Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எல்லாவற்றுக்கும் குற்றச்சாட்டு தமிழர்களின் தரப்பின் மீதுதான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : 2007-08-09

எல்லாவற்றுக்கும் குற்றச்சாட்டு தமிழர்களின் தரப்பின் மீதுதான்

நாய்க்குக் கல் எறிந்தால், அந்தக் கல் உடலின் எந்தப் பாகத்தில் பட்டாலும், நாய் காலைத்தான் தூக்கிக்கொண்டு ஓடும் என்பார்கள்.

அப்படித்தான் இன்று தென்னிலங்கை அரசியல் கலாசாரமும். எந்த அரசியல் பிரச்சினையாயினும் தமக்கு சுய லாபம் ஈட்டுவதற்காக அவ்விடயத்தைத் தமிழர் தலையில் - இப்போதைய நிலையில் தமிழர்களின் விடுதலைப் போராட்ட சக்தியான புலிகள் மீது - போடுவதுதான் தென் னிலங்கை அரசியல்வாதிகளின் சாமர்த்தியம்.

'செட்டியார் நட்டம் ஊர் மேலே' என்பது போல - 'செல்லும் - செல்லாதது எல்லாம் செட்டியாரிடம்' என்பது போல - எல்லா விடயங்களிலும் குற்றத்தைப் புலிகள் மீது போட்டு தங்களை அரசியல் சுத்தவாளிகளாகக் காட்டுவதுதான் தெற் கின் அரசியல் நாகரிகமாக இப்போது மிளிர்கின்றது.

தென்னிலங்கையில் அரசியல் களம் இப்போது சூடு பிடித்திருக்கின்றது. பதவி ஆசைக்கு அடிமையான அரசியல் குத்துக்கரணங்களைப் பயன்படுத்தித் தமது அரசின் பெரும் பான்மையை நாடாளுமன்றத்தில் உறுதிப்படுத்திக்கொள்ளும் தந்திரோபாயத்தை நம்பியிருந்த ஜனாதிபதி மஹிந் தருக்கு அது இப்போது சற்று இடறத் தொடங்கியிருப்பது போலத் தோன்றுகின்றது.

பதவி ஆசையுடன் வாலாட்டிக்கொண்டிருந்த பலருக்கு அமைச்சுப் பதவி கொடுக்கப்பட்டு விட்டாயிற்று. ஆனால் அத்தகைய பலரும் பெயருக்குத்தான் அமைச்சர்கள். அதிகாரம் எல்லாம் 'ராஜபக்ஷ அண்ட் சகோதரர்கள் கம்பனி' யிடமே குவிந்து கிடப்பது கண்கூடு. இதனால் பதவி ஆசைக்கு "பல்டி' அடித்தவர்கள் விசனத்தில் மூழ்கிக் கிடக் கிறார்கள். பெயருக்குக் கிடைத்திருக்கும் அமைச்சர் பதவி களை உதறித்தள்ளிவிட்டு வெறும் எம். பியாக இருப்பது மேல் என்ற நிலைக்கு அவர்கள் வந்துவிட்டார்கள் போலும்.

ஏற்கனவே மங்கள - சிறிபதி அணி அரசிலிருந்து வெளியேறிவிட்டது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஐந்து எம். பிக்கள் அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவி களைத் துறந்துவிட்டு மதில் மேல் காத்திருக்கின்றனர்.

நாடாளுமன்றில் அரசின் பெரும்பான்மை நூலிழையில் ஊசலாடக்கூடிய ஒரு அரசியல் இழுபறி நிலைமை மெல்ல மெல்ல உருவாகி வருகின்றது.

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மஹிந்தரின் அரசை வீழ்த்த கங்கணம் கட்டி நிற்கின்றது எதிரணி - குறிப்பாக ஐக்கியதேசியக் கட்சி.

ஐ. தே. கட்சி, ஜே. வி. பி. போன்ற எதிரணிக்கட்சிகள் தமது அரசைக் கவிழ்த்து விடுமோ என்ற பீதியில் உறைந்து கிடக்கும் அரசுத் தலைமை, வழமைபோல அந்த அரசியல் பிரச் சினையிலிருந்து மீளுவதற்காக விவகாரத்தை - பழியை - தமிழர் தரப்பு மீது போடும் தமது நயவஞ்சகப் போக்கை ஆரம் பித்து விட்டது. தமது அரசியல் (அ)நாகரிகத்தை அவர்கள் வெளிப்படுத்தத் தொடங்கிவிட்டனர்.

