Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முன்னைய அரசாங்கம் மூடி மறைத்த உண்மையை வெளிப்படுத்தினார் ரணில் – சிஎன்என்னிற்கு ரணில் பேட்டி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முன்னைய அரசாங்கம் மூடி மறைத்த உண்மையை வெளிப்படுத்தினார் ரணில் – சிஎன்என்னிற்கு ரணில் பேட்டி

ஆர்ப்பாட்டக்காரர்கள் புதன்கிழமை நாடாளுமன்றம் வாக்களிப்பதை தடுப்பதற்கோ அல்லது பொதுகட்டிடங்களை ஆக்கிரமிப்பதற்கோ அனுமதிக்கப்போவதில்லை

-

கோத்தபாய ராஜபக்ச மாலைதீவிற்கும் பின்னர் சிங்கப்பூருக்கும் தப்பிச்சென்றவேளை நான் அவருடன் பேசியுள்ளேன்ஆனால் அவர் தற்போதும் சிங்கப்பூரில் இருக்கின்றாரா என்பது  தெரியாது

-

பல நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த நூல்கள் உட்பட 4000 நூல்களை அவர் இழந்தார். 125 வருடகால பியானோவும் அழிக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டார்.

ranil.jpg

இலங்கையின் முன்னைய நிர்வாகம் நாட்டின் பொருளாதார நெருக்கடி குறித்த உண்மைகளை மூடிமறைத்தது என பதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சிஎன்என்னிற்கு தெரிவித்துள்ளார்.

இலங்கை வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது  சர்வதேச நாணயநிதியத்திடம் செல்லவேண்டும் என்ற உண்மையை இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவிக்கவில்லை என இலங்கை நாடாளுமன்றத்தில் வைத்து சிஎன்என்னிற்கு வழங்கிய பேட்டியில் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசி;ங்க தெரிவித்துள்ளார்.

மக்கள் எவ்வாறான துன்பங்களை அனுபவிக்கின்றார்கள் என்பது எனக்கு தெரியும் என்பதை மக்களிற்கு தெரிவிக்க விரும்புகின்றேன் நாங்கள் பின்னோக்கி சென்றுள்ளோம் நாங்கள் கடினமானவொன்றை சாத்தியமாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். எங்களுக்கு ஐந்து பத்து வருடங்கள் தேவையில்லை அடுத்த வருட இறுதியில் நாங்கள் ஸ்திரமான நிலையை அடைந்துவிடுவோம் 2024 ம் ஆண்டளவில் வளர்ச்சியை நோக்கி செல்லும் இயங்கும் பொருளாதாரம் காணப்படும் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி நாட்டிலிருந்து தப்பியோடிய பின்னர் பதில் ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்க அதன் பின்னர் சர்வதேச ஊடகமொன்றிற்கு வழங்கிய முதலாவது பேட்டி இது.

கோத்தபாய ராஜபக்ச மாலைதீவிற்கும் பின்னர் சிங்கப்பூருக்கும் தப்பிச்சென்றவேளை நான் அவருடன் பேசியுள்ளேன்ஆனால் அவர் தற்போதும் சிங்கப்பூரில் இருக்கின்றாரா என்பது  தெரியாது எனவும்  ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க தற்போது இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார் புதன் கிழமை நாடாளுமன்றம் புதிய தலைவரை தெரிவுசெய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளது.

ஆறுதடவை பிரதமராக பதவி வகித்த ரணில்விக்கிரமசிங்கவிற்கு பொதுஜனபெரமுனவின் ஆதரவுள்ளது அவர் மூன்று வேட்பாளர்களை எதிர்கொள்கின்றார்.

எனினும் அவரின் நியமனம் ஏற்கனவே கொந்தளிப்பான நிலையி;ல் உள்ள 22 மில்லியன் மக்களை கொண்ட நாட்டினை மேலும் நெருக்கடியானதாக மாற்றக்கூடிய ஆபத்தை ஏற்படுத்தக்கூடியதாக காணப்படுகின்றது.

