Jump to content

தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த தாயும் 2 மகன்களும் அவுஸ்திரேலியாவில் சடலங்களாக மீட்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த தாயும் 2 மகன்களும் அவுஸ்திரேலியாவில் சடலங்களாக மீட்பு

07 NOV, 2022 | 07:59 AM
image

அவுஸ்திரேலியாவின் கன்பராவில் அமைந்துள்ள குளம் ஒன்றிலிருந்து தமிழ் குடும்பத்தை சேர்ந்த தாயும் இரு மகன்மாரும் சலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

aus1.jpg

இந்நிலையில் சனிக்கிழமை (5) காலையில் தாயினதும் ஒரு மகனினதும் சடலங்கள் குளத்தில் இருந்து மீட்கப்பட்ட நிலையில், மற்றைய மகனான  பிரணவ் விவேகானந்தன் என்பவர் காணாமல் போன நிலையில் அவுஸ்திரேலிய பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

aus2.jpg

பின்னர் காணாமல் போயிருந்த மற்றைய மகனினது சடலமும் குளத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

இறப்புக்கான காரணம் மற்றும் எவ்வாறு அவர்கள் இறந்தனர் என இதுவரை அறியப்படாத நிலையில், அவுஸ்திரேலிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

aus3.jpg

aus4.jpg

இதேவேளை, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் விசாரணைகளை மேற்கொண்டு  வருகிறோம். இந்த நேரத்தில் விசாரணைகளுக்காக அவர்கள் எங்களுக்கு உதவுகிறார்கள் என அவுஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்தனர்.

https://www.virakesari.lk/article/139308

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறுவன் பிரணவ் விவேகானந்தனின் உடல் மீட்கப்பட்ட பின்னர் மலர்களை வைத்து அஞ்சலி செலுத்தும் மக்கள்

By RAJEEBAN

07 NOV, 2022 | 12:09 PM
image

 

அவுஸ்திரேலியாவின்  கான்பெராவின் யெராபி குளத்தில்  பிரணவ் விவேகானந்தனின் உடல் மீட்;கப்பட்டதை குங்கலின் சமூகத்தினர் தமிழ் குடும்பத்திற்கு அஞ்சலி செலுத்தி வருகி;ன்றனர்.

பிரணவ் விவேகானந்தனின் உடல் மீட்கப்பட்டதை தொடர்ந்து காவல்துறையினர் தேடுதலை கைவிட்டதை தொடர்ந்து யெராபி குளப்பகுதியிலமுதலாவது மலர்க்கொத்து வைக்கப்பட்டது.

சனிக்கிழமை பெண்ணொருவரினதும் இளைஞனினதும் உடல் மீட்கப்பட்டதை தொடர்ந்து  பிரணவை காணவில்லை என பொலிஸார் அறிவித்தனர்.

pond_tragedi.jpg

யெராபி குளப்பகுதியில்  8 வயது சிறுவனின் உடல் மீட்கப்பட்டுள்ளது என காவல்துறையினர் அறிவித்தனர்.

அவரது தாயார் சகோதரனின் மரணம் தொடர்பான விசாரணைகள் தொடர்கின்றன என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வழமையான உற்சாகமாக மகிழ்ச்சியாக காணப்படும் யெராபி குளப்பகுதி களையிழந்து சோகத்துடன் காணப்பட்டது.பொதுமக்கள் விசாரணை நடக்கும் பகுதியிலிருந்து விலகி சென்றனர்.

பிரவீனின் உடலை மீட்ட பின்னர் மதியமளவில் காவல்துறையினர் அங்கிருந்து சென்றனர்.

காவல்துறையினரின் தேடுதல் நடவடிக்கைக்கான அடையாளமாக செடிகொடிகள் மாத்திரம் விடப்பட்டன.

அந்த பகுதியில் சிறுவன் ஒருவனி;ன் பிறந்தநாள் கொண்;டாட்டம் அமைதியாக காணப்பட்டது.

