Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விடுதலைப் புலிகளின் புதிய தாக்குதல் படைவலுச் சமநிலையை மாற்றலாம்: கொழும்பு ஊடகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளின் புதிய தாக்குதல் படைவலுச் சமநிலையை மாற்றலாம்: கொழும்பு ஊடகம்

[ஞாயிற்றுக்கிழமை, 5 ஓகஸ்ட் 2007, 09:40 ஈழம்] [பி.கெளரி]

தமிழீழ விடுதலைப் புலிகளின் வலிந்த அல்லது தற்காப்பு சமரானது தென்னிலங்கையில் அரசியல் வீழ்ச்சியை ஏற்படுத்துவதுடன், அது போரில் படைவலுச் சமநிலையையும் மாற்றலாம் என்று கொழும்பில் இருந்து வெளிவரும் "தி நேசன்" வார ஏடு தனது பாதுகாப்பு ஆய்வில் தெரிவித்துள்ளது.

அதன் முக்கிய பகுதிகள் வருமாறு:

வன்னிப் பகுதிக்கான சிறிலங்கா இராணுவத்தினரின் கட்டளைப்பீடத்தில் முழுமையான மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இது விடுதலைப் புலிகளுக்கு பல்வேறுபட்ட சமிக்ஞைகளை தெரிவித்துள்ளது. அதாவது இராணுவம் வன்னியில் தற்போதைக்கு தாக்குதல்களை மேற்கொள்ள திட்டமிடவில்லையா அல்லது சிறப்பான சில நடவடிக்கைகளுக்காக தகுதி வாய்ந்த அதிகாரிகளை இராணுவம் தெரிவு செய்துள்ளதா என்பது தான் அவை.

பொதுவாக முழு கட்டளைப்பீடத்திலும் மாற்றங்களை செய்வது படையினருக்கு பிரதிகூலமானது. ஏனெனில் சிறப்பு இராணுவத் தளபதிகள் மற்றும் படையணித் தளபதிகளுக்கு பிரிக்கேட் கட்டளைத் தளபதிகள், களமுனைத் தளபதிகளுடன் உறவுகளை ஏற்படுத்த கால அவகாசம் தேவை. படையணியின் பலம், பலவீனம், களத்தின் பரீட்சயம், தாக்குதலுக்கு முன்னர் எதிரி பற்றிய புலனாய்வுத் தகவல்களை திரட்டுதல் போன்றவற்றிற்கு இது அவசியமானது. இருந்த போதும் விலகிச் செல்லும் கட்டளைத் தளபதிகளும் முக்கியமான புலனாய்வுத் தகவல்களை விட்டுச் செல்லலாம்.

வன்னியில் மோதல்கள் வெடிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உண்டு. அங்கு பலப்படுத்தல்களும் இடம்பெறுவதாக தகவல்கள் முன்னரே தெரிவித்திருந்தன. ஆனால் கேள்வி என்னவென்றால் எந்த பகுதியில் அது முதலில் தொடங்கப் போகின்றது என்பது தான். விடுதலைப் புலிகளுக்கு முன் இரு தெரிவுகள் உண்டு அதாவது தற்பாதுகாப்புச் சமரை நடத்தப் போகின்றனரா அல்லது வலிந்த தாக்குதலை தொடங்கப் போகின்றனரா என்பது தான்.

விடுதலைப் புலிகளின் வெற்றிகரமான தாக்குதலானது அரசை பலவீனமாக்குவதுடன் அதனைப் பெரும் நெருக்கடிக்குள்ளும் தள்ளலாம். அரசியல் நெருக்கடிகளும் இராணுவ நடவடிக்கைகளில் கணிசமான தாக்கங்களை ஏற்படுத்தலாம். இந்த வாரம் ஆளும் அரச கூட்டணியில் இருந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி தனது ஆதரவை விலக்கியுள்ளது. இந்த செய்தி அரச கூட்டணிக்கு அதிர்ச்சியானது. ஆறுமுகம் தொண்டமான் தலைமையிலான தொழிலாளர் காங்கிரஸ் அடுத்த வாரம் எதிர்க்கட்சி வரிசையில் அமரப் போகின்றது.

