Jump to content

சிங்கப்பூர் - மலேசியா: 60 ஆண்டுகாலமாக நீடிக்கும் தண்ணீர் பிரச்னை; வரலாறு என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கப்பூர் - மலேசியா: 60 ஆண்டுகாலமாக நீடிக்கும் தண்ணீர் பிரச்னை; வரலாறு என்ன?

  • சதீஷ் பார்த்திபன்
  • பிபிசி தமிழுக்காக
6 ஜூலை 2022, 06:03 GMT
புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்
 

தண்ணீருக்கு என்ன விலை?: சிங்கப்பூர் - மலேசியா இடையே நீடிக்கும் பிரச்னை

பட மூலாதாரம்,GETTY IMAGES

மலேசியா, சிங்கப்பூர் இடையே கடந்த அறுபது ஆண்டுகளாக தண்னீர் பிரச்னை ஒன்று நீடித்து வருகிறது. இதற்கு தீர்வு என்ன? இதன் வரலாறு என்ன?

மலேசியாவில் இருந்து தண்ணீர் பெறுகிறது சிங்கப்பூர். தினந்தோறும் 250 மில்லியன் கேலன் (1000 கேலன் = 3,780 லிட்டர்) தண்ணீரை மலேசியாவின் எல்லை மாநிலமான ஜோகூரிலுள்ள நதியில் இருந்து சிங்கப்பூர் பெற்றுக்கொள்கிறது.

இந்த தண்ணீர் பகிர்வுக்காக மலேசியா, சிங்கப்பூர் இடையே 1961ஆம் ஆண்டு ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டது. பின்னர் அதில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள், புதிய ஒப்பந்தங்களாக மாறின.

எனினும் நாள்களின் போக்கில் சில பிரச்னைகள் தலைதூக்கின. தண்ணீர் பகிர்வு தொடர்பாக மலேசியா சில கோரிக்கைகளை முன்வைக்க, சிங்கப்பூர் அவற்றை ஏற்க மறுக்க, இரு நாடுகளும் இப்போது அனைத்துலக நடுவர் மன்றத்தை அணுகும் அளவுக்குப் பிரச்னை முற்றியுள்ளது.

இந்தப் பிரச்னையின் ஆணிவேர் என்ன என்பதை சுருக்கமாக சில வரிகளில் இவ்வாறு குறிப்பிடலாம்.

"இரு நாடுகளுக்கும் இடையேயான ஒப்பந்தப்படி, தினமும் மலேசியாவிடம் இருந்து 250 மில்லியன் கேலன் தண்ணீர் பெறும் சிங்கப்பூர் அரசு, அதிலிருந்து 2% சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை ஜோகூர் மாநிலத்துக்கு வழங்க வேண்டும். இந்த ஒப்பந்தம் 2061 காலாவதியாகும்," என சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2%க்கு அதிகமாகவும் சிங்கப்பூரில் இருந்து தண்ணீர் வாங்குகிறது ஜோகூர் மாநிலம். எனினும் இவ்வாறு பகிரப்படும் நீருக்கான விலை என்ன என்பதில்தான் சிக்கல். குறைவான விலைக்கு தண்ணீரைப் பெறும் சிங்கப்பூர், அதை சுத்திகரித்த பின்னர் விற்கும்போது அதிக தொகையைப் பெறுகிறது என்றும் இதை ஏற்க இயலாது என்றும் மலேசியா சுட்டிக்காட்டுகிறது.

1962இல் கையெழுத்தான தண்ணீர் பகிர்வு ஒப்பந்தம்

 

தண்ணீருக்கு என்ன விலை?: சிங்கப்பூர் - மலேசியா இடையே நீடிக்கும் பிரச்னை

பட மூலாதாரம்,GETTY IMAGES

இனி வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டிப் பார்ப்போம்.

மலேசியாவில் இருந்து பிரிந்து சிங்கப்பூர் என்ற தனி நாடு 1965ஆம் ஆண்டு உதயமானது. எனினும் அதற்கும் முன்னதாகவே தண்ணீர் பகிர்வு தொடர்பாக 1961ஆம் ஆண்டு ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் பின்னர் 1962ஆம் ஆண்டு சில திருத்தங்களுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் இன்றளவும் நீடிக்கிறது. இதில் துணை ஒப்பந்தம் ஒன்று 1990ல் கையெழுத்தானது. இவ்விரு ஒப்பந்தங்களின்படி மலேசிய எல்லையில் உள்ள ஜோகூர் நதிநீரை சிங்கப்பூர் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது சிங்கப்பூரின் அன்றாட தண்ணீர் தேவை என்பது 430 மில்லியன் கேலன்கள். இதில் சுமார் சரிபாதி அளவு மலேசியாவிடம் இருந்து கிடைக்கிறது.

"1965ல் மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் பிரிந்து சென்றபோது, இவ்விரு ஒப்பந்தங்களும், சிங்கப்பூர் சுதந்திர ஒப்பந்தத்தில் 'பரஸ்பர அரசு உத்தரவாதங்களாக' குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த சுதந்திர ஒப்பந்தம் மலேசியா, சிங்கப்பூர் அரசாங்களுக்கு இடையே கையெழுத்தாகின. எந்தவொரு தரப்பும் ஒப்பந்தத்தில் உள்ளவற்றை தன்னிச்சையாக மாற்ற இயலாது," என்றும் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய ஒப்பந்தத்தின்படி, நீர் பிடிப்புப் பகுதிகளாக பயன்படுத்தப்படும் மலேசிய நிலப்பகுதிக்கு சிங்கப்பூர் வாடகை செலுத்த வேண்டும் என்று முடிவானது. ஜோகூர் மாநிலத்தில் கட்டடத் தொகுப்புகளுக்கு என்ன வாடகை கிடைக்குமோ, அதை செலுத்த ஒப்புக்கொண்டது சிங்கப்பூர்.

மேலும், ஒப்பந்தப்படி மலேசியாவில் இருந்து பெறும் ஒவ்வொரு ஆயிரம் கேலன் நீருக்கும் சிங்கப்பூர் 3 காசுகள் தர வேண்டுமென விலை நிர்ணயிக்கப்பட்டது. அதேவேளையில், கொள்முதல் செய்த தண்ணீரில் இருந்து 2% சுத்திகரிக்கப்பட்ட நீரை ஜோகூர் மாநிலத்துக்கு வழங்கும் சிங்கப்பூர், அதற்காக ஆயிரம் கேலன் நீருக்கு 50 காசுகள் பெறுகிறது.

