Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஒருவருட காலத்திற்குள் புதிய அரசியலமைப்பு : ஜனாதிபதி வாக்குறுதியளித்துள்ளார் என்கிறார் வீரசிங்க வீரசுமன

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவருட காலத்திற்குள் புதிய அரசியலமைப்பு : ஜனாதிபதி வாக்குறுதியளித்துள்ளார் என்கிறார் வீரசிங்க வீரசுமன

By DIGITAL DESK 5

22 OCT, 2022 | 01:28 PM
image

(இராஜதுரை ஹஷான்)

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையிலான குழுவினர் சமர்ப்பித்துள்ள அறிக்கை குறித்து விசேட கவனம் செலுத்தி, ஒருவருட காலத்திற்குள் புதிய அரசியலமைப்பை உருவாக்க ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாக்குறுதி வழங்கியுள்ளார் என இலங்கை கம்யூனிச கட்சியின் பதில் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான வீரசிங்க வீரசுமன தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் நிறைவேற்றம்,பொதுஜன பெரமுனவின் பலவீனத்தை உறுதிப்படுத்தியுள்ளது.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ,பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் உட்பட பெரும்பலான உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

வாக்கெடுப்பில் கலந்து கொள்வதை தவிர்த்து கொள்வதற்காக பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்கள்.

ஏழு அறிவுடையவர் என புகழ்பாடப்பட்டவர் உத்தியோகப்பூர்வமாக அரசியலில் செல்வாக்கு செலுத்த தடை விதிக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது.

இரட்டை குடியுரிமை உடைய நபர் இலங்கை பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்க தகுதியற்றவர் என அரசியலமைப்பின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டமை நாட்டு மக்களின எதிர்பார்ப்பு நிறைவேறியுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் நாட்டு மக்களின் அபிலாசைகளுக்கு அமைய செயற்படாமல் கட்சி தலைவர்களின் நலனுக்காக செயற்படுகிறார்கள்.

பொருளாதாரத்தை நெருக்கடிக்குள்ளாக்கி நாட்டு மக்களை வீதிக்கிறக்கிய பொதுஜன பெரமுனவின் தலைவர்களை பாதுகாக்கும் மக்கள் பிரநிதிகளுக்கு,நாட்டு மக்கள் ஜனநாயக ரீதியில் பாடம் புகட்ட வேண்டும்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்து அவதானம் செலுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் வலியுறுத்தியுள்ளோம்.

நாட்டு மக்களின் கோரிக்கைக்கு அமைய புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும்.ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையிலான குழுவினர் சமர்ப்பித்துள்ள புதிய அரசியலமைப்பு தொடர்பான வரைபு குறித்து அவதானம் செலுத்தி,ஒருவருட காலத்துக்குள் புதிய அரசியலமைப்பை உருவாக்க ஆரம்பக் கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

 புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்.தேர்தல் முறைமை,இனப்பிரச்சினைக்கு தீர்வு உள்ளிட்ட காரணிகள் குறித்து புதிய அரசியலமைப்பில் விசேட அவதானம் செலுத்த வேண்டும்.காலம் காலமாக புரையோடி போயுள்ள பிரச்சினைகளுக்கு புதிய அரசியலமைப்பு ஊடாகவே தீர்வு காண முடியும் என்றார்.

https://www.virakesari.lk/article/138199

  • கருத்துக்கள உறவுகள்

தனது ஆட்சிக்காலத்தை கடத்துவதற்கு, நீடிப்பதற்கு இந்த கால அவகாசத்தை பயன்படுத்தி தன்னை பலப்படுத்திக்கொள்வார். அடுத்துவருபவர் அரசியமைப்பை மாற்றி தனக்கு சாதகமாக்குவார். நாட்டு மக்களுக்கோ அவர்களின் பிரச்னைகளுக்கோ எதுவும் ஆகப்போவதில்லை, தீரப்போவதுமில்லை. வீதிகளிலும், சிறைச்சாலைகளிலுமே மக்கள் போராடவேண்டிய நிலையில். பாத்திரங்கள் மாறுமேயொழிய காட்சிகள் மாறப்போவதில்லை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.