பொதுமக்களில் பலர் மரங்களின் கீழ் அமர்ந்திருந்தனர்,ஒரு குடும்பம் தனது நான்கு வயது மகளுடன்  கரைக்கு சென்று தங்கள் சமூகத்தில் நடந்ததை நம்பமுடியாத நிலையில் முணுமுணுத்தனர்.

r0_0_3840_2159_w1200_h678_fmax.jpg

பீட்டர் டொஸ்கொமின் உடல்  வீடு யெராபிகுளத்தை  பார்த்தபடி உள்ளது அவர் இந்த துயரம் இடம்பெற்ற பகுதியில் முதலாவது மலரை வைத்தார் தன்னை போல பலர் அஞ்சலி செலுத்துவார்கள் என நம்பிக்கை வெளியிட்டார்.

என்ன ஒரு துயரமான சம்பவம் நான் இந்த சம்பவத்தினால் கடும் மன அழுத்தத்திற்குள்ளாகியுள்ளேன் நான் ஏதாவது செய்யவேண்டும் என நினைத்தேன் என அவர் குறிப்பிட்டார்.

தாயும் இரண்டுபிள்ளைகளும் உயிரிழந்ததை பெரும் துயரமான விடயம் பெரும் துயரமான விடயம் எனவும் அவர் தெரிவித்தார்.

சனிக்கிழமை முதல் உடல்களை தேடிய சுழியோடிகள் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் ஆரம்பித்து 10.45 மணியளவில் பிரணவின் உடலை மீட்டனர்.

காலை 8 மணியளவில் பொதுமக்கள் பிரணவ் குடும்பத்தினரின் உடல்களை பார்த்ததை தொடர்ந்து காவல்துறையினர் அவற்றை மீட்டனர்.

குறிப்பிட்ட பகுதியில் பின்னர் வெள்ளை நிற வாகனமொன்றும் மீட்கப்பட்டது.

காரில் குழந்தைக்கான ஆசனமும் காணப்பட்டது தடாகத்தின் நுனியில் அது காணப்பட்டது என உள்ளுர் மக்கள் தெரிவித்தனர்.

r0_267_5000_3078_w1200_h678_fmax__1_.jpg

டிரக்கொன்று செல்வதை தடுத்தவாறு கார் காணப்பட்டது நான் அதன் கதவை திறந்தேன் அது மூடப்படவில்லை குழந்தைக்கான ஆசனமும் காணப்பட்டது காரின் சாவிகளையும் காணமுடியவில்லை என ரொட் வீட்லி முகநூலில் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவங்களுடன் இன்னொரு தரப்பு  ஈடுபட்டிருக்கவில்லை என கருதுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/139332

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலியாவில் குளத்திலிருந்து தமிழ்குடும்பத்தை சேர்ந்தவர்கள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் - கொலை தற்கொலை என விசாரணை

By RAJEEBAN

11 NOV, 2022 | 11:37 AM
image

கான்பெராவின் வடபகுதியில் உள்ள குளத்திலிருந்து தமிழ் குடும்பமொன்றை சேர்ந்த மூவர் சடலமாக மீட்;கப்பட்ட சம்பவத்தை கொலை தற்கொலை என்ற அடிப்படையில் விசாரணை செய்து வருவதாக அவுஸ்திரேலிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் யெராபி குளத்திலிருந்து தாயினதும் இரண்டு சிறுவர்களினதும் உடல்களை காவல்துறையினர் மீட்டிருந்தனர்.

இது குறித்த விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது,இதனை கொலை தற்கொலை என கருதுகின்றோம் இதில் உயிரிழந்த மூவருக்குமே தொடர்புள்ளதாக கருதுகின்றோம் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விசாரணைகள் குழப்பமானவையாக காணப்படுவதாலும் இன்னமும் பூர்த்தியடையாததாலும் உயிரிழப்புகளிற்கான  காரணங்கள் குறித்த தெளிவான அறிக்கையை மரணவிசாரணை அதிகாரியிடம் சமர்ப்பிக்கவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

aus_tamil_family.jpg

யெராபி குளத்தில் உடல்கள் காணப்படுவதை பார்த்த ஒருவர் வழங்கிய தகவலை தொடர்ந்து காவல்துறையினர் குளத்திலிருந்து தாயினதும் இரு மகன்களினதும் உடல்களை மீட்டிருந்தனர்.