1973ஆம் ஆண்டு வரை இரு நாடுகளும் ஒரே கரன்சியை பயன்படுத்தி வந்தன. அது முடிவுக்கு வந்ததும் தண்ணீர் பகிர்வுக்கான விலை மலேசிய ரிங்கிட்டில் நிர்ணயிக்கப்பட்டது.

அதாவது ஒவ்வொரு ஆயிரம் கேலன் தண்ணீருக்கும் தலா 3 காசுகள் (ஒரு காசு என்பது ஒரு சென் (sen) விலை நிர்ணயிக்கப்பட்டது. (நூறு சென்கள் ஒரு ரிங்கிட் ஆகும்.)

1962 ஒப்பந்தப்படி, இருபத்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு விலை குறித்து இருதரப்பும் பேச்சுவார்த்தை நடத்தலாம்.

அணை கட்ட அனுமதித்த மலேசியா

 

தண்ணீருக்கு என்ன விலை?: சிங்கப்பூர் - மலேசியா இடையே நீடிக்கும் பிரச்னை

பட மூலாதாரம்,GETTY IMAGES

1990ஆம் ஆண்டு சிங்கப்பூரின் பொதுப் பயன்பாட்டு வாரியம் (PUB) மற்றும் ஜோகூர் மாநில அரசு இடையே நவம்பர் 24, 1990 அன்று நீர்ப்பகிர்வு தொடர்பாக துணை ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது.

அதன்படி பண்டார் தெங்காரா என்ற சிற்றூரில் லிங்யூ (Linggiu) ஆற்றின் குறுக்கே அணை கட்ட சிங்கப்பூருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஜோகூர் நதியில் இருந்து தண்ணீர் எடுப்பற்கு வசதியாக இந்த ஏற்பாடு அமைந்தது.

அதேவேளையில், அணை கட்டுவதற்காக கையகப்படுத்தப்படும் நிலப்பகுதி, அங்கு கிடைத்திருக்கக்கூடிய இதர வருமானங்கள் ஆகியவற்றைக் கணக்கிட்டு உரிய இழப்பீடு வழங்க சிங்கப்பூர் ஒப்புக்கொண்டது. மேலும், ஒரு ஹெக்டேருக்கு 18 ஆயிரம் மலேசிய ரிங்கிட் பிரீமியமாக வழங்கப்பட்டதுடன், தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்துக்காக பயன்படுத்தப்படும் ஒவ்வொரு ஆயிரம் சதுர அடி நிலத்துக்கும் ஆண்டு வாடகையாக முப்பது ரிங்கிட் அளிக்கவும் சிங்கப்பூர் முன்வந்தது.

லிங்யூ அணையின் கட்டுமான, பராமரிப்புச் செலவுகளையும் அத்தீவு நாடு ஏற்றுக்கொண்டது. இன்று சிங்கப்பூரின் முக்கியமான குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது இந்த அணை.

லிங்யூ அணை ஜோகூர் அரசாங்கத்துக்கு சொந்தமாக உள்ளது என்றாலும் அதன் கட்டுமானத்துக்கும் நடைமுறை செயல்பாட்டுச் செலவுகளுக்காகவும் சிங்கப்பூர் சுமார் 300 மில்லியன் சிங்கப்பூர் டாலர் செலவிட்டுள்ளது.

விலையை உயர்த்திய மகாதீர் மொஹம்மத்

1962 தண்ணீர் பகிர்வு ஒப்பந்தம் கையெழுத்தான சில ஆண்டுகளிலேயே, அதற்குரிய விலை தொடர்பான முணுமுணுப்புகள் மலேசியாவில் தொடங்கிவிட்டதாகக் கூறப்பட்டாலும், முன்னாள் பிரதமர் மகாதீர் மொஹம்மத் ஆட்சிக் காலத்தில்தான் இந்த விஷயம் விவகாரமானது.

2000ஆம் ஆண்டில் தண்ணீர் பகிர்வு தொடர்பாக மலேசியா தனது கருத்தையும் கோரிக்கையையும் வலுவாக முன்வைத்தது.

ஒவ்வொரு ஆயிரம் கேலன் நீருக்கும் 3 காசுகள் (சென்) விலை நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அதை 45 காசுகளாக உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தியது மலேசியா.

அதே ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்றைய சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யூவை சந்தித்தார் மகாதீர்.

பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இருதரப்பும் இந்த விலை மாற்றத்துக்கு ஒப்புக்கொண்டன. 1962ல் ஒப்பந்தம் கையெழுத்தான பின்னர் சுமார் நான்கு தசாப்தங்கள் கடந்துவிட்டதையும், அக்காலக்கட்டத்தில் ஏற்பட்ட பண வீக்கத்தை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் மலேசியா சுட்டிக்காட்டியது. அப்போதுதான் தண்ணீர்பகிர்வுக்கான விலை நியாயமானதாக இருக்கும் என்றும் மலேசியா கூறியது.

 

மகாதீர் மொஹம்மத்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

மகாதீர் மொஹம்மத்

எனினும், 2001ஆம் ஆண்டு சிங்கப்பூருக்கான நீரின் விலையை ஒவ்வொரு ஆயிரம் கேலனுக்கும் 60 காசுகளாக (சென்) உயர்த்த மலேசியா பரிந்துரைத்தது.

ஆனால், சிங்கப்பூர் உடனடியாக அந்த விலையேற்றத்தை ஏற்க இயலாது என்றும், 2011ஆம் ஆண்டு வேண்டுமானால் இதுகுறித்து பரிசீலிக்கலாம் என்றும் திட்டவட்டமாக கூறியது. எனினும், மலேசியா தன் பிடிவாதத்தை தளர்த்தவில்லை.

2002 மார்ச் மாதம் இந்த விலை நிர்ணய விவகாரம் உச்சத்தை அடைந்தது. இரு தரப்பு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட அம்சங்கள் குறித்து கவலைப்படப் போவதில்லை என்பதை உணர்த்தும் விதமாக ஆயிரம் கேலன் தண்ணீருக்கு 60 காசுகள் என்று விலையை நிர்ணயித்ததுடன், இந்தக் கட்டண விகிதத்தை பின்தேதியிட்டு, 1986 முதல் செயல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியது மலேசியா.

