Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நவம்பர் 6ம் தேதி 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு நீதிமன்றம் அனுமதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நவம்பர் 6ம் தேதி 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு நீதிமன்றம் அனுமதி

27 நிமிடங்களுக்கு முன்னர்
 

ஆர்.எஸ்.எஸ். பேரணி

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

ஆர்.எஸ்.எஸ். பேரணி - கோப்புப்படம்

நவம்பர் ஆறாம் தேதியன்று தமிழ்நாடு முழுவதும் 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போது அனுமதி வழங்கப்படாத ஆறு இடங்களில் இயல்பு நிலை திரும்பிய பிறகு ஆர்.எஸ்.எஸ். அனுமதி கோரி மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

அக்டோபர் 2ம் தேதியன்று தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அணிவகுப்பு ஒன்றை நடத்தத் திட்டமிட்டிருந்தது. ஆனால், அதற்கு தமிழ்நாடு காவல்துறை அனுமதி மறுத்தது. இதனை எதிர்த்து அந்த அமைப்பைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நவம்பர் ஆறாம் தேதியன்று ஊர்வலம் நடத்த அனுமதி அளிக்குமாறு காவல்துறைக்கு செப்டம்பர் 30ஆம் தேதி உத்தரவிட்டது. கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மூன்று இடங்களில் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் மற்ற இடங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி வழங்க மறுப்பதாகக் கூறி அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் காவல்துறைக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஆர்.எஸ்.எஸ். தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரபாகரன், "ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பிற்கு மூன்று இடங்களில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது மற்ற 47 இடங்களில் காவல்துறை அனுமதி வழங்க மறுக்கிறது. நீதிமன்றம் அனுமதியளித்த பிறகும் அந்த உத்தரவை செயல்படுத்தாமல் உளவுத்துறையின் அறிக்கையை காட்டி தமிழக அரசு அனுமதி மறுக்கிறது" என்று வாதிட்டார்.

 
 

ஆர்.எஸ்.எஸ்.

பட மூலாதாரம்,GETTY IMAGES

அப்போது தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, "ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டதற்குப் பின்னால், சூழல் மாறியிருக்கிறது. அதனை கருத்தில் கொண்டே மூன்று இடங்களில் மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் 23 இடங்களில் அணிவகுப்பு நடத்தாமல், உள்ளரங்கு கூட்டமாக நடத்திக்கொள்வதாக இருந்தால் அவற்றிற்கு அனுமதி வழங்க காவல் துறை தயாராக உள்ளது. ஆனால், மீதமுள்ள 24 இடங்களில் கூட்டத்திற்கோ, பேரணிக்கோ அனுமதி வழங்க முடியாது. பல இடங்களில் கனமழை பெய்யுமென எச்சரிக்கப்பட்டுள்ளதால், வருவாய்த் துறை, காவல்துறையினர் பாதுகாப்பு மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட வேண்டியுள்ளது. ஆர்.எஸ்.எஸ். மாநிலத்தின் பாதுகாப்பு விவகாரத்தை அரசியலாக்கக்கூடாது" என்று வாதிட்டது.

 

சிவப்புக் கோடு

இதற்குப் பிறகு உளவுத் துறையின் அறிக்கையும் உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டது. இந்த அறிக்கையை முழுமையாக ஆராய்ந்த பிறகு மீதமுள்ள இடங்களில் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து உத்தரவு பிறப்பிக்கப்படும் என கூறிய நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்திருந்தது.

இந்த வழக்கு இன்று நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. "காவல் துறை தாக்கல் செய்த உளவுத்துறை அறிக்கைகள் முழுமையாக ஆராயப்பட்டன. பத்தாண்டுகளுக்கு முன்பாக நடந்த குற்றச் சம்பவங்களையும், வழக்குகளையும்தான் காவல் துறை சுட்டிக்காட்டியுள்ளது. எனவே கோயம்புத்தூர், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், பல்லடம், அருமனை, நாகர்கோவில் ஆகிய இடங்களைத் தவிர மற்ற இடங்களில் அனுமதி வழங்கலாம்" என்று நீதிபதி உத்தரவிட்டார்.

ஆகவே, ஏற்கனவே காவல்துறை அனுமதி வழங்கியிருந்த மூன்று இடங்களுடன் சேர்த்து மொத்தமாக 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். தங்களது அணிவகுப்பை நடத்தலாம். உள்ளரங்கு கூட்டமாக பரிந்துரைக்கப்பட்ட இடங்களில் அரங்குகளில் இல்லாமல் விளையாட்டு திடல்களை தேர்வு செய்யலாம் என்று உத்தரவிட்டார்.

