Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

70 சதவீதம் இராணுவம் அல்லாத இலக்குகள் மீதுதான்... ரஷ்யா தாக்குதல் நடத்துவதாக, உக்ரைன் குற்றச்சாட்டு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்ய படையெடுப்பால் உக்ரைனில் இதுவரை 3,500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

70 சதவீதம் இராணுவம் அல்லாத இலக்குகள் மீதுதான்... ரஷ்யா தாக்குதல் நடத்துவதாக, உக்ரைன் குற்றச்சாட்டு!

ரஷ்யா இராணுவம் நடத்தி வரும் தாக்குதல்களில் 70 சதவீதம் இராணுவம் அல்லாத இலக்குகள் மீதுதான் என உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது.

ஆகையால், ரஷ்யாவை பயங்கரவாத நாடாக அங்கீகரிக்க வேண்டும் என உக்ரைன் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே, உக்ரைன் இராணுவ உபகரணங்களை சரிசெய்வதை பல்கேரியா தொடரும் என பல்கேரிய இராணுவ அமைச்சர் ஜாகோவ் கூறியுள்ளார்.

ரஷ்யாவால் வடிவமைக்கப்பட்ட ஹெலிகொப்டர்களின் பழுது மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு 2 பல்கேரிய நிறுவனங்களுக்கும், ஒரு செக் குடியரசு நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டிருந்த அனுமதியை ரஷ்யா நிறுத்தி வைத்துள்ளது. எனவே, அந்த நிறுவனங்களுக்கு ரஷ்யா இனி உதிரி பாகங்களை வழங்காது. இந்த நடவடிக்கையானது பல்கேரியாவை கடுமையாக பாதிக்காது என்றும், உக்ரைனின் இராணுவ உபகரணங்களை பழுதுபார்க்கும் பணியை தடுக்காது என்றும் பல்கேரிய இராணுவ அமைச்சர் ஜாகோவ் கூறியுள்ளார்.

ரூபிளில் பணம் செலுத்த மறுத்ததால் பல்கேரியாவிற்கு ரஷ்யா எரிவாயு விநியோகத்தை நிறுத்தியதைக் குறிப்பிட்ட ஜாகோவ், எரிவாயு கொள்முதலில் என்ன நடந்தோ, அதேபோன்று இப்போது ஹெலிகொப்டர் உரிமங்களிலும் நடந்துள்ளது என கூறினார்.

https://athavannews.com/2022/1291280

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைனின் டினிப்ரோ நகரம் மீது ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதல் : 3 பேர் பலி, 15 பேர் காயம்

உக்ரைன் மீது ரஷ்யா  தாக்குதல் நடத்தி 5 மாதத்தை நெருங்கினாலும் போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை.

ரஷ்யா வின் மும்முனை தாக்குதலுக்கு உக்ரைனின் பெரும்பாலான நகரங்கள் சின்னாபின்னமாகிவிட்டது.

ஆனாலும் உக்ரைன் வீரர்கள் அசராமல் எதிர்த்துப் போரிட்டு வருவதால் இன்னும் சில நகரங்களைப் பிடிக்க முடியாமல் ரஷ்யா திணறி வருகிறது.

Three killed in Russian missile attack on Dnipro: Governor | Russia-Ukraine  war News | Al Jazeera

இந்நிலையில், உக்ரைனின் டினிப்ரோ நகரின் மீது நடந்த ஏவுகணைத் தாக்குதலில் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர் என அப்பிராந்திய ஆளுநர் வாலன்டின் ரெனிசென்கோ கூறினார்.

Russia, Undaunted by Furor Over a 4-Year-Old's Death, Strikes More Civilian  Centers in Ukraine - The New York Times

இதுகுறித்து அந்த நகர ஆளுநர் மேலும் கூறுகையில்,

" ஏவுகணைகள் டினிப்ரோ நகரில் உள்ள தொழில்துறை ஆலை மற்றும் அதற்கு அடுத்துள்ள பரபரப்பான தெரு மீது தாக்கியது. ரஷ்ய தாக்குதல் மூன்று பேரின் உயிரை பறித்தது. மேலும் 15 பேர் காயமடைந்தனர். அழிவின் அளவை நாங்கள் தீர்மானிக்கின்றோம்" என்று குறிப்பிட்டிருந்தார்.

 

https://www.virakesari.lk/article/131567

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.