மேலும், 2007 முதல் 2011 வரை ஆயிரம் கேலன் மூன்று ரிங்கிட் என விலையை நிர்ணயித்தது. அதன் பின்னர் வரும் ஆண்டுகளில் பண வீக்கத்துக்கு ஏற்ப விலையை மாற்றி அமைக்கலாம் என்றும் கூறியது.

இந்நிலையில், மலேசிய, சிங்கப்பூர் அதிகாரிகள் தங்களுக்கிடையே பரிமாறிக் கொள்ளப்பட்ட கடிதங்களையும் அதிகாரப்பூர்வ அறிக்கைகளையும் வெளியிட்டு தங்களது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினர். 2002ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரை இந்நிலை நீடித்தது. இச்சமயம் தண்ணீர் விலையை மறு ஆய்வு செய்யப்போவதாக ஜோகூர் மாநில அரசு அதிகாரப்பூர்வமாக ஒரு நோட்டீசை அனுப்பியது.

இதற்கு பதிலளித்த சிங்கப்பூர் பொதுப் பயன்பாட்டு வாரியம் (PUB) இந்த விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தும் உரிமை தங்களுக்கு இருப்பதாகவும், இரு அரசுகளும் கலந்து பேசி பரஸ்பரம் ஒப்புக்கொள்ளும் வகையில் விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தது.

ஊடகங்களில் வெளியான கடிதப் பரிமாற்றங்கள்

மலேசியா தனது புதிய விலையில் பிடிவாதமாக இருந்த போதிலும், சிங்கப்பூர் இது நியாயமற்றது என தொடர்ந்து கூறியது.

இந்நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக, தண்ணீர் பகிர்வு-விலை சர்ச்சை குறித்து இருநாடுகளின் தலைவர்கள் இடையேயான கடிதப் பரிமாற்றங்கள் குறித்த விவரங்களை ஊடகங்களில் வெளியிட்டது சிங்கப்பூர். இதேபோல் மலேசிய அரசும் தனது நிலைப்பாட்டை விவரிக்கும் விதமாக ஊடகங்களில் பிரசாரம் மேற்கொண்டது.

இதற்கிடையே 2003, அக்டோபரில் மலேசிய பிரதமர் பதவியில் இருந்து விலகினார் மகாதீர்.

அதன் பின்னர் தண்ணீர் பிரச்னை பெரிய அளவில் தலைதூக்கவில்லை. நாள்களின் போக்கில் மலேசியாவின் எல்லை மாநிலமான ஜோகூரில் தண்ணீர் இருப்புப் பகுதிகள் 4 விழுக்காடாகக் குறைந்துவிட்டதாக அரசு தெரிவித்துள்ளது.

 

தண்ணீருக்கு என்ன விலை?: சிங்கப்பூர் - மலேசியா இடையே நீடிக்கும் பிரச்னை

பட மூலாதாரம்,GETTY IMAGES

இதற்கிடையே, சிங்கப்பூர் புதிய வாதத்தை முன்வைத்தது. 1961, 1962ஆம் ஆண்டுகளில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு தண்ணீர் விலையை மறு வரையறை செய்யலாம் என்று குறிப்பிடப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய சிங்கப்பூர், அதன்படி 1986 அல்லது 1987ஆம் ஆண்டுகளிலேயே விலையை மாற்றி அமைத்திருக்க வேண்டும் என்றும், இனிமேல் அவ்வாறு செய்ய வாய்ப்பில்லை என்றும் கூறியது.

ஆனால், மலேசிய தரப்பிலோ, 25 ஆண்டுகளுக்குப் பிறகு எப்போதுமே வேண்டுமானாலும் விலையை மாற்றி அமைக்கலாம் என்றுதான் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

தண்ணீர் பகிர்வுக்கான விலை அதிகரிப்பு: கறார் காட்டிய மகாதீர்

இந்நிலையில், எதிர்பாராத திருப்பமாக 2018 பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் மலேசியப் பிரதமரானார் மகாதீர். அடுத்த ஆண்டிலேயே தண்ணீர் விலை விவகாரம் மீண்டும் தலைதூக்கியது.

ஜோகூர் மாநிலத்தில் தண்ணீர் இருப்புப் பகுதிகள் வெகுவாக குறைந்துவிட்டதை அடுத்து, 1962ஆம் ஆண்டின் ஒப்பந்தத்தின்படி, தண்ணீருக்கான விலையை உயர்த்துவதில் சிங்கப்பூர் ஒத்துழைக்க வேண்டும் என மலேசியா வலியுறுத்தியது.

இவ்விஷயத்தில் மகாதீர் உறுதியாக இருந்தார். எனினும், இரண்டு ஆண்டுகளில் அவரது ஆட்சி கவிழ்ந்து, புதிய அரசாங்கம் அமைந்துள்ளது. கொரோனா நெருக்கடியில் இருந்து இரு நாடுகளும் முழுமையாக விடுபட்ட பின்னர் தண்ணீர் விலை குறித்து பேச்சுவார்த்தை நடத்த இரு நாடுகளும் முடிவு செய்துள்ளதாக நடப்பு மலேசிய அரசாங்கம் கூறியுள்ளது.

 

சார்லஸ் சந்தியாகு

பட மூலாதாரம்,FACEBOOK/CHARLES SANTIAGO

 

படக்குறிப்பு,

சார்லஸ் சந்தியாகு

மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீரைப் பொறுத்தவரை சிங்கப்பூர் உடனான தண்ணீர் ஒப்பந்தம் தொடர்பான தமது நிலைப்பாட்டில் கறாராக இருந்தார். 2002ஆம் ஆண்டு கோலாலம்பூரில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் சிங்கப்பூருக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்தார்.

