Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழில் மீண்டும் சிறப்பு அடையாள அட்டை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் மீண்டும் சிறப்பு அடையாள அட்டை

[வியாழக்கிழமை, 23 ஓகஸ்ட் 2007, 15:42 ஈழம்] [தாயக செய்தியாளர்]

யாழ்ப்பாணத்தில் சிறப்பு அடையாள அட்டைகள் மீண்டும் வழங்கப்பட உள்ளன.

இது குறித்த கலந்துரையாடல், யாழ். மாவட்ட இராணுவ உயர் அதிகாரிகளுக்கும் மற்றும் அரசாங்க அதிபர் பிரதேச செயலாளர்கள் உதவி அரசாங்க அதிபர் ஆகியோர்களுக்கு இடையே பலாலி படைத்தளத்தில நடைபெற்றது.

யாழ்ப்பாணத்தை 1996 ஆம் ஆண்டு சிறிலங்கா இராணுவம் கைப்பற்றியதைத் தொடர்ந்து இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் வலிகாமம் உட்பட ஏனைய பகுதிகளுக்கு திரும்பிய போது சிறப்பு அடயாள அட்டைகள் வழங்கப்பட்டன.

12 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் முதியவர்கள், நோயாளிகள் என்ற வேறுபாடுகள் இன்றி சிறப்பு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. தற்போது மீன்டும் 10 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் புதிய சிறப்பு அடையாள அட்டைகள் வழங்கப்படவுள்ளன.

சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து 2002 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்ட இந்த நடவடிக்கை மீண்டும் தற்போது தொடங்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே யாழில் வாழும் அனைத்து மக்களினதும் குடும்பப் பதிவுகளை மேற்கொள்ளும் நடவடிக்கையில் யாழ். மாவட்ட காவல்துறையினரும் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.

கிராம அலுவலர் பிரிவு ரீதியாக இந்தப் பதிவுகளை பதியும் நடவடிக்கை கிராம அலுவலர்களினால் முன்னெடுக்கப்படவுள்ளது.

இது தொடர்பிலான மாதிரிப் படிவங்கள் பிரதேச செயலகங்கள் ஊடாக குறிப்பிட்ட பகுதிப் காவல்துறையினரால் கிராம அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சில பிரதேசங்களில் காவல்துறையினர் நேரடியாக கிராம அலுவலர்களை அழைத்து இது தொடர்பான விவரங்களை வழங்கி பதிவு செய்யும் படி அறிவுறுத்தியுள்ளனர்.

கடந்த காலத்தில் காவல்துறையினர் இத்தகைய பதிவுகளை சேகரித்த போதிலும் இடையில் இதனை நிறுத்தியிருந்தார்கள்.

யாழில் திடீரென மேற்கொள்ளப்பட்டு வரும் இத்தகைய பதிவுகள் மக்களிடத்தில் பலத்த அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

துணை இராணுவக் குழுவினரால் மக்கள் சித்திரவதை

சிறிலங்கா துணை இராணுவக் குழுவான ஈ.பி.டி.பி. கட்சியின் தலைவரான டக்ளஸ் தேவானந்தாவின் யாழ். பயணத்தினால் பாதுகாப்பு என்ற பெயரில் சிறிலங்கா இராணுவத்தினராலும் ஈ.பி.டி.பி.யினராலும் பொதுமக்கள் கடும் துன்பங்களுக்கு உள்ளாக்கப்பட்டனர்.

நல்லூர் ஆலயத்துக்கு கடந்த திங்கட்கிழமை டக்ளஸ் சென்றதைத் தொடர்ந்து ஆலயச் சுற்றாடலில் உந்துருளிகளில் சென்றோரை சோதனை என்ற பெயரில் பெரும் கெடுபிடிகளை சிறிலங்கா இராணுவத்தினர் நிகழ்த்தியுள்ளனர்.

மேலும் பொதுமக்களிடமும் பக்தர்களிடமும் தேசிய அடையாள அட்டைகள் கேட்டும் அச்சுறுத்தியதாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்

நன்றி - புதினம்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளி 31-08-2007 23:11 மணி தமிழீழம் [சிறீதரன்]

யாழில் விசேட அடையாள அட்டையை வற்புறுத்திக் கொடுப்பது கண்டனத்திற்குரியது - கஜேந்திரன்

குடாநாட்டு மக்கள் விசேட அடையாள அட்டை பெறவேண்டும் என வற்புறுத்தும் ஸ்ரீலங்கா படையினரின் நடவடிக்கைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் வெளியிட்ட அறிக்கையின் முழுவடிவம் வருமாறு...

