Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காணாமல் ஆக்கப்பட்டவர்களின்... உறவுகளால், யாழில் போராட்டம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் யாழில் போராட்டம்!

காணாமல் ஆக்கப்பட்டவர்களின்... உறவுகளால், யாழில் போராட்டம்!

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு, யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள UNHRC அலுவலகம் முன்பாகவே இந்தப் போராட்டம் இன்று செவ்வாய்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

அதன்போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், இந்தப் போராட்டத்தில் யாழ். பல்கலைகழக மாணவ பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1296700

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

திருகோணமலையிலும் காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் இன்று போராட்டம்!

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு திருகோணமலை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளின் சங்கத்தினரால் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

திருகோணமலை பிரதேச செயலகத்திற்கு முன்பாக அர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் பின்னர், போரணியாகச் சென்று கத்தோலிக்க மதகுரு டன்ஸ்டன் பிரட்ரிகிடம் மஹஜர் ஒன்றினையும் கையளித்தனர்.

இதன்போது கருத்து வெளியிட்ட குறித்த சங்கத்தின் தலைவி செபஸ்டியான் தேவி, நாளுக்கு நாள் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் மாற்றமடைந்து வரும் இந்த நாட்டில் யாரிடம் சென்று தமது குறை குற்றங்களை முறையிடுவது என கேள்வி எழுப்பினர்.

மேலும் தொடர்ச்சியாக 14 வருடங்களாக தாம் தமது உறவுகளை தேடிவருவதாக தெரிவித்த அவர், சர்வதேசம் தலையிட்டு தமது சொந்தங்களுக்கான முடிவை எடுத்துத் தர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

https://athavannews.com/2022/1296745

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு மன்னாரிலும் போராட்டம்!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை இன்று செவ்வாய்க்கிழமை மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

காலை 10 மணியளவில் மன்னாரில் இந்த அமைதி வழி போராட்டம் இடம்பெற்றது.

மன்னார் மாவட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையம் மற்றும் மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்ப உறவுகளுடன் இணைந்தே இந்த போராட்டம் இடம்பெற்றது.

மன்னார் மாவட்டச் செயலகத்தின் முன்பாக ஒன்று கூடிய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பஜார் பகுதியூடாக மன்னார் பிரதான சுற்று வட்டம் வரை ஊர்வலமாக சென்றனர்.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் புகைப்படங்களை ஏந்தியவாறும் வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தில் அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட குடும்ப உறவுகள் சிவில் சமூக அமைப்பினர் பெண்கள் அமைப்பினர் மற்றும் செயற்பாட்டாளர் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கான தீர்வு வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

https://athavannews.com/2022/1296749

 

###########   ###########   ############   ########

 

 

 

முல்லைத்தீவிலும் உறவுகள் போராட்டம்!

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டுர் தினத்தை முன்னிட்டு இன்று வடக்கு – கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு புது க்குடியிருப்பு பகுதியில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றும் மேற்கொள்ளப்பட்டது.

முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 2000 நாட்கள் கடந்து செல்கின்ற நிலையில், இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், அரசியல்வாதிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி கோஷங்களை அனுப்பியதுடன் கருப்பு கொடிகளையும் காணாமல் போன தமது பிள்ளைகள் உறவுகளில் புகைப்படங்களையும் தாங்கி இருந்தனர்.

புதுக்குடியிருப்பு வைத்தியசாலை சந்தியிலிருந்து பிரதான சந்திப்பவரை இந்த ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது வடக்கு – கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க செயலாளரினால் வேலன்ஸ் சுவாமிகளிடம் மகளிர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

https://athavannews.com/2022/1296784

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சர்வதேச தினத்தையிட்டு.... அவர்களுக்கு நீதிகோரி... இன்று மட்டக்களப்பு ஏறாவூர், தன்னாமுனை பிரதேசத்தில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

 

வடக்கு – கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்’ எனும் 100 நாட்கள் செயல்முனைவின் 30 ஆவது நாள் போராட்டம் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சர்வதேச தினத்தையிட்டு அவர்களுக்கு நீதிகோரி இன்று மட்டக்களப்பு ஏறாவூர், தன்னாமுனை பிரதேசத்தில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் இiணைப்பாளர் கண்டுமணி லதன் தலைமையில்இது இடம்பெற்றது.

இவர் தலைமையில் இடம்பெற்றுவரும் ‘வடக்கு – கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்’ 100 நாள் தொடர் போரட்டத்தின் 30 வது நாள் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்ததையடுத்து ஏறாவூர் தன்னாமுனை பஸ்தரிப்பு நிலையத்துக்கு முன்னால் ஒன்றிணைந்த பொதுமக்களால் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கோஷங்கள் எழுப்பியவாறும் பதாதைகளை ஏந்தியவாறும் முன்னெடுக்கப்பட்ட போராட்டமானது நன்பகல் 12 மணிக்கு ஆரம்பித்து சுமார் ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1296787

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.