Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முகமாலை பகுதியில்... கண்ணிவெடி அகற்றும் பணி – ஜப்பானின் உதவிக்கான, ஒப்பந்தம் கைச்சாத்து!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவு விசுவமடுபகுதிக்கு ஜப்பானிய தூதுவர் விஜயம்!

முல்லைத்தீவு, விசுவமடு... பகுதிக்கு, ஜப்பானிய தூதுவர் விஜயம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடுபகுதியில் அமைந்துள்ள பனை தென்னை கூட்டுறவு சங்கத்தின் தலைமைக் காரியலயத்திற்கு இன்று (செவ்வாய்க்கிழமை) ஜப்பானிய தூதுவர் விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இலங்கை மற்றும் ஜப்பான் நாடுகளின் கூட்டுறவுவின் அடையாளமாக ஜப்பான் அரசின் நிதிப்பங்களிப்பில் நன்கோடையாக வழங்கப்பட்ட தேங்காய் எண்ணை சுத்திகரிப்பு நிலையத்திற்கு இயந்திரம் ஒன்று 2 மில்லியன் ரூபா பெறுமதியில் கடந்த 2021 ஆண்டு வழங்கிப்பட்டது.

அதன் பயன்பாட்டை பார்வையிடுவதற்காக ஜப்பான் நாட்டு தூதுவர் இன்றையதினம் நேரில் சென்றிருந்தார்.

IMG_20220628_150424-600x338.jpg

https://athavannews.com/2022/1288841

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

கண்ணிவெடி அகற்றும் பணி – ஜப்பானின் உதவிக்கான ஒப்பந்தம் கைச்சாத்து!

டாஸ் மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பணிக்கான அடுத்த ஓராண்டுக்கான ஜப்பான் நாட்டு உதவிக்கான ஒப்பந்தம் கைச்சார்த்திடப்பட்டது.

இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8.30 மணியளவில் முகமாலை பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் இடம்பெறும் பகுதியில் குறித்த ஒப்பந்தம் கைச்சார்த்திடப்பட்டது.

ஜப்பான் நாட்டின் தூதுவர் மிசுகோஸி கிடேகி குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு, நன்கொடையாளர் சார்பில் ஒப்பமிட்டார். அவருடன் ஜப்பான் தூதரகத்தின் 2ம் நிலை செயலாளர் இகராசி டோருவும் ஒப்பமிட்டனர்.

டாஸ் நிறுவனத்தின் சார்பாக இயக்குனரும் நிகழ்ச்சித்திட்ட முகாமையாளருமான ஆனந்த சந்ரசிறி மற்றும் செயற்திட்ட முகாமையாளர் சுனில் ஆரியசேன ஆகியோர் ஒப்பமிட்டனர்.

குறித்த பணியினை முன்னெடுக்க 681,812 அமெரிக்க டொலருக்கான மானிய ஒப்பந்தமே இதன் போது கையொப்பமிடப்பட்டது.

டாஸ் நிறுவனத்திற்கு 19.06.2022 வரை அனைத்து நன்கொடையாளர்களின் நிதி உதவியுடன் 15.82 சதுர கிலோமீற்றர் பரப்பளவில் கண்ணிவெடி அகற்றப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது 106,304 மனிதருக்கு தீங்கேற்படுத்தும் கண்ணிவெடிகளும், 245 கனரக வாகனங்களுக் தெதிரான கண்ணிவெடிகளும், 26,019 வெடிக்கும் நிலையில் உள்ள எச்சங்களும், 164,115 சிறிய ஆயுத வெடிமருந்துகளும் கண்டு அழிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெளிவு படுத்தியுள்ளது.

ஜப்பான் நாட்டின் 13வது வருடமாக டாஸ் நிறுவனத்தின் செயற்பாடுகளிற்கு ஐப்பான் அரசாங்கத்தினால் நிதி உதவி வழங்கப்படுகின்றது. ஜப்பான் நாட்டின் நிதி உதவியினால் மாத்திரம் 6.4 சதுர கிலோமீற்றர் பரப்பு கண்ணிவெடி அகற்றப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மிகுதி பணிக்கான அடுத்த ஆண்டு நிதி உதவிக்கான ஒப்பந்தமே இன்று இரு தரப்பாலும் கையொப்பமிடப்பட்டது.

தொடர்ந்து மனித நேய பணியில் ஈடுபடும் குழுவினருடன் புகைப்படம் எடுக்கப்பட்டதுடன், செயற்பாடுகள் தொடர்பில் தூதுவர் மற்றும் தூதரக அதிகாரிகளிற்கு விளக்கமளிக்கப்பட்டது.

பின்னர் களப்பணிகளை குறித்த குழுவினர் பார்வையிட்டதுடன், ஆகற்றப்பட்ட வெடிபொருட்களின் மாதிரிகளையும் அவர்கள் பார்வையிட்டனர்.

IMG_20220628_085741-01-600x375.jpeg

https://athavannews.com/2022/1288827

  • தமிழ் சிறி changed the title to முகமாலை பகுதியில்... கண்ணிவெடி அகற்றும் பணி – ஜப்பானின் உதவிக்கான, ஒப்பந்தம் கைச்சாத்து!
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ். மாநகர முதல்வரை சந்தித்தார் ஜப்பான் தூதுவர்!

யாழ். மாநகர முதல்வரை, சந்தித்தார் ஜப்பான் தூதுவர்!

இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனை சந்தித்து கலந்துரையாடினார்.

யாழ் மாநகர சபையில் இன்று (புதன்கிழமை) காலை 10 மணியளவில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் யாழ் மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலனும் உடனிருந்தார்.இதன்போது மாநகர முதல்வரால் ஜப்பான் தூதுவருக்கு நினைவுப்பரிசும் வழங்கப்பட்டது.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஜப்பான் தூதுவர் சமகால நிலைமைகள் தொடர்பில் பல்வேறுபட்ட தரப்புக்களுடனும் சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இச் சந்திப்பின்போது பல்வேறு விடயங்கள் பற்றி ஆராயப்பட்டது, ஜப்பான் கடந்த காலங்களில் யாழ் மாநகர சபையின் எல்லைக்குள் செய்துவந்த பொருளாதார மற்றும் அபிவிருத்தி பணிகளுக்கு யாழ் மாநகர முதல்வர் என்ற வகையிலும் மாநகர மக்கள் சார்பிலும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் இலங்கையில் சமாதானம் நிலவிய காலத்தில் ஜப்பானால் சமாதான பேச்சுவார்த்தைக்கு காத்திரமான பங்களிப்பு செய்யப்பட்டது குறிப்பாக இலங்கைக்கான விசேட தூதுவர் யசுசி அகாஷி அந்த பணிகளிலே ஈடுபட்டிருந்தார்.

அதேபோன்று தற்சமயமும் இலங்கையில் நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றுக்கு ஜப்பானிய அரசு பங்களிப்பு செய்ய வேண்டும் என்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இலங்கைக்கு ஜப்பான் உதவி வருகின்ற நிலையில் இச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி முன்நிபந்தனையாக இலங்கையில் ஒரு சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இலங்கை அரசுக்கு ஜப்பானிய அரசு விடுக்க வேண்டும் என்று மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஜப்பானிய தூதுவரிடம் கேட்டுக்கொண்டார்.

https://athavannews.com/2022/1288941

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.