Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் இருந்து தப்பிச்சென்ற 50 கைதிகளில் 35 பேர் சரண்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் இருந்து தப்பிச்சென்ற 50 கைதிகளில் 35 பேர் சரண்!

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் இருந்து தப்பிச்சென்ற 50 கைதிகளில் 35 பேர் சரண்!

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், தப்பிச்சென்ற 50 கைதிகளில் 35 பேர் சரணடைந்துள்ளனர்.

இரண்டு குழுக்களுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற மோதலை அடுத்து அங்கிருந்தவர்களில் 50 பேர் வரையில் தப்பிச்சென்றிருந்தனர்.

இந்தநிலையில், அவர்களில் 35 பேர் மீண்டும் புனர்வாழ்வு மையத்தில் சரணடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த மோதல் சம்பவத்தில் 5 பேர் காயமடைந்துள்ள நிலையில் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம், தப்பிச்சென்றுள்ள ஏனையவர்களை கண்டறிவதற்காக விசேட விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1309180

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போராட்டக்காரர்களுக்கு பிரதமரைச் சந்தித்து கலந்துரையாடுவதற்கு வாய்ப்பு!

கந்தக்காடு புனர்வாழ்வு நிலைய சம்பவம் தொடர்பாக முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு ரணில் பணிப்புரை!

கந்தக்காடு புனர்வாழ்வு நிலைய சம்பவம் தொடர்பில் முழுமையான அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாமல் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் நேற்று இடம்பெற்ற மோதலின் போது கைதிகள் 50 பேர் வரையில் தப்பிச் சென்றிருந்தனர்.

இந்தநிலையில், அவர்களில் 35 பேர் மீண்டும் புனர்வாழ்வு மையத்தில் சரணடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த மோதல் சம்பவத்தில் 5 பேர் காயமடைந்துள்ள நிலையில் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம், தப்பிச்சென்றுள்ள ஏனையவர்களை கண்டறிவதற்காக விசேட விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1309239

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை புனர்வாழ்வு நிலையத்திலிருந்து 50க்கும் அதிகமான கைதிகள் தப்பியோட்டம் - என்ன நடந்தது?

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

இலங்கை புனர்வாழ்வு நிலையத்திலிருந்து 50திற்கும் அதிகமான கைதிகள் தப்பியோட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இலங்கையின் பொலன்னறுவை - கந்தகாடு பகுதியிலுள்ள சிகிச்சையளித்தல் மற்றும் புனர்வாழ்வு நிலையத்திலிருந்து நேற்றிரவு சுமார் 50க்கும் அதிகமான கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்தே, கைதிகள் இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த மோதல் சம்பவத்தில் ஐந்து கைதிகள் காயமடைந்து, பொலன்னறுவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குளியல் அறையிலுள்ள பாத்திரமொன்றை அடிப்படையாக கொண்டே இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

 

எனினும், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இவ்வாறு தப்பிச் சென்றவர்களில் 35 கைதிகள் மீண்டும் போலீஸார் மற்றும் ராணுவத்திடம் சரணடைந்துள்ளனர்.

புனர்வாழ்வு நிலையத்திலிருந்து தப்பிச் சென்ற கைதிகள், குறித்த பகுதியிலேயே மறைந்துள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கான தேடுதல் நடவடிக்கைகள் துரிதப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

 

சிவப்புக் கோடு

 

சிவப்புக் கோடு

குறித்த நிலையத்தில் சுமார் 300ற்கும் அதிகமான கைதிகள் இருந்துள்ளதாக கூறிய அவர், 50 முதல் 60 வரையான கைதிகள் மாத்திரமே தப்பிச் சென்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

''கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக கூறுகின்ற போதிலும், அவர்கள் அந்த பகுதியை விட்டு வெளியில் செல்லவில்லை. அங்காங்கே ஒளிந்திருக்கின்றார்கள். பெரும்பாலும் இன்னும் ஓரிரு மணித்தியாலங்களில் அவர்கள் சரணடைவார்கள். இந்த பகுதியின் நிலைமை தற்போது முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த கைதிகளுக்கு எதிராக எமக்கு அதிகாரத்தை பயன்படுத்த முடியாது. ஏனெனில், இவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றமையினால், அவர்களுக்கு எதிராக எமது குறைந்த அதிகாரத்தை கூட பயன்படுத்த முடியாது" என ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்தார்.