ஆனால், "இந்த அணிவகுப்பில் எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதனை மீறி நடந்தால் அதற்கு ஆர்.எஸ்.எஸ்தான் பொறுப்பேற்க வேண்டும்" என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

தற்போது அனுமதி வழங்கப்படாத ஆறு இடங்களில் இயல்பு நிலை திரும்பும்வரை ஆர்.எஸ்.எஸ். காத்திருக்க வேண்டும் எனவும் இரண்டு மாதங்களுக்கு பிறகு இந்த இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடத்த புதிதாக மனு அளிக்கலாம் என்று நீதிபதி தனது உத்தரவில் கூறியிருக்கிறார்.

https://www.bbc.com/tamil/india-63513383

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நாளை நடத்தப்படாது" - என்ன நடந்தது?

4 நவம்பர் 2022
புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர்
 

ஆர்.எஸ்.எஸ். பேரணி

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

ஆர்.எஸ்.எஸ். பேரணி - கோப்புப்படம்

தமிழ்நாட்டில் நவம்பர் ஆறாம் தேதியன்று தமிழ்நாடு முழுவதும் 44 இடங்களில் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக கங்கம் (ஆர்.எஸ்.எஸ்) அணிவகுப்புக்கு நிபந்தனையுடன் அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக அந்த இயக்கம் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரத்தில் காவல்துறையால் அனுமதி வழங்கப்படாத ஆறு இடங்களில் இயல்பு நிலை திரும்பிய பிறகு ஆர்.எஸ்.எஸ். அனுமதி கோரி மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பில் இடம்பெற்ற நிபந்தனையில் கூறியிருந்தது.

இந்த நிலையில், உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பாக ஆர்எஸ்எஸ் தென் மண்டல தலைவர் இரா. வன்னியராஜன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலத்தை உள் அரங்கிலோ நான்கு சுவர்களுக்கோ நடத்துமாறு கூறியிருப்பது எங்களுக்கு ஏற்புடையதல்ல. காஷ்மீர், கேரளம், வங்காளம் போன்ற எல்லா இடங்களிலும் அணிவகுப்பு பொதுவெளியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த தீர்ப்பை நாங்கள் சட்ட ரீதியாக எதிர்த்து மேல்முறையீடு செய்வோம். அதனால் நவம்பர் 6ஆம் தேதி நடக்கவிருந்த ஊர்வலத்தை இத்தகைய காரணங்களால் நடத்த இயலாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்," என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, அக்டோபர் 2ம் தேதியன்று தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அணிவகுப்பு ஒன்றை நடத்தத் திட்டமிட்டிருந்தது. ஆனால், அதற்கு தமிழ்நாடு காவல்துறை அனுமதி மறுத்தது. இதனை எதிர்த்து அந்த அமைப்பைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

 

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நவம்பர் ஆறாம் தேதியன்று ஊர்வலம் நடத்த அனுமதி அளிக்குமாறு காவல்துறைக்கு செப்டம்பர் 30ஆம் தேதி உத்தரவிட்டது. கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மூன்று இடங்களில் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் மற்ற இடங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி வழங்க மறுப்பதாகக் கூறி அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் காவல்துறைக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஆர்.எஸ்.எஸ். தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரபாகரன், "ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பிற்கு மூன்று இடங்களில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது மற்ற 47 இடங்களில் காவல்துறை அனுமதி வழங்க மறுக்கிறது. நீதிமன்றம் அனுமதியளித்த பிறகும் அந்த உத்தரவை செயல்படுத்தாமல் உளவுத்துறையின் அறிக்கையை காட்டி தமிழக அரசு அனுமதி மறுக்கிறது" என்று வாதிட்டார்.

 

ஆர்.எஸ்.எஸ்.

பட மூலாதாரம்,GETTY IMAGES

அப்போது தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, "ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டதற்குப் பின்னால், சூழல் மாறியிருக்கிறது. அதனை கருத்தில் கொண்டே மூன்று இடங்களில் மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் 23 இடங்களில் அணிவகுப்பு நடத்தாமல், உள்ளரங்கு கூட்டமாக நடத்திக்கொள்வதாக இருந்தால் அவற்றிற்கு அனுமதி வழங்க காவல் துறை தயாராக உள்ளது. ஆனால், மீதமுள்ள 24 இடங்களில் கூட்டத்திற்கோ, பேரணிக்கோ அனுமதி வழங்க முடியாது. பல இடங்களில் கனமழை பெய்யுமென எச்சரிக்கப்பட்டுள்ளதால், வருவாய்த் துறை, காவல்துறையினர் பாதுகாப்பு மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட வேண்டியுள்ளது. ஆர்.எஸ்.எஸ். மாநிலத்தின் பாதுகாப்பு விவகாரத்தை அரசியலாக்கக்கூடாது" என்று வாதிட்டது.