உணவு எரிபொருள் போன்ற அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு நெருக்கடியை எதிர்கொள்ளும் சூழ்நிலையை ஏற்படுத்திய பொருளாதார நெருக்கடி காரணமாக மார்ச் மாதம் முதல் இலங்கை பலவீனமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

நாட்டின் தலைவர்களை  பதவி விலகுமாறு கோரி ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதிகளில்  இறங்கியுள்ளனர்இராஜபக்ச பதவி விலக இணங்கியதை தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் வெற்றிபெற்றனர் போல தோன்றுகின்றது ஆர்ப்பாட்டக்காரர்கள் அவரது வீட்டிற்குள் நுழைந்த சிலர் அவரது நீச்சல் தடாகத்தில் குளித்த பின்னர் அவர் நாட்டிலிருந்து தப்பியோடினார் இதன் பின்னர் சீற்றமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் விக்கிரமசிங்கவின் வீட்டிற்கு தீவைத்தனர்.

அவ்வேளை பிரதமராக பதவிவகித்த விக்கிரமசிங்க ஐக்கிய அரசாங்கத்திற்காக நான் பதவி விலக தயார் என அறிவித்திருந்தார்.

அவர் தனது எரிக்கப்பட்ட வீடும் அதற்குள் காணப்பட்ட பொருட்களும் மீளப்பெறமுடியாதவை என சிஎன்என்னிடம்  தெரிவித்தார்.

பல நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த நூல்கள் உட்பட 4000 நூல்களை அவர் இழந்தார்125 வருடகால பியானோவும் அழி;க்கப்பட்டது என அவர் குறிப்பிட்டார்.

எனினும் இதற்கு அப்பாலும் நாட்டின் உயர் பதவிக்கு போட்டியிடுவதற்கான தனது உறுதிப்பாட்டை அவர் சிஎன்என்னிடம் வெளிப்படுத்தினார்.

தான் பழைய நிர்வாகத்தை சேர்ந்தவரில்லை என அவர் குறிப்பிட்டார்.

நான் அவர்களின் நபர் இல்லை மக்களிற்கு தெரியும் நான் பொருளாதாரத்தை கையாளவே வந்தேன் என அவர்  குறிப்பிட்டார்.

இலங்கையின் ஜனாதிபதியாகி ஏன் இலக்குவைக்கப்படக்கூடிய ஒருவராக மாறவிரும்புகின்றீர்கள் என சிஎன்என் கேள்வி எழுப்பியவேளை  நான் நாட்டில் இது இடம்பெறுவதை விரும்பவில்லைஎனக்கு இடம்பெற்றது ஏனையவர்களிற்கு இடம்பெறுவதை நான் விரும்பவி;ல்லை ஏனையவர்கள் துயருவதை நான் விரும்பவில்லை. நிச்சயமான அதனை ஏனையவர்கள் அனுபவிப்பதை நான் விரும்பவில்லை என அவர் குறிப்பிட்டார்.

சீற்றம் தொடர்ந்தும் அதிகரிக்கும் நிலையில் மக்கள் அமைதியாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடலாம் என ரணில்விக்கிரமசி;ங்க தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடளுமன்றமும் தனது கடமைகளை நிறைவேற்றுவதை தடுக்க முயலவேண்டாம்இ என அவர் தெரிவித்தார்.

20ம் ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பிற்கு முன்னர் நாடாளாவிய ரீதியில் அமைதியின்மை ஏற்படுவதை தடுப்பதற்காக அவர் அவசரகால நிலையை அறிவித்துள்ளார்.

நாங்கள் பொலிஸாரும் இராணுவத்தினரும் ஆயுதங்களை பயன்படுத்துவதை தவிர்க்க நினைக்கின்றோம். அவர்கள் மீது தாக்குதல் இடம்பெற்றுள்ளது ஆனால் முடிந்தளவிற்கு ஆயுதங்களை பயன்படுத்தவேண்டாம் என அவர்களிற்கு தெரிவித்துள்ளோம் என ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மக்கள் அனுபவிக்கின்ற துயரங்களை என்னால் புரிந்துகொள்ள முடியும்மூன்று மோசமான வாரங்கள் காணப்படும் என நான் அவர்களிடம் தெரிவித்திருந்தேன். முழு அமைப்பும் சிதைவடைந்துள்ளது எரிபொருள் கிடைக்கப்போவதில்லை எரிவாயு கிடைக்கப்போவதில்லை இது மோசமானது என அவர் குறிப்பிட்டார்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் புதன்கிழமை நாடாளுமன்றம் வாக்களிப்பதை தடுப்பதற்கோ அல்லது பொதுகட்டிடங்களை ஆக்கிரமிப்பதற்கோ அனுமதிக்கப்போவதில்லை. நாட்டில் சட்டமொழுங்கு காணப்படவேண்டும் என அவர் தெரிவித்தார்.
 

 

https://www.virakesari.lk/article/131748

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.