Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிலை கடத்தல்: புதுவை அருகே ஒரே கடையில் பதுக்கிவைத்த 7 பழங்கால சிலைகள் மீட்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிலை கடத்தல்: புதுவை அருகே ஒரே கடையில் பதுக்கிவைத்த 7 பழங்கால சிலைகள் மீட்பு

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

மீட்கப்பட்ட சிலைகள்

பட மூலாதாரம்,POLICE

 

படக்குறிப்பு,

மீட்கப்பட்ட சிலைகள்

விழுப்புரம் மாவட்டத்தில் ஆரோவில் பகுதியில் உள்ள ஒரு கைவினை பொருட்கள் கடையில் இருந்து ஏழு பழங்கால சிலைகளை, சிலைகடத்தல் பிரிவு கைப்பற்றியுள்ளது. உரிய ஆவணங்கள் இல்லாமல் பழங்ககால சிலைகளை கடை உரிமையாளர் பதுக்கிவைத்திருப்பது தெரியவந்தததை அடுத்து நடந்த சோதனையில், சிலைகள் மீட்கப்பட்டுள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு துறை தெரிவித்துள்ளது.

சிலை மீட்பு தொடர்பாக செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள சிலை கடத்தல் தடுப்புத் துறை, சட்டவிரோதமாக பழங்கால சிலைகளை விற்பனைக்காக மறைத்துவைத்திருந்த நிலையில் அந்த சிலைகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

மீட்கப்பட்ட சிலைகளில், மூன்று அர்த்தநாரீஸ்வரர் சிலைகள் இருந்ததாகவும், அதில் ஒரு சிலை 116 செ மீ உயரமுள்ள வெண்கல சிலை, 60 செ மீ உயரமுள்ள உலோக சிலை மற்றும் சேதமான நிலையில் கிடைத்த 60 செ மீ உயர உலோக சிலை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற சிலைகளை பொறுத்தவரை, சிவகாமி அம்மன், புத்தர், வேலைப்பாடுகள் உள்ள மயில் மற்றும் கிருஷ்ணர் சிலை ஆகியவை அடங்கும்.

மேலும், விழுப்புரம் மாவட்டம் பொம்மையார்பாளையத்தில் அமைந்துள்ள அந்த கடையில், பழங்கால உலோக சிலைகளை பதுக்கி வைத்திருந்த கடை உரிமையாளர் ராமச்சந்திரனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளதாகவும், மீட்கப்பட்ட சிலைகளை விரைவில் இந்திய தொல்லியல் துறை முன் சமர்பிக்க உள்ளதாகவும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு கூறுகிறது. இந்த சிலைகள் எந்த கோயிலுக்கு சொந்தமானவை என்று கண்டறிய, சிலைகள் பற்றிய விவரங்கள் அடங்கிய அறிக்கை ஒன்றை இந்து அறநிலையத்துறைக்கு அனுப்பவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

காவல்துறையினர் சொல்வது என்ன?

விழுப்புரம்‌ மாவட்டம்‌, பொம்மையார்பாளையம்‌ கன்னிகா கார்டனில்‌ அமைந்துள்ள மெட்டல்‌ கிராப்ட்ஸ்‌ என்ற கைவினைப்‌ பொருட்கள்‌ விற்பனை செய்யும்‌ கடையில்‌, தமிழகத்தின்‌ பழங்கால - திருடப்பட்ட - உலோகச்‌ சிலைகளை சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருப்பதாக சிலை கடத்தல்‌ தடுப்பு பிரிவுக்கு தகவல்‌ கிடைத்தது.

இந்தத் தகவலை அடுத்து உள்ளுர்‌ விசாரணைகளுக்குப் பின் உண்மையைக்‌ கண்டறிந்த பிறகு, சிலை கடத்தல்‌ தடுப்பு பிரிவு நீதித்துறை நடுவரிடம் இருந்து சோதனை உத்தரவைப் பெற்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் தேடுதல்‌ வேட்டையில்‌ ஈடுபட்டனர்‌.

திட்டமிட்டபடி, செப்டம்‌பர்‌ 16, 2022 அன்று சிலை கடத்தல்‌ தடுப்பு பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி தலைமையில் நேரில் சென்று சோதனை நடத்தினர். மெட்டல்‌ கிராப்ட்ஸ்‌ கடை உரிமையாளர்‌ டி.ஆர்‌.ராமச்சந்திரன்‌ (42) என்பவருக்கு சொந்தமான வளாகத்தில்‌ நடந்த சோதனையில்‌, சிலைள் கண்டுபிடிக்கப்பட்டன.

 

மீட்கப்பட்ட சிலைகள்

பட மூலாதாரம்,POLICE

 

படக்குறிப்பு,

மீட்கப்பட்ட சிலைகள்

பழங்கால சிலைகளை வைத்திருப்பதற்கான ஆவணங்கள் ஏதும் இல்லாததால் சிலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் கடை உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

https://www.bbc.com/tamil/india-62938185

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.