Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலகமே கைவிட்ட மிக்-27 ரக வானூர்தி கொள்வனவில் கோத்தபாயவின் மில்லியன் டொலர் கொள்ளை: "சண்டே லீடர்"

Featured Replies

உலக நாடுகளால் கைவிடப்பட்ட மிக்-27 ரக வானூர்திகளை சிறிலங்கா அரசாங்கம் கொள்வனவு செய்ததில் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சகோதரரும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச பெருந்தொகையான மில்லியன் டொலரை கொள்ளையடித்தது குறித்து ஐக்கிய தேசியக் கட்சி நடத்திய ஆய்வு அறிக்கையை கொழும்பில் இருந்து வெளிவரும் "சண்டே லீடர்" வார ஏடு வெளியிட்டுள்ளது.

அதன் தமிழாக்கம்:

கடந்த வருடம் ஒவ்வொன்றும் 2.462 மில்லியன் டொலர்கள் பெறுமதியான 4 மிக்-27 ரக தாக்குதல் வானூர்திகளை பாதுகாப்பு அமைச்சு கொள்வனவு செய்திருந்தது.

எனினும் இந்த கொள்வனவில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயா மில்லியன் டொலர் பணத்தை ஊழல் செய்துள்ளதாக முன்னாள் அமைச்சர்களான மங்கள சமரவீர மற்றும் சிறீபதி சூரியாராச்சி ஆகியோர் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவிடம் முறையிட்டிருந்தனர். கொள்வனவு செய்யப்பட்ட இந்த வானூர்திகள் பல காலம் சந்தையில் விற்பனை செய்யப்படாது இருந்ததாகவும், அவற்றின் பாவனைக்காலம் முடிவடைந்து விட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா, கசகஸ்த்தான், சிறிலங்கா நாடுகளை தவிர உலகில் ஏனைய நாடுகள் மிக்-27 ரக தாக்குதல் வானூர்திகளை பயன்படுத்துவதில்லை எனவும் இது தொடர்பில் ஆய்வை மேற்கொண்ட ஐ.தே.கவின் தொழில்நுட்பக் குழு தெரிவித்துள்ளது.

2006 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சிறிலங்கா அரசின் சார்பில் 4 மிக்-27 ரக தாக்குதல் வானூர்திகளை கொள்வனவு செய்யவும், ஏற்கனவே உள்ள 4 மிக்-27 ரக வானூர்திகளை மறுசீரமைப்பு செய்யவும் உக்ரேய்ன் நிறுவனம் ஒன்றுடன் உடன்பாடு மேற்கொள்ளப்பட்டது.

தரைத் தாக்குதல் தேவைகளுக்கான தகுதிகளை மிக்-27 ரக தாக்குதல் வானூர்தி கொண்டிருப்பதாக அதன் பின்னர் சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருந்தது.

ஐ.தே.கவின் இந்த அறிக்கையானது தேசியத்தின் நன்மை கருதி

- தற்போதைய போர்ச்சூழலில் நாட்டின் அவசர படைத்துறை தேவைகளை ஆய்வு செய்தல்

- மிக்-27 வானூர்திக் கொள்வனவில் கடைப்பிடிக்கப்பட்ட முறைகேடுகள், பரிந்துரைகளை ஆய்வு செய்தல்

- சிறிலங்காவின் மக்களுக்கு தவறான தகவல்களை வழங்கி பாதுகாப்பு அமைச்சு போரை தவறாக நடத்துகின்றதா என்பதை ஆராய்தல்

ஆகியவற்றை ஆய்வு செய்தது.

"2006 ஆம் ஆண்டு கொள்வனவு செய்யப்பட்ட 4 மிக்-27 ரக தாக்குதல் வானூர்திகளும் 1991 ஆம் ஆண்டில் இருந்து நீண்டகாலம் சந்தையில் இருந்தன. இயங்க முடியாது இருந்த அந்த வானூர்திகளை லெவிவ் ஸ்ரேற் வானூர்தி பழுது பார்க்கும் நிறுவனம் திருத்தியமைத்து சிறிலங்காவுக்கு விற்பனை செய்ததாக" 31.12.2006 ஆம் நாள் வெளிவந்த கட்டுரையில் சண்டே ரைம்ஸ் தெரிவித்திருந்தது.