கடந்த காலங்களில் பல்வேறு அனைத்துலக ஒப்பந்தங்கள் பலமுறை சில நாடுகளால் மீறப்பட்டுள்ளதாகவும், அதுபோன்ற காரணங்களால் சில நாடுகள் போர் தொடுக்கும் முடிவுக்குச் சென்றதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஆனால், மகாதீரின் இந்த நிலைப்பாட்டை ஏற்க இயலாது என்கிறார் கடந்த 2018-19ஆண்டுகளில் மலேசியாவின் தேசிய நீர் சேவைகள் ஆணையத்தின் தலைவராக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகு பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

"தண்ணீர் கொடுக்கும் மாநிலத்துக்கே இப்போது தண்ணீர் பிரச்னை"

இதற்கிடையே, 2015ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து வறட்சி, மாசுபாடு உள்ளிட்ட காரணங்களால் ஜோகூர் மாநில அணைகளில் உள்ள நீர்மட்டம் வரலாறு காணாத அளவுக்கு குறைந்தது. அச்சமயம் சிங்கப்பூரில் இருந்து மூன்று முறை கூடுதலாக குடிநீர் வரவழைத்து நிலைமையைச் சமாளித்தது அம்மாநில அரசு.

மேலும், 2015 - 16ஆம் ஆண்டுகளில் சுமார் 85 ஆயிரம் குடியிருப்புகள், தொழிற்சாலைகளுக்கு ரேசன் முறையில் தண்ணீர் விநியோகிக்கப்பட்டது.

கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கி பலமுறை சிறிதும் பெரிதுமாக ஜோகூர் நதி மாசடைந்துள்ளது. உரிய சுற்றுச்சுழூல் பாதுகாப்பு இல்லாததே இந்த மாசுபாடுக்கு காரணம் என்று சிங்கப்பூர் கவலை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஜோகூர் மாநிலத்தில் உள்ள மலேசிய குடிமக்களுக்கே போதுமான தண்ணீர் இல்லாத நிலையில், சிங்கப்பூருக்கு எவ்வாறு தினந்தோறும் தண்ணீர் வழங்க இயலும் என்று மலேசிய முன்னாள் நீர், நிலம் மற்றும் இயற்கை வளத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றிருந்த டாக்டர் சேவியர் ஜெயகுமார் கேள்வி எழுப்புகிறார்.

 

சேவியர் ஜெயகுமார்

பட மூலாதாரம்,TWITTER/XAVIER JAYAKUMAR

 

படக்குறிப்பு,

சேவியர் ஜெயகுமார்

மேலும், மலேசியாவில் இருந்து பெறும் தண்ணீருக்கு சிங்கப்பூர் நியாயமான விலையைக் கொடுக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் பிபிசி தமிழிடம் பேசும்போது குறிப்பிட்டார்.

கடந்த 2014ஆம் ஆண்டு மலேசியாவின் சிலாங்கூர் உள்ளிட்ட சில மாநிலங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது. அதனால் ஒன்றுவிட்டு ஒரு நாள் மட்டுமே தண்ணீர் விநியோகிக்கப்பட்டது.

"தண்ணீர் பெறும் உரிமை சிங்கப்பூருக்கு உள்ளது"

மலேசியா, சிங்கப்பூர் இடையேயான தண்ணீர் பகிர்வு விவகாரத்தை பெரிதுபடுத்தக் கூடாது என மலேசியாவின் தேசிய நீர் சேவைகள் ஆணையத்தின் தலைவராக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகு பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

மலேசியாவிடம் இருந்து தண்ணீர் பெறும் உரிமை சிங்கப்பூருக்கு உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

"உலகில் உள்ள இயற்கை வளங்களுக்கு எந்த நாடும் தனிப்பட்ட வகையில் உரிமை கொண்டாடக்கூடாது. தண்ணீருக்கும் இது பொருந்தும்.

"தண்ணீர் இயற்கை அளித்த கொடை. சிங்கப்பூர் தண்ணீர் கேட்கிறது எனில், அது அந்நாட்டின் உரிமை. மனித நேயத்தின் அடிப்படையில் மலேசியா இதைப் பரிசீலிக்க வேண்டும். முன்னாள் பிரதமர் இந்த விவகாரம் தொடர்பாக தெரிவிக்கும் கருத்துகள் தேவையற்றவை. அவர் கூறும் கருத்துகளுக்கு வேறு காரணங்கள் இருக்கலாம்.

"மலேசியாவும் சிங்கப்பூரும் அண்டை நாடுகள். இரு தரப்பும் ஒத்துழைத்தால்தான் நல்லது. மலேசியாவில் இருந்து ஆயிரக்கணக்கானோர் சிங்கப்பூரில் பணியாற்றுகின்றனர். எனவே இருதரப்பு நல்லுறவை பாதிக்கும் வகையில் யாரும் செயல்படக்கூடாது. பேச்சுவார்த்தையின் மூலம் இரு நாடுகளும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டும்," என்கிறார் சார்லஸ் சந்தியாகு.

சிங்கப்பூர் தண்ணீருக்குரிய நியாயமான விலையை அளிக்க வேண்டும்

 

தண்ணீருக்கு என்ன விலை?: சிங்கப்பூர் - மலேசியா இடையே நீடிக்கும் பிரச்னை

பட மூலாதாரம்,GETTY IMAGES

சிங்கப்பூருக்கு தண்ணீர் வழங்கும் மலேசியாவின் எல்லை மாநிலமான ஜோகூரிலும் தற்போது தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதாகச் சொல்கிறார் மலேசிய முன்னாள் நீர், நிலம் மற்றும் இயற்கை வளத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றிருந்த டாக்டர் சேவியர் ஜெயகுமார்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், மலேசியா வழங்கும் தண்ணீருக்கு ஏற்ற நியாயமான விலையை சிங்கப்பூர் அளிக்க வேண்டும் என்றார்.

"இந்தப் பிரச்சினை நீண்டகாலமாகவே உள்ளது. ஆனால் தற்போதைய நிலை என்னவென்றால், ஜோகூர் மாநிலம் தனது சொந்த மக்களின் தண்ணீர் தேவையை ஈடுகட்டவே சிரமப்படுகிறது.

"இப்படிப்பட்ட சூழலில் இன்னொரு நாட்டுக்கு நம் தண்ணீரை விற்க வேண்டுமா? எனும் கேள்வி எழுகிறது. எங்களைப் பொறுத்தவரையில் ஜோகூரில் உள்ள மலேசிய குடிமக்களின் தேவையை முதலில் பூர்த்தி செய்வதற்குதான் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்போம். அதற்கும் மேல் உள்ள தண்ணீர் இருப்பைப் பொறுத்து, சிங்கப்பூருக்கு விற்பனை செய்யலாம்.

