Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஜினிக்கு ஸ்டெர்லைட் விவகாரத்தில் அருணா ஜெகதீசன் ஆணையம் அறிவுரை - முழு விவரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரஜினிக்கு ஸ்டெர்லைட் விவகாரத்தில் அருணா ஜெகதீசன் ஆணையம் அறிவுரை - முழு விவரம்

17 நிமிடங்களுக்கு முன்னர்
 

ரஜினிகாந்த்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

ரஜினிகாந்த்

பிரபலங்கள் பொதுவெளியில் கருத்து சொல்லும்போது பொறுப்புடன் இருக்க வேண்டும் என்று அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை சொல்வதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால், ஆணையம் சொன்னது அது மட்டும்தானா? ஸ்டெர்லைட் விவகாரத்தில் நடிகர் ரஜினி பேசியவையும் அவரது கருத்து குறித்து ஆணைய அறிக்கை சொன்னதும் என்ன?

2018 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி. தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் தாமிர உருக்காலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் 100ஆவது நாள். அன்று மாவட்ட ஆட்சியரகம் முன்பு நடந்த கலவரத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு 13 பேர் உயிரிழந்தனர்.

இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்கவும் இதுபோன்று நடைபெறாமல் இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விசாரித்து அறிக்கை அளிக்க நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையத்தின் அறிக்கை 2022ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

 

இந்த சம்பவத்தில் தொடர்புடையோர், பாதிக்கப்பட்டோர், தொடர்புடையதாக கருதப்படுவோர், குற்றம்சாட்டப்படுவோர் என பலரிடமும் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் இந்த அறிக்கை உருவாக்கப்பட்டிருந்தது. இதில் பிரபல சினிமா நடிகரான ரஜினிகாந்தின் கருத்து குறித்து சொல்லப்பட்டிருந்தது என்ன?

 

ஸ்டெர்லைட் போராட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

ஸ்டெர்லைட் போராட்டம்

என்ன பேசினார் ரஜினி?

ஸ்டெர்லைட் விவகாரத்தின்போது சென்னையில் தன் இல்லத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அரசு எந்திரம் தோற்றுவிட்டது என்றும் காவல்துறை வரம்புமீறி தாக்குதல் நடத்தியுள்ளது என்றும் பேசினார்.

 

ரஜினிகாந்த்

 

ரஜினிகாந்த்

பின்னர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது, "போராட்டத்தில் சமூக விரோத சக்திகள் நுழைந்து காவலர்களைத் தாக்கி மாவட்ட ஆட்சியரகத்தை சேதப்படுத்தியதோடு ஸ்டெர்லைட் ஊழியர்களின் குடியிருப்புக்கும் தீவைத்துள்ளனர்" என்று பேசினார்.

இந்த கருத்துகளை ஆணையம் கவனத்தில் எடுத்துக் கொண்டது. இது தொடர்பாக அவரிடம் விளக்கமும் கேட்டது நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம்.

 

ஸ்டெர்லைட் கலவரம்

 

படக்குறிப்பு,

ஸ்டெர்லைட் கலவரம்

நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு கேட்ட ரஜினிகாந்த், எழுத்துப்பூர்வமாக ஆணையத்துக்கு பதிலளித்தார். "அதில், தூத்துக்குடியில் அன்றைய தினம் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பு, திட்டமிட்ட சந்திப்பு அல்ல. அது எதிர்பாராத, தற்செயலாக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பு. எனவே, அந்தப் பத்திரிகையாளர் சந்திப்பில் நான் திட்டமிட்டு எதுவும் சொல்லவில்லை. தூத்துக்குடியில் ஊர்வலம் தொடர்பாக எந்த ஆவணங்களோ, ஆதாரங்களோ, பத்திரிகை மற்றும் ஊடக பதிவுகளோ தன்னிடம் இல்லை," என்று ரஜினி கூறியதாக அறிக்கை தெரிவிக்கிறது.

மேலும், இப்படி ஒரு கருத்தை சொல்வதற்கு முன்பு ஏதேனும் சிசிடிவி காட்சிகளை பார்த்தீர்களா என்று குறிப்பிட்டு அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, அப்படி ஒரு கருத்துக்கான அடிப்படையை உருவாக்கக் கூட ஆதாரங்கள் ஏதும் இல்லை என்று அவர் பதிலளித்தாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே சமயத்தில் தூத்துக்குடி சென்ற ரஜினிகாந்த், "எதற்கெடுத்தாலும் போராடினால், தமிழ்நாடு சுடுகாடு ஆகிவிடும்" எனவும் கூறியிருந்தார். இந்தக் கருத்தும் அச்சமயத்தில் பெரும் சர்ச்சைக்குள்ளானது. இதன் விளைவாக சமூக வலைதளங்களில் நடிகர் ரஜினி வெகுவாக விமர்சிக்கப்பட்டார்.

இந்த விளக்கங்கள் தொடர்பாக ஆணைய அறிக்கையில் குறிப்பிடும்போது, "உறுதி செய்யப்படாத செய்திகளை பிடிவாதமாக நம்பும் தனிநபர்கள் பொதுவெளியை தவிர்க்க வேண்டும்," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

YouTube பதிவை கடந்து செல்ல, 1

தகவல் இல்லை

மேலதிக விவரங்களைக் காண YouTubeவெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது.

YouTube பதிவின் முடிவு, 1

அறிக்கை என்ன சொல்கிறது?

அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, " பிரபல நடிகர் ரஜினிகாந்த் அந்த சமயத்தில் உடனடியாக எதிர்வினை ஆற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கப்படவில்லை. பொதுமக்கள் எளிதில் நம்பிவிடக்கூடிய வாய்ப்புள்ள இதுபோன்ற தருணங்களில், ஒரு தகவலை பேசும் முன்பு அதன் மூலத்தை உறுதி செய்திருக்க வேண்டும்.

 

ரஜினிகாந்த்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

ரஜினிகாந்த்

பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய இதுபோன்ற வார்த்தைகளை பேசும் முன் தனக்கு வந்த தகவலை மிகவும் கவனமாக உறுதி செய்திருக்க வேண்டும். இதுபோன்ற உறுதி செய்யப்படாத தகவல்களை பிரபலங்கள் பேசுவதன் மூலம் அவர்களால் தீர்க்க முடிவதை விடக் கூடுதலான பிரச்னைகள் உருவாகி விடும்.

பிரபலங்கள் கட்டுப்பாட்டுடனும் பொறுப்புணர்வுடனும் நடந்துகொள்ள வேண்டும். இப்படி 'உறுதி செய்யப்படாத தகவல்களை பிடிவாதமாக நம்பும்' தனிநபர்களுக்கு பொதுவெளியில் இடம் கிடையாது. அவர்களே, சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட நட்சத்திரங்களாக இருக்கும்பட்சத்தில் மிக மிக கவனமாக பொதுவெளிக்கு வருவதை தவிர்க்க வேண்டும்." என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. (பாகம்2 - பக்கம் 217-219)

https://www.bbc.com/tamil/india-63315837

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.