ஆளும் தரப்பில் இருந்து பலர் எதிர்த்தரப்புக்கு தாவுவார்கள் என்று சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவின் தலைவரான மங்கள சமரவீர தெரிவித்திருந்த பின்னர் இது நிகழ்ந்துள்ளது. பொதுவாக 2001 ஆம் ஆண்டு நிகழ்ந்ததை போல இத்தகைய கட்சித் தாவல்கள் தொழிலாளர் காங்கிரஸ், முஸ்லிம் காங்கிரஸ் கட்சி போன்ற சிறிய கட்சிகளில் இருந்து நிகழலாம்.

இராணுவ வெற்றிகளின் மகிழ்ச்சிகள் வாழ்க்கைச் செலவின் அதிகரிப்புடன் ஏற்கனவே காணாமல் போய்விட்டது. அரசு பெரும் நிதி நெருக்கடியில் உள்ளது, அதனை அது எவ்வாறு ஈடுகட்டப்படப் போகின்றது என்பது தெரியாது. மறுபக்கம் விடுதலைப் புலிகளுக்கு தமது நகர்வுகளை மேற்கொள்ள இது சரியான சந்தர்ப்பம். அரசை பொறுத்த வரையில் சமாதானத்தை அல்லது போரை குறிப்பிட்ட கால எல்லைக்குள் நிறைவு செய்ய வேண்டும். இந்த அரசு மூன்று வருடம் மற்றும் மூன்று மாதங்களை நிறைவு செய்துள்ளது.

எனினும் ஏற்கனவே அது நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்தது. அந்த நேரத்தில் ஜே.வி.பி ஆதரவை வழங்கியிருந்தது. ஜே.வி.பி. தனது சுயலாபத்துடன் இதனை மேற்கொண்டிருந்தது. ஏனெனில் தேர்தல் ஒன்றை எதிர்கொண்டால் தனது உறுப்பினர்களை இழக்க நேரிடலாம் என்ற காரணத்தால் அது தேர்தலை சந்திக்க அச்சமடைந்திருந்தது.

போரை தொடர்வதற்கு ஜே.வி.பி ஆதரவை வழங்கும், எனினும் ஐ.தே.க.வில் இருந்து கட்சி தாவியவர்களை அரசு ஆதரித்ததால் அது தனது பாதையில் செல்ல முற்பட்டுள்ளது. அரசியல் ஆதரவுகளுக்கு அப்பால் அனைத்துலக சமூகம் நிர்வாகத்தில் இருந்து ஒதுங்கியுள்ள நிலையில் அரசு தனது திட்டங்களை நிறைவேற்ற எங்கிருந்து நிதியை திரட்டப் போகின்றது என்பது தற்போதைய முக்கிய கேள்வி.

நாடாளுமன்றத்தில் அரசு அரசியல் ஆதரவை பெற்றாலும் படை நடவடிக்கைகளை தொடர்வதற்கு நிதி தேவை. வன்னியில் தம்மை பலப்படுத்தியுள்ள விடுதலைப்புலிகளை வெல்லலாம் என்ற எந்த ஒரு உத்தரவாதத்தையும் அரசு ஊகிக்க முடியாது. மேலும் படையினர் பின்னடைவுகளை சந்தித்தால் அது ஆளும் சுதந்திரக் கட்சி மீண்டும் பதவிக்கு வருவதில் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணும். அது குடும்பிமலையையும் முழு கிழக்கையும் கைப்பற்றிய வெற்றியையும் இல்லாது செய்துவிடும்.