"இனிமேலும் சிங்கப்பூருக்கு மிகக் குறைவான விலையில் தண்ணீரை விற்க இயலாது. சந்தை விலைக்கு விற்பதுதான் சரியாக இருக்கும்.

"மலேசியாவில் மாநிலங்களுக்கு இடையே தண்ணீர் பகிர்வை ஊக்குவித்து வருகிறோம். நான் அமைச்சராக இருந்தபோதே இது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. உதாரணமாக பகாங் மாநிலத்தில் இருந்து ஜோகூர் மாநிலத்துக்கு தண்ணீர் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. அவ்வாறு நடக்கும்போது, ஜோகூரில் கூடுதல் நீர் இருக்கக்கூடும். அப்போதும்கூட நியாயமான விலைக்கு ஒப்புக்கொண்டால் சிங்கப்பூருக்கு தண்ணீர் கொடுப்போம்," என்கிறார் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.

அடுத்து என்ன நடக்கும்?

 

தண்ணீருக்கு என்ன விலை?: சிங்கப்பூர் - மலேசியா இடையே நீடிக்கும் பிரச்னை

பட மூலாதாரம்,GETTY IMAGES

இரு நாடுகளும் 1962, 1990 ஆண்டுகளில் செய்துகொண்ட ஒப்பந்தங்கள் 2061இல் முடிவுக்கு வரும். அதற்குள் தண்ணீர் தேவைக்காக மலேசியாவைச் சார்ந்திருப்பதை முற்றிலுமாக மாற்றி அமைக்க விரும்புகிறது சிங்கப்பூர்.

இதற்காக பல்வேறு திட்டங்களை அந்நாடு செயல்படுத்தி வருகிறது. அவற்றுள் கழிவுநீரை குடிநீராக மாற்றும் திட்டம் முக்கியமானது.

மேலும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டமும் நடைமுறையில் உள்ளது. இதற்காக இத்தீவு நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுத்திகரிப்பு ஆலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் 2061க்குள் தண்ணீர் விவகாரத்தில் தன்னிறைவு அடைய வேண்டும் என்பதே அந்நாட்டின் இலக்கு.

இரு நாடுகளுக்கும் இடையே கடல்சார், விமானப் போக்குவரத்து, வான்வெளி எல்லை சார்ந்த சிக்கல்கள், இரு நாடுகளுக்கும் இடையேயான கடற்பகுதியில் அமைந்துள்ள சில தீவுப் பகுதிகளுக்கு உரிமை கோருவது தொடர்பான வழக்குகளும் உள்ளன.

தண்ணீருக்கான புதிய விலையை நிர்ணயிப்பதில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை எனில், அனைத்துலக நடுவர் மன்றத்துக்குச் செல்ல மலேசியா நடவடிக்கை எடுக்கும் எனக் கூறப்படுகிறது.

தண்ணீர் விலையை உயர்த்தியே ஆக வேண்டும் என மலேசியா வலியுறுத்தும் நிலையில், வருங்காலத்தில் இதற்கு உடன்படத் தயார் எனும் தனது நிலைப்பாட்டில் சிங்கப்பூர் உறுதியாக நிற்பதாக துறைசார் நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஒட்டுமொத்தத்தில், இருதரப்பு உறவில் உறுத்தலாக நீடித்து வரும் இந்த விவகாரத்துக்கு நேரடிப் பேச்சுவார்த்தை அல்லது நடுவர் மன்றம் மூலம் இணக்கமான தீர்வை மிக விரைவில் எட்டுவதே இரு தரப்புக்கும் நன்மை பயக்கும் என அந்நிபுணர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

https://www.bbc.com/tamil/global-62052917

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகில் இயற்கை தந்த வளங்களை வைத்தே போட்டி,பொறாமை,போர்கள் நடக்கின்றன. மனிதன் எதை உருவாக்கினான் என்றால் சண்டை சச்சரவுகளை தவிர வேறேதும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தண்ணியால தான் எங்கும் பிரச்சனை.😄

