Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் செயன்முறைகள் இன்றி நடத்தப்படும் இராணுவ நடவடிக்கைகள் இலக்கை அடையாது

Featured Replies

அரசியல் செயன்முறைகள் இன்றி நடத்தப்படும் இராணுவ நடவடிக்கைகள் இலக்கை அடையாது

மக்களுக்கு அரசாங்கத்தின் மீது நம்பிக்கையும் பாதுகாப்பு உணர்வும் ஏற்படாத வரையில் எவ்வித இராணுவ நடவடிக்கையும் முழுமையான வெற்றியை அளிக்காது. அரசியல் செயன்முறைகள் இன்றி நடத்தப்படும் இராணுவ நடவடிக்கைகள் எதிர்பார்க்கும் இலக்கை அடையாது என்று இந்தியாவின் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி கேணல் ஹரிஹரன் தெரிவித்தார்.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் 20ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தெற்காசிய சமாதான நிறுவனத்தின் ஏற்பாட்டில் சர்வதேச கற்கைகளுக்கான பண்டாரநாயக்க நிலையத்தில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய கேணல் ஹரிஹரன் மேலும் தெரிவித்ததாவது:

2007ஆம் ஆண்டு இலங்கை வரலாற்றில் மிக முக்கியமானதாகும். இவ்வாண்டு பண்டா செல்வா ஒப்பந்தத்தின் 50ஆவது ஆண்டாகவும் விடுதலைப்புலிகள் இயக்கம் உருவாகி 30 ஆண்டாகவும் இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்தாகி 20 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. ஒப்பந்தங்கள் எதுவும் சரிவர அமுல்ப்படுத்தப்படாததன் விளைவையை இன்று இந்நாடு அனுபவிக்கின்றது. இதற்கு விலையாக மனித உயிர்கள் இழக்கப்படுகின்றன.

இந்திய இராணுவத்தின் வருகை குறித்து தவறான பிரசாரம் மேற்கொள்ளப்பட்டதோடு, பல்வேறு அர்த்தங்களும் கற்பிக்கப்பட்டது. ஆகவே இந்திய இலங்கை ஒப்பந்தம் செயலிழக்க ஒரு காரணமாக அமைந்தது. இந்திய இலங்கை ஒப்பந்தம் தோல்வி அடைந்ததா அல்லது வெற்றி அடைந்ததா என்ற கேள்வி தற்போது எழும்பப்படுகின்றது.

இந்திய அமைதி காக்கும் படை முறையாக தனது கடமையை செய்ததா என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகின்றது. இந்திய அமைதி காக்கும் படையின் நடவடிக்கையினாலேயே யாழ்தேவி ரயில் இயக்கப்பட்டது. யாழ்ப்பாணத்துக்கு மின்சாரமும் வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு தொலைபேசி மற்றும் வங்கிச் சேவைகளும் கிடைத்தது.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் பலங்களும் பலவீனங்களும் காணப்படுகின்றன. அரசியல் ரீதியான விடயமாக மாற்றப்பட்டதனாலேயே ஒப்பந்தம் செயலிழந்தது.எனவே, மக்கள் தமது எதிர்காலம் குறித்து தாமே முடிவெடுக்க வேண்டும். அம்முடிவை மேற்கொள்வதற்கு அரசியல்வாதிகளை அனுமதிக்க முடியாது.

http://www.virakesari.lk/

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் பிரச்சனைக்கு வழிகாட்டாமல், இந்தியாவின் சொந்த நலனை நடைமுறைப்படுத்த நினைத்ததினால் தான் இந்த ஒப்பந்தம் செயல் இழந்தது. யாழ் தேவி, மின்சாரம், வங்கிச் சேவை போன்றவை மட்டுமா தமிழர்களின் பிரச்சனை?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்திய இராணுவத்தினர் ஒருவர் கேட்டாராம் யாழ்பாணத்தில ஒவ்வொரு வீட்டுக்கும் கிணறு, கக்கூஸ், ரிவி இருக்கு இதைவிட என்ன வேணுமெண்டு தனிநாடு கேக்கிறீங்கள் என்று இதுதான் அவர்கள் அறிவும் ஆற்றலும்......

