Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ் குடாநாட்டில் படை அதிகாரிகளுடன் கோட்டபாய ராஜபக்ச

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சனி 18-08-2007 22:29 மணி தமிழீழம் [சிறீதரன்]

யாழ் குடாநாட்டில் படை அதிகாரிகளுடன் கோட்டபாய ராஜபக்ச

சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோட்டபாய ராஜபக்ச மற்றும் உயர் படைத் தளபதிகள் குழு யாழ் குடாநாட்டுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளனர்.

gothapayajaffna1mh1.jpg

இன்று சனிக்கிழமை காலை 9 மணியளவில் பலாலி கூட்டுப் படைத்தளத்திற்கு சென்ற கோட்டபாய ராஜபக்சவை யாழ் மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறீ கைலாகு கொடுத்து வரவேற்றுள்ளார்.

கோட்டபாய ராஜபக்சவுடன் கூட்டுப்படைத் தளபதி எயார் மார்'ஷல் டொனால் பெரேரா, இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத்பொன்சேகா உடன் இருந்தார்கள்.

gothapayajaffna2lq7.jpg

அத்துடன் யாழ் மாவட்டத்தின் கட்டப் பீடமாக விளங்கும் பலாலி கூட்டுப்படைத் தளத்தில் படை அதிகாரிகளை கோட்டபாய ராஜபக்ச சந்தித்து யாழ் பாதுகாப்பு ஒழுங்குகள் குறித்து ஆராய்ந்துள்ளார்.

இதில் 51,52, 53 படைப் பிரிவுகளின் கட்டளை அதிகாரிகளும் இதில் கலந்துகொண்டுள்ளனர்.

நன்றி - பதிவு

கட்டளை அதிகாரிகளுக்கு கட்டளை பிறப்பித்துவிட்டு தான்தப்பிக் கொள்ள பறந்தோடிவிட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

குடாநாட்டு பாதுகாப்பு குறித்து பாலாலியில் கோதபாய ஆராய்வு

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உட்பட இராணுவ உயர்மட்டக்குழுவினர் நேற்று யாழ்.குடாநாட்டிற்கு விஜ யம் செய்து அங்குள்ள பாதுகாப்பு நிலைவரம் குறித்து ஆராய்ந்துள்ளனர்.

விமானப்படை விமானத்தின்மூலம் பலாலி விமானப்படைத்தளத்தை நேற்றுக்காலை 9.30 மணியளவில் சென்றடைந்த இந்த உயர்மட்டக்குழுவினரை யாழ்.மாவட்ட இராணுவக்கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி வரவேற்றார். இந்த குழுவில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கூட்டுப்படைகளின் தளபதி எயார் சீவ் மார்சல் டொனால்ட் பெரேரா இராணுவத்தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் சரத்பொன்சேகா உள்ளிட்ட இராணுவ உயர் அதிகாரிகள் இடம்பெற்றிருந்தனர்.

பலாலியிலுள்ள இராணுவத்தலைமையகத்தின் உள்ளக அரங்கில் இடம்பெற்ற பாதுகாப்பு நிலவரம் தொடர்பான கலந்துரையாடலில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உரையாற்றினார். அந்த கலந்துரையாடலில் குடாநாட்டு பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து கோத்தபாய ராஜபக்ஷவுக்கு இராணுவ அதிகாரிகள் விளக்கமளித்தனர்.

அத்துடன் எதிர்கால பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் அதுதொடர்பõன ஏற்பாடுகள் குறித்தும் அங்கு ஆராயப்பட்டிருக்கிறது. இந்த கலந்துரையாடலில் இராணுவத்தின் 51 ஆவது 52 ஆவது 53 ஆவது படையணிகளின் கட்டளைத் தளபதிகளும் கலந்துகொண்டனர். குடாநாட்டில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பது தொடர்பான அறிவுரைகளை இராணுவத்தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் சரத்பொன்சேகாவால் இந்த கலந்தரையாடலில் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இராணுவ உயர்மட்டக்குழுவினரின் வருகையை முன்னிட்டு அங்க பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன. குறிப்பாக குடாநாட்டில் கைத்தொலை÷பசிகளின் தொடர்புகள் அøனத்தும் நேற்றுமுன்தினம்

-வீரகேசரி

அதற்கேன் பலாலியில் FDLகு செல்ல வேண்டியதுதானே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.