Jump to content

காலநிலை மாற்றம்: "கிளிமஞ்சாரோ, ஆஃப்ரிக்காவின் கடைசி பனிப்பாறைகள் 2050இல் உருகும்"


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காலநிலை மாற்றம்: "கிளிமஞ்சாரோ, ஆஃப்ரிக்காவின் கடைசி பனிப்பாறைகள் 2050இல் உருகும்"

  • பேட்ரிக் ஹ்யூக்ஸ்
  • பருவநிலை, அறிவியல் பிரிவு, பிபிசி நியூஸ்
16 நிமிடங்களுக்கு முன்னர்
 

தான்சானியாவின் கிளிமஞ்சாரோ மலையை மூடி நிற்கும் பனிப்பாறைப் படலம் 2050 வாக்கில் இல்லாமலே அழிந்து போகும்.

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

தான்சானியாவின் கிளிமஞ்சாரோ மலையை மூடி நிற்கும் பனிப்பாறைப் படலம் 2050 வாக்கில் இல்லாமலே அழிந்து போகும்.

ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பான யுனெஸ்கோ தனது அறிக்கையில், காலநிலை மாற்றம் காரணமாக ஆஃப்ரிக்காவில் எஞ்சியிருக்கும் கடைசி பனிப்பாறைகள் உள்பட உலகில் உள்ள பனிப்பாறைகள் 2050ஆம் ஆண்டுக்குள் தவிர்க்க முடியாதபடி உருகி விடும் என்று கூறியிருக்கிறது.

ஐநாவின் உலக பாரம்பரிய இடங்களில் மூன்றில் ஒரு மடங்கு இடம் பெற்றுள்ள பனிப்பாறைகள் 30 ஆண்டுகளுக்குள் உருகிவிடும் என்றும் யுனெஸ்கோ அதன் அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

கிளிமஞ்சாரோ சிகரத்தின் கடைசி பனிப்பாறைகள், ஆல்ப்ஸ், அமெரிக்காவின் யோசெமிட்டி தேசிய பூங்காவில் உள்ள பனிப்பாறைகள் போல உருகி மறைந்து விடும்.

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான உலகளாவிய நடவடிக்கைகள் எதுவாக இருந்தபோதிலும் அவை உருகுவதை தடுக்க முடியாது என அந்த அறிக்கையை எழுதியவர்கள் கூறியுள்ளனர்.

 

செயற்கைக்கோள் தரவுகளின் அடிப்படையில் கணிக்கப்பட்டுள்ள தகவல்களைக் கொண்ட இந்த அறிக்கை, எகிப்து நடைபெற்று வரும் COP27 என்ற காலநிலை மாற்றம் தொடர்பான உச்சிமாநாட்டில் விவாதிக்கப்படவுள்ளது.

ஐநாவின் 50 உலக பாரம்பர்ய இடங்களில் 18,600 பனிப்பாறைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. புகழ்பெற்ற சுற்றுலா இடங்கள் , உள்ளூர் மக்கள் புனிதமாக கருதும் இடங்கள் உள்ளிட்ட பூமி பரப்பில் உள்ள ஏறக்குறைய 10 சதவிகித பனிப்பாறைகளை இவை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

பனிப்பாறைகள் காணமல் போவது, பின்னடைவு என்பது புவி வெப்பமடைவதற்கான மிக தீவிரமான சாட்சியங்களில் ஒன்றாகும் என அறிக்கை குறிப்பிடுகிறது.

"நாம் தவறாக கருதி இருக்கலாம் என்று நாம் நம்புகின்றோம். ஆனால், இது ஒரு கவனத்தில் கொள்ளக்கூடிய அறிவியலாகும்," என அறிக்கையை எழுதியவர்களில் ஒருவரான யுனெஸ்கோவின் திட்ட அலுவலர் டேல்ஸ் கார்வாலோ ரெசெண்டே கூறுகிறார்.

"இது உண்மையில் நடப்பதை நாம் காணக்கூடிய ஒன்றாக இருப்பதால், பருவநிலை மாற்றத்தை முன்னறிவிக்கக்கூடிய மதிப்பு மிக்க ஒன்றாக, பனிப்பாறைகள் திகழ்கின்றன," என்றும் அவர் தெரிவிக்கிறார்.

