Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆஜரானார் கப்ரால் : பிணையில் விடுவித்த நீதிமன்றம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆஜரானார் கப்ரால் : பிணையில் விடுவித்த நீதிமன்றம்

By DIGITAL DESK 5

26 OCT, 2022 | 05:04 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

மத்திய வங்கி முன்னாள் ஆளுநர்  அஜித் நிவாட் கப்ரால் நாட்டை விட்டு வெளியேற விதிக்கப்பட்ட தடை  உத்தரவு  எதிர்வரும்  நவம்பர் மாதம் 24 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. 

இதற்கான உத்தரவை  புதன்கிழமை ( 26) கொழும்பு நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்தது.

தென் மாகாண முன்னாள்  ஆளுநர் கீர்த்தி தென்னகோன் , குற்றவியல் நடைமுறை சட்டக் கோவையின் 136 (1) ( அ) அத்தியாயத்தின் கீழ் தாக்கல் செய்த தனிப்பட்ட  மனுவை  மீள் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட ,  கொழும்பு மேலதிக நீதிவான் ஹர்ஷன கெக்குணவெல, இந்த உத்தரவை பிறப்பித்தார்.

 நேற்றைய தினம் இது குறித்த மனு விசாரணைக்கு வந்த போது, அஜித் நிவாட் கப்ரால்  நீதிமன்ற உத்தரவுக்கு அமைய மன்றில் ஆஜரா நிலையில், அவருக்காக ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ் பிரசன்னமானார்.

தென் மாகாண முன்னாள்  ஆளுநர் கீர்த்தி தென்னகோன் தாக்கல் செய்துள்ள தனிப்பட்ட மனுவில்,  கடந்த 2006 அம் ஆண்டு ஜூலை மாதம் முதலாம் திகதி முதல்  2015 ஜனவரி 8 ஆம் திகதிவரையிலான காலப்பகுதியில்  மனுவில் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள அஜித் நிவாட் கப்ரால் மத்திய வங்கி ஆளுநராக கடமையாற்றி,  நிதிச் சபை அல்லது அமைச்சரவையின்  எந்த அனுமதியும் இன்றி  ஐக்கிய அமரிக்காவின் இமாட் ஷா சுபேரி என்பவருக்கு  இலங்கை அரசுக்கு சொந்தமான நிதியிலிருந்து 6.5  மில்லியன் டொலர்களை வழங்கியதன் ஊடாக தண்டனைச் சட்டக் கோவையின் கீழ்  குற்றம் புரிந்துள்ளதாக  சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதே போல, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக கடமையாற்றிக்கொண்டிருக்கும் போது,  கடந்த 2022  ஜனவரி 18 ஆம் திகதி முதிர்ச்சிக் காலத்தைக் கொண்ட திறைசேறி முறிகள்  ஊடாக இலங்கை அரசுக்கு சுமார் 500 மில்லியன் டொலர்கள் வரையில் நட்டம் ஏற்படுத்தியமை தொடர்பில் இந்த  மனுவில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதனைவிட, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக கடமையாற்றிக்கொண்டிருந்த போது, தனக்கு மிக நெருக்கமான உறவினர்களை அவ்வங்கியின் பதவிகளுக்கு நியமித்துக்கொண்டமை ஊடாக  இரகசிய தகவல்களை வெளியாருக்கு வழங்கி, திறைசேறி உண்டியல்கள் மற்றும் முறிகள் வழங்களின் போது இலங்கை அரசுக்கு 10.04 பில்லியன் டொலர் நட்டம் ஏற்படுத்தியதாகவும் மற்றொரு குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில், அஜித் நிவாட் கப்ராலுக்காக மன்றில் ஆஜரான  ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ், குறித்த தனிப்பட்ட மனுவை முன் கொண்டு செல்ல முடியாது என   அடிப்படை ஆட்சேபனத்தை மன்றில் முன் வைத்தார்.

அதனை ஆராய்ந்த நீதிமன்றம், மனு தொடர்பிலான ஆட்சேபனைகளை எதிர்வரும் தவணையின் போது மன்றில் முன் வைக்க உத்தரவிட்டது.

 இந் நிலையிலேயே வழக்கை எதிர்வரும்  நவம்பர் 24 ஆம் திகதி  வரை ஒத்தி வைத்த நீதிவான், அதுவரை அஜித் நிவாட் கப்ராலின் வெளிநாட்டு பயணங்களை தடை செய்ததுடன்,  மன்றில் ஆஜரான அஜித் நிவாட் கப்ல்ராலை 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் செல்ல அனுமதித்தது.

 மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன மன்றில் ஆஜரானமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/138473

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.