடிக்கும் போராட்டத்தைச் வெற்றியடைச் செய்வோம் என்றும் தொழிற்சங்க ஒருங்கிணைப்பு ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.
 

 

https://www.virakesari.lk/article/126876

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புகையிரத நிலைய சங்கங்களும் ஹர்த்தாளுக்கு ஆதரவு

புகையிரத நிலைய சங்கங்களும்... ஹர்த்தாலுக்கு ஆதரவு

நாளைய தினம் நாடு தழுவிய ஹர்த்தாலில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இதன்படி, இன்று நள்ளிரவு முதல் அனைத்து சேவைகளும் இடைநிறுத்தப்படுவதாக இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

https://athavannews.com/2022/1280329

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.