 

சிவப்புக் கோடு

 

சிவப்புக் கோடு

இதற்குப் பிறகு உளவுத் துறையின் அறிக்கையும் உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டது. இந்த அறிக்கையை முழுமையாக ஆராய்ந்த பிறகு மீதமுள்ள இடங்களில் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து உத்தரவு பிறப்பிக்கப்படும் என கூறிய நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்திருந்தது.

இந்த வழக்கு இன்று நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. "காவல் துறை தாக்கல் செய்த உளவுத்துறை அறிக்கைகள் முழுமையாக ஆராயப்பட்டன. பத்தாண்டுகளுக்கு முன்பாக நடந்த குற்றச் சம்பவங்களையும், வழக்குகளையும்தான் காவல் துறை சுட்டிக்காட்டியுள்ளது. எனவே கோயம்புத்தூர், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், பல்லடம், அருமனை, நாகர்கோவில் ஆகிய இடங்களைத் தவிர மற்ற இடங்களில் அனுமதி வழங்கலாம்" என்று நீதிபதி உத்தரவிட்டார்.

ஆகவே, ஏற்கனவே காவல்துறை அனுமதி வழங்கியிருந்த மூன்று இடங்களுடன் சேர்த்து மொத்தமாக 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். தங்களது அணிவகுப்பை நடத்தலாம். உள்ளரங்கு கூட்டமாக பரிந்துரைக்கப்பட்ட இடங்களில் அரங்குகளில் இல்லாமல் விளையாட்டு திடல்களை தேர்வு செய்யலாம் என்று உத்தரவிட்டார்.

ஆனால், "இந்த அணிவகுப்பில் எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதனை மீறி நடந்தால் அதற்கு ஆர்.எஸ்.எஸ்தான் பொறுப்பேற்க வேண்டும்" என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

தற்போது அனுமதி வழங்கப்படாத ஆறு இடங்களில் இயல்பு நிலை திரும்பும்வரை ஆர்.எஸ்.எஸ். காத்திருக்க வேண்டும் எனவும் இரண்டு மாதங்களுக்கு பிறகு இந்த இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடத்த புதிதாக மனு அளிக்கலாம் என்று நீதிபதி தனது உத்தரவில் கூறியிருக்கிறார்.

https://www.bbc.com/tamil/india-63513383

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆர்.எஸ்.எஸ். பேரணி: லத்தி, ஆயுதம் கூடாது என்ற நிபந்தனையோடு, 3 இடங்களில் எப்படி நடந்தது?

  • நடராஜன் சுந்தர்
  • பிபிசி தமிழுக்காக
2 மணி நேரங்களுக்கு முன்னர்
 

ஆர்.எஸ்.எஸ்.

நீதிமன்றம், வழக்கு என்று சர்ச்சைகளைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் மூன்று இடங்களில் இன்று (நவம்பர் 6-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை) நடந்த ஆர்.எஸ்.எஸ். பேரணி எப்படி நிகழ்ந்தது? என்னென்ன நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன?

தமிழ்நாட்டில் பல இடங்களில் காந்தி ஜெயந்தி அன்று ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பு திட்டமிட்டது. ஆனால், தமிழ்நாடு அரசு அனுமதி மறுத்ததை தொடர்ந்து பல கட்ட நீதிமன்ற வழக்குகளைத் தாண்டி கடைசியியில் 44 இடங்களில் பலவிதமான கட்டுப்பாடுகளோடு நிகழ்வை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியது. ஆனால், இந்தக் கட்டுப்பாடுகளை ஏற்காத ஆர்.எஸ்.எஸ். மேல் முறையீடு செய்யப்போவதாகத் தெரிவித்தது.

ஆனால், கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் ஆகிய மூன்று இடங்களில் மட்டும் ஞாயிற்றுக்கிழமை இந்த ஊர்வலத்தை ஆர்.எஸ்.எஸ். நடத்தி முடித்துவிட்டது. இந்த ஊர்வலங்கள் எப்படி நடந்தன? என்ன கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன?

ஊர்வலம் நடந்த நகரங்களுக்கு தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் இருந்து போலீசார் வரவழைக்கப்பட்டனர். ஊர்வலம் நடந்த ஒவ்வோர் இடத்திலும் சுமார் 1,200 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

 

இன்று நடைபெற்ற ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு காவல் துறை என்னென்ன நிபந்தனைகள் விதிக்கப்பட்டன என்று கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவனிடம் பிபிசி தமிழ் கேட்டது.

