Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வடக்கு நடவடிக்கை எளிதானது அல்ல- சிறிலங்காவுக்கு இந்தியா உதவி செய்ய வேண்டும்: கேணல் ஹரிகரன்

Featured Replies

வடக்கு நடவடிக்கை எளிதானது அல்ல- சிறிலங்காவுக்கு இந்தியா உதவி செய்ய வேண்டும்: கேணல் ஹரிகரன்

சிறிலங்கா அரசாங்கம் கிழக்கைப் போல் வடக்கில் எளிதாக வெற்றி பெற்றுவிட முடியாது என்றும் பேச்சுவார்த்தைக்குப் போங்கள் என்று கூறுவதோடு மேலதிகமாகவும் சிறிலங்காவுக்கு இந்தியா உதவி செய்ய வேண்டும் என்றும் முன்னாள் இந்திய இராணுவப் புலனாய்வு அதிகாரி கேணல் ஹரிகரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஆங்கில ஊடகத்துக்கு அவர் அளித்த நேர்காணலின் தமிழ் வடிவம்:

இராணுவ ரீதியாக தோற்கடிக்க முடியாத அமைப்பு எதுவும் இல்லை. ஆகையால் தோற்கடிக்க முடியாது என்பது தொடர்பில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் அதே நேரத்தில் தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகள் யார் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. அவர்கள் இலங்கையின் குடிமக்கள். யுத்தத்தின் மூலம் உண்மையிலே நாட்டினது ஆளணி வளத்தை இழக்கிறீர்கள். எந்த ஒரு கிளர்ச்சியும் 100 விழுக்காடு அழிக்கப்பட்டது இல்லை.

ஏனெனில் அது மனம் சார்ந்தது. தத்துவத்தை நீங்கள் வென்றுவிட முடியாது. அந்தப் போராளிகள் பிரபாகரனுக்காக மட்டும் போராடவில்லை. அதற்கும் மேலாக உள்ள்ளது. ஒவ்வொருவரும் சாத்தியமான தீர்வையே தங்களது மனங்களில் கொண்டுள்ளனர். மாற்று ஏதுமில்லை என்று அவர்களுக்குத் தெரியும்.

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் அப்போதைய சிறிலங்கா அரச தலைவர் ஜயவர்த்தன கைச்சாத்திட்ட போது எதிர்க்கட்சியினரைப் பற்றி இந்தியத் தரப்பு மதிப்பிடவில்லை. தேசியவாதம், வெளிநாட்டுப் படை இங்கு வரக்கூடாது, தமிழ் போராளிகளுக்கு பயிற்சி அளித்தமை தொடர்பில் எதிர்க்கட்சியினர் வெளிப்படையாக பேசினர். சில தரப்புக்கு பதற்றத்தை ஏற்படுத்தியது.

இந்தியாவிலும் சிறிலங்காவிலும் இந்த ஒப்பந்தம் முழுவதிலுமே வெளிப்படையான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை.

இந்தியாவிலும்கூட இலங்கை விவகாரங்களை கையாளும் அனுபவங்களைக் கொண்டவர்களிடம் ஆலோசனை நடத்தப்படவில்லை.

அப்போதைய பிரதமராக இருந்த ராஜீவ் காந்திக்கு புதிய ஆலோசகர்கள் குழு உருவானது. மக்களின் உரிமையாளர் அங்கு யாரும் இல்லை.

இந்தியாவைப் பொறுத்தவரை இந்திய- இலங்கை ஒப்பந்தமானது இரகசியமானதாக இல்லாவிட்டாலும் திடீரென மேற்கொள்ளப்பட்ட முடிவாகும். இலங்கையில் இராணுவத்தினரை நிலை நிறுத்துதல் என்கிற முடிவெடுக்கப்படும் என்று யாரும் உணர்ந்திருக்கவில்லை.