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாங்கள் சிறுவயதில் காலைக்காட்சி, மாலைக்காட்சி, கடற்கரைக்காட்சி என்று சோதனையில் வந்த கேள்விகளுக்கு ஏற்றமாதிரி கட்டுரை எழுதுவது போலத் தான் இருக்கின்றது இந்த பகிரங்கக் கடிதம்.  இதை எழுதியவர் ஜனாதிபதி தேர்தலை பகிஷ்கரிக்கச் சொன்னவராக இருக்கலாம், இல்லாவிட்டால் இலங்கைச் சிங்கள ஒற்றை ஆட்சிப் பாராளுமன்றம் தேவையில்லை, எங்களின் ஒற்றுமை மட்டுமே முக்கியம், அதை சர்வதேசத்திற்கு காட்டினால் போதும் என்று சொன்னவராக இருக்கலாம். ஒரு அணுக்கமான அரசியல் செய்வோம் என்று சொன்னவராக இருக்கலாம். இன்னும் சில வகைகளும் இருக்கின்றன. ஒவ்வொன்றிலும் நியாயங்கள் இருக்கிறது தானே........... நாங்கள் எழுதிய காலை, மாலை, கடற்கரை காட்சிக் கட்டுரைகள் போலவே. சொன்னவர் யார் என்று தெரிந்தால் தான், இதில் இருக்கும் சொற்களையும், வசனங்களையும் கடந்து, அதில் மறைந்திருக்கும் உட்பொருளை விளங்கிக்கொள்ள முடியும். நித்தியின், ஜக்கியின் மற்றும் பல குருக்களின் பக்தர்களும் இதையே தான் சொல்கின்றனர். குருவின் தனிப்பட்ட வாழ்க்கையை விட்டு விட்டு, குரு சொல்வதை மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள் என்று....... உங்கள் குருக்களே தங்கள் சுகபோக வாழ்க்கைகளுக்காக மட்டுமே பேசிக் கொண்டிருக்கின்றார்கள். இறுதியில் உங்களையும், உங்கள் குடும்பங்களையும் நடுத்தெருவில் நிற்பாட்டுவார்கள் என்று தானே நாங்கள் அவர்களுக்கு எதிர்க் கருத்துகள் சொல்லுகின்றோம். இதை எழுதியவர் கூட அப்படியான ஒருவராக இருக்கலாம். இப்பொழுது பாராளுமன்றம் முக்கியம், அங்கு போவது முக்கியம், அதிகாரம் முக்கியம்............. என்கின்றனர். உண்மையே, இவை எல்லாம் முக்கியம். இவை எப்போதும் முக்கியமானவையாக இருந்தன. அத்துடன், இதைச் சொல்பவர் முன்னர் என்ன சொல்லியிருந்தார் என்று அறிதலும் முக்கியம் தானே............    
    • 👆 Thank God ! I have not been so ruthless as the guy above in dealing with relatives. I seem to be fair enough 👇    
    • கொழும்பில் போட்டியிடும் தமிழரசு கட்சி..! பங்காளி கட்சிகளுக்கு கால அவகாசம் இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டமானது பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது நிறைவுக்கு வந்துள்ளது.  இதற்கமைய, ரெலோ மற்றும் ப்ளொட் ஆகிய கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து மூன்று நாட்களுக்குள் தமது முடிவு எட்டப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  அத்துடன், கொழும்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சி போட்டியிடுவதாகவும் இதற்கான வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கு ஒரு குழுவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  அடுத்த கூட்டம்  அதேவேளை, குறித்த விடயங்கள் தொடர்பில் எதிர்வரும் 03ஆம் திகதி மீண்டும் கூட்டம் நடத்தப்பட்டு தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும், நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவு வழங்கியவர்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் கடிதம் ஒன்றை முன்வைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இதன்போது, கிட்டத்தட்ட 2018ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை இடம்பெற்றிருக்க கூடிய அனைத்து விடயங்கள் தொடர்பிலும் விளக்கம் கோர வேண்டுமே தவிர தற்போது நடந்த விடயங்கள் தொர்பில் மாத்திரம் விளக்கம் கோரப்பட கூடாது எனவும் கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், மத்தியக்குழு கூட்டமானது, பல்வேறுபட்ட வாத பிரதிவாதங்களுக்கு மத்தியில் முடிவுக்கு வந்துள்ளது.  அதேவேளை, கூட்டத்திற்கு பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், "தமழிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் காலை முதல் மாலை வரை நடைபெற்றது. இதன்போது ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னரான விடயங்கள் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் கூடி ஆராய்ந்தோம். ஜனாதிபதி தேர்தலில் கட்சி எடுத்த 3 தீர்மானங்களுக்கு மாறாக செயற்பட்டவர்கள் தொடர்பாக ஆராயப்பட்டது. அதிலே அப்படியாக கட்சியின் முடிவை மீறி செயற்பட்டவர்களிடம் விளக்கம் கோருவது என முடிவு எடுக்கப்பட்டது. அரியநேத்திரனை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என பலமான கருத்துக்கள் சொல்லப்பட்டிருந்தாலும், முதலாம் திகதி எடுத்த தீர்மானத்தில் தேர்தலில் இருந்து விலக வேண்டும் என்று கோரியிருந்தோம். அதற்கு அவருடைய விளக்க கடிதத்தில் பதில் சொல்லப்பட்டிருக்கவில்லை. அது காலம் கடந்து கிடைத்தாலும் வாசித்து காட்டப்பட்டது. ஆகவே அது சம்மந்தமாக கேட்டு விட்டு தீர்மானங்களை எடுக்கவுள்ளோம். முக்கிய விடயமாக ஆராயப்பட்டது நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆகும். நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்காக நாங்கள் விசேட அறிவிப்பை மனவுவந்து விடுவதற்கு தீர்மானித்துள்ளோம். அதாவது தமிழ் தேசிய பரப்பில் இருக்கிற கட்சிகள் விசேடமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெவ்வேறு காலகட்டங்களில் விலகிப் போன கட்சிகள் திரும்பவும் எங்களுடன் சேர்ந்து தேர்தலை முகங்கொடுங்க விரும்பினால் வரமுடியும். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகிச் சென்றவர்கள் வருகிற தேர்தல் சவால் மிக்க தேர்தலாக இருப்பதால் இணங்கி வந்து இந்த தேர்தலில் போட்டியிட முடியும். தமிழரசுக் கட்சியின் பெயரிலும், அதன் சின்னத்திலும் தான் கடந்த காலங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக போட்டியிட்டோம். அந்த விதமாக இந்த தேர்தலில் போட்டியிட நாங்கள் தீர்மானித்துள்ளோம். அப்படியாக அந்த அழைப்பை ஏற்று வந்தால் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வேட்ப்பாளர்களை நிறுத்துவது தொடர்பில் கலந்துரையாடி முடிவு எடுப்போம். அப்படி அவர்கள் வராவிட்டால் இலங்கை தமிழரசுக் கட்சி தனித்து போட்டியிடும். திருகோணமலை, அம்பாறை மாவட்டங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ளோம். அங்கே ஒரு தமிழ் உறுப்பினர் மட்டும் தான் தெரிவு செய்யப்படும் நிலை இருப்பதால் அந்த விடயங்களை அந்த மாவட்ட கிளைகளுடன் பேசி முடிவுக்கு கொண்டு வரலாம் என தீர்மானித்துள்ளோம். அதற்கு மேலதிகமாக இம்முறை வடக்கு - கிழக்குக்கு வெளியே உள்ள கொழும்பு உட்பட தமிழர்கள் வாழும் ஏனைய மாவட்டங்களிலும் போட்டியிட பரிசீலனை செய்யப்பட்டுள்ளது. விடுக்கப்பட்டுள்ள அழைப்பு  எதிர்வரும் 4 ஆம் திகதி வேட்புமனுத் தாக்கல செய்தல் ஆரம்பிக்கவுள்ளதால் பிரிந்து சென்றவர்கள் மீள வருவது தொடர்பாக மிக விரைவாக அவர்களது பதிலை எதிர்பார்க்கின்றோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்ற கட்சிகள் வந்து இணைவதற்கு அழைப்பு விடுத்துள்ளோம். அதற்கு வெளியே வேறு கட்சிகள் வந்தால் அதனை பரிசீலிக்கலாம். ஏனெனில் எங்களது கட்சியில் இருந்து பிரிந்து போனவர்களது கட்சியும் மேலும் பிரிந்து இருக்கின்றது. அவர்களை உள்வாங்கும் போது சில ஆட்சேபனைகள் இருக்கும். அது பற்றி பேசியே முடிவு எடுப்போம். ஆனால் தீர்மானமாக அழைப்பு விடுப்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்களை வாருங்கள் சேர்ந்து பயணிப்போம் என்று புன்முறுவலோடு அவர்களை அழைக்கின்றோம். புதியவர்களை தேர்தலில் உள்வாங்குவது, இளைஞர்களை உள்வாங்குவது தொடர்பிலும் நீண்ட நேரம் பேசினோம். அதனை சரியாக நாம் அணுகுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. மக்களிடத்தில் இது தொடர்பான பாரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. விசேடமாக தேசிய மக்கள் சக்தி பெற்ற வெற்றிக்கு பிற்பாடு அத்தகைய எண்ணப்பாடு எங்களது பிரதேசங்களிலும் உயர்ந்துள்ளது. அது நல்ல விடயம். இளைஞர்கள், ஆளுமையுள்ளவர்கள், படித்தவர்கள், பெண்கள் என அவர்களுக்கான பிரதிநித்துவத்தை உறுதி செய்யும் வகையில் தான் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். அதற்கான நியமனக்குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு இறுதி முடிவுகளை எடுக்கும். ஆனால் மாவட்ட ரீதியாக கலந்து ஆலோசித்து தான் அந்த முடிவுகள் எடுக்கபடும். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்கள் சிலர் எம்முடன் பேசியுள்ளார்கள். தம்முடன் இணையுமாறு அவர்கள் அழைப்பு எதனையும் விடவில்லை. நாங்கள் பிரதானமான தமிழ் கட்சி. இது வரைக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக வேறு கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட்ட போது தேர்தலுக்கு முகம் கொடுத்தது இலங்கை தமிழரசுக் கட்சியின் பெயரிலும், அதன் சின்னத்திலுமே தான். அதே முறையில் நாங்கள் இந்த தேர்தலையும் சந்திப்பதற்கு பிரதான கட்சி என்ற வகையில் நாங்கள் அவர்களுக்கும் அழைப்பு விடுகின்றோம்” என குறிப்பிட்டுள்ளார்.  https://tamilwin.com/article/ilankai-tamil-arasu-katchi-meeting-in-colombo-1727533785?itm_source=parsely-detail
    • 26 SEP, 2024 | 12:24 PM பிரசாத் வெலிக்கும்புர தென்னிலங்கையின் பிராந்தியங்களில் இருந்து குறிப்பாக, சிங்கள பௌத்தர்கள் அதிக பெரும்பான்மையாக வாழும் பாகங்களில் இருந்து பெரும்பான்மையானவர்களின் ஆதரவைப் பெற்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க இலங்கையின் ஜனாதிபதியாகத் தெரிவாகியிருக்கிறார். இதற்கு மாறாக, சிறுபான்மைச் சமூகங்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளின் குறிப்பாக, வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மற்றும் மலையகத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவும் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் கூடுதலான ஆதரவைப் பெற்றிருக்கிறார்கள். அதன் விளைவாக, திசாநாயக்கவுக்கு வாக்களிக்கவில்லை என்பதற்காக சிறுபான்மைச் சமூகங்களை குறிப்பாக வடக்கு, கிழக்கு மக்களை அவரின் ஆதரவாளர்கள் கண்டனம் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். திசாநாயக்கவுக்கு பதிலாக பிரேமதாசவுக்கும் விக்கிரமசிங்கவுக்கும் வாக்களிப்பதற்கு இந்த சமூகங்களை தமிழ் அரசியல்வாதிகள் தவறாக வழிநடத்தியிருக்கிறார்கள் என்று வாதிடும் அவர்கள் அரசியல் யதார்த்தங்களை விளங்கிக்கொள்ளாதவர்களாக "அறிவிலிகள்" என்று அந்த மக்களைக் குற்றஞ்சாட்டுகிறார்கள். அதேவேளை, பிரேமதாசவையும் விக்கிரமசிங்கவையும் ஆதரித்த தாராளவாத முகாமைச் சேர்ந்த ஆதரவாளர்கள் தெற்கைச் சேர்ந்த இரு சிங்கள பௌத்த பேரினவாதிகளான நாமல் ராஜபக்ஷ மற்றும் திலித் ஜயவீரவுடன் தமிழ்ப் பொதுவேட்பாளரான பாக்கியசெல்வம்  அரியநேத்திரனை  ஒப்பிட்டிருப்பதுடன் மூவரும் ஒரே விதமான கோட்பாடுகளை கொண்டவர்கள் என்று குற்றஞ்சாட்டுகிறார்கள்.   