மூன்றில் இரண்டு மடங்கு ஐநா உலக பாரம்பர்ய இடங்களில் உள்ள பனிப்பாறைகள் பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால், உலகம் வெப்பமடைவதை 1.5 சென்டிகிரேட் ஆக வரம்புக்கு உட்படுத்தினால் மட்டுமே அது சாத்தியம் என அறிக்கையின் எழுத்தாளர்கள் சொல்கின்றனர். ஆனால், இந்த இலக்கை அடைவதற்கு நம்பகமான எந்த ஒரு வழியும் இப்போதைக்கு உலகின் முன்பு இல்லை என்று கடந்த வாரம் வெளியான ஐநாவின் இன்னொரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

யோசெமிட்டி தேசிய பூங்காவில் உள்ள பனிப்பாறைகள் அழியும் ஆபத்தில் உள்ளன

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

யோசெமிட்டி தேசிய பூங்காவில் உள்ள பனிப்பாறைகள் அழியும் ஆபத்தில் உள்ளன

உலகின் பாரம்பர்ய இடமான பனிப்பாறைகள் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு எவ்வாறு மாற்றமடைகின்றன என்பதை கணக்கிடுவதற்கு பயன்படுத்தப்பட்ட மாதிரிகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட முந்தைய அறிக்கையின் அடிப்படையில் இந்த கணிப்புகள் கட்டமைக்கப்பட்டுள்ளன.

"வரலாற்றுப் பதிவில் மிகவும் முன்னோடியில்லாத விஷயம் என்னவென்றால், இது எவ்வளவு விரைவாக நடக்கிறது என்பதுதான்" என பஃபலோ பல்கலைக்கழகத்தின் பனிப்பாறை நிபுணர் பீட்டா க்சாத்தோ கூறினார். ஆனால், இவர் இந்த ஆராய்ச்சியில் ஈடுபடவில்லை.

"1900ஆம் ஆண்டுகளின் மத்தியில் பனிப்பாறைகள் மிகவும் நிலையாக இருந்தன," என்ற அவர், "பின்னர் நம்பமுடியாத வகையிலான இந்த வேகமாக பின்னடைவு நேரிட்டது," என்றும் கூறினார்.

2050ஆம் ஆண்டுக்குள் காணாமல் போகும் பனிப்பாறைகளின் உலக பாரம்பர்ய இடங்களின் பட்டியல்

ஹிர்கேனியன் காடுகள் (இரான்)

டர்மிட்டர் தேசிய பூங்கா (மான்டினீக்ரோ)

விருங்கா தேசிய பூங்கா (காங்கோ ஜனநாயக குடியரசு)

ஹுவான்லாங் இயற்கை மற்றும் வரலாற்று ஆர்வப் பகுதி (சீனா)

யெல்லோஸ்டோன் தேசிய பூங்கா (அமெரிக்கா)

மவுன்ட் கென்யா தேசிய பூங்கா/இயற்கை காடு (கென்யா)

பைரனீஸ் மாண்ட் பெர்டு (பிரான்ஸ், ஸ்பெயின்)

ருவென்சோரி மலைகள் தேசிய பூங்கா (உகாண்டா)

புடோரானா பீடபூமி (ரஷ்யா)

சுவிஸ் டெக்டோனிக் அரினா சர்டோனா (சுவிட்சர்லாந்து)

நஹன்னி தேசிய பூங்கா (கனடா)

லோரென்ட்ஸ் தேசிய பூங்கா (இந்தோனேசியா)

ரேங்கல் தீவு ரிசர்வ் இயற்கை அமைப்பு (ரஷ்யா)

கிளிமஞ்சாரோ தேசிய பூங்கா (தான்சானியா)

யோசெமிட்டி தேசிய பூங்கா (அமெரிக்கா)

டோலமைட்ஸ் (இத்தாலி)

விர்ஜின் கோமி காடுகள் (ரஷ்யா)

உலக பாரம்பரிய இடங்களில் உள்ள ஐஸ் கட்டிகள் உருகியதன் காரணமாக 2000ஆவது ஆண்டு மற்றும் 2020ஆவது ஆண்டுக்கும் இடையே உலக அளவில் கடல் மட்டமானது 4.5 சதவிகிதம் உயர்ந்ததை காண முடிந்தது.

