Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா. உயர் அதிகாரி ஹோன் ஹோல்ம்ஸ் ஒரு பயங்கரவாதி-புலிகளிடம் இலஞ்சம் வாங்கியவர்: அமைச்சர் ஜெயராஜ்

Featured Replies

இச்செய்தியை கேட்டு ஒவ்வொரு ஈழத்தமிழனும் மகிழ்ச்சிக்கடலில் குளிக்கிறோம். எமது போராட்டம் வெற்றி பெறும் என்ற அந்த உயரிய நம்பிக்கைக்கு இச் செய்தி மேலும் பலம் சேர்க்கிறது.. :lol::)

அப்ப நீங்கள் குளிச்சு முடிச்சதும் ஐநா உங்களுக்கு தமிழீழத்தை தட்டிலை ஏந்திக்கொண்டு வந்து தருமோ...???

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள ஊடகத்தில் வந்த செய்தி

ஒரே படகில் பயணம் செய்பவர்களாக எவன்ஸ், ஹோம்ஸ், சொல்ஹெய்ம்

அவுஸ்திரேலியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் அவுஸ்திரேலிய கம்யூனிஸ்ட் கட்சிப் பிரமுகருமான கெறன் எவன்ஸ் பதவியிலிருந்த காலத்தில் புலிகள் இயக்கத்தினரைப் பகிரங்கமாக ஆதரித்து வந்ததுடன் அவர்களின் செயற்பாடுகளுக்கு பல்வேறு வகையிலும் ஆதரவு வழங்கி வந்தார். இவ்வாறே தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் ஜோன் ஹோம்ஸின் நிலைப்பாடும் உள்ளது என்ற கருத்தை வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

அண்மையில் ஷ்ரீலங்காவுக்கு வந்திருந்த மேற்படி ஐ.நா.அதிகாரி ஜோன் ஹோம்ஸ் அவருடைய சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டபின் வெளிநாட்டு ஊடக நிறுவனம் ஒன்றுக்கு வழங்கிய அறிவிப்பில் சிறிலங்கா வெளிநாட்டு நிவாரண சேவைப் பணியாளர்களுக்கு மிகவும் உயிராபத்தான நாடென்றும் சிறிலங்கா உலகத்திலுள்ள பயங்கரமான நாடுகளில் ஒன்றெனவும் தெரிவித்திருந்தார்.

சிறிலங்கா அரசின் ஐக்கிய நாடுகள் சபைக்கான நிரந்தரப் பிரதிநிதியாக நியூயோர்க்கில் பணியாற்றும் பிரசாத் காரியவசம் ஜோன் ஹோம்ஸ் ஊடகத்துக்கு வெளியிட்ட மேற்படி அறிவிப்பு பற்றிக்கடும் எதிர்ப்பைத் தெரிவித்து ஜோன் ஹோம்ஸின் கருத்தைத் திருத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டில் குரல் எழுப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விசேட பிரதிநிதியும் ஐ.நா' `சபை செயலாளர் நாயகத்துக்கு இதுபற்றித் தொலைபேசி மூலம் உண்மை நிலைமையை விளக்கிக் கூறியுள்ளார். இந்த உரையாடலின்போது சிறிலங்காவில் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் ஜோன் ஹோம்ஸ் சந்தித்துப் பேசிய பிரபாகரனின் சகாக்கள் பற்றியும் அவர்களின் செயற்பாடுகள் பற்றியும் சிறிலங்கா அரசுக்குள்ள கடப்பாடுகள் பற்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் தமிழ் பிரிவினைவாதப் புலிகள் இயக்கத்தையும் அவர்களின் பயங்கரவாதத்தையும் பாதுகாப்பதற்காக முன்வந்துள்ள சர்வதேச சமூகம் சிறிலங்காவின் பௌதீகப் பரப்புரிமைக்கும் அரச இறைமைக்கும் மரண அடி கொடுக்கும் செயற்பாடுகளாகவே மேற்படி ஜோன் ஹோம்ஸின் அறிவிப்பும் மற்றும் நடவடிக்கைகளும் அமைந்துள்ளன என்று சில சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. இவ்வாறு வெளிநாட்டு ஊடகங்கள் சிறிலங்காவின் இறைமையைப் பாதுகாக்கும் வகையில் செயற்படும் அதேவேளை சிறிலங்காவில் அலுவலகங்களை அமைத்துக் கொண்டு இங்கு செயற்படும் ஒரு சில வெளிநாட்டு ஊடகங்கள் சிறிலங்காவுக்கு வரும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளை இரகசியமாகச் சந்தித்து அவர்களிடமிருந்து சிறிலங்காவுக்கு எதிரான கருத்துகளைப் பெற்று உலகம் முழுவதும் பிரசாரம் செய்து வருகின்றன.

ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் ஹோம்ஸ் சிறிலங்காவில் பயணத்தை முடித்துக் கொண்ட நிலையில் கொழும்பில் நடத்தப்பட்ட உள்நாட்டு ஊடகப் பிரதிநிதிகளின் சந்திப்பின் போது சிறிலங்காவுக்கு எதிரான எந்தக் கருத்துகளையும் வெளியிடவில்லை. ஆயினும் ஒரு சில வெளிநாட்டு ஊடகங்களின் பிரதிநிதிகளை இரகசியமாகச் சந்தித்து நடத்திய உரையாடலின்போது புலிகள் இயக்கத்தின் மீது சர்வதேசம் அனுதாபமும் ஆதரவும் ஏற்படுத்தும் வகையில் அறிவிப்புகளைச் செய்துள்ளார். இவ்வாறே நோர்வே அரசின் முன்னாள் சமாதான நடவடிக்கைகளுக்கான பிரதிநிதி எரிக் சொல்ஹெய்மும் செயற்பட்டு சிறிலங்காவின் நற்பெயருக்குக் களங்கத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தினார். இவர்களுடைய அடிப்படையான குறிக்கோள் சர்வதேச சமூகத்திடையே சிறிலங்காவுக்கு எதிரான அபிப்பிராயத்தையும் நிலைப்பாட்டையும் உருவாக்குவதாகும். இந்த வகையில் அவுஸ்திரேலிய முன்னாள் வெளிவிவகார அமைச்சர் கெறன் எவன்ஸ் ஐக்கிய நாடுகள் சபை பிரதிநிதி ஜோன் ஹோம்ஸ் , நோர்வேயின் சமாதானத் தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் ஆகியோர் சர்வதேச சமூகத்தில் சிறிலங்காவுக்கு எதிரான நிலைப்பாட்டை உருவாக்குதல் என்ற ஒரே குறிக்கோளுடன் செயற்படும் ஒரே படகில் பயணம் செய்வோர்களாகவே உள்ளனர்.

-லங்காதீப:19.08.2007

- தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.