Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆதீனங்கள் என்றால் என்ன? அவை தோன்றிய வரலாறு என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
  • விஷ்ணுப்பிரியா ராஜசேகர்
  • பிபிசி தமிழ்
6 மே 2022, 11:55 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

ஆதீனங்கள்

தருமபுர ஆதீன பட்டினப் பிரவேசம் தொடர்பாக கடந்த சில தினங்களாக ஆதீனங்கள் குறித்து நீங்கள் செய்திகளில் தொடர்ந்து கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த ஆதீனங்கள் என்றால் என்ன? அவற்றின் வரலாறு என்ன என்பதை எளிமையாக இந்த கட்டுரை விளக்குகிறது.

ஆதீனம் என்றால் என்ன?

சைவ சித்தாந்தத்தை வளர்க்கவும், அதை மக்களிடையே பரப்பவும் தோற்றுவிக்கப்பட்ட மடங்களே ஆதீனம் என்று அழைக்கப்படுகின்றன.

இந்த மடங்களின் தலைவர்கள் ஆதீனகர்த்தர்கள் என்று அழைக்கப்பட்டனர்.

ஆதீனங்கள் தோற்றுவிக்கப்பட்டதற்கான காரணங்கள் என்ன?

"சைவ சித்தாந்தத்தில் இந்த மடங்களை தோற்றுவித்ததற்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. இந்த மடங்களின் முக்கிய நோக்கம் சைவ சித்தாந்த கொள்கையை நடைமுறைப்படுத்துவது." என்கிறார் சென்னை பல்கலைகழகத்தின் சைவசித்தாந்த துறையின் தலைவர் முனைவர் நல்லூர் சரவணன்.

தமிழ் வளர்ப்பதே ஆதீனங்களின் நோக்கம் என்கிறார் பேராசிரியர் அருணன்.

முதலில் தோன்றிய ஆதீனம் எது?

முதலில் தோன்றிய ஆதீனம் எது என்பது குறித்து வரலாற்று ரீதியாக பல்வேறு கருத்துகள் உள்ளன.

திருவாவடுதுறை ஆதீனம்தான் முதலில் வந்தது அதிலிருந்துதான் தருமபுரம் ஆதீனம் தோன்றியதாக பேராசிரியர், ஆய்வாளர் அருணன் தெரிவிக்கிறார்.

அதன்பின் அந்த தருமபுர ஆதீனத்திலிருந்து வேறு சில ஆதீனங்கள் தோன்றின என்கிறார் அவர்.

 

நல்லூர் சரவணன்

பட மூலாதாரம்,TWITTER

 

படக்குறிப்பு,

பேராசிரியர் நல்லூர் சரவணன்

ஆனால் மதுரை ஆதீனம்தான் பழமையானது என்கிறார் நல்லூர் சரவணன்.

63 நாயன்மார்களில் ஒருவரான திருஞானசம்பந்தர் இந்த மடத்தை தோற்றுவித்ததாக கூறுகிறார்கள் அதற்கு ஆதாரம் இல்லை என்கிறார் அருணன்.

இவர்களுக்கு உள்ள அதிகாரம் என்ன? ஆதீனங்களுக்கு பணம் எங்கிருந்து வருகிறது?

இவர்களுக்கென்று குறிப்பிட்டு எந்த சமூக அதிகாரமும் இல்லை. தமிழ் வளர்க்கும் பணிகளைத்தான் இவர்கள் தொடர்ந்து செய்துவந்தனர் என்கிறார் அருணன்.

இம்மாதிரியாக மடங்களை காப்பதற்காக நிலப்பிரபுக்கள் அல்லது செல்வந்தர்கள் நிலங்களை மடத்தின் பெயரில் எழுதி வைத்தனர்.

 

பேராசிரியர் அருணன்

பட மூலாதாரம்,ARUNAN/FB

 

படக்குறிப்பு,

பேராசிரியர் அருணன்

அந்த நிலங்களை குத்தகைக்கு விட்டு அதிலிருந்து மடங்களுக்கு வருவாய் வருகிறது. இந்த வருவாயை சில சைவ கோயில்களை பராமரிக்கவும் தமிழ் வளர்ப்பு பணிகளிலும் இவர்கள் செலவிட்டு வந்தார்கள் என்கிறார் அருணன்.

தமிழ் வளர்ப்புக்கும் ஆதீனங்களுக்கு என்ன தொடர்பு?

திருவாவடுதுறை ஆதீனம் போன்ற ஆதீனங்கள் தமிழ் வளர்ப்பு பணியில் குறிப்பிடத்தக்க பல முயற்சிகளை மேற்கொண்டிருந்தாலும் தருமபுர ஆதீனம் வட மொழி சார்ந்தே இயங்கி வந்ததாக தெரிவிக்கிறார் நல்லூர் சரவணன்.

திருவாவடுதுறையின் பண்டிதராக இருந்தவர் மீனாட்சி சுந்தரம்பிள்ளை. பல புராணங்களை எழுதியவராக இருந்தாலும் இவரது சீடராக இருந்தவர்தான் தமிழ் தாத்தா என்று அழைக்கப்படும் உ.வே. சாமிநாதையர்.

உவே.சா பழந்தமிழ் இலக்கியங்களை பதிப்பித்தார். சமய பாகுபாடின்றி பல நூல்களை இவர் பதிப்பித்தார். இதற்கு சமய வேறுபாடுன்றி தமிழ் இலக்கியங்கள் என்பதால், திருவாவடுதுறை ஆதீனமும் உதவியது என்கிறார் அருணன்.