1987 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் நாள் நான் இராணுவத் தலைமையகத்தில் வேறு ஒரு பணியில் இருந்தேன். என்னுடைய மேலதிகாரி என்னை அழைத்தார். இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்படக கூடும் என்று கூறினார். தமிழ் பேசும் புலனாய்வுத் துறை அதிகாரிகளின் பட்டியலை தயாரிக்குமாறு என்னிடம் கூறினார். அந்த நாள் வரை கூட இலங்கைக்கு இந்திய இராணுவம் அனுப்பி வைக்கப்படும் என்று தெரியாது. யுத்தமாக முடிவுக்கு வந்தபோது மிகவும் வருத்தப்பட்டேன். ஒரு அரசியல் நடவடிக்கையானது இராணுவ விவகாரமாகிவிட்டது.

சிறிலங்கா இராணுவமானது திட்டமிட்டு முறைசார் வழியில் செயற்பட்டிருப்பதாக இராணுவத்தைச் சேர்ந்தவன் என்கிற முறையில் கூறுகிறேன். இந்திய இராணுவமும் பயிற்சி அளித்தது என்கிற வகையில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். கிழக்கில் அரசாங்கத்தின் ஆட்சி இப்போது உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் மற்றொரு மாகாணத்திலும் இதே போன்று நிகழும் என நினைத்தால் அது தவறாகிவிடும்.

கிழக்கில் 53 காவல்நிலையங்களை ஏன் உருவாக்கப்பட்டுள்ளது என்பது அரசாங்கத்துக்குத் தெரியும். ஏனெனில் புலிகள் சிதறியிருக்கிறார்கள். அவர்கள் ஊடுருவக்கூடும். பெரும்பாலான போராளிகள் வன்னியிலிருந்து வந்தவர்கள் அல்ல. யாழ்ப்பாணத்துக்கோ அல்லது வேறு எங்கேயோ திரும்பி ஓட முடியாது. சிறு அளவிலான நடவடிக்கைக்கு இராணுவம் தயாராக வேண்டும். அரசாங்கம் பாரதூரமாகத்தான் உள்ளது என்ற செய்தி புலிகளுக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வடக்கு என்பது கிழக்கிலிருந்து மாறுபட்டது. கிழக்கில் மேற்கொண்ட நடவடிக்கையை அப்படியே பிரதி செய்துவிட முடியாது. கருணாவைப் பொறுத்தவரை அவர் மற்றொரு விடுதலைப் புலி அல்ல. அவர் இராணுவத்துக்கு ஒத்துழைத்திருத்தக் கூடும். நான் அவரை சந்தித்தது இல்லை. மக்கள் நிலை அளவிலான அரசியல் அமைப்பு கருணாவுக்கு இல்லை. விடுதலைப் புலிகளால் ஆபத்திருப்பதால் அவர் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள்கிறார். அவர் ஆயுதங்களுடன் இருந்தால் மற்ற தமிழ்க் கட்சிகள் எப்படி இயங்கும்?

விடுதலைப் புலிகள் ஏற்கெனவே பலவீனமடைந்து விட்டனர். அரசாங்கம் அதனை நிரூபித்துள்ளது. ஆனால் தீர்வுக்காக விடுதலைப் புலிகள் கெஞ்சுவார்கள் என்று யாரொருவரும் நம்பினாலும் அது விடுதலைப் புலிகள் தொடர்பிலான பிழையான மதிப்பீடாகும். அப்படியானதொரு பேச்சுக்களுக்கு புலிகள் வரமாட்டார்கள். நீங்கள் தாக்கிய போது அவர்களுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது. அதனால் அவர்கள் திருப்பித் தாக்குவார்கள். அவர்களின் இராணுவ நடவடிக்கைகளை நீங்கள் பார்த்தால் அவ்வளவு எளிதில் விட்டுக் கொடுத்துவிடமாட்டார்கள். நாம் மீண்டும் மீண்டும் அத்தகைய தவறைச் செய்துவிடக் கூடாது.