இதனிடையே பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம ஆகியோர் பிலிப்பைன்சுக்குச் சென்றுள்ளனர். அங்கு அவர்கள் ஆசிய பிராந்திய மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர். இதில் பங்குபற்றும் இந்தியா, சீனா, அவுஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளிடம் சிறிலங்காவின் கடற்பகுதிகளுக்கு பாதுகாப்பை வழங்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் ஆயுதங்களை தருவிப்பதை தடுப்பதற்கு எல்லா வழிகளிலும் சிறிலங்கா அரசாங்கம் முயன்று வருகின்றது.

எனினும் அரசு பெரும் நெருக்கடியில் தற்போது உள்ளது. ஜே.வி.பி. தனக்கு சாதகமான ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் தான் அரசுக்கு ஆதரவு வழங்கும். அரசுடன் உறவு உள்ளதாக காட்டிக்கொள்ள அது விரும்பவில்லை. இது தேர்தலில் அதனை பாதிக்கலாம். அரசியல் மற்றும் பொருளாதார காரணிகளால் இராணுவ நடைவடிக்கையானது மட்டுப்படுத்தப்பட்டதாகவே உள்ளது. ஆனால் விடுதலைப் புலிகளுக்கு நிதி நெருக்கடிகள், அரசியல் நெருக்கடிகள் இருப்பதில்லை.

அரசு பலவீனமாகும் ஒரு நிலை வரும் போது விடுதலைப் புலிகள் தமது தாக்குதல்களை தொடங்கலாம். மணலாறு மீதான தாக்குதலே அரசு எதிர்பார்க்கின்றது. தாக்குதல் படையணியான 53 ஆவது படையணியின் முன்னாள் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் நிமல் ஜெயசூர்ய தற்போது மணலாற்று பகுதி கட்டளைத் தளபதிப் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டுள்ளார். யாழ். குடாநாட்டிற்கான முன்னணி பராமரிப்பு பிரிவுத் தலமையை அவர் ஏற்றுள்ளார்.

மணலாற்றில் அவர் கடமையை ஏற்றபோது அங்கு பதவியாவுக்கும் கெப்பிட்டிக்கொல்லாவிற்கும் இடையில் முன்னணி பாதுகாப்பு நிலைகள் இருக்கவில்லை. கெப்பிட்டிக்கொல்லாவவில் கடந்த ஆண்டு இரு தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தன. மணலாறு தான் விடுதலைப் புலிகளின் பிரதான இலக்கு என அடையாளம் காணப்பட்டுள்ளது.

மணலாற்றில் உள்ள கிராமங்களை பாதுகாக்கும் நோக்குடன் ஜெயசூர்ய அங்கு 25 கி.மீ தூரத்திற்கு பதுங்கு குழிகளை அமைத்துள்ளார். இது விடுதலைப் புலிகள் ஊடுருவுவதை தடுக்கும் உத்தியாகும். கொக்குத்தொடுவாய்கும் மண்கிண்டிமலைக்கும் இடையிலான 5 கி.மீ அகலமான யுத்த சூனியப் பிரதேசம் இராணுவத்திற்கு பிரதிகூலமானது. எனினும் ஜெயசூர்ய மண்கிண்டிமலையுடனான இணைப்பை பதுங்குகுழிகளை பலப்படுத்தி இணைத்திருந்தார். இது பொதுமக்களால் வரவேற்கப்பட்டிருந்தது.

சிங்கள எல்லைக் கிராமங்களின் மீதான தாக்குதல் தென்னிலங்கையில் அரசியல் வீழ்ச்சியை ஏற்படுத்தலாம். அது போரில் படைவலுச் சமநிலையையும் மாற்றலாம். முல்லைத்தீவில் பெரும் தாக்குதலுக்கான முயற்சிகள் நடைபெறுகின்றன. எனினும் எல்லா பக்கமும் பெரும் நெருக்கடிக்குள் சிக்கியுள்ள அரசாங்கத்திடம் இருந்து இராணுவத்திற்கு அனுமதி கிடைக்குமா என்பது சந்தேகமானது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.