2000 ஆம் ஆண்டு கூட இரு சந்தர்ப்பங்களில் இந்த வானூர்திகளை சிறிலங்கா வான்படையினர் நிராகரித்திருந்தனர்.

2000 ஆம் ஆண்டு மே 25 ஆம் நாள் சிறிலங்கா வான்படையினர் 4 மிக்-27 ரக வானூர்திகளை ஒவ்வொன்றும் 1.5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதிக்கு கொள்வனவு செய்திருந்தனர்.

பின்னர் 2000 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் மேலும் இரு மிக்-27 தாக்குதல் வானூர்திகளை ஒவ்வொன்றும் 1.6 மில்லியன் டொலர் பெறுமதிக்கு கொள்வனவு செய்திருந்தனர்.

இந்த சந்தர்ப்பங்களின் போது நிராகரிக்கப்பட்ட அதே வானூர்திகளை 2006 ஆம் ஆண்டு ஒவ்வொன்றும் 2.462 மில்லியன் டொலர்கள் பெறுமதிக்கு சிறிலங்கா அரசாங்கம் கொள்வனவு செய்துள்ளது.

2000 ஆண்டு மிக்-29 UB பயிற்சி வானூர்தி 900,000 டொலர்களுக்கு கொள்வனவு செய்யப்பட்டிருந்தது.

2006 ஆம் ஆண்டு அதனை மறுசீரமைக்க வேண்டிய தேவை ஏற்பட்ட போது, 1.1 மில்லியன் டொலர்களுக்கு மறுசீரமைப்பு பணிக்கான உடன்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது கொள்வனவு விலையை விட அதிகமாகும்.

எனவே தான்,

- ஏன் கடந்த காலத்தில் இருமுறை நிராகரிக்கப்பட்ட வானூர்திகளை வான்படை கொள்வனவு செய்துள்ளது.?

- ஏன் மிக்-29 UB பயிற்சி வானூர்தியின் மறுசீரமைப்பு செலவுகள் கொள்வனவு விலையை விட அதிகமாக உள்ளது.?

- 2000 ஆம் ஆண்டு கொள்வனவு செய்யப்பட்டவைகளை விட பழமையான வானூர்திகளுக்கு ஏன் 2006 ஆம் ஆண்டை விட அதிக விலை செலுத்தப்பட்டுள்ளது.?

போன்ற கேள்விகளை முன்வைத்து ஊழல் தடுப்புப்பிரிவு ஆணைக்குழுவிடம் மங்கள, சிறீபதி ஆகியோர் முறைப்பாடு செய்திருந்தனர்.

பாதுகாப்பு அமைச்சின் பொய்யான அறிக்கை

இதற்குப் பதிலளிக்கும் விதமாக பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் மிக்-27 இன் உள்வீட்டுக் கதை என்னும் தகவல் மார்ச் 22 ஆம் நாள் 2007 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டிருந்தது.

எனினும் அதில் அமைச்சர்களின் முதல் இரு கேள்விகளுக்கும் மௌனமே பதிலாக இருந்தது.

மேலும் அதில் தெரிவிக்கப்பட்ட தகவல்களில் பல பொய்யானவை.

"மிக்-27 வானூர்திகள் முன்னாள் சோவியத் நாடுகள், இந்தியா ஆகிய நாடுகளின் பிரதான வான் தாக்குதல் ஆயுதம்

மிக்-27 Flogger M வகை வானூர்திகள் தற்போதும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன"

அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அவை நிலையான மற்றும் நகரும் இலக்குகளையும், கடினமான இலக்குகளையும் தாக்குவதே பிரதான நோக்கம் என்றும்

http://www.globalsecurity.org/military/wor...ssia/mig-27.htm,

http://www.airforce-technology.com/projects/mig27

ஆகிய இணையத்தளங்களின் தகவல்களை திரித்து வெளியிடப்பட்டிருந்தது.

அதாவது இந்தியா முன்னர் தயாரித்தது என்ற சொல் மாற்றப்பட்டு தற்போதும் தயாரித்து வருகின்றது என்ற சொல் புகுத்தப்பட்டுள்ளது.

ஆனால் இந்த வகை வானூர்திகளை சோவியத்து ஒன்றியமே தயாரித்து வந்தது. எனினும் அதன் உற்பத்தி 1980 களில் நிறுத்தப்பட்டு விட்டது. சோவியத்தின் அனுமதியுடன் "ஹிந்துஸ்தான்" வானூர்தி நிறுவனம் மிக்-27 ரக வானூர்திகளை தயாரித்து வந்தது. தற்போது அதுவும் உற்பத்தியை நிறுத்திவிட்டது.

