Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக அகதிகள் தினம்: அகதிகள், புலம் பெயர்ந்தோர், குடியேறிகள், தஞ்சம் கோரிகள் என்ன வேறுபாடு?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உலக அகதிகள் தினம்: அகதிகள், புலம் பெயர்ந்தோர், குடியேறிகள், தஞ்சம் கோரிகள் என்ன வேறுபாடு?

2 மணி நேரங்களுக்கு முன்னர்
 

ஆஸ்திரேலியாவில் இருந்த 4 பேர் கொண்ட இலங்கைத் தமிழ் குடும்பம் ஒன்று ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேற விரும்பாததால் அவர்களை கிறிஸ்துமஸ் தீவில் உள்ள முகாமில் அடைக்க உத்தரவிடப்பட்டது. அவர்களுக்கு ஆதரவாக மெல்பர்ன் நகரில் நடந்த ஒரு போராட்டம்.

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

ஆஸ்திரேலியாவில் இருந்த 4 பேர் கொண்ட இலங்கைத் தமிழ் குடும்பம் ஒன்று ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேற விரும்பாததால் அவர்களை கிறிஸ்துமஸ் தீவில் உள்ள முகாமில் அடைக்க உத்தரவிடப்பட்டது. அவர்களுக்கு ஆதரவாக மெல்பர்ன் நகரில் நடந்த ஒரு போராட்டம்.

கடந்த இரண்டு தசாப்தங்களில், மனிதர்கள் ஓரிடத்தில் இருந்து வேறிடம் சென்று வாழ்வது இதுவரை இல்லாத அளவை எட்டியுள்ளது. 2000இல் 17 கோடியே 30 லட்சம் பேர் தாய் நாட்டிற்கு வெளியே வாழ்ந்தததாகவும், 2020-ல் அந்த எண்ணிக்கை 28 கோடியே 10 லட்சமாக அதிகரித்துள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது.

இது உலக மக்கள் தொகையில் 3.6 சதவிகிதம் ஆகும்.

ஆனால் மக்கள் வேறு நாட்டிற்குச் செல்வதைப் பற்றி நாம் அனைவரும் பேசும் விதம் குழப்பமாக இருக்கும். புலம்பெயர்ந்தோர், அகதிகள், புகலிடம் கோருவோர் மற்றும் குடியேறிகள் என்ற வெவ்வேறு சொற்களை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

ஆனால் அவற்றை விவரிக்க சரியான வழி இருக்கிறதா?

சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில், Centre for Migrationல் மூத்த விரிவுரையாளராக உள்ள Dr Charlotte Taylor, எல்லைகளைக் கடக்கும் மக்களை விவரிக்க ஊடகங்கள் எவ்வாறு மொழியைப் பயன்படுத்துகின்றன என்பதைப் பற்றி எழுதியிருக்கிறார்.

நாம் அவ்வப்போது கேட்கும் சில சொற்களைப் பற்றிய விளக்கங்களுக்கு அவரது உதவியைப் பெற்றோம்.

Migrant-புலம் பெயர்ந்தவர்

நீங்கள் அடிக்கடி கேட்கக்கூடிய வார்த்தை இது. வேலை அல்லது மேம்பட்ட வாழ்க்கையைத் தேடுவதற்காக ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்லும் நபரை புலம் பெயர்ந்தவர் எனலாம்.

உதாரணமாக, நீங்கள் இங்கிலாந்தில் வசிக்கிறீர்கள் என்றால், இந்த கோடையில் சில மாதங்களுக்கு ஸ்பெயினில் வேலைக்குச் செல்ல முடிவு செய்தால், நீங்கள் புலம் பெயர்ந்தவர் என்று விவரிக்கப்படலாம்.

"புலம் பெயர்ந்தோர் என்ற சொல் தற்போதைக்கு ஒப்பீட்டளவில் சர்ச்சைக்குரியது அல்ல, ஆனால் அது பாதுகாப்பான வார்த்தையாக தொடராது. காலப்போக்கில் அவை மாறும்" என்று, சார்லட் டெய்லர் கூறுகிறார்.

அரசியல் காரணங்களுக்கான இடம்பெயர்வு என்பது சற்று வித்தியாசமானதாக இருக்கும்.

ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபன்களைப் போல, ஒரு குறிப்பிட்ட ஆட்சிக்கு உட்பட்ட பகுதியில் இருந்து விலகிச்செல்வதற்காக யாராவது இடம்பெயர்வது அப்படி ஒரு வேறுபட்ட இடபெயர்வாக இருக்கலாம்.

 

யுக்ரேனில் இருந்து வெளியேறும் ஒரு குடும்பம்.

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

யுக்ரேனில் இருந்து வெளியேறும் ஒரு குடும்பம்.

இடம்பெயர்வுகளை மையப்படுத்தி பயன்படுத்தப்படும் "அலை, ஓட்டம், வெள்ளம்" போன்ற வார்த்தைகள் பற்றிதான் சார்லட் கவலைகொள்கிறார்.

புலம்பெயர்பவர்கள் தொடர்ந்து வருகைதரும் நாட்டில் உள்ள மக்கள், அவர்களை "மக்களாக அல்லாமல் பொருள்களாக " பார்க்க முடியும் என்ற அர்த்தத்தை அந்த வார்த்தைகள் வெளிப்படுத்துவதாக அவர் நம்புகிறார்.

Immigrant-குடியேறியவர்

ஒரு நபர் வெளிநாட்டில் நிரந்தரமாக வாழ வரும்போது அவர் குடியேறியவர் எனப்படுகிறார்.

