Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசை தோற்கடித்து மக்கள் கட்சியை உருவாக்கும் காலம் வந்துவிட்டது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரசை தோற்கடித்து மக்கள் கட்சியை உருவாக்கும் காலம் வந்துவிட்டது.

Written by Pandaravanniyan - Aug 09, 2007 at 10:21 AM

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான மக்கள் விரோ அரசாங்கத்தை தோல்வியடையச் செய்து ஜே.வி.பி தலைமையிலான அரசாங்கத்தை விரைவில் ஏற்படுத்துவோம். இன்றைய அரசாங்கம் மக்கள் வழங்கிய ஆணையினை மீறிவிட்டது என ஜே.வி.பியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் இன்றிருபபுது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கமல்ல ஐ.தே.கட்சி அரசாங்கமேயாகும். மக்களை கவனிக்காத அரசாங்கத்தை தோல்வியடையச் செய்து புதியதொரு மக்களாட்சியினை உருவாக்கும் காலம் வந்துவிட்டது என்றம் அவர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பிலுள்ள இலங்கை மன்றக் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மநாட்டில் கருத்து தெரிவிக்கையிலேயே சோமவன்ச அமரசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் தெரிவித்ததாவது நாளுக்கு நாள் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரித்து மக்கள் பெரும் கஷ்டங்களுக்கு மத்தியில் வாழ்கின்றார்கள். பொருளாதாரம் சீர்குலைந்து ஊழல்மோசடிகள் அதிகரித்துள்ளன.

ஆனால் ஜனாதிபதியோ அரசாங்கத்தரப்பினரோ மக்களையும் நாட்டையும் பாதுகாப்பதற்கான எதுவித கவனத்தையும் செலுத்தாது வெறுமனே ஆட்சியதிகாரத்தையும் தக்கவைத்துக் கொள்வதற்காக பணத்தை செலவழித்து ஏனைய கட்சி உறுப்பினர்களை தம்முடன் இணைத்துக் கொள்கின்றனர்.

இன்றிருப்பது முன்னணி ஆட்சியல்ல ஐ.தே.கவின் ஆட்சிஆகும்.

எனவே மக்களை கவனிக்காத மக்கள் விரோத அரசாங்கத்தை தோல்வியடையச் செய்து புதியதொரு மக்களாட்சியை ஏற்படுத்துவதற்கான காலம் வந்துவிட்டது. ஜே.வி.பி அதற்கான திட்டங்களை முன்னெடுத்து வருகிறது புத்திஜீவிகள், கலைஞர்கள், சிவில் அமைப்புக்கள் உட்பட தேசப்பற்றாளர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றோம். மிக விரைவில் ஜே.வி.பி தலைமையிலான மக்கள் ஆட்சி ஏற்படுத்தப்படும்.

உலக சந்தையில் விலையேற்றத்தால் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது. ஆனால் இதற்கு ரூபாவின் விலை வீழ்ச்சியும் காரணமாகும். இந்த அரசாங்கம் பதவியேற்ற பின்பு 7 தடவை எரிபொருள்களின் விலை அதிகரித்துள்ளது. அரசாங்கம் மானிய அடிப்படையில் பெற்றோல் ஒரு லீற்றரை 104 ரூபாவுக்கு வழங்க முடியும். ஆனால் அரச நிறவனங்களின் நஷ்டத்தை ஈடுசெய்வதற்கான எரிபொருட்களின் விலையை அதிகரித்து மக்கள் மீது சுமை அதிகரிக்கப்படுகிறது.

அமைச்சர்கள் சுகபோகம் அனுபவிக்கின்றனர். ஆனால் மக்கள் வாழமுடியாது கஷ்ரப்படுகின்றனர். இவற்றை கண்டுகொள்ளாத அரசாங்கம் ஸ்திரத்தன்மையை பாதுகாப்பதற்கு முயற்சிக்கின்றது. எதிர்க்கட்சி ஆட்சியைகைப்பற்ற முயற்சிக்கின்றது.

இன்று இருதரப்பிலும் நீலமும் பச்சையும் கலந்துள்ளன. எனவே தொடர்ந்தும் இவர்களை ஆட்சியில் அமர்த்துவதால் எதுவித நன்மையும் ஏற்படப்போவதில்லை.

ஐ.தே.க. ஆட்சியமைக்க முடியாது ஏனென்றால் அங்கிருப்பவர்கள் வெளியேறுகின்றனர். புதிதாக எவரும் இணைவதில்லை. மங்களவும் ஸ்ரீபதியும் இணைந்துள்ளனர். மேல்மாகாண சபையில் ஐ.தே.க. கொண்டுவந்த பிரேரணை மக்களுக்கு நன்மை பயப்பதன் காரணமாகவே ஆதரவு வழங்கினோம். அது அரசாங்கத்தை அமைக்க ஐ.தே.கவுக்கு ஆதரவாக வாக்களிப்பதாகக் கருதக்கூடாது.

ஜனாதிபதி தேர்தலில் மகிந்தவை வெற்றிபெறச் செய்யவும் 2004 ஆம் ஆண்டில் ஐ.தே.க வை வீட்டுக்கு அனுப்பவும் ஜே.வி.பியே முன்னின்றது. இல்லாவிட்டால் இந்த வெற்றிகள் கிடைத்திருக்காது. எமது பங்களிப்பில்லாமல் வெற்றிகளைப் பெறமுடியாது. எனவே புதிய அரசாங்கத்தை நாம் உருவாக்குவோம். மக்கள் விரோத அரசாங்கத்திற்கு எதிராக எதிர்வரும் 14ஆம்திகதி செவ்வாய்க்கிழமை கொழும்பில் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடத்தவுள்ளோம். அதேநேரம் நாடுதழுவிய ரீதியிலும் இதனை முன்னெடுப்போம். புதிய ஆட்சி அமைய வேண்டியது ஏன் என்பது தொடர்பில் மக்கள் மத்தியில் தெளிவுபடுத்தும் கூட்டங்களையும் ஏற்பாடு செய்துள்ளளோம்.

இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுகின்றது. என்பதை ஒத்துக்கொள்கிறோம். அதுவும் முற்றாக நிறுத்தப்படவேண்டும். அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளவேண்டும்.

ஆனால் இதனைப் பயன்படுத்தி எமது நாட்டுக்குள் வெளிநாடுகளினதும். அமைப்புக்களினதும் தலையீடுகளுக்கு இடமளிக்க முடியாது.

நாட்டில் மனித உரிமை மீறல்களுக்கு இடமளிக்க முடியாது. அது முற்றாக நிறுத்தப்படவேண்டும். அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கமும், உள்நாட்டு மனிதஉரிமை அமைப்புக்களும் மேற்கொள்ளவேண்டும். வெளிநாடுகளுக்கோ, வெளிநாட்டு அமைப்புக்களுக்கோ, இடமளிக்கமுடியாது, பயங்கரவாதப் பிரச்சினை இங்குளளது. எனவே மனிதஉரிமை மீறல்கள் இடம்பெறலாம். என அவர்மேலும் தெரிவித்துள்ளார்

நன்றி - சங்கதி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.