Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மூடப்படும் கதவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மூடப்படும் கதவு

By VISHNU

16 SEP, 2022 | 09:41 PM
image

சத்ரியன்

இலங்கையில் உள்ள தூதரகத்தை அடுத்த ஆண்டு ஜூலை மாத இறுதிக்குள் மூடி விடுவதற்கு நோர்வே அரசாங்கம் தீர்மானித்திருக்கிறது.

K1RIGHT_02.jpg

‘நோராட்’ எனப்படும், அபிவிருத்தி ஒத்துழைப்புக்கான நோர்வே முகமையின் அலுவலகம், 1976ஆம் ஆண்டு இலங்கையில் அமைக்கப்பட்டதில் இருந்து, நோர்வேக்கும் இலங்கைக்கும் இடையிலான அபிவிருத்தி மற்றும் இராஜதந்திரத் தொடர்புகள் ஆரம்பமாகின.

K1RIGHT_01.jpg

அதன் பின்னர், இருபது ஆண்டுகள் கழித்து, 1996ஆம் ஆண்டு, கொழும்பில் தமது தூதரகத்தை நோர்வே திறந்தது. 26 ஆண்டுகளுக்குப் பிறகு, நோர்வே கொழும்பிலுள்ள தமது தூதரகத்தை மூடுவதற்கு முடிவு செய்திருக்கிறது.

கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு காலத்தில் இலங்கையின் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த பல முயற்சிகளில்- நோர்வே பங்காளியாக இருந்து வந்திருக்கிறது.

கொழும்பில் தமது தூதரகத்தை திறந்த போது, இலங்கையில் போர் உச்சக் கட்டத்தை அடைந்திருந்தது. மிகப்பெரிய இடம்பெயர்வுகள், மனித அவலங்களுக்கு மத்தியில் இலங்கையில் தமது தூதரகத்தை அமைத்த நோர்வே, குறுகிய காலத்திலேயே அதன் செயற்பாடுகளால் உலகளவில் பிரபலத்தைப் பெற்றது.

விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் போர்நிறுத்தம் மற்றும் பேச்சுக்கான வசதிகளை ஏற்படுத்துதல், அமைதி மற்றும் அரசியல் தீர்வை ஏற்படுத்திக் கொள்வதற்கான ஒரு உடன்பாட்டை ஏற்படுத்துதல் போன்றவற்றுக்காக நோர்வே தீவிரமான பங்களிப்புகளை வழங்கியிருந்தது.

2002இல் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் போர்நிறுத்த உடன்பாட்டை ஏற்படுத்துவதில், நோர்வே பிரதான பங்கு வகித்தது.

அதற்காக கொழும்பில் இருந்த நோர்வே தூதுவர் ஜோன் வெஸ்பேர்க் தீவிர பங்கை ஆற்றியிருந்ததுடன், இலங்கைக்கான விசேட தூதுவராக எரிக் சொல்ஹெய்மும் நியமிக்கப்பட்டிருந்தார்.

போர்நிறுத்தம், 2006ஆம் ஆண்டு முறிவடையும் வரையான காலப்பகுதி இலங்கையில் நோர்வே தூதரகம் மற்றும் தூதுவர்களின் பணிகள் மிகவும் சவாலானதாகவே இருந்தது.

போர்நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்த சிங்கள பௌத்த தேசியவாத சக்திகளின் பிரதான இலக்காக நோர்வே காணப்பட்டது.

கொழும்பில் இருந்த நோர்வே தூதரகம் எந்த நேரத்திலும் எதிர்ப்புக் போராட்டங்கள் நடத்தப்படும் இடமாக அப்போது இருந்தது.

இலங்கையில் அதிகளவில் தீக்கிரையாக்கப்பட்ட வெளிநாட்டுக் கொடி என்றால் அது நோர்வேயினுடையதாகத் தான் இருக்கும்.

நோர்வே தூதரகம் முன்பாக எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்ட ஜே.வி.பி. மற்றும் ஜாதிக ஹெல உறுமய, போன்ற சிங்கள அடிப்படைவாத சக்திகள் இறுதியில் நோர்வே கொடியை எரித்து ஆத்திரத்தை தீர்த்துக் கொள்வது வழமை.

போர்நிறுத்த உடன்பாடு மற்றும், நோர்வேக்கு எதிரான போராட்டங்களின் ஊடாகவே, ஜேவிபியில் இருந்த விமல் வீரவன்ச பிரபலம்மிக்க அரசியல்வாதியாக மாறினார்.

விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான சமாதானப் பேச்சுக்கள் தோல்வியைத் தழுவத் தொடங்க, மெல்ல மெல்ல மோதல்கள் உருவாகிய போது, நோர்வேயின் பங்கும் சரிவைக் காணத் தொடங்கியது.

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தவுடன், நோர்வேயை ஒரு வேண்டாத தரப்பாகவே நடத்த தொடங்கினார்.

அதன் நடுநிலையை – அனுசரணையையும் அவர் அங்கீகரிக்கத் தயாராக இருக்கவில்லை.

ஆயினும், ஜெனிவாவில் கடைசியாக நடந்த அமைதிப் பேச்சுக்களில், நோர்வேயின் பங்களிப்பு தவிர்க்க முடியாததாக இருந்த்து.

இலங்கையின் அமைதி முயற்சிகளில் நோர்வே தனது கொழும்பில் உள்ள தூதரகத்தை மாத்திரம் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

அதற்கு அப்பால், தனது விசேட தூதுவர், வெளிவிவகார அமைச்சர்களையும், இந்தப் பணிகளில் ஈடுபடுத்தியது. ஆனாலும், நோர்வேக்கு இந்த அமைதி முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.

நோர்வே ஒரு அனுசரணை நாடாக மாத்திரமே இந்தப் பேச்சு முயற்சிகளில் பங்கேற்றிருந்தது. அதற்கு அப்பால் செயற்படக் கூடியளவுக்கு நோர்வே ஒரு அழுத்த சக்தியாக இருக்கவில்லை.

பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடாக இருந்தாலும், நோர்வே உலகளவில் பலம் கொண்டதொரு நாடு அல்ல.

அதேவேளை, இலங்கையில் மாத்திரமன்றி, முரண்பாடுகள் நிலவிய நாடுகள் பலவற்றில் நோர்வே இவ்வாறான அமைதி முயற்சிகளில் பங்கேற்று வந்திருக்கிறது.

1993ஆம் ஆண்டுக்குப் பின்னர் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில், நோர்வே தீவிரமாக ஈடுபட்ட நாடுகளின் பட்டியல் நீளமானது.

ஆப்கானிஸ்தானில் அமைதி முயற்சிகளில் ஈடுபட்டது. வெற்றி கிடைக்கவில்லை.

கொலம்பியாவில் பார்க் கெரில்லா அமைப்புடன் அரசாங்கம் உடன்பாட்டை செய்து கொள்வதற்கு நோர்வே கியூபாவுடன் இணைந்து செயற்பட்டது.

இஸ்ரேல்- பலஸ்தீனத்துக்கு இடையில் ஒஸ்லோ உடன்பாடு நோர்வேயின் முயற்சியால் தான் கையெழுத்திடப்பட்டது.

மேலும் மியான்மார், பிலிப்பைன்ஸ், சோமாலியா, சூடான்,வெனிசுவேலா, நேபாளம் என உள்நாட்டுப் போர் அல்லது மோதல்கள் இடம்பெற்ற நாடுகளில் அமைதியை ஏற்படுத்துவதில் நோர்வே பங்களித்தது.

ஆச்சே, புருண்டி, கொங்கோ, கென்யா, மொசாம்பிக், சிரியா மற்றும் உகண்டா ஆகிய நாடுகளில் அமைதி செயல்முறைகளுக்கு நோர்வே நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவையும் வழங்கியுள்ளது. 

ஹைட்டி, டொமினிக்கன் குடியரசு மற்றும் திமோர்-லெஸ்தே உட்பட பல நாடுகளில் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளது.

அமைதிப் பேச்சுவார்த்தைகள் பெரும்பாலும் இரகசியமாக நடைபெறுவதால், இந்தப் பட்டியல் முழுமையானதல்ல என்று குறிப்பிடுகிறது, நோர்வேயின் வெளிவிவகார அமைச்சு.

அமெரிக்கா, நேரடியாக தலையிட முடியாத, அல்லது தலையிட விரும்பாத, இடங்களில் அமைதி முயற்சிகளில் நோர்வேயை ஈடுபடுத்துகிறது என்ற குற்றச்சாட்டுகளும் உள்ளன.

இலங்கையைப் பொறுத்தவரையில், விடுதலைப் புலிகள் இயக்கத்தை அமெரிக்கா தடை செய்திருந்த நிலையில், அவர்களுடனான அமைதிப் பேச்சுக்களில் நேரடி அனுசரணையாளராக இறங்க முடியாத நிலை காணப்பட்டது.