யாழ் குடாநாட்டில் வாழும் மக்கள் இராணுவத்தினரிடம் விசேட அடையாள அட்டை பெறவேண்டும் என்ற கட்டளை யாழ் குடாநாட்டிலுள்ள ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் பொதுமக்கள் மீது பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் அதனை பெறவைப்பதற்காக பெரும் கெடுபிடிகள் பொதுமக்கள் மீது படையினரால் மேற்கொள்ளப்படுகின்றது. படையினருடய இந்த கட்டாய அறிவிப்பினால் குடாநாட்டு மக்கள் பெரும் பயப் பீதிக்குள்ளும் நெருக்கடிக்குள்ளும் தள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த மாதங்களில் குடாநாட்டிலுள்ள அனைவரும் கட்டாயமாக குடும்ப அட்டை பெறவேண்டும் என வற்புறுத்தி வந்த ஸ்ரீலங்கா இராணுவத்தினர் தற்போது அடையாள அட்டை கட்டாயமாக பெறவேண்டும் என மிரட்டத் தொடங்கியுள்ளனர்.

இலங்கை அரசியலமைப்பிற்கு முரணாக குறித்த ஓர் பிரதேசத்தில் வாழும் மக்கள் மாத்திரம் இவ்வாறு விசேடமாக அடையாள அட்டை பெறவேண்டும் என வற்புறுத்துவது அடிப்படை மனிதாபிமானச் சட்டங்களை குழிதோண்டிப் புதைக்கும் செயற்பாடாகும். அங்கு வாழும் தமிழ் மக்களை அடிமைப்படுத்தி இழிவுபடுத்தும் ஓர் முயற்சியகவே இதனை நாம் கருதுகின்றோம். குடாநாட்டிலுள்ள மக்களின் விருப்பத்திற்கு மாறாக அப்பிரதேசத்தினை ஆக்கிரமித்து நிற்கும் சுமார் அறுபதினாயிரம் ஸ்ரீலங்கா இராணுவத்தினரின் பாதுகாப்பினை மட்டும் நோக்கமாகக் கொண்டவகையில் மேற்கொள்ளப்படும் இந்நடவடிக்கையினால் அங்குள்ள ஐநூறாயிரத்திற்கும் அதிகமான பொது மக்களின் அடிப்படை ஐனநாயக உரிமை முற்றாக மீறப்படுகின்றது.

இவ்வாறான ஓர் நடவடிக்கையை மேற்கொள்வதற்கான அதிகாரத்தினை பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்டுள்ள அவசரகாலச் சட்டமே படையினருக்கு வழங்கியுள்ளது. பாரளுமன்றத்தில் அவசரகாலச் சட்டம் நிறைவேற்றப்படும் போது வடக்கு கிழக்கு மக்களை பிரதிநிதித்துவப் படுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்கள் ஒரு பொழுதும் அரசினால் கருத்திலெடுக்கப்படா நிலையிலேயே நிறைவேற்றப்படுகின்றன.

இவ்வாறான சட்டத்தின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் அடையாள அட்டை விவகாரம் ஓர் அடிப்படை மனித உரிமை மீறலாக இருப்பினும் கூட இதற்கெதிராக நீதிகோரி சட்ட நடவடிக்கை எடுக்க முடியாத துரதிஸ்ரவசமான நிலையில் குடாநாட்டு மக்கள் வாழ வேண்டியுள்ளனர். சட்டநடவடிக்கை எடுக்க முற்படுவோர் ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் கொலை செய்யப்பட்டுவிடுவர் என்பதே காரணமாகும்.

இது விடயத்தில் பொது மக்களுக்கு எதிராக ஏற்படும் பாதிப்புக்களையும் பாரபட்ச நடவடிக்கைகளையும் கருத்திற் கொண்டு சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும், இலங்கை அரசுக்கு முண்டு கொடுத்து நிதி மற்றும் இராணுவ உதவிகளையும் வழங்கிவரும் சர்வதேச நாடுகளும் இராணுவத்தினரின் மேற்படி நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தி அனைத்து மக்களும் சமமாக மதித்து நடாத்தப்படுவதனை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோருகின்றோம்.

நன்றி - பதிவு

  • கருத்துக்கள உறவுகள்

அரசின் கபட நோக்கம்(நிச்சயமாக) விளங்கவில்லை.ஒரு வேளை மறைந்து இருக்கும் வி.புலிகளை வேறு படுத்தலாம்(மக்களிடமிருந்து) என்பது அரசின் நப்பாசையா? அல்லது வடக்கு தவிர்ந்த ஏனைய இடங்களுக்கு வட பகுதி மக்கள் செல்லும் போது அவர்களை இலகுவாக அடையாளம் காண்பதற்கா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.