Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கோட்டாவின்... பிரத்தியேக ஜெட் விமானத்திற்கான,  பணத்தினை... செலுத்திய இலங்கை அரசாங்கம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாவுக்கு ஆதரவாக மனித உரிமை ஆணைக்குழுவின் மனு!

கோட்டாவின்... பிரத்தியேக ஜெட் விமானத்திற்கான,  பணத்தினை... செலுத்திய இலங்கை அரசாங்கம்?

முன்னாள் ஜனாதிபதியும், அவரின் பின்னர் அவரது மனைவியும் ஜனாதிபதிக்குரிய வரப்பிரசாதங்களை பெற உரித்துடையவர்கள் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது, தாய்லாந்தில் தங்கியுள்ளார்.

அவர் சிங்கப்பூரிலிருந்து பிரத்தியேக ஜெட் விமானம் மூலமே தாய்லாந்தின் பெங்கொக்கிற்கு சென்றுள்ளார்.

இதற்கான பணம் இலங்கை அரசாங்கத்தினால் செலுத்தப்பட்டுள்ளதா? என ஊடகவியலாளர் ஒருவர் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய ஊடக சந்திப்பில் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு பதிலளித்த அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன, ஆம் என பதில் வழங்கியிருந்தார்.

அத்துடன், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு சட்டரீதியான சில சலுகைகள் உள்ளன.

முன்னாள் ஜனாதிபதியும், அவரின் பின்னர் அவரது மனைவியும் ஜனாதிபதிக்குரிய வரப்பிரசாதங்களை பெற உரித்துடையவர்கள்.

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் மறைவுக்கு பின்னர் அவரது மனைவிக்கு அத்தகைய வரப்பிரசாதங்கள் தற்போது கிடைக்கப்பெறுவதாக அறிகிறேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது, இராஜதந்திர கட்வுச்சீட்டை கொண்டுள்ளார் எனவும், அதனால் அவர் தாய்லாந்தில் 90 நாட்கள் தங்கியிருக்கலாம் என தாய்லாந்து வெளியுறவு அமைச்சர் டொன் பிரமுத்வினாய் அண்மையில் தெரிவித்திருந்தார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1294920

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கம் பணத்தை செலவிடவில்லை, தனது சொந்தப்பணமே என்கின்றார் கோட்டா !!

அரசாங்கம் பணத்தை செலவிடவில்லை, தனது சொந்தப் பணமே... என்கின்றார் கோட்டா !!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ வெளிநாட்டில் செய்யும் எந்தவொரு செலவுக்கும் அரசாங்கம் பணத்தை செலவிடவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அவ்வாறான அனைத்து செலவுகளும் முன்னாள் ஜனாதிபதியின் தனிப்பட்ட பணத்திலிருந்தே செலவிடப்படுகின்றது என அரசாங்க தகவல் திணைக்களம் கூறியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதியின் வெளிநாட்டு செலவுகள் தொடர்பாக நேற்று இடம்பெற்ற அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் பந்துல குணவர்தன, முன்னாள் ஜனாதிபதிக்கு சட்டத்தின் மூலம் சில வரப்பிரசாதங்கள் இருப்பதாக கூறினார்.

இருப்பினும் முன்னாள் ஜனாதிபதியின் வெளிநாட்டு செலவுகளுக்காக அரசாங்கம் பணத்தினை செலவிடுகிறது என செய்திகள் வெளியாகிய நிலையில் அரசாங்கம் இவ்வாறு தெளிவுபடுத்தியுள்ளது.

இதேவேளை தனது வெளிநாட்டு செலவுகள் குறித்து சில ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் தவறானவை என தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அனைத்து செலவுகளும் தனது தனிப்பட்ட பணத்தில் செலவிடப்படுவதாகவும் கூறியுள்ளார்.

https://athavannews.com/2022/1294983

  • கருத்துக்கள உறவுகள்

கோட்டபாயவின் வெளிநாட்டு செலவீனங்களுக்கு அரசு பொறுப்பில்லை - அரசாங்க தகவல் திணைக்களம் விளக்கம்

By T. Saranya

17 Aug, 2022 
image

(எம்.மனோசித்ரா)

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வெளிநாட்டு செலவீனங்களானது அவரது தனிப்பட்ட நிதியாகும். அரசாங்கம் ஒருபோதும் அந்த  செலவீனங்களை ஏற்கவோ பொறுப்புக்கூறவோ தீர்மானித்தது இல்லை என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

செவ்வாய்கிழமை இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில்,  முன்னாள் ஜனாதிபதி சிங்கப்பூரிலிருந்து தாய்லாந்து செல்வதற்கு பயன்படுத்திய பிரத்தியேக விமானத்திற்கு இலங்கை அரசாங்கமே பணம் செலுத்தியுள்ளது. அவ்வாறெனில் முன்னாள் ஜனாதிபதி தற்போதும் சிறப்புரிமைகளுடனா வாழ்ந்து கொண்டிருக்கின்றார்?' என்று ஊடகவியலாளர் ஒருவரால் கேள்வியெழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன, 

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு, சட்டத்தின் பிரகாரம் சிறப்புரிமைகளை வழங்க வேண்டிய பொறுப்பு காணப்படுகிறது என்று பதிலளித்திருந்தார்.

எவ்வாறிருப்பினும் அமைச்சர் பேச்சாளர் குறிப்பிட்ட இந்த விடயம் தொடர்பில் ஊடகங்கள் தவறான புரிதல்களுடன் செய்திகளை வெளியிட்டுள்ளதாகக் குறிப்பிட்டு, அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் மொஹான் சமரநாயக்கவினால்  வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிப்பதற்காக அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் செவ்வாயன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில், முன்னாள் ஜனாதிபதியின் வெளிநாட்டு செலவுகள் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியொன்றை எழுப்பினார்.

முன்னாள் மற்றும் தற்போதைய ஜனாதிபதிகளுக்கு சட்டத்தின் மூலம் சில வரப்பிரசாதங்கள் கிடைக்கின்றது என வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன  அதற்கு பதிலளித்தார். அவர் கூறிய அந்த கூற்றை முன்னாள் ஜனாதிபதியின் வெளிநாட்டு செலவுகளுக்காக அரசாங்கம் பணத்தினை செலவிடுகிறது என்று கருத்து புலப்படும் வகையில் சில ஊடகங்கள் செய்திகள் பிரசுரித்திருந்தன. இது தொடர்பில் மேலும் ஆராய்ந்து பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.  

தனது வெளிநாட்டு செலவுகள் குறித்து சில ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் தவறானவை என தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அனைத்து செலவுகளும் தனது தனிப்பட்ட பணத்தில் செலவிடப்படுவதாகவும் வலியுறுத்தியுள்ளார்.' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

https://www.virakesari.lk/article/133761

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.