கிழக்கிலிருந்து விடுதலைப் புலிகள் பெருந்தொகையான அளவில் தப்பியுள்ளனர். விடுதலைப் புலிகளை குறைந்தபட்சம் படுகொலை கூட செய்யாமல் அரசாங்கம் உரிமை எடுத்துள்ளது. ஆனால் வடக்கில் அவ்வளவு எளிதாக வெற்றி பெற்றுவிட முடியாது. அவர்களது பெருந்தொகையான ஆட்டிலறிகளும் போதுமான வெடிபொருட்களும் அங்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் வான்படை தொடர்பில் பாரதூரமாக அச்சம் கொள்ளம் வேண்டியதில்லை. மேலதிகமாக மதிப்பீடு செய்துகொள்ளக் கூடாது. அதே நேரத்தில் மக்களின் மனங்களில் ஏற்படுத்தும் பாதிப்பு குறித்து குறைவான மதிப்பீடும் செய்துவிடக் கூடாது. மற்றவர்களின் மனநிலைகளை அறிவதில் விடுதலைப் புலிகள் சிறப்பானவர்கள்.

இலங்கை இனப்பிரச்சினையில் இந்தியா மேலதிகமான வகையில் தலையிட வேண்டும். வார்த்தைகளில் இருக்கக் கூடாது. தமிழ்நாடு தொடர்பாக இந்தியாவின் ஆளும் அரசாங்கம் மேலதிகமாக மதிப்பிடுகிறது. விடுதலைப் புலிகள் தொடர்பில் தமிழ்நாட்டு மக்கள் தற்போது ஈர்ப்பில் இருக்கின்றனர் என்று நான் நினைக்கவில்லை. தேனிலவு முடிந்துபோனது. மக்களுக்கு உரிய தரவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. விடுதலைப் புலிகளால் முன்னைய ஆதரவைப் பெற முடியாது. ஆனால் பிரச்சனை என்னவெனில் ஊழல்தான். விடுதலைப் புலிகள் செல்வாக்கை விலை கொடுத்து வாங்குகின்றனர். கொழும்பில் கூட அதனைச் செய்கின்றனர். இந்திய அரசாங்கத்தைப் பொறுத்தவரை தானாகத் தலையிடாமல் இருக்கக் கூடாது. கடுமையான செய்தியை வெளிப்படுத்தவேண்டும். தமிழ் மக்களின் கோரிக்கைகளை ஆதரிக்கக் கூடாது என்பது அல்ல. அவர்கள் அத்தகைய அறிக்கைகையைத்தான் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர். அதேபோல் தமிழ் மக்களையும் தமிழீழ விடுதலைப் புலிகளையும் சம அளவில் ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது. அவர்கள் சிலரைத்தான் பிரதிநிதித்துவம் செய்கின்றனர். உளவியல் ரீதியாக அனைத்துத் தரப்பு தமிழர்களையும் அவர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர். மற்றவர்களை அரங்கிலிருந்து அழித்துவிட்டனர் அதனால் தமிழ் மக்களுக்கு வேறு வழியில்லை. அரசியல்வாதிகள்கூட இணைய வேண்டிய நிலை. எத்தனை காலம்தான் அவர்களால் போராட முடியும்? கண்டிப்பாக விரக்தியடைந்து களைத்துப் போவார்கள். தமிழீழம் என்பதை மயானத்திலா அவர்கள் பெறுவார்கள்?

எந்த ஒரு நாட்டிலும் இன்னொரு நாடு சென்று பிரச்சனையை தீர்க்கும் என நான் நினைக்கவில்லை. இந்தியாவைப் பொறுத்தவரை, தந்திரோபாய காரணங்களுக்கான இந்தியா ஆதரவளிக்கலாம். எந்த ஒரு நாடுமே கிளர்ச்சிகளை ஊக்கப்படுத்துவதில்லை என்றே கருதுகிறேன். தமிழ்நாட்டை திருப்திபடுத்துவதற்காக 83களில் புதுடில்லி தமிழ்ப் போராளிகளுக்கு பயிற்சிகளை அளித்தது. ஏனெனில் தமிழ்நாடு மிக முக்கியமான மாநிலம். மேலும் இந்தப் பிரதேசத்தில் அமெரிக்காவின் தலையீடு ஒரு காரணம்.

