Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மலையக தமிழ் அரசியல் தலைமைகளின் திரிசங்கு நிலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மலையக தமிழ் அரசியல் தலைமைகளின் திரிசங்கு நிலை

[05 - August - 2007]

ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான அரசாங்கத்தில் இருந்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கடந்தவாரம் வெளியேறியதையடுத்து கொழும்பு அரசியலில் ஒருவித பரபரப்பு ஏற்பட்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. அமைச்சர் பதவியைத் துறந்த இ.தொ.கா.தலைவர் ஆறுமுகம் தொண்டமானையும் பிரதியமைச்சர் பதவிக்களைத் துறந்த அவரது நான்கு சகாக்களையும் மீண்டும் பதவிகளை ஏற்கச் செய்து அரசாங்கத்தில் இணைத்துக்கொள்வதற்கான முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகின்ற அதேவேளை, இ.தொ.கா.வின் அடுத்த நகர்வு எத்தகையதாக இருக்கும் என்பது குறித்து திட்டவட்டமாக எதையும் கூறமுடியாத ஒரு நிலைமையே காணப்படுகிறது. அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதற்கு மேற்கொண்ட தீர்மானத்தில் எந்த விதமான மாற்றத்துக்கும் இடமில்லையென்றும் பாராளுமன்றத்தில் இ.தொ.கா.உறுப்பினர்கள் எதிரணி வரிசையில் அமர்ந்து சுயாதீனமாகச் செயற்படுவார்கள் என்றும் அக்கட்சியின் ஒரு வட்டாரம் தெரிவித்த அதேவேளை, அமைச்சுப்பதவிகளை மீண்டும் ஏற்றுக் கொள்ளாமல் அரசாங்கத்தரப்பில் பின்வரிசையில் இ.தொ.கா.வினர் அமரக்கூடிய சாத்தியம் இருப்பதாக இன்னொரு வட்டாரம் கூறியிருந்தது.

இ.தொ.கா.வின் கடந்தவாரத்தைய நடவடிக்கையை அடுத்து அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய சிறுபான்மையின கட்சிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மலையக மக்கள் முன்னணியின் அடுத்த நகர்வு எத்தகையதாக இருக்கும் என்பது அரசியல் அரங்கில் வெகுவாக எதிர்பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கு கட்சிகளின் தலைவர்கள் முடிவெடுத்தாலும், அவர்களுக்கு பின்னாலிருக்கும் பிரதியமைச்சர்களும் எம்.பி.க்களும் எவ்வாறு நடந்து கொள்வார்கள் என்பதைக் திட்டவட்டமாகக் கூறமுடியாத ஒரு விசித்திரமும் விபரீதமும் கொண்ட அரசியல் சூழ்நிலையே இன்று காணப்படுகிறது. தனது நிலைப்பாட்டைப்பற்றி கவலைப்படாமல் தனக்கு பின்னால் இருப்பவர்கள் முண்டியடித்துக்கொண்டு பதவிகளைப் பெற்று விடுவார்கள் என்ற பயத்தில் அரசாங்கத்தில் இணைந்து அமைச்சர்களான சில கட்சிகளின் தலைவர்களும் இருக்கிறார்கள்.

இ.தொ.கா. தலைவர் ஆறுமுகம் தொண்டமானுக்கும் ஜனாதிபதி ராஜபக்‌ஷவின் அரசாங்கத்துக்கும் இடையேயான உறவுகளின் ஆரம்பம் சர்ச்சைக்கும் சுவாரஸ்யத்துக்குமுரியது. 2005 நவம்பர் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்த தொண்டமானுக்கு ஜனாதிபதி ராஜபக்ஷ திட்டமிட்டே சில அசௌகரியங்களை ஏற்படுத்தத் தொடங்கினார். பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரை அரசாங்கத்தரப்புக்கு இழுத்தெடுத்து இ.தொ.கா.வை பலவீனப் படுத்தும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. இதனால் ஆத்திரமடைந்த தொண்டமான் ஜனாதிபதிக்கு வித்தியாசமான ஒரு செய்தியை விடுக்கும் நோக்கில் 2005 டிசம்பர் நடுப்பகுதியில் கிளிநொச்சிக்கு சென்று விடுதலை புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தினார். இச் சந்திப்பு தென்னிலங்கை அரசியலில் கடுமையான அதிர்வலைகளையும் தோற்றுவித்தது. இதன் விளைவாக அப்போதைய இந்திய உயர்ஸ்தானிகர் திருமதி நிருபமா ராவின் முயற்சிகளையடுத்து தொண்டமானுக்கும் அரசாங்கத்துக்கும் இடையே இணக்கநிலை ஏற்படுத்தப்பட்டது. இராஜதந்திர நடைமுறைகளையெல்லாம் உதறித் தள்ளிவிட்டு இந்தியா இல்லத்துக்குச் சென்று உயர்ஸ்தானிகர் முன்னிலையில் தொண்டமானைச் சந்தித்தமைக்காக ஜனாதிபதி ராஜபக்‌ஷமீது கண்டனங்களும் தெரிவிக்கப்பட்டன.

இதன் பின்னர் 8 மாதங்கள் கழிந்து தொண்டமான் கடந்த வருடம் ஆகஸ்டில் இளைஞர் வலுவூட்டல், சமூகபொருளாதார அபிவிருத்தி அமைச்சராகவும் இ.தொ.கா.வின் இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதியமைச்சர்களாகவும் பதவியேற்றுக்கொண்டனர். இதேதினம் மலையக மக்கள் முன்னணியின் தலைவர் பெரியசாமி சந்திரசேகரன் சமூக அபிவிருத்தி, சமூக சமத்துவமின்மை ஒழிப்பு அமைச்சராக பதவியேற்று அரசாங்கத்தில் இணைந்து கொண்டார். மலையக மக்கள் முன்னணியின் பெ.இராதாகிருஷ்ணன் பிரதியமைச்சராகிக் கொண்டார். மலையக இந்திய வம்சாவளி தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.