குளத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டடிருந்த வாகனமொன்றையும் காவல்துறையினர் மீட்டிருந்தனர்.

https://www.virakesari.lk/article/139714

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கல்வியறிவுள்ள, பல்வேறு தொடர்புகளுள், ஆழுமையுள்ளசுமந்திரனும் சாணக்கியனும் TNA க்குத் தலைமை தாங்கி  வழிநடாத்த வேண்டும்,...👍 ஏனப்பா,.. ஒரு குசும்புக்கு எழுதினாலும் விசுகர் தடியோடதான் நிக்கிறார் கண்டியளோ,..🤣
    • புதிய ஜனாதிபதி அநுரவின் கட்சிக்கு கணிசமான அளவு வாக்குகள் வடக்கு/கிழக்கில் வரும் பொதுதேர்தலில் கிடைக்கலாம். ஆனால் அவை ஆசனத்தை பெறுவதற்கு போதுமானதாக அமையுமா என்பது சந்தேகமே.
    • நாங்கள் சிறுவயதில் காலைக்காட்சி, மாலைக்காட்சி, கடற்கரைக்காட்சி என்று சோதனையில் வந்த கேள்விகளுக்கு ஏற்றமாதிரி கட்டுரை எழுதுவது போலத் தான் இருக்கின்றது இந்த பகிரங்கக் கடிதம்.  இதை எழுதியவர் ஜனாதிபதி தேர்தலை பகிஷ்கரிக்கச் சொன்னவராக இருக்கலாம், இல்லாவிட்டால் இலங்கைச் சிங்கள ஒற்றை ஆட்சிப் பாராளுமன்றம் தேவையில்லை, எங்களின் ஒற்றுமை மட்டுமே முக்கியம், அதை சர்வதேசத்திற்கு காட்டினால் போதும் என்று சொன்னவராக இருக்கலாம். ஒரு அணுக்கமான அரசியல் செய்வோம் என்று சொன்னவராக இருக்கலாம். இன்னும் சில வகைகளும் இருக்கின்றன. ஒவ்வொன்றிலும் நியாயங்கள் இருக்கிறது தானே........... நாங்கள் எழுதிய காலை, மாலை, கடற்கரை காட்சிக் கட்டுரைகள் போலவே. சொன்னவர் யார் என்று தெரிந்தால் தான், இதில் இருக்கும் சொற்களையும், வசனங்களையும் கடந்து, அதில் மறைந்திருக்கும் உட்பொருளை விளங்கிக்கொள்ள முடியும். நித்தியின், ஜக்கியின் மற்றும் பல குருக்களின் பக்தர்களும் இதையே தான் சொல்கின்றனர். குருவின் தனிப்பட்ட வாழ்க்கையை விட்டு விட்டு, குரு சொல்வதை மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள் என்று....... உங்கள் குருக்களே தங்கள் சுகபோக வாழ்க்கைகளுக்காக மட்டுமே பேசிக் கொண்டிருக்கின்றார்கள். இறுதியில் உங்களையும், உங்கள் குடும்பங்களையும் நடுத்தெருவில் நிற்பாட்டுவார்கள் என்று தானே நாங்கள் அவர்களுக்கு எதிர்க் கருத்துகள் சொல்லுகின்றோம். இதை எழுதியவர் கூட அப்படியான ஒருவராக இருக்கலாம். இப்பொழுது பாராளுமன்றம் முக்கியம், அங்கு போவது முக்கியம், அதிகாரம் முக்கியம்............. என்கின்றனர். உண்மையே, இவை எல்லாம் முக்கியம். இவை எப்போதும் முக்கியமானவையாக இருந்தன. அத்துடன், இதைச் சொல்பவர் முன்னர் என்ன சொல்லியிருந்தார் என்று அறிதலும் முக்கியம் தானே............    
    • 👆 Thank God, I have not been so ruthless as the guy above in dealing with relatives. I seem to be fair enough 👇    
    • கொழும்பில் போட்டியிடும் தமிழரசு கட்சி..! பங்காளி கட்சிகளுக்கு கால அவகாசம் இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டமானது பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது நிறைவுக்கு வந்துள்ளது.  