அவர்கள் தங்கள் சொந்த நாட்டிலிருந்து வெளியேற கட்டாயப்படுத்தப்பட்டிருக்க வேண்டியதில்லை, அது ஒரு தேர்வாக இருக்கலாம்.

நாடுவிட்டு நாடு மாறி வாழ்வதற்குச் சரியான காரணங்கள் இருந்தாலும், சட்டப்பூர்வ குடியேற்றத்திற்கும், சட்டவிரோத குடியேற்றத்திற்கும் வேறுபாடு உண்டு.

அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்கள் மூலம் ஒருவர் ஒரு நாட்டிற்கு வர அனுமதிக்கப்படுகிறார் என்றால், அவர் சட்டவிரோதமாக குடியேறியவர் அல்ல.

``ஊடகங்கள் பெரும்பாலும் குடியேற்றத்தைப் பற்றி விவாதிக்கின்றன, வெளியேற்றத்தைப் பற்றி அல்ல. அதாவது, மக்கள் தங்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேறும்போது ஊடகங்கள் விவாதிப்பதிலை`` என்று கூறும் சார்லட், "அவை இப்போது உண்மையில் தனித்தனி செயல்முறைகளாகக் பார்க்கப்படுகின்றன. இரண்டுக்கும் இடையே உள்ள ஒற்றுமைகளை மக்கள் அடையாளம் காண்பதில்லை" என்கிறார்.

Refugee-அகதி

 

2015ல் குரேயேஷியாவில் இருந்து ஸ்லோவேனியாவுக்குள் நுழைந்த அகதிகளை ஒரு வயல் வழியாக இட்டுச் செல்கிறார்கள் போலீசார். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பெரிய அகதிச் சிக்கலை எதிர்கொண்டது ஐரோப்பா.

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

2015ல் குரேயேஷியாவில் இருந்து ஸ்லோவேனியாவுக்குள் நுழைந்த அகதிகளை ஒரு வயல் வழியாக இட்டுச் செல்கிறார்கள் போலீசார். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பெரிய அகதிச் சிக்கலை எதிர்கொண்டது ஐரோப்பா.

போர், இயற்கை பேரழிவு, துன்புறுத்தப்படுதல் ஆகியவற்றிலிருந்து தப்பிப்பதற்காக, தங்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளவரே அகதி எனப்படுவர்.

"இது மிகவும் வித்தியாசமான நிலை" என்கிறார் டாக்டர் சார்லட் டெய்லர்.

"ஒருவரை அகதி என்று நீங்கள் ஒப்புக்கொண்டவுடன், அவர்களுக்கு குறிப்பிட்ட சில உரிமைகள் உள்ளன என்பதையும் நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்." என்றும், "அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட சூழ்நிலைகளால் இயக்கப்படுகிறார்கள்." என்றும் சார்லட் டெய்லர் கூறுகிறார்.

Asylum seeker - தஞ்சம் கோரிகள்

இந்த நபர் வேறு நாட்டில் சர்வதேச பாதுகாப்பைக் கோரினாலும், மேற்கூறியவற்றின் கலவையாக இருக்கலாம்.

 

2015ம் ஆண்டு செர்பியாவை கடந்து ஹங்கேரிக்குள் நுழையும் ஒரு அகதிகள் குழு. துருக்கியில் இருந்து கிரீஸ் வந்து அங்கிருந்து மாசிடோனியா வழியாக செர்பியா வந்து அங்கிருந்து ஹங்கேரிக்குள் நுழையும் அகதிகள் எண்ணிக்கை அந்த ஆண்டில் 1 லட்சத்தைக் கடந்தது. இதையடுத்து எல்லையில் முள்வேலி அமைக்க உத்தரவிட்டார் ஹங்கேரி பிரதமர் விக்டர் ஆர்பன்.

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

2015ம் ஆண்டு செர்பியாவை கடந்து ஹங்கேரிக்குள் நுழையும் ஒரு அகதிகள் குழு. துருக்கியில் இருந்து கிரீஸ் வந்து அங்கிருந்து மாசிடோனியா வழியாக செர்பியா வந்து அங்கிருந்து ஹங்கேரிக்குள் நுழையும் அகதிகள் எண்ணிக்கை அந்த ஆண்டில் 1 லட்சத்தைக் கடந்தது. இதையடுத்து எல்லையில் முள்வேலி அமைக்க உத்தரவிட்டார் ஹங்கேரி பிரதமர் விக்டர் ஆர்பன்.

அதில் தங்கள் உயிரைப் பணயம் வைத்து நிலம் அல்லது நீர் நிலைகளைக் கடந்து தங்கள் இலக்கை அடைய முயற்சிக்கும் நபர்களும் அடங்குவர்.

தஞ்சம் கோரிகள் எனும் வார்த்தையை, இந்தச் சூழ்நிலையில் பயன்படுத்துவதற்கு வசதியாக உணர்கிறார் சார்லட்.

"யாராவது தஞ்சம் கோரினால், அவர்கள் தஞ்சம் கோருகிறார்கள் என்றுதான் அர்த்தம். ஆனால் சில நாடுகளில் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் ஊடகங்கள், தஞ்சம் கோரிகளின் சட்டபூர்வமான தன்மை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கேள்வி எழுப்பியுள்ளன.

"நேர்மையான காரணங்களுக்காக தஞ்சம் கோருவதற்கும், அதற்கு மாறாகத் தஞ்சம் கோருவதற்கும் உள்ள வேறுபாட்டைக் கண்டு நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன். அது நிராகரிக்கப்படலாம், ஆனால் தஞ்சம் கோருவது உண்மை." என்கிறார், டாக்டர் சார்லட் டெய்லர்.

https://www.bbc.com/tamil/india-61861889

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.