Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கடந்தகால 4 வரைபுகளை பயன்படுத்தினால் ஒரு மாதத்தில் அரசியலமைப்பு - டிலான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடந்தகால 4 வரைபுகளை பயன்படுத்தினால் ஒரு மாதத்தில் அரசியலமைப்பு - டிலான்

By T. SARANYA

04 NOV, 2022 | 11:48 AM
image

(ரொபட் அன்டனி)

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் அரசியல் தீர்வுடன் புதிய அரசியலமைப்பை உருவாக்குமாயின் அதற்கு முழுமையான ஆதரவை நாங்கள் வழங்குவோம்.

ஏற்கனவே 1995, 1997, 2000, 2018 ஆண்டுகளில் புதிய அரசியலமைப்பு குறித்தவரைபுகள் உருவாக்கப்பட்டுள்ளதால் அவற்றை பயன்படுத்தி ஒரு மாதகால காலத்தில் புதிய அரசியலமைப்பை கொண்டுவர முடியும் என்று டலஸ் அணியின் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்பானது மூன்று விடயங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கவேண்டும். 13 பிளஸ் அடிப்படையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு, தேர்தல் முறை மாற்றம், மற்றும் ஜனாதிபதி முறைமை நீக்கம் ஆகிய மூன்று விடயங்களும் புதிய அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட வேண்டும் என்றும் டிலான் பெரேரா குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க புதிய அரசியலமைப்பை உருவாக்கப் போவதாகவும் அதில் அரசியல் தீர்வை உள்ளடக்கப் போவதாகவும் அண்மையில் தெரிவித்திருந்த நிலையில் அது தொடர்பில் தமது தரப்பு நிலைப்பாட்டை தெரிவிக்கையிலேயே டிலான் பெரேரா இந்த விடயத்தை கூறினார்.

புதிய அரசியலமைப்பை கொண்டுவரப்போவதாக ஜனாதிபதி அறிவித்ததும் அதற்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு அறிவித்திருந்தது. ஜனாதிபதியின் இந்த முயற்சிக்கு முழு ஆதரவு வழங்கப்படும் என்று கூட்டமைப்பின் பேச்சாளர் அறிவித்திருந்தார்.

இதேவேளை தற்போதைய ஜனாதிபதி கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் பிரதமராக இருந்த போது புதிய அரசியலமைப்பு உருவாக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. பாராளுமன்றம் அரசியலமைப்பு நிர்ணயசபையாக மாற்றப்பட்டு அதனூடாக பிரதான வழிநடத்தல் குழு நியமிக்கப்பட்டு ஒரு வரைபும் உருவாக்கப்பட்டது. அந்த வரைபை தற்போது அடிப்படையாகக் கொண்டு புதிய அரசியலமைப்பை உருவாக்க முடியும் என்ற கருத்தும் வலுவாக முன்வைக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக டிலான் பெரேரா எம்.பி. தொடர்ந்து கேசரிக்கு கருத்து வெளியிடுகையில்,

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்த சட்டமே இந்த அரசியலமைப்பின் இறுதி திருத்தமாக இருக்கவேண்டுமென நாங்கள் வலியுறுத்துகிறோம்.

எனவே உடனியாக புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும். புதிய அரசியலமைப்பின் ஊடாக தமிழ் பேசும் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுகாணப்படவேண்டும். புதிய அரசியலமைப்பை உருவாக்குவதாக ஜனாதிபதி கூறியதை வரவேற்கின்றோம்.

ஆனால் அது நேர்மைத் தன்மையுடையதாக காணப்படுவது அவசியமாகும். அவ்வாறான ஒரு முயற்சிக்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்குவோம். அந்த செயற்பாடுகளில் எம்மை இணைத்துக்கொள்ளாவிடினும் நாமாக முன்வந்து ஒத்துழைப்பு வழங்குவோம்.

புதிய அரசியலமைப்பை உருவாக்கும் போது நிச்சயமாக தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைக்கு தீர்வாக 13 பிளஸை நோக்கி பயணிக்க வேண்டும். அதேபோன்று தேர்தல் முறை மாற்றம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை மாற்றம் என்பன தொடர்பாகவும் கவனம் செலுத்த  வேண்டும்.

புதிய அரசியலமைப்பு முறையை உருவாக்கவது கடினமான விடயமான விடயமல்ல. ஏற்கனவே 1995, 1997, 2000, 2018 ஆண்டுகளில் புதிய அரசியலமைப்பு குறித்தவரைபுகள் உருவாக்கப்பட்டுள்ளதால் அவற்றை பயன்படுத்தி ஒரு மாதகால காலத்தில் புதிய அரசியலமைப்பை கொண்டுவர முடியும் என்றார். இலங்கையில் தற்போது இரண்டாவது குடியரசு யாப்பு அமுலில் இருக்கிறது. 

1947 ஆம் ஆண்டு சோல்பரி யாப்பு கொண்டுவரப்பட்டு டொமினியன் அஸ்தஸ்துடன் நாடு ஆட்சிசெய்யப்பட்டது. அதன் பின்னர் 1972ஆம் ஆண்டு முதலாம் குடியரசு யாப்பு கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து 1978 ஆம் ஆண்டு ஜனாதிபதி முறைமையை திசைமுகப்படுத்தியதாக இரண்டாவது குடியரசு யாப்பு உருவாக்கப்பட்டது. அதுவே தற்போது அமுலில் இருக்கிறது. அந்த இரண்டாவது குடியரசு யாப்பில் 21 திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. எனவேதான் புதிய அரசியலமைப்பை உருவாக்கவேண்டும் என்ற விடயம் தொடர்ச்சியாகவலியுறுத்தப்பட்டு வருகின்றது.

https://www.virakesari.lk/article/139097

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.