இதற்கு முன்னரும் கைதிகள் தப்பியோடியிருந்தனர்

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்து கடந்த ஜுன் மாதம் 28ம் தேதி சுமார் 600ற்கும் அதிகமான கைதிகள் தப்பியோடியிருந்தனர்.

இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தின் போது, 36 வயதான ஒருவர் உயிரிழந்திருந்தார்.

இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டே கைதிகள் தப்பியோடியிருந்தனர்.

 

இலங்கை புனர்வாழ்வு நிலையத்திலிருந்து 50திற்கும் அதிகமான கைதிகள் தப்பியோட்டம்

பட மூலாதாரம்,BUREAU OF THE COMMISSIONER GENERAL OF REHABILITATI

கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டவர்கள் யார்?

போதைப்பொருளுக்கு அடிமையாகும் நபர்களை தடுத்து வைத்து, புனர்வாழ்வு அளிக்கும் நிலையமாக கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையம் விளங்குகின்றது.

போதைப்பொருளுக்கு அடிமையான இளைஞர், யுவதிகளை மீட்டெடுக்கும் வகையில் அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட திட்டத்திற்கு அமைய, கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்தின் கீழ் இந்த பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

போதைப்பொருள் பாவனை, போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுக்கு அமைய சிறை வைக்கப்படுபவர்கள், இந்த புனர்வாழ்வு திட்டத்திற்குள் உள்வாங்கப்படுகின்றனர்.

போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களின் கீழ் சிறை வைக்கப்படுபவர்களின் கல்வி நிலை, சமூகம் மற்றும் பொருளாதாரம் ஆகிய பின்னணிக்கு ஏற்ற வகையில், இந்த புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு அளிக்கப்படும்.

உளவியல் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு, அவர்களை போதைப்பொருள்; அடிமைத்தனத்திலிருந்து படிப்படியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கும் திட்டங்கள், கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் முன்னெடுக்கப்படும் என புனர்வாழ்வு மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.

https://www.bbc.com/tamil/sri-lanka-63539209

  • கருத்துக்கள உறவுகள்

கந்தக்காடு புனர்வாழ்வளித்தல் நிலைய மோதல் விவகாரம் : விசாரணைகளை முன்னெடுக்க ஐவரடங்கிய குழு நியமனம்

By DIGITAL DESK 5

09 NOV, 2022 | 04:57 PM
image

(எம்.மனோசித்ரா)

கந்தக்காடு புனர்வாழ்வு மற்றும் சிகிச்சையளித்தல் நிலையத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ஐவரடங்கிய குழுவொன்று  நியமிக்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம், மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

இந்த குழுவினூடாக தயாரிக்கப்படும் அறிக்கை, நீதி அமைச்சருக்கு வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

இதேவேளை கந்தக்காடு புனர்வாழ்வு  நிலையத்தில் இடம்பெற்ற மோதலில் தப்பிச்சென்ற நிலையில் கைது செய்யப்பட்ட 217 கைதிகளும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கைதிகள் பொலன்னறுவை மற்றும் ஹிங்குரங்கொட நீதவான் நீதிமன்றங்களில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில் தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கந்தக்காடு புனர்வாழ்வளித்தல் நிலையத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை (07) இரு தரப்பினருக்கிடையில் இடம்பெற்ற மோதல் காரணமாக அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. 

குறித்த மோதல் சம்பவம் தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நீதி அமைச்சரிடம் அறிக்கையொன்றை கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 https://www.virakesari.lk/article/139564

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.