"பேச்சுகளுக்கு போங்கள்" என்று கூறிக் கொண்டிருக்காமல் இலங்கைக்கு மேலதிகமாக இந்தியா உதவ வேண்டும்.

இந்த பிரதேசத்தில் பெரும் சக்தியான இந்தியாவிடம்தான் சிறிலங்கா ஆயுதங்களை வாங்க வேண்டும் என்று இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் கூறியதாக சொல்லப்படுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. எந்த ஒரு நாடும் இப்படிக் கூறமுடியாது. அது தவறானது. ஏன் அவர் சொன்னார் என்று எனக்குத் தெரியவில்லை. சில காரணங்களுக்காக இருக்கலாம். ஆனால் அது என்ன என்பது அவரது அறிக்கையில் இல்லை.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையேயான யுத்த நிறுத்த ஒப்பந்தம் என்பது தோற்றுப் போன ஒன்று. அதிஉயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்பாக இராணுவத்திடம் ஆலோசனை நடத்தப்பட்டதாக நான் நினைக்கவில்லை. நன்றாக சிந்தித்து உருவாக்கப்பட்ட ஒப்பந்தம் அல்ல அது என்றார் ஹரிகரன்.

http://www.eelampage.com/

என்ன இந்த கோணல் இப்படி சொல்லுது, அங்க இன்னொரு கோணல் வருமா அப்படி சொல்லுது.

ஒண்டுமே புரியல்ல.

என்ன எல்லாம் லஞ்சத்துக்கு கட்டுரை வரையிறாங்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கேணல் ஹரிகரனை பெரிய புத்திசாலி என்று நினைத்தேன் (இவருடைய முன்னைய கட்டுரைகளை பார்த்து).

கடைசியிலை இவரும் சுதப்பிட்டார்..

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களையும் தமிழீழ விடுதலைப் புலிகளையும் சம அளவில் ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது. அவர்கள் சிலரைத்தான் பிரதிநிதித்துவம் செய்கின்றனர். உளவியல் ரீதியாக அனைத்துத் தரப்பு தமிழர்களையும் அவர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர். மற்றவர்களை அரங்கிலிருந்து அழித்துவிட்டனர் அதனால் தமிழ் மக்களுக்கு வேறு வழியில்லை. அரசியல்வாதிகள்கூட இணைய வேண்டிய நிலை. எத்தனை காலம்தான் அவர்களால் போராட முடியும்? கண்டிப்பாக விரக்தியடைந்து களைத்துப் போவார்கள். தமிழீழம் என்பதை மயானத்திலா அவர்கள் பெறுவார்கள்?

புலிகள் யாரைப் பிரதிநிதித்துவம் செய்கின்றார்கள் என்பது இந்தக் கோணலுக்கு அவசியமில்லாத ஒன்று. இந்தியாவில் இந்திய அரசு இந்திய மக்களைப் பிரிதிநிதித்துவம் செய்கின்றதா என்ற ஆராட்சியை நாங்கள் செய்வதில்லை. செய்ய ஆரம்பித்தால், நாகலாந்து, அருணாச்சல மக்களை இந்திய அரசு பிரிதிநிதித்துவம் செய்கின்றதா என்பது தொடக்கம், கஸ்மீரம், ஆந்திரப்பிரதேசம் வரைக்கும் உள்ள மக்களை நச்சலாலைட் , முஸ்லீம் தீவிரவாதிகளோடு போராடும் இந்திய அரசு, அனைத்து மக்களையும் பிரதிநிதித்துவம் செய்கின்றதா என்ற கேள்விக்கு கோணல் அவர்களால் பதிலளிக்க முடியாமல் போகலாம்.

