Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு காந்தி ஜெயந்தி நாளில் ஊர்வலம் நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி மறுப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு காந்தி ஜெயந்தி நாளில் ஊர்வலம் நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி மறுப்பு

13 நிமிடங்களுக்கு முன்னர்
 

ஆர்.எஸ்.எஸ்

பட மூலாதாரம்,GETTY/MANJUNATH KIRAN

காந்தி ஜெயந்தி நாளில் தமிழ்நாட்டில் 50 இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அந்த நாளில் தமிழ்நாட்டில் எந்த ஊர்வலம், பொதுக்கூட்டத்துக்கும் அனுமதி தரப்படாது என்று கூறியுள்ளது தமிழ்நாடு அரசு.

உயர்நீதிமன்றம் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு விதிகளுக்கு உட்பட்டு அனுமதி அளிக்க பரிசீலிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசிற்கு உத்தரவிட்ட நிலையில் சட்டம் ஒழுங்கு நிலைமையில் நிலவும் பல்வேறு பிரச்சனைகளின் அடிப்படையில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினை இந்திய ஒன்றிய அரசு தடை செய்துள்ள நிலையில் அதற்கு எதிராக சில இஸ்லாமிய அமைப்புகள் கண்டனங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தி வருகின்றன.

இந்தப் பின்னணியில் மாநிலத்தில் பல இந்து அமைப்புகளின் தலைவர்கள், வீடுகள் வண்டிகள் மீது பெட்ரோல், மண்ணெண்ணெய் குண்டுகள் வீசும் நிகழ்வுகள் நடந்துள்ளன. இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகிகள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

கடந்த காலத்தில் சில பாஜக நிர்வாகிகள் தங்கள் மீது தாங்களே தாக்குதல் நடத்திக்கொண்டு நாடகமாடிய நிகழ்வுகளின் பின்னணியில் இந்த நிகழ்வுகளை சில அரசியல் கட்சிகள் சந்தேகக் கண்ணோடு பார்க்கின்றன.

 

Presentational grey line

இப்படி மதப் பதற்றத்தை நோக்கி இட்டுச்செல்லும் வாய்ப்புள்ள நிகழ்வுகள் நடந்துள்ள பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்த அனுமதி கேட்டிருந்ததால், அதே நாளில் சமய நல்லிணக்க பேரணி என்ற பெயரில் ஊர்வலம், மனித சங்கிலி போன்றவற்றை நடத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் அனுமதி கேட்டுள்ளன.

போட்டியான இத்தகைய மக்கள் திரள் நடவடிக்கைகள் மோதலாக மாறி சட்டம் ஒழுங்கை பாதிக்குமோ என்ற அச்சத்தை பலரும் சமூக ஊடகங்களில் வெளியிட்டுவந்தனர். இந்தப் பின்னணியில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை காக்க காவல் துறையினர் முழு வீச்சில் இரவு பகலாக அனைத்து இடங்களிலும் ரோந்து உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய சூழலில் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட எந்த அமைப்புகளின் ஊர்வலம் மற்றும் கூட்டங்களுக்கு அனுமதி அளிக்க இயலாது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, தமிழ்நாடு அரசின் இந்த முடிவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ். முறையீடு செய்துள்ளதாக சில செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

https://www.bbc.com/tamil/63071242

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆர்எஸ்எஸ் ஊர்வலம்: நவம்பர் 6ஆம் தேதி அனுமதி தர உயர் நீதிமன்றம் உத்தரவு - 10 தகவல்கள்

4 மணி நேரங்களுக்கு முன்னர்
 

ஆர்எஸ்எஸ் ஊர்வலம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சென்னையில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தை நவம்பர் 6ஆம் தேதி நடத்துவதற்கு அனுமதி வழங்கும்படி தமிழ்நாடு காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பான 10 தகவல்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

1. தமிழ்நாடு முழுவதும் ஐம்பதுக்கும் அதிகமான இடங்களில் காந்தி ஜெயந்தியன்று ஊர்வலம் நடத்த ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் (ஆர்எஸ்எஸ்) இயக்கத்துக்கு நிபந்தனை அனுமதி அளித்து கடந்த 22ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால்,. திருவள்ளூர் மாவட்டத்தில் ஊர்வலத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்தது. இதையடுத்து தமிழ்நாடு உள்துறை செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர், திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் செப்டம்பர் 27ஆம் தேதி காவல்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

2. இந்த வழக்கில் நீதிபதி இளந்திரையன் முன்பு ஆஜரான ஆர்எஸ்எஸ் தரப்பு வழக்கறிஞர்கள், ஊர்வலம் தொடர்பாக செப்டம்பர் 22ஆம் தேதி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மீறும் வகையில் தமிழ்நாடு அரசின் உத்தரவு அமைந்துள்ளது என்று முறையிட்டனர். இந்த விவகாரத்தை அவசர வழக்காக நீதிபதி ஜி.கே. இளந்திரையன் தலைமையிலான அமர்வு இன்று (செப்டம்பர் 30) பிற்பகல் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.

