Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“எந்த மொழியையும் எதிர்க்கக் கூடாது” – கருணாநிதி சிலை திறப்பு விழாவில் வெங்கய்ய நாயுடு பேசியது என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

“எந்த மொழியையும் எதிர்க்கக் கூடாது” – கருணாநிதி சிலை திறப்பு விழாவில் வெங்கய்ய நாயுடு பேசியது என்ன?

41 நிமிடங்களுக்கு முன்னர்
 

"எந்த மொழியையும் எதிர்க்கக் கூடாது" - கருணாநிதி சிலை திறப்பு விழாவில் வெங்கய்ய நாயுடு பேசியது என்ன?

பட மூலாதாரம்,TNDIPR

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலையை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு திறந்து வைத்தார்.

இன்று மாலை சிலையைத் திறந்து வைத்துப் பேசிய குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, "பிற மொழிகளைக் கற்பதிலோ பேசுவதிலோ தவறு இல்லை. ஆனால், தாய்மொழிக்கு முன்னுரிமை தர வேண்டும். பிற மொழிகளை எதிர்க்க வேண்டாம். நம் மொழியை ஆதரிப்போம்," என்று கூறியுள்ளார்.

தமிழ்நாடு சட்டப் பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டுப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூற்றுப்படி, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் முன்னால் அண்ணா சாலை ஓரத்தில் கருணாநிதி சிலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வரவேற்புரை ஆற்றியபோது, "ஓமந்தூரார் வளாகத்தில் சட்டப்பேரவையை செங்கல், செங்கல்லாகச் செதுக்கியவர் மு.கருணாநிதி. கருணாநிதியின் சிலையைப் பார்த்தவுடன் நெஞ்சம் உருகிவிட்டது. நேரில் பார்ப்பதைப் போலவே சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

கருணாநிதியின் சிலையை வைக்கப் பொருத்தமான இடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்வு செய்துள்ளார். அண்ணா சாலையில், காமராஜர், பெரியார், அண்ணா சிலைகளுக்கு அடுத்ததாக, இப்போது கருணாநிதியின் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலையைத் திறந்து வைத்து, வரலாற்றில் இடம்பிடித்துள்ளார் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு," என்று கூறினார்.

நிகழ்ச்சியின்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "இன்று எழுப்பப்பட்டு இருக்கக்கூடிய சிலைக்கு இருக்கும் சிறப்பு, தந்தை பெரியாருக்கும் பேரறிஞர் அண்ணாவுக்கும் இடையில் நம்முடைய முத்தமிழறிஞரின் சிலை அமைந்திருக்கிறது.

தற்போது மருத்துவமனையாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தாலும், அது கம்பீரமாகக் கலைஞர் அவர்களின் கனக் கோட்டையாகவே எழுந்து நிற்கிறது. அங்குதான் அவருடைய சிலை எழுப்பப்பட்டுள்ளது," என்று கூறினார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையைத் திறந்து வைத்துப் பேசிய குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, "இந்தியாவின் ஆற்றல் வாய்ந்தவர்களில் முக்கியமானவர் கருணாநிதி," என்று கூறினார்.

மேலும், "கருணாநிதி சிலையைத் திறந்து வைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர், அடித்தட்டு மக்களின் நலனையே நோக்கமாகக் கொண்டு பாடுபட்டவர். மிகச் சிறந்த நிர்வாகியாக விளங்கியவர். நாட்டின் மிகச் சிறந்த பேச்சாளர்களில் ஒருவர்.

 

"எந்த மொழியையும் எதிர்க்கக் கூடாது" - கருணாநிதி சிலை திறப்பு விழாவில் வெங்கய்ய நாயுடு பேசியது என்ன?

