Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சுவிஸ் தூதரக அதிகாரி கானியாவுக்கு எதிரான வழக்கு : தற்போதைய நிலை என்ன ?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுவிஸ் தூதரக அதிகாரி கானியாவுக்கு எதிரான வழக்கு : தற்போதைய நிலை என்ன ?

By VISHNU

12 OCT, 2022 | 08:32 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

கடத்தி தடுத்து வைக்கப்பட்டு பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில்,  பின்னர் பொய்யான தகவல்களை வழங்கி தேசத்தை அசெளகரியப்படுத்திய குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் வீசா பிரிவின் சிரேஷ்ட குடிவரவு குடியகல்வு அதிகாரி கானியா பெனிஸ்டர் பிரான்சிஸுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை முன்னெடுத்து செல்ல முடியாது என அடிப்படை ஆட்சேபனம் முன் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு புதன்கிழமை (12) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலல்லே முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது,  பிரதிவாதி கானியா பெனிஸ்டர் சார்பில் மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ரதிஸ்ஸ இந்த ஆட்சேபனத்தை முன் வைத்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது  மன்றில் பிரதிவாதியாக பெயரிடப்பட்டிருந்த சுவிஸர்லாந்து தூதரகத்தின் வீசா பிரிவின் சிரேஷ்ட குடிவரவு குடியகல்வு அதிகாரி கானியா பெனிஸ்டர் பிரான்சிஸ் ஆஜராகியிருந்தர்.

இதன்போது அவர் சார்பில் மன்றில் வாதங்களை முன் வைத்த ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ரதிஸ்ஸ,  பிரதிவாதிக்கு எதிராக தண்டனை சட்டக் கோவையின் 189, 190 ஆம் அத்தியாயங்களின் கீழ் குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டுள்ள நிலையில்,  அந்த அத்தியாயங்களை நோக்கும் போது, குறித்த குற்றப் பத்திரிகையை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என வாதிட்டார்.

இதன்போது வழக்குத் தொடுநர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் ஜனக பண்டார மன்றில் ஆஜரான நிலையில்,  பிரதிவாதிக்கு எதிராக குற்றப் பத்திரிகையை முன் கொண்டு செல்ல எந்த தடையும் இல்லை என அவர் வாதிட்டார்.

விடயங்களை ஆராய்ந்த நீதிபதி நாமல் பலல்லே,  அடிப்படை ஆட்சேபனம் தொடர்பிலான எழுத்து மூல சமர்ப்பணங்களை எதிர்வரும்  நவம்பர் 8 ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு  இரு தரப்பினருக்கும் உத்தரவிட்டு, வழக்கை அன்றைய தினத்துக்கு ஒத்தி வைத்தார்.

முன்னதாக சுவிஸ்லாந்து தூதரங்கத்தில் பணிபுரியும்  சிரேஷ்ட  குடிவரவு அதிகாரியான பெண்ஊழியரை , கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் திகதி கறுவாத்தோட்டம்  பொலிஸ் பிரிவில் பாடசாலை ஒன்றுக்கு  அருகில் ஐவரால் கடத்தப்பட்டு தடுத்துவைக்கப்பட்டு நிலையில் பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வாவுக்கு  வீசா பெற்றுக் கொடுத்தமை தொடர்பில் நீண்ட நேரம் விசாரணைகளை மேற்கொண்டு பாலியல் சித்திரவதை செய்ததாக  சி.ஐ.டி. க்கு முறைப்பாடளிக்கப்பட்டிருந்தது.  

இந் நிலையில் பின்னர் மேற்கொண்ட விசாரணைகளில் பம்பலபிட்டி, பெல் மயூரா தொடர்மாடி குடியிருப்பில் தனது மகளின் வகுப்பாசிரியாக கடமையாற்றியிருந்த ஆசிரியை ஒருவரின் வீட்டில் தான் அச்சம்பவத்துக்கு முகம் கொடுத்ததாக சுவிஸ் தூதரக அதிகாரி சி.ஐ.டி.யிடம் கூறியிருந்தார். 

எனினும் இவை எதற்கும் சான்றுகள் இல்லை என சி.ஐ.டி. தரப்பில்   கொழும்பு பிரதன நீதிவான் நீதி மன்றுக்கு அறிவிக்கப்பட்டே குறித்த அதிகாரியான கானியா பெனிஸ்டர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந் நிலையிலேயே தற்போது அவருக்கு எதிராக மேல் நீதிமன்றில்  வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/137534

  • 9 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போலி வாக்குமூலம் வழங்கிய சுவிஸ் தூதரக அதிகாரி கானியா பன்னிஸ்டர் பிரான்சிஸுக்கு நீதிமன்றம் விதித்த தண்டனை!

Published By: DIGITAL DESK 3

14 JUL, 2023 | 12:29 PM
image
 

குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் போலி வாக்குமூலத்தை வழங்கிய குற்றச்சாட்டில்,  குற்றத்தை ஒப்புக்கொண்ட கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரக அதிகாரி கானியா  பெனிஸ்டர் பிரான்சிஸ் என்பவருக்கு இன்று வெள்ளிக்கிழமை (14) நீதிமன்றத்தினால்  தண்டனை விதிக்கப்பட்டது.

இதன்படி, 5,000 ரூபா அபராதமும் 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட கடூழியச் சிறைத்தண்டனையும் விதித்து  கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி  நாமல் பண்டார பலாலே உத்தரவிட்டார்.

https://www.virakesari.lk/article/159991

  • கருத்துக்கள உறவுகள்

இவர் ஒரு தமிழ்ப் பெண் என வாசித்த நினைவு.
இவர் சுவிஸ் தூதரகத்தில் கடமையாற்றிய போது,
அங்கு  சென்ற சில  சிங்களவர் இவரில் பொறாமை அடைந்து...
இவரின் மீது கடத்தல் முயற்சிகளை மேற்கொண்டு,
வெருட்டி... வாக்கு மூலங்களை பெற்றுள்ளார்கள் என நினைக்கின்றேன்.
இவரின்... குடும்பத்தவர்கள் கூட மிரட்டப் பட்டதாக சொன்னார்கள்.

தமிழ்ப்  பெண் என்ற படியால்... காவல் துறையும், நீதிமன்றமும் 
எப்படி நடந்து கொள்ளும் என்பதை அனைவரும் அறிவார்கள்.
இவருக்காக... குரல் கொடுக்க, தமிழ் அரசியல்வாதிகள் கூட முன் வருகின்றார்கள் இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.