Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

.அடுத்தவாரம் இங்கு வருகை தரவிருக்கும் மற்றொரு ஐ.நா.பிரதிநிதியைத் தடுக்கக் கோருகிறது ஜே.வி.பி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : Sat Aug 11 8:36:48 EEST 2007

.அடுத்தவாரம் இங்கு வருகை தரவிருக்கும் மற்றொரு ஐ.நா.பிரதிநிதியைத் தடுக்கக் கோருகிறது ஜே.வி.பி.

ஐ.நாவின் மற்றுமொரு பிரதிநிதி அடுத்த வாரமளவில் இலங்கை வரவுள்ளார் என் றும் அவரை வரவிடாமல் உடனடியாகத் தடுக்குமாறும் ஜே.வி.பியின் நாடாளுமன் றக்குழுத் தலைவர் விமல் வீரவன்ஸ நேற்று நாடாளுமன்றத்தில் அரசிற்கு வேண்டு கோள் விடுத்தார்.

இலங்கைக்கு ஏற்கனவே வந்து திரும் பிய ஐ.நா.உயரதிகாரி ஜோன் ஹோம்ஸ் இலங்கை தொடர்பாக வெளியிட்ட கருத் துப் பற்றி பிரதமர் அரசின் நிலைப்பாட்டை நேற்று விளக்கியதைத் தொடர்ந்து தனது கருத்தை முன் வைத்தார் விமல்வீரவன்ஸ். அவர் அங்கு மேலும் கூறியவை வருமாறு:

ஐ.நா.பிரதிநிதி ஜோன்ஹோம்ஸ் வருவதை நாம் ஏற்கனவே எதிர்த்தோம். அது தொடர்பாக நாடாளுமன்றில் அறிக்கை ஒன்றையும் நாம் வெளியிட்டோம்.

ஐ.நா.பிரதிநிதிகள் இலங்கைக்கு இவ் வாறு வந்து சென்றதன் பின்னர், இங்கு மனித உரிமை மீறல்கள் இடம்பெறுகின்றன என்று சர்வதேச மட்டத்தில் பொய்யான கருத்துகளை வெளியிடுவர் என்று நாம் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்தோம்.

நாம் கூறியவைபோலவே இலங்கை வந்த ஜோன் ஹோம்ஸ் இலங்கை பற்றி மோசமாகக் கூறியிருக்கிறார். இப்போது அரசு அவர் கூறியதுதொடர்பாக புலப்பிக்கொண்டிருக்கின்றது.

இவர்போலவே இன்னும் ஒருவர் அடுத்த வாரமளவில் இலங்கைக்கு வரவுள்ளார். அவரும் கிளிநொச்சி, மட்டக்களப்பு என்று எல்லா இடங்களுக்கும் சென்றுவிட்டு, அமைச்சர் மஹிந்த சமரசிங்கவுடன் இணைந்து ஊடகவியலாளர் சந்திப்பையும் நடத்தி, இறுதியில் இலங்கை தொடர்பாக மோசமான கருத்துகளை வெளியிடுவார்.

ஆகவே, இவர் வருவதை அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்தவேண்டும். அவரை வரவிட்டுவிட்டு "இலங்கை பற்றி அப்படிச் சொல்லிவிட்டார். இப்படிச் சொல்லி விட்டார்' என்று புலம்புவதில் அர்த்தமில்லை.

இதுதொடர்பாக நாடாளுமன்றில் விவாதம் ஒன்றை நடத்தவும் அனுமதிவழங்கப்படவேண்டும். என்றார் விமல் வீரவன்ஸ. (உ07)

நன்றி - உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.