Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய மத்திய அரசிற்குள் அமெரிக்க உளவுப் பிரிவு ஊடுருவல். ? திணறுகிறது இந்தியா.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய மத்திய அரசிற்குள் அமெரிக்க உளவுப் பிரிவு ஊடுருவல். ? திணறுகிறது இந்தியா.

ஜ செவ்வாய்கிழமைஇ 21 ஆகஸ்ட் 2007 ஸ ஜ ஜெயராசா ஸ

இந்திய-அமெரிக்க அணு சக்தி உடன்பாடு குறித்த வாதப்பிரதி வாதங்கள் மேலும் மேலும் சூடாகிக்கொண்டிருக்கின்றன. இதனிடையே இந்திய அரசு தனது தனிச்சிறப்பு வாய்ந்த வெளியுறவுக் கொள்கையை முற்றிலுமாக அமெரிக்க அரசின் விரலசைப்புக்கு ஏற்ப மாற்றிக் கொண்டு வருகிறது என்ற குற்றச்சாட்டுக்கு வலுச்சேர்ப்பது போல் வங்கக் கடலில் அமெரிக்கா ஆஸ்திரேலியா ஜப்பான் ஆகிய நாடுகளோடு இணைந்து ஒரு கூட்டுக் கடற்படைப் பயிற்சியை இந்தியா வரும் செப்டம்பரில் மேற்கொள்ளவிருக்கிறது. இடது சாரிக்கட்சிகள் மட்டுமே இந்தத் தகவல் வெளியானதிலிருந்தே கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. மற்ற கட்சிகளுக்கு இது தொடர்பாக என்ன நிலைபாடு என்பது நாட்டிற்குத் தெரிய வில்லை. பெரும் ஊடகங்களோ நான்கு நாடுகளின் போர்க்கப்பல்களும் கடற்படை விமானங்களும் நிகழ்த்தவிருக்கிற சாகசங்கள் பற்றிய பிரமிப்புகளைச் செய்தியாக்குவதில்தான் முனைப்புக் காட்டுகின்றனவேயன்றி இடதுசாரிகளின் எதிர்ப்புக்குக் காரணம் என்னவென்பது பற்றிக் கிஞ்சிற்றும் கவலைப்படவில்லை. இந்தியாவின் எதிர்கால நலன்களுக்கு ஊறு விளைவிக்கக்கூடியது இந்தக் கூட்டுப் பயிற்சி. எதிர்கால நலன்கள் என்றால் நேரடியாக நாட்டின் பாதுகாப்பு மட்டுமல்ல மற்ற நாடுகளுடனான உறவும் கடுமையாக பாதிக்கப்படும். அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளி என்பது போன்ற தோற்றம் கிடைப்பது உலக அரங்கில் இந்தியா தனிமைப்படவே வழிவகுக்கும். ஏற்கெனவே உள்ள முத்தரப்பு ராணுவக் கூட்டு அமைப்புக்குள் இந்தியா நான்காவது நாடாக இழுக்கப்பட்டுவிட்டது என்ற எண்ணம் உலக சமுதாயத்திற்கு ஏற்படுவது இந்தியாவுக்கு எவ்வகையிலும் உதவாது. மாறாக எதிர்மறை விளைவுகளையும் இந்தியாவுக்குள் மக்களிடையே மோதலைத் தூண்ட முயலும் பயங்கரவாத சக்திகள் தங்களது சதிச்செயல்களை நியாயப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பையும் தான் ஏற்படுத்தும். பொதுவாக அமெரிக்க ஏகாதிபத்தியம் சோவியத் யூனியன் தகர்ப்புக்குப் பிறகு இன்று தனது ஒற்றையாதிக்கத் திருவிளையாடல்களுக்கு மக்கள் சீனத்தைத்தான் பெரிய முட்டுக்கட்டையாகக் கருதுகிறது. எனவே தவிர்க்கமுடியாத ராஜீயா வர்த்தக உறவுகள் இருந்த போதிலும் சீனாவை ஓரங்கட்டுகிற முயற்சிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறது. அதற்கு ஆஸ்திரேலியா ஜப்பான் அரசுகள் தங்களுக்கே உரிய அரசியல் காரணங்களுக்காக ஒத்துழைக்கின்றன. இதற்கு இந்தியாவும துணைபோகிறது என்ற எண்ணம் ஏற்பட விடலாமா?

அதுவும் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே நல்லுறவையும் நட்பையும் வளர்ப்பதற் கான ஆக்கப்பூர்வமான முயற்சிகள் நம்பிக்கையளிக்கும் விதத்தில் தொடர்கிற நிலையில் இப்படி அமெரிக்க நோக்கத்துக்கு இசைவாக இந்தியா நடந்து கொள்கிறதோ என்ற சந்தேகம் ஏற்படச் செய்யலாமா? அது இந்தியா - சீனா ஆகிய இரு நாடுகளின் உறவுக்கு உகந்ததல்ல. ஒரு நம்ப முடியாத அண்டை நாடாக இந்தியாவை முன்னிறுத்துகிற இந்த முயற்சி குறித்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மறுபரிசீலனை செய்தாக வேண்டும்.

அடுத்து ஏற்கெனவே இராக் நாட்டை வெடிகுண்டுகளின் மண்ணாக மாற்றிவிட்ட ரத்தக் கறை படிந்த கைகளோடு இப்போது ஈரானையும் சிறுமைப்படுத்துகிற சூழ்ச்சிகளில் அமெரிக்கா இறங்கியிருப்பது வெளிப்படை. இச்சூழலில் இந்தியாவும் அமெரிக்காவுடன் கைகோர்த்துக் கொள்கிறது என்ற எண்ணத்தை ஈரான் மக்களுக்கு ஏற்படச் செய்வது அறிவுடைமையும் அல்ல சிறந்த அரசியல் உத்தியும் அல்ல.

இவ்வாறு கூட்டாகப் பயிற்சி மேற்கொள்வது என்பது ராணுவக்கூட்டு அமைப்பதாகாது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருக்கிறார். திட்டவட்டமான ராணுவக் கூட்டு அல்ல என்ற போதிலும் ஏகாதிபத்தியத்துடனான எந்த ஒரு கூட்டு முயற்சியும் உலகத்தின் கண்களுக்கு ஐயப்பாட்டுக்கு உரியதாகவே புலப்படும். அதனால் விளையக் கூடிய சர்வதேச விளைவுகளை இந்திய மக்கள்தான் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

மனசாட்சியின் குரலாக ஒலிக்கும் இடதுசாரி களின் எதிர்ப்பு முழக்கம் நாடெங்கும் எதிரொலிக்க வேண்டும். ஏனைய அரசியல் இயக்கங்கள் இதை சாதாரண ஒன்றாகப் பார்க்காமல் தமது எதிர்ப்பைத் திட்டவட்டமாகப் பதிவு செய்ய வேண்டும்.

http://nitharsanam.com/?art=24169

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.