 

சிவப்புக் கோடு

 

சிவப்புக் கோடு

அது பற்றிப் பேசிய அவர், "இந்த பேரணி, கூட்டத்திற்கு உயர் நீதிமன்றம் நிபந்தனைகளை வழங்கியுள்ளது. அதனுடன் காவல் துறையும் சில கட்டுப்பாடுகளை விதித்தது, அவற்றை ஏற்று பேரணி, கூட்டத்தை விதிமுறைக்குள் நடத்துவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்," என்றார்.

போலீஸ் விதித்த நிபந்தனைகள் என்னென்ன?

1. அனுமதிக்கப்பட்ட பாதை வழியாக மட்டுமே ஊர்வலம் செல்ல வேண்டும்.

2. கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் பேரணி, கூட்டத்தை முடித்துக்கொள்ள வேண்டும்.

3. மாலை 4 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்வு, 6 மணிக்குள் பொதுக்கூட்டம் உள்ளிட்ட அனைத்தையும் முடித்துக்கொள்ளவேண்டும்.

4. பேரணியில் லத்தி, ஆயுதங்களைப் பயன்படுத்தக் கூடாது.

5. குழாய் வடிவ ஒலிபெருக்கி பயன்படுத்தக்கூடாது. பெட்டி வடிவிலான ஒலிபெருக்கியை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

6. பேரணி செல்லும் வழியிலும், வண்டியிலும் பேனர்கள், பலகைகள் இருக்கக் கூடாது.

7. மத ரீதியான வாசகங்கள், சுலோகங்களை ஊர்வலம், கூட்டத்தில் வாய் மொழியாகவோ அல்லது பதாகைகளிலோ பயன்படுத்தக்கூடாது.

8. பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும். பிற மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பங்குபெற அனுமதி இல்லை என்பது உள்ளிட்ட சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டதாக கூறினார் பகலவன்.

எதற்காக ஊர்வலம்?

 

ஆர்.எஸ்.எஸ்.

நாட்டின் 75வது சுதந்திர ஆண்டு, ராமலிங்க அடிகளார் பிறந்து 200வது ஆண்டு, மகாத்மா காந்தியின் 153வது பிறந்த நாள் ஆகியவற்றை ஒட்டி காந்தி பிறந்த நாளில் இந்த ஊர்வலம் திட்டமிடப்பட்டது.

ஆனால், வழக்கு முடிவில் 44 இடங்களில் நிபந்தனைகளோடு ஊர்வலம் நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கினாலும், இந்த நிபந்தனைகளை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். மேல் முறையீடு செய்ய முடிவெடுத்தது. ஆனால், கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் ஆகிய 3 இடங்களில் ஏற்கெனவே ஊர்வலத்துக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியிருந்ததால், அதன் அடிப்படையில் அங்கே ஊர்வலங்கள் நடந்தன.

எப்படி நடந்தது பேரணி?

கடலூரில் பேரணி, கூட்டம் நடந்த இடங்களில் கடும் போலீஸ் பாதுகாப்பு நிலவியது. வடக்கு மண்டல ஐஜி கண்ணன், காஞ்சிபுரம் டிஐஜி காந்திமதி, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன், செங்கல்பட்டு மற்றும் திருப்பத்தூர் மாவட்ட எஸ்பிக்கள் மேற்பார்வையில் மூன்று மாவட்டங்களில் இருந்து 1200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்கு வரவழைக்கப்பட்டிருந்தனர்.

நிகழ்வு இடங்களில் முன்னதாக வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர்.

கடலூரில் நடந்த ஆர்எஸ்எஸ் பேரணியில் 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஊர்வலம் செல்லும் பகுதிகளில் இருந்த கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. மேலும் பேரணியில் பங்கேற்போர் தவிர குறிப்பிட்ட நேரத்தில், அந்த சாலைகளில் பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை.

கள்ளக்குறிச்சியில் காவல் கண்காணிப்பாளர் பகலவன் தலைமையில் மூன்று மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 1000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பேரணியில் ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த சுமார் 400 பேர் சீருடையுடன் கலந்து பங்கேற்றனர்.

பெரம்பலூரிலும், மாலை 4 மணிக்கு அணிவகுப்பு தொடங்கியது. அதைத் தொடர்ந்து பொதுக்கூட்டம் நடைபெற்றது.

எந்த இடத்திலும் எந்த அசம்பாவிதங்களோ, பதற்றங்களோ இல்லை.

https://www.bbc.com/tamil/india-63533339

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.