Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெருக்கடியிலிருந்து வெளியே வருவதற்கான வழி?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நெருக்கடியிலிருந்து வெளியே வருவதற்கான வழி?

 

 

 
  • அனைத்துக் கட்சிகளின் மத்தியில் தாமதமின்றி கருத்தொருமைப்பாடு எட்டப்பட வேண்டும்

__________________
விக்டர் ஐவன்
__________________

இலங்கை இந்தத் தருணத்தில் தற்போது இருக்கும் நிலையிலிருந்து மிகவும் பயங்கரமான படுகுழியில் விழுந்துவிடும் விளிம்பில் உள்ளது. எனவே அது தற்போதைய பாதாளத்திலிருந்து மேலும் கீழிறங்குவதைத் தடுப்பதற்காக, பொருத்தமானதும் உடனடியானதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், நாடு தவிர்க்க முடியாமல் புராதன கால நிலையிலிருந்து மீள்வது எளிதானது அல்ல. ஆனால், அரசியல் அமைப்பு மற்றும் தற்போதைய ஆட்சியில் மாற்றம் வேண்டும் என்று கோரும் மற்றும் வாதிடும் ஆக்ரோஷமான சக்திகளும் சமூகமும் இலங்கை எதிர்கொள்ளும் பயங்கரமான யதார்த்தத்தை உணர்ந்ததாகத் தெரியவில்லை.

image_135c9d9923-300x165.jpg
ஆளும் கட்சியை உடனடியாக மாற்ற முடியாது என்ற அசாதாரணமான அரசியல் சூழ்நிலை தற்போது நிலவி வருகிறது. ஊழல் மற்றும் முன்னேற்றமற்ற சக்தி என்று முத்திரை குத்தி அதை ஆதரிப்பதைத் தவிர்ப்பதற்கு இது சரியான நேரம் அல்ல. ஊழல் மற்றும் அற்புதமான பிம்பத்தைப் பொருட் படுத்தாமல் ஆளும் கட்சியுடன் கைகோர்ப்பது ஒரு சிறந்த தருணமாகப் பார்க்கப்படுகிறது.

நாடு இப்போது இருக்கும் படுகுழியிலிருந்து மீட்கப்பட வேண்டும். அதே சமயத்தில் அது அடுத்த அடுக்கில் விழுவதைத் தடுக்கிறது. விளைவுகள் மோசமாக இருக்கலாம். இச்சூழ்நிலையில், முறையான மாற்றம் மற்றும் ஆட்சி மாற்றம் போன்ற எதுவும், மேலே குறிப்பிட்டுள்ள அடிப்படை நோக்கத்தை சமரசம் செய்யாமல் இந்தக் குறிப்பிட்ட தருணத்தில் இலங்கை பொறுத்துக் கொள்ளக்கூடிய சட்டபூர்வமான அரசியலமைப்பு ரீ தியான கட்டமைப்புக்குள் இடம்பெற வேண்டும்.

‘மறுசீரமைப்புக்கான மக்கள் இயக்கம்’, நாம் தற்போது இருக்கும் நெருக்கடியின் குறிப்பிட்ட கட்டத்தை கருத்தில் கொண்டு தனது சீர்திருத்த திட்டத்தை வடிவமைத்துள்ளது. பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளின் கீழ் கொண்டு வரப்படும் வகையில் இடைக்கால கட்டமைப்பானது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டமைப்பானது, அவர்கள் ஒன்றாகச் சேர்ந்து சென்மதி நிலுவை நெருக்கடியைத் தீர்ப் பதற்கு செயற்பட முடிவதுடன் அதே சமயம் முறைமையில் ஆழமான மாற்றத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு மறுசீரமைப்புத்திட்டம் இரண்டு கட்டங்களில் செயல்படுத்தப்படலாம்.

முன்மொழியப்பட்ட சீர்திருத்தத் திட்டம், நெருக்கடியைத் தீர்ப்பதற்கு முன்கூட்டியே தேர்தலை நடத்துவது இன்றியமையாத நிபந்தனையாக இருக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு இரண்டு கட்டங்களாக அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்பிரகாரம் , நாட்டுக்குப் பொருத்தமான ஆட்சி முறையைத் தீர்மானித்த பின்னர், சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலை நடத்துவதற்குத் தேவையான தேர்தல் சட்டங்களை இயற்றுவதும், பின்னர் பாராளுமன்றத்துக்கு மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடத்துவதும் திட்டத்தின் முதல் கட்டத்தில் சேர்க்கப்பட வேண்டிய மிக முக்கியமான அம்சமாகும். அரசியலமைப்பு உருவாக்கக் குழுவுக்கும் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலாகவும் இது இருக்க வேண்டும்.