எனவே உலகில் யாரும் தற்போது மிக்-27 ரக வானூர்திகளை உற்பத்தி செய்வதில்லை.

மிக்-27 ரக தாக்குதல் வானூர்தி தரைத் தாக்குதலுக்கு என வடிவமைக்கப்பட்டது. அதாவது மரபுவழி தாக்குதல்களுக்கு ஏற்றது.

ஆப்கானிஸ்த்தான் போரின் போது சோவியத் படைகள் அதனை பயன்படுத்தியிருந்தது. ஆனால் சோவியத் படைகளின் நடைவடிக்கையில் மிக்-27 ரக தாக்குதல் வானூர்தி செயற்திறனற்றது என உறுதிப்படுத்தப்பட்டிருந்தத

  • கருத்துக்கள உறவுகள்

பாவனைக்குதவாத மிக்27 விமானங்களையே அரசாங்கம் கொள்வனவு செய்துள்ளது

வீரகேசரி நாளேடு

உற்பத்தி செய்யப்பட்டு 25 வருடங்கள் பழமைவாய்ந்த மற்றும் 1991 ஆம் ஆண்டு பாவனையிலிருந்து ஒதுக்கப்பட்ட மிக் 27 ரக விமானங்களை அரசாங்கம் கடந்த வருடம் கொள்வனவு செய்துள்ளது. 21ஆவது நூற்றாண்டில் மிக் 27 ரக விமானங்களை கொள்வனவு செய்த ஒரே நாடு இலங்கையாகும். அத்துடன் கேள்விப்பத்திர முறைகளும் நிதி சட்டங்களும் மீறப்பட்டுள்ள நிலையிலேயே மிக் விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. இவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுப்பது குறித்து பரிசீலித்து வருகின்றோம். மக்களின் நிதியை ஊழல் செய்யும் மற்றும் வீணடிக்கும் அரசாங்கத்துக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் கூறியதாவது :

யுத்தம் இடம்பெறுகின்ற நாட்டில் வாழ்க்கைச் செலவு உயர்வடைகின்றமை இயல்பாகும். ஆனால் எமது நாட்டில் யுத்தத்தை காட்டி அரசாங்கம் நிதியை சூறையாடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அரசாங்கம் கொள்ளையடிப்பதை பார்த்துக்கொண்டு மௌனமாக நாங்கள் இருந்தால் அது தேசதுரோக நடவடிக்கையாகும். அதனால்தான் தேச பிரேமிகள் என தம்மை கூறிக்கொள்ளும் ஜே.வி. பி. யினரும் ஜாதிக ஹெல உறுமயவினரும் என்ன செய்கின்றனர் என்று கேட்கின்றோம்.

கடந்த 2000 ஆம் ஆண்டு 8 மிக் 27 ரக விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டன. அப்போது ஒரு விமானம் 15 கோடிரூபாவாகும். ஆனால் அதே விமானங்களை ஒன்று 24 கோடி ரூபா கொடுத்து அரசாங்கம் கொள்வனவு செய்துள்ளது. முக்கியமாக 25 வருடங்கள் பழமையான 1991 ஆம் ஆண்டிலிருந்து பயன்படுத்தப்படாத விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. 2000 ஆம் ஆண்டு அப்போதைய அரசாங்கம் பாவனைக்கு உகந்ததல்ல என்று நிராகரித்த விமானங்களே தற்போது கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. இந்தியாவும் தற்போது மிக் 27 ரக விமானங்களை பயன்படுத்துவதில்லை.

மிக் ரக விமானங்களை கொள்வனவு செய்வது குறித்து ஆராய குழுவொன்று அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டது. இந்தக்குழுவில் விமான ஓட்டிகள் இடம்பெறாமை ஆச்சரியமளிக்கின்றது. ஆனால் இந்தக்குழுவின் பரிந்துரையில் தரை வழி தாக்குதலுக்கு பயன்படும் விமானங்கள் போதுமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது நாட்டில் விமானத்தாக்குதல் அச்சுறுத்தல் இருக்கும்போது இவ்வாறான யோசனைகள் முன்வைக்கப்படுகின்றமை ஆச்சரியமானதாகும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.