Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தனித்துப் போய், தப்பி ஓடிய... கோட்டா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 7 people

தனித்துப் போய், தப்பி ஓடிய... கோட்டா!
 
மக்களால் தோற்கடிக்கப்பட்டு , தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றத்துக்கு வந்து , பாராளுமன்ற உறுப்பினர்களது பெரும்பான்மை கூட இல்லாமல் பிரதமரான சுவிங்கம் ரணில் , இன்று IMF மற்றும் சர்வதேச உதவிகளை எப்படி பெறுவதென ஒரு விளக்கத்தை பாராளுமன்றத்தில் கொடுத்தார்.
 
அதை கேட்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நம்பிக்கையோடு வந்திருந்தார். கில்லாடி ரணில் , எல்லோரையும் திக்குமுக்காட வைப்பார் என கோட்டா மட்டுமல்ல கோட்டா - ரணில் ஆதரவு தரப்பும் நம்பியிருக்கலாம்.
 
அந்தோ பரிதாபம் , ரணில் கருத்துகளை முன்வைக்கத் தொடங்கிய நேரம் முதல் எதிர்க்கட்சி தரப்பு "Gota Go Home" எனக் கோசம் போடத் தொடங்கினர். கோட்டா - ரணில் இருவரால் மட்டுமல்ல , மொட்டு சார்பு சபாநாயகரால் கூட தாங்கிக் கொள்ள முடியவில்லை.
 
சபாநாயகர் பேசவிடச் சொல்லி எதிர்க்கட்சியினரைக் கேட்டுக் கொண்டேயிருந்தார். கோட்டா - ரணில் இருவரும் செய்வதறியாது ஆளை ஆள் பார்த்து அடிவாங்கிவிட்டு அப்பாவிகளாக சிரிப்பது போல அவமானத்தால் சிரித்தார்கள்.
 
முன்னர் இதுபோல ஒரு சம்பவம் நடந்தால் மொட்டுக் கட்சியினர் கோவணமும் இல்லாமல் மிளகாய் தூளோடு முன்னால் வந்து சண்டித்தனம் காட்டுவார்கள். ஆனால் இம்முறை அதுபோல நடக்கவில்லை. SB திசாநாயக்க மட்டும் எழுந்து வந்து ஏதோ சொல்ல , கிழடு போடா எனும் கூச்சலோடு அடங்கிப் போனார். முன்னர் சண்டியர் போல செயல்படும் ஜோன்சன் பெர்ணாண்டோ பின் வரிசையில் இருந்து எழுந்திருக்கவே இல்லை. அத்தனை பேரும் மே 9 நடந்த சம்பவங்களோடு அடங்கிப் போயிருக்கிறார்கள்.
 
இன்றைய எதிர்க் கட்சியின் பலம் , காலிமுகத்திடல் கோட்டா கோ கமவின் பலம்தான். எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என அஞ்சுகிறார்கள். மகிந்த கூட எழுந்து நின்று பார்த்துக் கொண்டிருந்தாரே ஒழிய , கையாலாகாதவராக இருந்தார்.
 
இதேபோல சந்திரிகா ஜனாதிபதியாக இருந்த , 2000 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தீர்வு பொதியை உள்ளடக்கிய அரசியலமைப்பு தீர்வுத்திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முனைந்த போது , அன்றைய ரணில் தலைமையிலான ஐதேகவினர் காட்டுக் கத்தல் கத்தினார்கள். தீர்வு பொதி பிரதிகளை தீயிட்டு எரித்தார்கள். சுவிங்கம் ரணில் , அவற்றை தடுக்காமல் ஹெட்போனை காதில் மாட்டிக் கொண்டு , கதிரையில் உட்கார்ந்து கண்களை மூடிக் கொண்டிருந்தார்.
 
அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் சந்திரிகா , தனது தீர்வு பொதியில் உள்ளதை இரும்பு மனுசியாக பேசி முடித்து விட்டு அமர்ந்தார்.
சிறந்த தீர்வு பொதியை உள்ளடக்கிய அரசியலமைப்பு தீர்வுத்திட்டம் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுவதற்காக விவாதத்துக்கு விடப்பட்டு சில வாக்குகள் வித்தியாசத்தில் யு என்பி யாலும் ஜேவிபியாலும் தோற்கடிக்கப்பட்டது. தமிழ் தரப்புகள் , புலிகளுக்கு அஞ்சி வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
 
கோட்டா , இன்று தலை குனிந்து ஓடியது போல சந்திரிகா ஓடவே இல்லை, தில்லாக அமர்ந்திருந்தார் . அந்த விதவை பெண் சந்திரிகாவுக்கு இருந்த தில் கூட கோட்டாவிடம் இன்று இல்லை. 10 நிமிட இடைவெளியில் விட்டு தப்பி ஓடிய கோட்டா , திரும்பி வரவே இல்லை. அதன்பின்னரே ஜேவிபியினர் பாராளுமன்றத்துக்குள் வந்தனர்.
 
உள்ளே வந்த ஜேவிபியின் அணுர, ரணிலை பிரதமர் பதவி பிரச்சனை தொடர்பாக வறுத்தெடுத்தார். ஜேவிபியினர் குயில் கூட்டில் காகம் முட்டை இடுவது போல , வாயடி அரசியல் செய்கிறார்களோ எனும் சந்தேகம் வருகிறது. கோட்டவை எதிர்க்க கிடைத்த நேரத்தில் அவர்களது பங்களிப்பு பாராளுமன்றத்துக்குள் இல்லாதிருந்தமை விரக்தியை தருவதோடு , சந்தேகத்தையும் எழுப்புகிறது.
 
அனைவரும் ஒன்றிணைந்து பொது எதிரிக்காக போராட வேண்டிய நேரத்தில் , வாக்குகளை மட்டும் ஜேவிபி எண்ணி அரசியல் செய்தால் , அவர்களும் ஒதுக்கப்படலாம். பைல் அரசியலும் , மாமியார் குறை சொல்லலும் போன்ற அரசியல் மட்டும் போதாது. இணைந்து போராடும் தகமை வேண்டும். அது ஜேவிபியிடம் மிசிங்.
கோட்டா அரசைக் காப்பாற்ற, சுவிங்கம் ரணில் சொல்லும் பொய்கள் , பிராக்டிக்கல் இல்லா புத்தக அறிவு போல கூட இல்லை. இன்று கத்தாரில் எண்ணை இல்லை. அங்கு Gas தான் இருக்கிறது என ஒரு அறிவில்லா பொய்யை பாராளுமன்றத்தில் சொன்னார்.
 
அப்படியானால் காஞ்சனவும் , நசீரும் , கத்தாருக்கு எண்ணை வாங்க போகும் போது , பிரதமர் ரணில் ஏன் தடுக்காமல் , அவர்களை அங்கே போக விட்டார்? அவர்களது பிரதமர் , ரணில்தானே? அங்கே எண்ணை இல்லை. மீன் இல்லா குளத்தில் ஏன் வலை வீசப் போகிறீகள் என ரணில் தடுத்திருக்க வேண்டும் அல்லவா?
 
கோட்டாவை பாராளுமன்றத்தை விட்டு துரத்த வைத்தது போல , ரணிலையும் துரத்த வேண்டுமென ஒரு குரல் எங்கிருந்தோ கேட்டது.
அவை விரைவில் நடக்க வேண்டும். அதுவரை நாட்டுக்கு எண்ணை கப்பல் மட்டுமல்ல ஒரு படகு கூட வராது!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.