3. "இந்த விவகாரத்தில் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி தங்களுடைய ஊர்வலம் நடத்தும் உரிமையை மாநில காவல்துறை பறிக்க முற்படுகிறது. போராட்டங்கள் நடத்த அனுமதி தருவது தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை மீறும் வகையில் காவல்துறையின் செயல்பாடு உள்ளதால் இதை நீதிமன்ற அவமதிப்பாக கருத வேண்டும்," என்று ஆர்எஸ்எஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கூறினர்.

 

4. "மகாத்மா காந்தியின் பிறந்த நாளில்தான் நாங்கள் ஊர்வலம் நடத்த அனுமதி கோரினோம். ஆனால், அதற்கு ஏன் அனுமதி மறுக்கிறார்கள் எனத் தெரியவில்லை," என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

 

சிவப்புக் கோடு

 

சிவப்புக் கோடு

 

ஆர்எஸ்எஸ் ஊர்வலம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

5. இதையடுத்து தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞரும் மாநிலங்களவை திமுக உறுப்பினருமான என்.ஆர். இளங்கோ, தமிழ்நாட்டில் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகள் தொடர்பான இடங்களில் என்ஐஏ சோதனை நடத்திய பிறகு, பல இடங்களில் ஆர்எஸ்எஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினரின் இல்லங்களையும் அலுவலகங்களையும் இலக்கு வைத்து கல்வீச்சு மற்றும் தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளதாக கூறினார்.

6. தமிழ்நாட்டில் சாத்தியம் மிக்க சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாக குறைந்தபட்சம் ஏழு உளவுத்தகவல் எச்சரிக்கை குறிப்புகள் மாநில அரசுக்கு வந்துள்ளதாக என்.ஆர். இளங்கோ குறிப்பிட்டார். அத்தகைய நுட்பமான உளவுத்தகவல்களை ஒதுக்கி விட முடியாது என்று கூறிய அவர், சட்டம் ஒழுங்கு விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிடக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்துள்ள உத்தரவின் விவரங்களை வாசித்துக் காட்டினார்.

7. மகாத்மா காந்தியின் பிறந்த நாளில் ஆர்எஸ்எஸ் உத்தேசித்துள்ள ஊர்வலத்துக்கு உள்நோக்கத்துடன் காவல்துறை மறுப்பதாக மனுதாரர் சார்பில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டையும் என்.ஆர். இளங்கோ மறுத்தார். அக்டோபர் 2ஆம் தேதி நீங்கலாக வேறு தேதியில் ஊர்வலம் நடத்த அனுமதி கோரினால், அதை காவல்துறை பரிசீலிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

8. அப்போது மாநில அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகம்மது ஜின்னா, "ஏற்கெனவே மாநிலத்தில் தேசிய புலனாய்வு முகமை நடத்திய சோதனைகளுக்குப் பிறகு பல இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு, கல்வீச்சு சம்பவங்கள் நடப்பதால், மாநில அளவில் சுமார் 52 ஆயிரம் காவல்துறையினர் தொடர்ந்து கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மக்களின் உயிரையும் சொத்துகளையும் பாதுகாப்பதற்கே அரசாங்கம் முன்னுரிமை தருகிறது," என்று கூறினார்.

9. இதையடுத்து வாதிட்ட என்.ஆர். இளங்கோ, "அக்டோபர் 2ஆம் தேதிக்கு என்று ஒரு புனிதம் இருக்கிறது. நாதுராம் கோட்சேவை ஒருபுறம் போற்றி வரும் அமைப்பு, மறுபுறம் அவரால் கொல்லப்பட்ட மகாத்மா காந்திக்கு பிறந்த நாள் கொண்டாட முற்படுகிறது," என்று தெரிவித்தார். இதையடுத்து ஆர்எஸ்எஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ஊர்வலம் நடத்துவதற்காக வேறு நான்கு தேதிகளை முன்மொழிந்தனர்.

10. அனைவரது கருத்துக்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி இளந்திரையன் பிறப்பித்த உத்தரவில், நவம்பர் 6ஆம் தேதியன்று ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்த காவல்துறை அனுமதி கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். ஒருவேளை அந்த தேதியில் காவல்துறை அனுமதி கொடுக்காவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு மனு மீதான விசாரணை முன்னெடுக்கப்படும்," என்று நீதிபதி தெரிவித்தார். இதையடுத்து இந்த வழக்கின் அடுத்த விசாரணை அக்டோபர் 31ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/india-63090422

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.