மேலும், பிரேமதாசவுக்கும் விக்கிரமசிங்கவுக்கும் தமிழ்ச் சமூகம் வழங்கிய ஆதரவு அவர்கள் பெருமளவுக்கு பொதுமைப்பட்ட, தேசிய அரசியலுக்கு சாதகமாக தமிழ் அடையாள அரசியலை நிராகரித்திருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது என்று அந்த தாராளவாத போக்குடைய முகாமைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள். முதல் கண்ணோட்டத்தில், இந்த இரு வாதங்களும்  வேறுபட்டவையாக தோன்றலாம். ஆனால், உன்னிப்பாக அவதானித்தால் அவை ஒரே மாதிரியானவை. இருப்பதையும் சிங்கள பௌத்த பேரினவாதத்தை அடிப்படையாகக் கொண்டவை என்பதையும் புரிந்துகொள்ள முடியும். இந்த இரு கருத்துக் கோணங்களுமே இந்த சமூகங்களுக்கு இடையில் இருக்கும் தனித்துவமான கலாசாரம், நடத்தை ஒழுக்கங்களையும் அடையாள வேறுபாடுகளையும் கொண்டவை என்பதை ஏற்றுக்கொள்ளத் தவறுகின்றன. இந்த குழுக்களின் தேவைகள், முன்னுரிமைகள் மற்றும் அபிலாசைகள் ஒற்றைத்தன்மை கொண்டவையல்ல. இந்த கருத்துக்களைக் கொண்டிருப்பவர்கள் இலங்கையில் தேசிய இனப்பிரச்சினை இப்போது இல்லை என்று கருதுவதுடன் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வினை கண்டுவிட்டால் சமத்துவமும் இணக்கநிலையும் ஏற்பட்டுவிடும் என்று நம்புகிறார்கள். அனால், இந்த கருத்தியல் நோக்கு யதார்த்தத்தில் இருந்து வேறுபட்டது. நாம் ஏற்றுக்கொள்கிறோமோ இல்லையோ, இலங்கை தனித்துவமான அடையாளங்களையும் முன்னுரிமைகளையும் கொண்ட பிராந்தியங்களாக பிளவுபட்டிருக்கிறது. இந்தப் பிளவு இலங்கை தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையே மிகவும் வெளிப்படையாகத் தெரியும். வடக்கிலும் கிழக்கிலும் உள்ள மக்கள் வேறுபட்ட ஒரு நிலப் பிராந்தியம், வரலாறு, சிங்களவர்களிடமிருந்து வேறுபட்ட அடையாள உணர்வு ஆகியவற்றைக் கொண்டிருக்கிறார்கள்.  நாடு சுதந்திரமடைந்த பிறகு பல தசாப்தங்களாக அவர்கள் பாரபட்சமான முறையில் நடத்தப்பட்டமை, 30 வருடகால உள்நாட்டுப்போர், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை ஆகியவை காரணமாகவும் அரசாங்கங்கள் பொறுப்புக்கூறத் தவறியமை காரணமாகவும் இடைவெளி விரிவடைந்துவிட்டது. இந்த காரணிகள் சிங்கள பௌத்த பெரும்பான்மை இனத்தவர்களிடமிருந்து தமிழ்ச் சமூகத்தை மேலும் தூர விலக்குகின்றன. 2009ஆம் ஆண்டுக்கு பிறகு, வடக்கு, கிழக்கு தமிழ்ச் சமூகம் போரின் இறுதிக்கட்டங்களில் ஒப்பீட்டளவில் குறைந்தளவு ஈடுபாட்டைக் கொண்டிருந்த அரசியல் பிரிவுகளுடன் தொடர்ச்சியாக அணிசேர்ந்து வந்திருக்கிறார்கள். இறுதியாக நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் வரை  அவர்கள் ராஜபக்ச குடும்பத்துக்கு எதிராகவே வாக்களித்தார்கள்.  ஆனால், இந்த தேர்தலில்  பிரதான வேட்பாளர்களில் ஒரு ராஜபக்ச இல்லாத நிலையில் தற்போது தேசிய மக்கள் சக்தியின் அங்கமாக இருக்கும் ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) மீது கவனம் குவிந்தது. குறிப்பாக, போரின் இறுதிக்கட்டங்களில் ஜே.வி.பி. சம்பந்தப்பட்டிருந்தது. "எந்த வழியில் என்றாலும்" போருக்கு முடிவைக் கட்டிவிடுமாறு மகிந்த ராஜபக்சவை தாங்களே வலியுறுத்திக் கேட்டதாக  ஜே.வி.பி.யினர் தேர்தல் பிரசாரங்களின்போது பெருமை பேசியதைக் காணக்கூடியதாக இருந்தது. இறுதிக்கட்டப் போரில் முள்ளிவாய்க்காலில் மாத்திரம் சுமார் ஒரு இலட்சம் பேர் மாண்டார்கள். வடக்கில் உள்ள ஒவ்வொரு தமிழனும் தனக்கு தனிப்பட்ட முறையில் தெரிந்த ஒருவரை அந்த படுகொலைகளில் இழந்திருக்கிறார் என்ற உண்மை நிலைவரத்தின் பாரதூரத்தன்மையை தெளிவுபடுத்தி நிற்கிறது. அதனால் தேசிய மக்கள் சக்தி தோற்கடிக்கப்படவேண்டிய ஒரு கட்சி என்று அவர்கள் கருதியது இயல்பானதேயாகும். தேர்தல் பிரசாரங்களின்போது ஜே.வி.பி.யின் முக்கிய தலைவர்களில் ஒருவரான லால்காந்த போரில் தனது கட்சியின் ஈடுபாடு குறித்து பெருமையாகப் பேசினார்.  மேலும், கறைபடிந்த சிங்கள பௌத்த பேரினவாத வரலாறு ஒன்றைக் கொண்ட ஜே.வி.பி. ஒரு குறைந்தபட்ச அதிகாரப் பரவலாக்கல் வடிவத்தைக் கூட கடுமையாக எதிர்த்து வந்திருக்கிறது. வடக்கு பிராந்தியத்தில் உள்ள வர்த்தகர் குழாத்துடன் ஊடாட்டங்களைச் செய்வதற்கு சில முயற்சிகளை ஜே.வி.பி. மேற்கொண்ட அதேவேளை தமிழ் மக்களுடனான அல்லது  ஏனைய சிறுபான்மைக் குழுக்களுடன் அர்த்தபுஷ்டியான முறையில் பிணைப்பை ஏற்படுத்துவதற்கு எதையும் செய்யவில்லை. அதனால் ஜே.வி.பி.க்கு வாக்களிப்பதை தமிழர்கள் தவிர்த்துக்கொண்டது முற்றிலும் நியாயமானதே. அதேபோன்று தமிழர்கள் இப்போது தேசிய இனப்பிரச்சினைக்கு முன்னுரிமை கொடுப்பதில்லை என்ற காரணத்தினால் அவர்கள் தமிழ் வேட்பாளரை நிராகரித்து பிரேமதாசவுக்கும் விக்கிரமசிங்கவுக்கும் வாக்களித்தார்கள் என்ற தாராளவாத போக்குடைய முகாமின் வாதமும் தவறானது. சிங்கள பௌத்த பேரினவாத வரலாற்றையும் 2009 முள்ளிவாய்க்கால் படுகொலையுடன் தொடர்பையும் கொண்ட ஜே.வி.பி.யை ஓரங்கட்டுவதற்கு ஒரே வழி என்று நம்பியதன் காரணத்தினாலேயே தமிழர்கள் அந்த இருவருக்கும் வாக்களித்திருப்பார்கள் எனலாம். (கட்டுரையாளர் சமூக - அரசியல் சுற்றாடல் பாதுகாப்பு செயற்பாட்டாளர்) https://www.virakesari.lk/article/194830
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 3 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.