50 பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 பொதுமக்கள் அடங்கிய அரசியலமைப்பு உருவாக்கக் குழு, முழு சீர்திருத்தத் திட்டத்தைத் திட்டமிடுதல், தேவையான வரைவுகளை உருவாக்குதல் மற்றும் முதல் கட்டத்தில் இறுதி வரை அறிமுகப்படுத்தப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் ஆகியவற்றுக்கான அதிகாரசபையாகச் செயற்படும். இரண்டாவது கட்டத்துக்கான மறுசீரமைப்புத் திட்டத்தை திட்டமிடுதல் மற்றும் வரைவு செய்யும் பொறுப்பும் அதே குழுவிடம் ஒப்படைக்கப்படும். தேர்தலுக்குப் பிறகு ஆட்சிக்கு வரும் அரசாங்கமும் பாராளுமன்றமும் நிறைவேற்ற வேண்டிய கட்டாயமான சட்டப்பூர்வ கடப்பாடாக இது இயற்றப்படும்.

மறுசீரமைப்புத் திட்டத்தின் முதல் கட்டம் ஒரு வருடத்துக்குள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். மேலும் இரண்டாவது கட்டத்தில் அறிமுகப்படுத்தப்படும் ஏனைய சீர்திருத்தங்கள், ‘பங்கேற்பு அரசியல மைப்பு உருவாக்கம்’ உட்பட மூன்று ஆண்டுகளுக்குள் நிறைவு செய்யப் பட வேண்டும். ஆட்சிக்கு வரும் அரசாங்கம் எதுவாக இருந்தாலும் மறுசீரமைப்பு திட்டம் முடியும் வரை அனைத்துக் கட்சி அரசாங்கம் இருக்க வேண்டும்.

யதார்த்த பூர்வமாக்குதல்

மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் முன்மொழிவுகள் இலங்கைக்குத் தேவையான சீர்திருத்த வேலைத்திட்டத்தின் பரிமாணத்தை புரிந்துகொள்வதற்கான ஒரு மாதிரியாக மாத்திரமே உள்ளடக்கப்பட்டுள்ளன. அதிலுள்ள பிரேரணைகளை நடைமுறைப்படுத்துவது அவசியம் என்பதை வலியுறுத்தும் நோக்கில் அல்ல. இது மக்கள் பங்கேற்பின் சீர்திருத்தத் திட்டமாகும். எனவே, முன்மொழிவுகளை முன்வைக்க மக்களுக்கு உரிமை உள்ளது. முழுத் திட்டமும் வெளிப்படைத் தன்மையுடனும், பொதுமக்கள் தீவிரமாக ஈடுபடும் வகையிலும் செயற்படுத்தப்படும்.

இந்த வேலைத்திட்டம் (அ) இலங்கை எதிர்கொள்ளும் நெருக்கடியைத் தீர்க்க அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கான உறுதியான அடித்தளத்தை வழங்குகிறது. (ஆ) இந்தச் சீர்திருத்தத் திட்டம் இந்த நேரத்தில் சர்வதேச உதவியைப் பெறுவதற்கான உறுதியான அடித்தளத்தை இலங்கைக்கு வழங்குகிறது. (இ) தீங்கான மற்றும் குழப்பமான முறைமையில் ஆழமான மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு வலுவான அரசியலமைப்பு கட்டமைப்பையும் இது வழங்குகிறது. (ஈ) கறுப்புப் பணம் இல்லாமல் போட்டியிடக்கூடிய முன்கூட்டியே தேர்தலை நடத்துவதற்கான இடத்தை இது வழங்கும் (இ) பிளவுபட்ட தேசத்தை ஒருங்கிணைத்து சமத்துவக் கொள்கையின் அடிப்படையில் நவீன தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான உறுதியான அடித்தளத்தை இது வழங்குகிறது. (உ ) சட்டத்தின் ஆட்சியின் அடிப்படையில் ஒரு புதிய ஆட்சி முறையையும், பொதுமக்கள் பங்கேற்பின் அடிப்படையில் ஒரு நவீன அரசியலமைப்பையும் உருவாக்க இது வாய்ப்பளிக்கும்.