இந்த பனிப்பாறைகள் ஒவ்வோர் ஆண்டும் 58 பில்லியன் ஐஸ்கட்டிகளை இழந்தன. இது பிரான்ஸ், ஸ்பெயின் இரு நாடுகளும் சேர்ந்து ஆண்டு முழுவதும் உபயோகிக்கும் தண்ணீர் அளவுக்கு சமமானதாகும்.

 

பனிப்பாறைகளை நம்பியிருக்கும் உள்ளூர் மக்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பல்வேறு உள்ளூர் மக்கள் தங்களின் தண்ணீர் தேவைக்காகவும், வேளாண் உபயோகத்துக்காகவும் பனிப்பாறைகளை நம்பி உள்ளனர். அவர்களின் இழப்பு என்பது வறண்ட காலங்களில் தண்ணீர் தட்டுப்பாட்டை நோக்கி இட்டுச் செல்லும் என லீட்ஸ் பல்கலைக்கழகத்தின் பனிப்பாறை ஆராய்ச்சி நிபுணர் பேராசிரியர் டங்கன் குயின்சி கூறுகிறார். இந்த ஆராய்ச்சியில் அவர் ஈடுபடவில்லை.

"இந்த தண்ணீரை தங்களது பயிர்களின் பாசனத்துக்கு அவர்கள் பயன்படுத்துவதால் இது உணவு பாதுகாப்பு விஷயங்களை நோக்கி இட்டுச்செல்லும்," என குயின்சி கூறுகிறார்.

பனிப்பாறை இழப்பால் உருவாகும் வெள்ளம் காரணமாக உள்ளூர் சமூகத்தினர் , பழங்குடியின மக்கள் விரும்பத்தகாத சூழலை எதிர்கொள்ள நேரிடும் என இந்த அறிக்கையின் எழுத்தாளர்கள் கூறுகின்றனர். எனவே முன்னெச்சரிக்கை செய்யும், அபாயத்தை குறைக்கும் பேரழிவு மேலாண்மை நடைமுறைகளை அமல்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

எனினும், உலகம் வெப்பமயமாதலின் வரம்பை குறைக்க வேண்டிய தேவை நமக்கு உள்ளது என்பது மிகவும் வெளிப்படையான விஷயமாகும்.

"இந்த ஒரு செய்தியே இங்கே நம்பிக்கையாக இருக்கிறது," என்கிறார் கார்வாலோ ரெசெண்டே. "உமிழ்வை வெகுவாகக் குறைப்பதை நம்மால் நிர்வகிக்க முடிந்தால், இந்த பனிப்பாறைகளில் பெரும்பாலானவற்றை நம்மால் திறம்பட பாதுகாக்க முடியும்," என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

"இது ஒவ்வொரு மட்டத்திலும் நடவடிக்கை எடுப்பதற்கான உண்மையான ஒரு அழைப்பாகும். அரசியல் மட்ட அளவில் மட்டுமின்றி, மனிதர்களாகிய நமது மட்டத்திலும் எடுக்கப்பட வேண்டிய அழைப்பாகும்.

https://www.bbc.com/tamil/global-63526011

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலநிலை மாற்றம் குறித்த 5 தவறான புரிதல்கள் - உண்மை என்ன?

 

காலநிலை மாற்றம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

3 மணி நேரங்களுக்கு முன்னர்

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான அவசரத்தை மிகைப்படுத்த முடியாது. புவி வெப்பமயமாதல் குறித்து சமூக வலைதளங்களில் பலர் தவறான புரிதல் கொண்டுள்ளனர்.

எகிப்தில் தற்போது 27ஆவது காலநிலை உச்சிமாநாடு நடைபெற்றுவருவதால், காலநிலை மாற்றம் குறித்த தேடல் இணையத்தில் அதிகரித்துள்ளது.

அதே நேரத்தில் இது தொடர்பான தவறான தகவல்களும் அதிகம் பரவிவருகின்றன. அதில் சிலவற்றைப் பார்க்கலாம்.

காலநிலை மாற்றம் என்பது உண்மையல்ல

சிலர் காலநிலை மாற்றம் உண்மையில்லை என்று நம்புகின்றனர். அவர்கள் இந்தப் பிரச்னையை சதிக்கோட்பாடுகளாக கருதுகிறார்கள்.