அதைவிட, அமெரிக்காவை நம்பகமானதொரு தேசமாக அங்கீகரிக்க சிங்கள மக்கள் தயாராக இல்லாத நிலையையும் அந்த நாடு கவனத்தில் கொண்டிருக்கும்.

இவ்வாறான நிலையில் தான் நோர்வேயை பயன்படுத்தி இலங்கை அமைதி முயற்சிகள்  முன்னெடுக்கப்பட்டன. அந்தக் கட்டத்தில் போரிடும் தரப்புகளை ஒரு இடத்தில் சந்திக்க வைப்பதே பெரும் விடயமாக இருந்தது.

ஆனால் போரிடும் தரப்புகள் இரண்டும் களைத்துப் போயிருந்தன. அவர்களுக்கு ஒரு இடைவெளி தேவைப்பட்டது. அந்தச் சந்தர்ப்பத்தில் தான் நோர்வே அமைதி முயற்சிகளை முன்னெடுத்தது.

ஆனால் காலப்போக்கில் நோர்வே, சிங்கள பௌத்த பேரினவாத தரப்புகளின் இலக்காக தொடங்கியதுடன், சிங்கள மக்களால் நம்பக்கூடிய நாடு அல்ல என்ற நிலைக்கும் தள்ளப்பட்டது.

அது நோர்வேயை சலிப்படைய வைத்ததுடன், அவர்களின் அமைதி முயற்சிகளையும், வெற்றியின் திசையில் இருந்து திருப்பி விட்டது.

போர் முடிவுக்கு வந்த பின்னர் இலங்கையில் நோர்வேயின் செயற்பாடுகள் ஆர்ப்பரிப்பில்லாமல் அமைதியானதாகவே இருந்து வந்தது.

அவர்களைப் பயன்படுத்தவும் யாரும் இருக்கவில்லை. அவர்களும் அதற்கு இடமளிக்கவில்லை.

இந்தநிலையில் தான், கொழும்பை விட்டுப் புறப்படும் முடிவை எடுத்திருக்கிறது நோர்வே.

இந்தியாவில் இருந்து, இலங்கையில் தமது தூதரகச் செயற்பாடுகளை முன்னெடுக்க நோர்வே தீர்மானித்திருக்கிறது.

1996இல் இலங்கையில் நோர்வே தனது தூதரகத்தை நிறுவ முடிவு செய்த காலத்துக்கும், இப்போதைய காலகட்டத்துக்கும் இடையில் பெரிய வேறுபாடுகள் இல்லை.

இருக்கின்ற ஒரே வித்தியாசம், அப்போது போர் கடுமையாக நடந்து கொண்டிருந்த்து. இப்போது இல்லை. மற்றபடி மக்களின் வாழ்க்கைத் தரத்தில் பெரிய முன்னேற்றங்கள் எதுவுமில்லை.

இவ்வாறான நிலையில் இலங்கையில் நோர்வே தனது தூதரகத்தை அமைக்க முடிவு செய்ததற்குப் பின்னால், போர் தொடர்பான அமைதி முயற்சிகளில் பங்கெடுப்பது மட்டும் தான் காரணமாக இருந்ததோ என்ற கேள்வி எழுகிறது.

அதேவேளை தூதரகத்தை மூடினாலும் இலங்கையுடனான உறவுகள் தொடரும் என்று நோர்வே கூறியிருக்கிறது.

ஏற்கனவே நோர்வேக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் என்பது, ராஜபக்ஷவினரின் ஆட்சிக்காலங்களில் ஒரு விதமாகவும், மற்றைய தரப்பினரின் காலகட்டங்களில் மற்றொரு விதமாகவும் தான் இருந்து வந்திருக்கிறது.

இவ்வாறான நிலையில், தூதரகம் இல்லாத போது, நோர்வே தனது உதவிகளையும் திட்டங்களையும் பிற தரப்புகளின் ஊடாகத் தான் முன்னகர்த்தப் போகிறது.

இது, நோர்வேக்கும் இலங்கைக்கும் இடையிலான தொடர்புகளை குறைக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதனால் பேரினவாத கண்ணோட்டத்தில் ஆட்சிக்கு வரும் இலங்கை அரசாங்கம் கவலையடையக் கூடிய நிலையும் இல்லை. 

https://www.virakesari.lk/article/135784

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.