உத்தேச மறுசீரமைப்பு வேலைத்திட்டத்துக்கு முதலில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவும் பின்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஒப்புதல் அளித்தனர். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வுடன் ஜூன் 10ஆம் திகதி நடைபெற்ற கலந்துரையாடலில், அவர் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை ஏற்றுக்கொண்டது மட்டுமன்றி, ஜூன் 13ஆம் திகதி அது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த விரிவான கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்தார். ஜூன் 13 கூட்டத்தில் ஐக்கியமக்கள் சக்தியின் உத்தியோகபூர்வ படிநிலையை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவும், எதிர்க்கட்சி கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைவர்கள் மற்றும் பாரா ளுமன்ற உறுப்பினர்கள் குழுவும் கலந்து கொண்டனர்.

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய எதிர்க்கட்சிகளில் சம்பிக்க ரணவக்க மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகள் மாத்திரமே பிரசன்னமாகியிருக்கவில்லை. சுமார் நான்கு மணி நேரம் நீடித்த இந்த விவாதம் உற்சாகமாக நடந்தது. சீர்திருத்தத் திட்டம் மற்றும் அத்தகைய திட்டத்தைக் கொண்டிருப்பதன் அவசியத்தை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். கால தாமதமின்றி அனைத்துக் கட்சி ஆட்சி அமைக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.

அரசியலமைப்பில் ஆழமானதும் சாதகமானதுமான மாற்றத்தைக் கொண்டு வரும் விரிவான கட்டமைப்பு மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை ஏற்றுக்கொள்வதற்காக நாட்டை வழிநடத்துவதன் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பதை நோக்கி இலங்கை நகர்வதாகத் தெரிகிறது. இது ஒரு மிக முக்கியமான போக்கு என்று சொல்லத் தேவையில்லை. ஜே.வி.பி., 43 ஆவது படையணி (பிரிகேட்), ஸ்ரீ.ல.சு.க மற்றும் ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு குழுக்களுடன் இது பற்றி கலந்துரையாடுவதற்கு நாங்கள் எதிர்பார்த்துள்ளோம். காலதாமதமின்றி அனைத்துக் கட்சிகளின் ஒருமித்த கருத்து எட்டப்பட வேண்டும்.

இந்த நெருக்கடிக்கு முகங்கொடுத்து நாட்டின் மூன்று முக்கிய தூண்களாக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் உருவாக்கப்பட வேண்டும் என்பது எனது கருத்து.அரசின் தலைவரான ஜனாதிபதியே அரசின் அனைத்து விவகாரங்களையும் கண்காணிக்கும் அதிகாரம் படைத்தவராக இருக்க வேண்டும். சென்மதி நிலுவை நெருக்கடி மற்றும் அரசாங்கத்தின் விவகாரங்களை மேற்பார்வையிடும் அதிகாரியாக பிரதமர் இருக்க வேண்டும். எதிர்க்கட்சித் தலைவர் மறுசீரமைப்பு த் திட்டத்தைக் மேற்பார்வை செய்யும் அதிகாரம் கொண்டவராக இருக்க வேண்டும்.

இத்தகைய கலவையானது நாட்டை ஐக்கியப்படுத்த உதவுவது மட்டுமல்லாமல், நாடு அதன் தற்போதைய படுகுழியிலிருந்து வெளிப்படுவதற்கு ஓர் உறுதியான அடித்தளத்தை வழங்கும். இது மோசமான சூழ்நிலையாக இருக்கக்கூடிய அடுத்த கட்டத்துக்கு விழுவதைத் தடுக்கும். இறுதியில், இளைய தலைமுறையினரின் கோரிக்கைகள் கடுமையான வழிமுறைகளில் அல்லாமல் , சுமுகமான அரசியலமைப்பு ரீதியான கட்டமைப்பின் மூலம் நாடு வென்றெடுக்கக்கூடிய ஒன்றாக மாறும்.

பினான்சியல் டைம்ஸ்

https://thinakkural.lk/article/184601

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.