இதற்கமைய, ரெலோ மற்றும் ப்ளொட் ஆகிய கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து மூன்று நாட்களுக்குள் தமது முடிவு எட்டப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  அத்துடன், கொழும்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சி போட்டியிடுவதாகவும் இதற்கான வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கு ஒரு குழுவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  அடுத்த கூட்டம்  அதேவேளை, குறித்த விடயங்கள் தொடர்பில் எதிர்வரும் 03ஆம் திகதி மீண்டும் கூட்டம் நடத்தப்பட்டு தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும், நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவு வழங்கியவர்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் கடிதம் ஒன்றை முன்வைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இதன்போது, கிட்டத்தட்ட 2018ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை இடம்பெற்றிருக்க கூடிய அனைத்து விடயங்கள் தொடர்பிலும் விளக்கம் கோர வேண்டுமே தவிர தற்போது நடந்த விடயங்கள் தொர்பில் மாத்திரம் விளக்கம் கோரப்பட கூடாது எனவும் கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், மத்தியக்குழு கூட்டமானது, பல்வேறுபட்ட வாத பிரதிவாதங்களுக்கு மத்தியில் முடிவுக்கு வந்துள்ளது.  அதேவேளை, கூட்டத்திற்கு பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், "தமழிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் காலை முதல் மாலை வரை நடைபெற்றது. இதன்போது ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னரான விடயங்கள் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் கூடி ஆராய்ந்தோம். ஜனாதிபதி தேர்தலில் கட்சி எடுத்த 3 தீர்மானங்களுக்கு மாறாக செயற்பட்டவர்கள் தொடர்பாக ஆராயப்பட்டது. அதிலே அப்படியாக கட்சியின் முடிவை மீறி செயற்பட்டவர்களிடம் விளக்கம் கோருவது என முடிவு எடுக்கப்பட்டது. அரியநேத்திரனை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என பலமான கருத்துக்கள் சொல்லப்பட்டிருந்தாலும், முதலாம் திகதி எடுத்த தீர்மானத்தில் தேர்தலில் இருந்து விலக வேண்டும் என்று கோரியிருந்தோம். அதற்கு அவருடைய விளக்க கடிதத்தில் பதில் சொல்லப்பட்டிருக்கவில்லை. அது காலம் கடந்து கிடைத்தாலும் வாசித்து காட்டப்பட்டது. ஆகவே அது சம்மந்தமாக கேட்டு விட்டு தீர்மானங்களை எடுக்கவுள்ளோம். முக்கிய விடயமாக ஆராயப்பட்டது நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆகும். நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்காக நாங்கள் விசேட அறிவிப்பை மனவுவந்து விடுவதற்கு தீர்மானித்துள்ளோம். அதாவது தமிழ் தேசிய பரப்பில் இருக்கிற கட்சிகள் விசேடமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெவ்வேறு காலகட்டங்களில் விலகிப் போன கட்சிகள் திரும்பவும் எங்களுடன் சேர்ந்து தேர்தலை முகங்கொடுங்க விரும்பினால் வரமுடியும். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகிச் சென்றவர்கள் வருகிற தேர்தல் சவால் மிக்க தேர்தலாக இருப்பதால் இணங்கி வந்து இந்த தேர்தலில் போட்டியிட முடியும். தமிழரசுக் கட்சியின் பெயரிலும், அதன் சின்னத்திலும் தான் கடந்த காலங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக போட்டியிட்டோம். அந்த விதமாக இந்த தேர்தலில் போட்டியிட நாங்கள் தீர்மானித்துள்ளோம். அப்படியாக அந்த அழைப்பை ஏற்று வந்தால் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வேட்ப்பாளர்களை