நாடாளுமன்றப் பெரும்பான்மை இடறப் போகின்றது என்று அரசுத் தலைமை உணரத் தொடங்கியதுமே, அதிலிருந்து தப்பிப் பிழைப்பதற்கான முதல் நடவடிக்கையாக - குற்றச்சாட்டு தமிழர் தரப்பு மீதே சுமத்தப்படத் தொடங் கியாகிவிட்டது.

"ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசைக் கவிழ்ப் பதற்காக, 22 எம். பிக்களைக் கொண்ட புலிகள் சார்பிலான - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்து கூட்டுச் சதி செய்கின்றது' - என அரசின் குரலாக ஒலித்தார் அரசுத் தரப்பின் நாடாளுமன்றப் பிரதம கொற டாவான அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே.

ஏற்கனவே ஐ.தே.கட்சியிலிருந்து குத்துக்கரணம் அடித்து அமைச்சர் பதவிகளோடு ஆளுந்தரப்புக்குப் போய்ச் சேர்ந்த பிரமுகர்களை மீண்டும் எதிரணிக்கு இழுக்கும் சூழ்ச்சிக்கும் வலை விரிக்கப்பட்டிருப்பதாக "குத்துக்கரண அணி'யின் தலைவர் அமைச்சர் கரு ஜயசூரிய நாடாளுமன்றில் "ஒப்பாரி' வைத்திருக்கின்றார்.

அவர் கூறுவதுபோல் அப்படி அரசைக் கவிழ்ப்பதற்கு முயற்சி எடுக்கப்பட்டிருக்கலாம். அதற்காகப் பலகோடி ரூபா பணத்தை ஆசைகாட்டி பேரம் பேசியிருக்கலாம். தென் னிலங்கை அரசியலில் அது சர்வ சாதாரணமாக நடக்கக் கூடிய விவகாரமே.

ஆனால் அதற்கும் புலிகளின் பணமே முதலீடு என்றும், புலி ஆதரவாளரான தமிழ் தனவந்தர் ஒருவரே புலிகளின் சார்பில் இந்தளவு பணத்தை பேரமாகப் பேசி ஆளும் தரப்பில் உள்ள எம். பிக்களை எதிரணிக்கு இழுக்க சூத்திரதாரியாகச் செயற்படுகின்றார் என்றும் கூறுவது அபத்தமானது. எல்லா விவகாரத்திலும் அரசியல் லாபம் ஈட்டுவதற்கு தமிழர் தரப்பின் மீது புலிகள் மீது - அதைச் சுமத்தும் வழமையான தென்னிலங்கைப் போக்கின் மற்றொரு அத்தியாயமே இது.

அரசுக்கு மாறாக 'அரசியல் குத்துக்கரணம்' அடிப்போர் மீது, புலிகளின் நிதியை வாங்கிக்கொண்டு 'பல்டி' அடிக் கின்றார்கள் எனச் சித்திரிப்பதன் மூலம் தென்னிலங்கையில் அவர்களின் செல்வாக்கைக் கெடுப்பதும், அப்படிக் குத்துக் கரணம் அடித்தால் புலிச்சாயம் பூசுவோம் என்று அத்தகை யோருக்கு எச்சரிப்பதுமே இத்தகைய எத்தனங்களின் பின் னால் புதைந்து கிடக்கும் அரசியல் குரூரத்தனமாகும்.

தமிழர் தேசத்தை - தமிழர் தேசியத்தை - கடுமையாக எதிர்ப்பவர்கள் என்று தம்மை வெளிப்படுத்துவதன் மூலம் 'பௌத்த - சிங்களத் தேசியப் பற்றாளர்களாக இனங்காட்டி, அதன் வாயிலாகத் தமது செல்வாக்கை வலுப்படுத்திக் கொள்ளும் இனவெறி அரசியல் அணுகுமுறையில் தென்னி லங்கை அரசியல்வாதிகள் ஊறிக்கிடக்கிறார்கள். அவர்களிடமிருந்து இத்தகைய பிரதிபலிப்புகளைத்தான் எதிர் பார்க்க முடியும்.

நன்றி - உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.