பட மூலாதாரம்,TNDIPR

கருணாநிதி ஏழை, எளிய மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பாடுபட்டவர். சமூக நீதிக்காக பாடுபட்டவர். கொள்கை, செயல்படும் விதம், சுறுசுறுப்பு என அனைத்து விதத்திலும் சிறப்பானவர். மாற்றுக் கருத்துகள் இருந்தாலும், கருணாநிதியின் செயல்பாடுகளை வியப்போடு பார்த்துள்ளேன். சிறந்த தொலைநோக்குப் பார்வை கொண்டவர். தங்களை செயல்பாடுகளில் மக்களை முன்னிறுத்திய தலைவர்களில் கருணாநிதியும் ஒருவர்.

என் மாணவப் பருவத்தில் இருந்தே அண்ணா, கருணாநிதியின் பேச்சைக் கேட்டுள்ளேன். நான் அவருடன் கலந்துரையாடி உள்ளேன். அவரின் சிந்தனையால் இளம் வயதிலேயே மிகவும் ஈர்க்கப்பட்டேன்.

சென்னை என் மனதுக்கு நெருக்கமானது. அரசியலில் இருந்தபோது கருணாநிதியுடன் நீண்ட காலம் பயணித்துள்ளேன். அவருடன் கருத்து வேறுபாடுகள் இருந்துள்ளன. அரசியல்வாதிகள் ஒருவரை ஒருவர் மதிக்க வேண்டும்.

எந்தக் கட்சியைச் சார்ந்தவராக இருந்தாலும், அவர்கள் மக்களுக்காக உழைப்பதால் ஒருவரை ஒருவர் மதிக்க வேண்டும்.

இந்தியா வலிமையான அரசாக மாறி வருகிறது. நிலையான அரசாங்கம் நம்மிடம் உள்ளது. நிலையான தலைமை உள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகள் மாநிலங்களை ஆளுகின்றன. ஆனால், நாம் அனைவரும் மக்களின் நலனுக்காக மாநிலத்தின் நலனுக்காக ஒன்றாகப் பணியாற்ற வேண்டும் என்பதே என் கருத்து.

 

"எந்த மொழியையும் எதிர்க்கக் கூடாது" - கருணாநிதி சிலை திறப்பு விழாவில் வெங்கய்ய நாயுடு பேசியது என்ன?

பட மூலாதாரம்,TNDIPR

மாநிலங்கள் வளர்ந்தால், நாடும் வளர்ச்சியடையும். மாநிலங்களின் வளர்ச்சி இல்லாமல் நாடு முன்னேற முடியாது. இதைக் கருத்தில் கொள்ள வேண்டும். மாநில அரசுகளும் மத்திய அரசும், சாதி, மதம், இனம், மொழி என்று அனைத்துக்கும் அப்பாற்பட்டு, ஒன்றாக இணைந்து டீம் இந்தியாவாகப் பணியாற்ற வேண்டும்.

நாம் எப்போதும் நம் தாய்மொழிக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும். அதை எப்போதும் மறக்கக் கூடாது.

ஒவ்வொருவருக்கும் தாய்மொழி என்பது பார்வைக்குச் சமமானது. பார்வையை இழந்தால் எப்படி எதுவும் தெரியாதோ அதைப் போன்ற நிலையே தாய் மொழியை இழந்தாலும் ஏற்படும்.

தாய்மொழியைப் போற்றி, வளர்க்க வேண்டும். எங்கு சென்றாலும், பிறந்த ஊரையும் தாய்மொழியை மறக்கக் கூடாது.

பிற மொழிகளைக் கற்பதிலோ பேசுவதிலோ தவறில்லை. ஆனால், தாய்மொழிக்கு முன்னுரிமை தரவேண்டும். அனைத்து இளைஞர்களிடமும் தாய்மொழிக்கு முக்கியத்துவம் தருமாறு நான் கேட்டுக் கொள்கிறேன். 'மம்மி, டாடி' கலாச்சாரத்தைக் கைவிடுங்கள்.

பிற மொழிகளை எதிர்க்க வேண்டும். நம் மொழியை ஆதரிப்போம்," என்று கூறினார்.

https://www.bbc.com/tamil/india-61619346

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.