மக்களுக்கு அரசாங்கத்தின் மீது நம்பிக்கையும் பாதுகாப்பு உணர்வும் ஏற்படாதவரையில் எவ்வித இராணுவ நடவடிக்கையும் முழுமையான வெற்றியை அளிக்காது. அரசியல் செயன்முறைகள் இன்றி நடத்தப்படும் இராணுவ நடவடிக்கைகள் எதிர்பார்க்கும் இலக்கை அடையாது என்று இந்தியாவின் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி கேணல் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் 20ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தெற்காசிய சமாதான நிறுவனத்தின் ஏற்பாட்டில் சர்வதேச கற்கைகளுக்கான பண்டார நாயக்க நிலையத்தில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

2007ஆம் ஆண்டு இலங்கை வரலாற்றில் மிக முக்கியமானதாகும். இவ்வாண்டு பண்டா செல்வா ஒப்பந்தத்தின் 50ஆவது ஆண்டாகவும் விடுதலைப்புலிகள் இயக்கம் உருவாகி 30 ஆண்டாகவும் இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்தாகி 20 வருடங்கள் நிறைவடைந்துள்ளன.

ஒப்பந்தங்கள் எதுவும் சரிவர அமுல்படுத்தப்படாததன் விளைவையே இன்று இந்நாடு அனுபவிக்கின்றது. இதற்கு விலையாக மனிதஉயிர்கள் இழக்கப்படுகின்றன.

இந்திய இராணுவத்தின் வருகை குறித்து தவறான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டதோடு, பல்வேறு அர்த்தங்களும் கற்பிக்கப்பட்டன. அதுவே இந்திய இலங்கை ஒப்பந்தம் செயலிழக்க ஒரு காரணமாக அமைந்தது. இந்திய இலங்கை ஒப்பந்தம் தோல்வி அடைந்ததா அல்லது வெற்றி அடைந்ததா என்ற கேள்வி அமைதிகாக்கும் படை முறையாக தனது கடமையை செய்ததா என்ற கேள்வியும் முன்வைக்கபடுகின்றது.

இந்திய அமைதிகாக்கும் படையின் நடவடிக்கையினாலேயே யாழ்தேவி ரயில் இயக்கப்பட்டது. யாழ்ப்பாணத்துக்கு மின்சாரமும் வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு தொலைபேசி மற்றும் வங்கிச் சேவைகளும் கிடைத்தன. இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் பலங்களும் பலவீனங்களும் காணப்படுகின்றன. அது அரசியல் ரீதியான விடயமாக மாற்றப்பட்டதனாலேயே ஒப்பந்தம் செயலிழந்தது. எனவே மக்கள் தமது எதிர்காலம் குறித்து தாமே முடிவெடுக்க வேண்டும். அம் முடிவை மேற்கொள்வதற்கு அரசியல்வாதிகளை அனுமதிக்க முடியாது.

தாம் சமாதானத்தை ஏற்படுத்த வந்தோமா அல்லது போர்புரிய வந்தோமா என்ற குழப்பம் இந்திய இராணுவத்திடம் இருந்தது. ஒப்பந்தமானது இந்திய இலங்கை ஆகிய இருநாடுகளுக்கிடையிலேயே செய்யப்பட்டது. ஆனால் அவ்வொப்பந்தம் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களிடையே செய்யப்பட்டிருந்தால் அது மிகப்பயனுடையதாக இருக்கும் என நான் கருதுகின்றேன். தற்போது நிலைமை முற்றிலும் மாறுபட்டுள்ளது. உங்களுடைய பிரச்சினைக்கு நீங்களே தீர்வுகாண வேண்டும். அதற்கு தேவையான உதவிகளை சர்வதேச நாடுகள் வழங்கும்.

-சங்கதி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.