போராட்டத்தில் விரக்தியடை வைத்தல், என்பதோ, சமாதானப் பேச்சுவார்த்தையை இழுத்தடிப்பதன் மூலம், அதைச் சோர்வடையச் செய்வதோ உங்களின் புளித்துப் போன பாணி என்பதை அனைவரும் அறிந்த ஒன்று தான். போராட்டத்தின் விரக்தி என்பதை நோக்குகின்ற கோணல், போராட்டத்தில் சிங்கள தேசம் செய்கின்ற கொடுமைகளால் தமிழர் என்னும் பாதிக்கப்படுவதால் என்னும் வீறு கொண்டு போராடுவார்கள் என்பதை மறந்து விட்டார் போலும்.

எந்த ஒரு நாட்டிலும் இன்னொரு நாடு சென்று பிரச்சனையை தீர்க்கும் என நான் நினைக்கவில்லை. இந்தியாவைப் பொறுத்தவரை, தந்திரோபாய காரணங்களுக்கான இந்தியா ஆதரவளிக்கலாம். எந்த ஒரு நாடுமே கிளர்ச்சிகளை ஊக்கப்படுத்துவதில்லை என்றே கருதுகிறேன். தமிழ்நாட்டை திருப்திபடுத்துவதற்காக 83களில் புதுடில்லி தமிழ்ப் போராளிகளுக்கு பயிற்சிகளை அளித்தது. ஏனெனில் தமிழ்நாடு மிக முக்கியமான மாநிலம். மேலும் இந்தப் பிரதேசத்தில் அமெரிக்காவின் தலையீடு ஒரு காரணம்.

இப்படிப் போலியான முகம் கொண்டவர்கள் தாங்கள் என்பதை வெளிப்படுத்தியமைக்கு நன்றிகள். இப்படி ஒரு மக்களின் போராட்டத்தை நீங்கள் வளரவோ, அல்லது தனிநாடாக விடவோ தாங்கள் அனுமதிக்கமாட்டீர்கள் என்பதை 87களிலேயே புரிந்து கொண்ட தலைவர் உங்களிடம் இருந்து ஒதுங்கிக் கொண்டார் என்பதில் இருந்து அவரின் தீர்க்கதரிசனத்தைப் புரிந்து கொள்ளலாம்.

எம் விடுதலைப் போராட்டத்தை எம்மால் மட்டுமே தான் பெறமுடியும் என்பதை எம் மக்கள் புரிந்து கொள்வார்கள். மற்றவர்கள் எல்லோரும் தங்களுடைய சுயநலத்திற்கும், லாபங்களுக்காகவுமே கண்ணீர் வடிப்பார்கள், 90களில் தமிழனுக்குத் தீர்வு பெற்றுத் தருவதாக இந்தியா ஏமாற்றுவேலைகள் செய்தது என்பது இப்படியான கோணல்களின் வாய்மூல ஒப்புதல்கள் தரும் பாடங்கள்.

எந்தவொரு கிளர்ச்சியையும் ஊக்கப்படுத்துவதில்லை என்பது பொய் தானே!

மாலைதீவில் புளோட்டை வைத்து தாங்கள் ஆடிய கூத்தை மறந்துவிட்டீர்களா? அல்லது மறைக்கின்றீர்களா? தவிரவும் எம்மினிய தமிழக மக்களின் மீது கொண்ட பரிவால் தான், எமக்கு உதவவந்தால்கள், இல்லாவிட்டால் பேசாமல் இந்தியா இருந்திருக்கும் என்பது எல்லாம் சுத்தஏமாற்று. அது தமிழக மக்களையும் ஏமாற்றுகின்ற செயல். தன் சுயநலத்தேவைகளுக்காகத் தான் ஈழத்தில் கால் வைத்தது இந்தியா என்பதை அனைவரும் புிந்து கொள்வார்கள்.

இந்தியாவை வரச்சொல்லித் தமிழர்கள் அழைக்கவில்லை. உணவு போடச்சொல்லியும் கேட்கவில்லை. உணவுப் போட்ட கையோடு தமிழீழத்தில் கால் வைத்து, தமிழ்மக்களைக் கொன்று குவித்ததன் மூலம் உணவினை எம் மக்கள் மீது கொண்ட கருணையால் போட்டார்கள் என்ற வாதம் அடிபட்டுப் போகின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.