நிறுத்துவது தொடர்பில் கலந்துரையாடி முடிவு எடுப்போம். அப்படி அவர்கள் வராவிட்டால் இலங்கை தமிழரசுக் கட்சி தனித்து போட்டியிடும். திருகோணமலை, அம்பாறை மாவட்டங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ளோம். அங்கே ஒரு தமிழ் உறுப்பினர் மட்டும் தான் தெரிவு செய்யப்படும் நிலை இருப்பதால் அந்த விடயங்களை அந்த மாவட்ட கிளைகளுடன் பேசி முடிவுக்கு கொண்டு வரலாம் என தீர்மானித்துள்ளோம். அதற்கு மேலதிகமாக இம்முறை வடக்கு - கிழக்குக்கு வெளியே உள்ள கொழும்பு உட்பட தமிழர்கள் வாழும் ஏனைய மாவட்டங்களிலும் போட்டியிட பரிசீலனை செய்யப்பட்டுள்ளது. விடுக்கப்பட்டுள்ள அழைப்பு  எதிர்வரும் 4 ஆம் திகதி வேட்புமனுத் தாக்கல செய்தல் ஆரம்பிக்கவுள்ளதால் பிரிந்து சென்றவர்கள் மீள வருவது தொடர்பாக மிக விரைவாக அவர்களது பதிலை எதிர்பார்க்கின்றோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்ற கட்சிகள் வந்து இணைவதற்கு அழைப்பு விடுத்துள்ளோம். அதற்கு வெளியே வேறு கட்சிகள் வந்தால் அதனை பரிசீலிக்கலாம். ஏனெனில் எங்களது கட்சியில் இருந்து பிரிந்து போனவர்களது கட்சியும் மேலும் பிரிந்து இருக்கின்றது. அவர்களை உள்வாங்கும் போது சில ஆட்சேபனைகள் இருக்கும். அது பற்றி பேசியே முடிவு எடுப்போம். ஆனால் தீர்மானமாக அழைப்பு விடுப்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்களை வாருங்கள் சேர்ந்து பயணிப்போம் என்று புன்முறுவலோடு அவர்களை அழைக்கின்றோம். புதியவர்களை தேர்தலில் உள்வாங்குவது, இளைஞர்களை உள்வாங்குவது தொடர்பிலும் நீண்ட நேரம் பேசினோம். அதனை சரியாக நாம் அணுகுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. மக்களிடத்தில் இது தொடர்பான பாரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. விசேடமாக தேசிய மக்கள் சக்தி பெற்ற வெற்றிக்கு பிற்பாடு அத்தகைய எண்ணப்பாடு எங்களது பிரதேசங்களிலும் உயர்ந்துள்ளது. அது நல்ல விடயம். இளைஞர்கள், ஆளுமையுள்ளவர்கள், படித்தவர்கள், பெண்கள் என அவர்களுக்கான பிரதிநித்துவத்தை உறுதி செய்யும் வகையில் தான் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். அதற்கான நியமனக்குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு இறுதி முடிவுகளை எடுக்கும். ஆனால் மாவட்ட ரீதியாக கலந்து ஆலோசித்து தான் அந்த முடிவுகள் எடுக்கபடும். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்கள் சிலர் எம்முடன் பேசியுள்ளார்கள். தம்முடன் இணையுமாறு அவர்கள் அழைப்பு எதனையும் விடவில்லை. நாங்கள் பிரதானமான தமிழ் கட்சி. இது வரைக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக வேறு கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட்ட போது தேர்தலுக்கு முகம் கொடுத்தது இலங்கை தமிழரசுக் கட்சியின் பெயரிலும், அதன் சின்னத்திலுமே தான். அதே முறையில் நாங்கள் இந்த தேர்தலையும் சந்திப்பதற்கு பிரதான கட்சி என்ற வகையில் நாங்கள் அவர்களுக்கும் அழைப்பு விடுகின்றோம்” என குறிப்பிட்டுள்ளார்.  https://tamilwin.com/article/ilankai-tamil-arasu-katchi-meeting-in-colombo-1727533785?itm_source=parsely-detail
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 3 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.