Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னையில் ஃப்ளூ காய்ச்சல்: ஒரே நாளில் 100க்கு மேற்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் சேர்ப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னையில் ஃப்ளூ காய்ச்சல்: ஒரே நாளில் 100க்கு மேற்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் சேர்ப்பு

2 மணி நேரங்களுக்கு முன்னர்
 

இன்புளுயன்சா

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

இன்ஃப்ளுயன்சா

சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் ஒரே நாளில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் காய்ச்சலுக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். நாடு முழுக்க பல்வேறு மாநிலங்களில் காய்ய்சல் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

பருவகால நோய்கள் வருவது இயல்பு என்றாலும் பெருமளவில் வருவது என்பது கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தகூடியதாக உள்ளது.

இந்த நிலையில் பரவி வரும் ஃப்ளு காய்ச்சல் குறித்து நாம் தெரிந்து தெரிந்து கொள்ள வேண்டியது என்ன? செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன என்பதை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

குழந்தைகளுக்கு நோய் பிரச்னை என்றாலே முதலில் பதற்றமடைந்து விடுகிறோம். அதைத் தவிர்க்க வேண்டும் தொடர்ந்து சில சில நடவடிக்கைகளை மேற்கொண்டாலே இப்போது பரவும் ஃப்ளூ வகை காய்ச்சலை எளிமையாக எதிர்கொள்ள முடியும் என்கிறார் சென்னையைச் சேர்ந்த மருத்துவர் பாலாஜி.

 

இதன் அறிகுறிகள் என்ன?

காய்ச்சல்

இருமல், சளி

தொண்டை வறட்சி

உடல் சோர்வு ஆகியவை இந்த ஃப்ளூ வகை காய்ச்சல்களின் பொதுவான அறிகுறிகள்.

குழந்தைகளுக்கு பருவகால மாற்றங்களின்போதெல்லாம் வரக்கூடிய மிக மிக பொதுவான அறிகுறிகள்தான் இவை. ஆனால், கொரோனாவுக்குப் பிறகு இந்த அறிகுறிகளின் மீதான பார்வையும் அச்சமும் அதிகரித்துள்ளது என்கிறார் அவர்.

எப்படி பரவும்?

நோய் தொற்றியவரின் இருமல், தும்மல் ஆகியவற்றின் போது வெளிப்படும் நீர்த்திவலைகள் மூலமாகத்தான் இந்த நோய் பரவும். அதே சமயம் தொற்றுள்ளவருடன் மிக மிக நெருக்கமாக இருந்தால் மட்டுமே இந்த தொற்று எளிதில் பரவும். மற்றபடி, காற்றில் பரவும் தன்மை இதற்கு கிடையாது.

தொற்று பாதித்தவர் இருமிய, தும்மிய இடங்களில் கைவைத்துவிட்டு நேரடியாக நம் மூக்கு, முகம் ஆகியவற்றில் வைத்துக்கொண்டால் பரவும்.

எப்படி தவிர்ப்பது?

முறையாக முகக்கவசம் அணிவது.

கைகளைக் கழுவுவது

நீரைக் கொதிக்க வைத்து, ஆறவைத்து குடிப்பது.

தடுப்புசி போட்டுக்கொள்வது ஆகியவற்றின் மூலம் இதனை தவிர்க்க முடியும்.

 

பருவகாலம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

கோப்புப்படம்

பெற்றோர்கள் கவனத்துக்கு

  • குழந்தைகளின் உடல்நிலை எப்போதும் பெற்றோர்களுக்கு கவலைக்குரிய ஒன்றாகவே இருக்கிறது. ஆனால், அது பதற்றமாக வெளிப்படக் கூடாது.
  • கொரோனா சமயத்தில் கடைபிடித்த அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளையும் இப்போது கடைபிடிப்பது இந்த பருவகால நோய்களிலிருந்து தற்காத்துக்கொள்ள உதவும்.
  • அறிகுறிகள் ஏறக்குறைய கொரோனாவுடன் ஒத்துப்போவதால், அச்சம் அதிகரிக்க வாய்ப்புண்டு. உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.
  • இந்த ஆண்டு பெருமளவு குழந்தைகள் பாதிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2 ஆண்டுகளுக்குப் பின் குழந்தைகள் மீண்டும் வழக்கம்போல பள்ளி செல்லத் தொடங்கிய பின் வரும் மாற்றம் இது. பெரியவர்கள் முகக்கவசம் உள்ளிட்ட வழிமுறைகளை இன்னும் தொடர்ந்து வருகின்றனர் என்பதும் இதற்கான காரணங்களில் ஒன்றாக இருக்கலாம்.
  • பள்ளியில் குழந்தைகள் மிக நெருக்கமாக பழகுவதால் எளிதில் தொற்று பாதிப்புக்கு ஆளாக வாய்ப்புண்டு. தொடர்ச்சியாக சோப்பு கொண்டு கைகழுவுதல், முகக்கவசம் அணிதல், வீட்டுக்கு வந்ததும் முழுமையாக சோப் கொண்டு சுத்தமாதல் ஆகிவற்றை செய்ய வையுங்கள்.
  • குடும்பத்துடன் தடுப்பூசி எடுத்துக்கொள்ளுங்கள். இந்த செப்டம்பரில் தடுப்பூசி செலுத்திக் கொள்வது இனி வரப்போகும் மழை, குளிர் காலங்களில் ஏற்டவிருக்கும் சிக்கல்களைத் தடுக்கவும் உதவும் என்கிறார் மருத்துவர் பாலாஜி.

முறையான பாதுகாப்பு வழிமுறைகளை நோய்த்தொற்று காலத்தில் பின்பற்றுவது மட்டுமன்றி, தொடர்ந்து வரப்போகும் நாட்களிலும் பின்பற்றுவது குழந்தைகளுக்கு ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்கும் என்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் பூபதி ஜான்.

 

பூபதி ஜான்

பட மூலாதாரம்,BOOBATHY JOHN

 

படக்குறிப்பு,

பூபதி ஜான்

மேலும், "இந்த தொற்றானது புதிய அச்சுறுத்தக்கூடிய தொற்று அல்ல. ஏற்கனவே ஏற்பட்டுள்ள வகைகள் தான். ஆனாலும், எண்ணிக்கையையும் பரவும் விகிதத்தையும் கொண்டு பார்த்தால் உடனடி நடவடிக்கையும் தயாரிப்பும் தேவை என்று தோன்றுகிறது"

அத்துடன், "இந்த நோயின் அறிகுறிகளை பொறுத்தவரை கொரோனாவாக இருக்குமோ என்ற சந்தேகம் எழலாம். ஆனால், அச்சமோ பதற்றமோ குழந்தைக்கு ஏற்பட விடாமல் உடனடியாக மருத்துவரை அணுகி பெற்றோர்கள் இதை முறையாக கையாள வேண்டும். கைகழுவுதல், வெந்நீர் பருகுதல் உள்ளிட்ட சுகாதாரப் பழக்கங்களை குழந்தைகளின் நடைமுறைப் பழக்கமாகவே மாற்றிவிடவேண்டும்" என்றும் தெரிவிக்கிறார் அவர். https://www.bbc.com/tamil/india-62904498

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.