"சைவம் என்பது தமிழ் மரபு சார்ந்து வர்ணாசிரமத்திற்கு உடன்படாமல் திருஞானசம்பந்தர், காரைக்கால் அம்மையார் தொடங்கி சாதி மறுப்பில் இயங்கிற்று. சாதி மறுப்புதான் சைவ சித்தாந்தக் கொள்கையாக உள்ளது. அதாவது தமிழை முன்னிலைப்படுத்தி சாதி மறுப்பாக தொடங்கப்பட்ட ஒரு சித்தாந்தமும் அதற்காக தொடங்கப்பட்ட மடங்களும் நாளடைவில் சாதிய கட்டமைப்புக்குள் சிக்கி கொண்டன," என்கிறார் நல்லூர் சரவணன்.

"காரைக்கால் அம்மையார், திருஞான சம்பந்தர் தொடங்கிய கோயில்களில் தமிழில் பாடும் வழக்கத்தை மடங்கள் ஆழமாக செயல்படுத்தவில்லை" என்கிறார் நல்லூர் சரவணன்.

பட்டினப் பிரவேசம் என்றால் என்ன?

ஆதீனகர்த்தரை பல்லக்கில் சுமந்து மடங்களை சுற்றியுள்ள வீதிகளில் வலம் வருவதுதான் பட்டினப் பிரவேசம்.

 
பல்லக்கு

அந்த காலத்தில் போக்குவரத்து என்பது குதிரையில் செல்வதாக இருந்திருக்கும். ஆனால் எல்லாரோலும் குதிரையை ஓட்டிச் சென்றுவிட முடியாது. அப்படிப்பட்டவர்களுக்கான போக்குவரத்தாக பல்லக்கு இருந்திருக்க கூடும் என்கிறார் அருணன்.

இப்போது பிரச்னை என்ன?

தருமபுர ஆதீனகர்த்தரை பல்லக்கில் மனிதர்கள் சுமந்து செல்லும் நிகழ்வுக்கு திராவிடர் கழகம் எதிர்ப்புத் தெரிவித்து வந்த நிலையில், அந்த நிகழ்வுக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது.

இந்த நிகழ்வு பாரம்பரியமாக வரக்கூடிய ஒரு நிகழ்வு. எனவே இதற்கு தடை விதிக்க கூடாது என ஆதீனங்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.

அதேபோல இந்த நிகழ்வுக்கு அரசு தடை விதித்திருப்பதை மதுரை ஆதீனகர்த்தர் உள்ளிட்டோர் எதிர்க்கின்றனர். அரசின் நடவடிக்கை சமய சடங்குகளில் தலையிடுவதாகும் என்கிறார்கள் அவர்கள்.

பாஜக, அதிமுக தலைவர்கள் ஆதீன தரப்புக்கு ஆதரவாகப் பேசுகின்றன.

ஆனால் இந்த பட்டினப்பிரவேசத்தை எதிர்ப்பவர்கள் இந்த பட்டினப்பிரவேசம் என்ற சடங்கை எதிர்க்கவில்லை. மனிதரை மனிதர்கள் தூக்கி சுமப்பதற்கே தாங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக சொல்கிறார்கள். அது மட்டுமல்லாமல் மடாதிபதிகள் நவீன வசதிகளுக்கு பழகிக் கொண்டது போல இதையும் மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற கருத்தையும் முன் வைக்கிறார்கள்.

இது குறித்து பேசிய தமிழ்நாடு அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, பட்டினப் பிரவேசம் தொடர்பாக ஒரு சுமூக முடிவு எட்டப்படும் என்று தெரிவித்துள்ளார்.

தருமபுர ஆதீன விவகாரம்: ஆதீனங்கள் என்றால் என்ன? அவை தோன்றிய வரலாறு என்ன? - BBC News தமிழ்

  • 5 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

மனிதர்களை மனிதர்கள் பல்லாக்கில் தூக்கி சுமப்பதைதானே எதிர்க்கிறார்கள்.. பல போலி சாமிகளைப் கேள்விப்பட்டபின்பு இந்த மாதிரி ஆதீனங்கள் எத்தனை தூரம் தமிழை வளர்க்கின்றன என்பது சந்தேகமே! 

  • கருத்துக்கள உறவுகள்
On 6/5/2022 at 16:00, பிழம்பு said:

தமிழை முன்னிலைப்படுத்தி சாதி மறுப்பாக தொடங்கப்பட்ட ஒரு சித்தாந்தமும் அதற்காக தொடங்கப்பட்ட மடங்களும் நாளடைவில் சாதிய கட்டமைப்புக்குள் சிக்கி கொண்டன," என்கிறார் நல்லூர் சரவணன்.

தமிழினம் இயற்கையை வழிபட்டுச் சைவர்களாக இருந்தவரை அந்த இனத்திற்குள் சாதிவேறுபாடுகள் இருந்ததில்லை என்று வரலாற்று ஆசிரியர்கள் பலர் குறிப்பிட்டுள்ளனர். எப்போது கடவுள்பெயரைச் சொல்லி ஏமாற்றித் தமிழினத்திற்குள் ஆரியம் வர்ணாச்சிரம முறையைப் புகுத்தியதோ அன்று தமிழனத்தைப் பீடித்த பீடை இன்றுவரை தொடர்கிறது. இந்தப் பீடை எப்போது ஒழியுமோ தெரியவில்லை. சிலவேளை உருசிய, உக்கிரைன் யுத்தம் அணுகுண்டுவரை செல்லலாம் என்ற செய்திகளும் வருகின்றன.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.