 

புவி வெப்பமடைதல் என்பது ஒரு ரகசியமான உலகமயக் குழுவால் உருவாக்கப்பட்ட ஒரு அதிநவீன புரளி என்று அவர்கள் நம்பலாம். மற்றவர்கள் இது பணம் சம்பாதிக்கும் திட்டம் அல்லது நமது உரிமைகள் மற்றும் சுதந்திரங்களைக் குறைக்கும் ஒரு மோசமான சூழ்ச்சி என்று நினைக்கலாம்.

ஆனால், இத்தகைய கருத்துகளை ஆதரிக்க எந்த ஆதாரமும் இல்லை.

99 சதவிகித விஞ்ஞானிகள் சில மதிப்பீடுகளின்படி காலநிலை மாற்றம் உண்மையானது மற்றும் இது மனிதனால் உருவாக்கப்பட்டது என்பதை ஒப்புக்கொள்கிறார்கள்.

1850ஆம் ஆண்டு முதல் உலக சராசரி வெப்பநிலை 1.1 செல்சியஸ் உயர்ந்துள்ளதாக காலநிலை மாற்றத்திற்கான சர்வதேச அரசு குழு (IPCC) கூறுகிறது.

இதன் விளைவாக, தீவிர வானிலை நிகழ்வுகள் மிகவும் தீவிரமடைந்து உலகின் அனைத்துப் பகுதிகளிலும் உயிர்கள் மற்றும் வாழ்வாதாரங்களை அச்சுறுத்துகின்றன.

மனிதர்களின் ஆதிக்கம் வளிமண்டலம், கடல் மற்றும் நிலத்தை வெப்பமாக்கியுள்ளதாக 2021ஆம் ஆண்டின் ஐபிசிசி அறிக்கை கூறுகிறது.

“காலநிலை மாற்றம் தற்போது இங்கு நடந்து கொண்டிருக்கிறது. அதை நம்புவதற்கு இந்தாண்டின் தீவிரமான வானிலை நிகழ்வுகளை நாம் பார்க்க வேண்டும்” என்கிறார் பிரிட்டிஷ் அண்டார்டிக் சர்வேயைச் சேர்ந்த விஞ்ஞானி எல்லா கில்பர்ட்.

காலநிலை மாற்றம் மேற்கத்திய நாடுகளின் பிரச்னை

புவி வெப்பமயமாதலுக்கு கார்பன் டை ஆக்சைடு போன்ற பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வு முக்கிய காரணமாக உள்ளது. இது சூரியனில் இருந்து வெப்பத்தை இழுத்து, பூமியை சூடாக்குகிறது.

அதிகப்படியான உமிழ்வுகளுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி போன்ற பணக்கார நாடுகள் பொறுப்பேற்றுள்ளன.

எனவே ஏழை நாடுகளில் உள்ள பலர் காலநிலை மாற்றத்தை தீர்ப்பதை ஒரு மேற்கத்திய பிரச்னையாக கருதுகின்றனர்.

ஆனால் காலநிலை மாற்றத்திற்கு எல்லைகள் கிடையாது. அது ஏற்கனவே தன்னை வெளிப்படுத்திக் கொண்டுள்ளது. உதாரணமாக, சமீபத்திய பாகிஸ்தான் வெள்ளத்திற்கு புவி வெப்பமடைதல் முக்கிய காரணமாக நம்பப்படுகிறது.

 

 

அதிகப்படியான உமிழ்வு

பட மூலாதாரம்,GETTY IMAGES

காலநிலை மாற்றத்தால் ஏழை நாடுகளே அதிகம் பாதிக்கப்பட உள்ளதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அதற்கான பல காரணங்களில், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள அவர்களிடம் போதுமான திறன் இல்லாததே முக்கிய காரணமாகும்.

"காலநிலை மாற்றம் உலகளாவிய பிரச்னை” என்கிறார் ஜெர்மனியில் உள்ள பான் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் லிசா ஷிப்பர். COP27 உட்பட, காலநிலை தொடர்பான விவாதங்களில் ஏழை நாடுகளின் கருத்துகள் ஏன் கேட்கப்படுகின்றன என்பதற்கு இதுவும் ஒரு காரணமாகும். COP27 மாநாட்டில் காலநிலை நீதி தொடர்பான விவாதத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட உள்ளது.

காலநிலை மாற்றம் நமக்கு நன்மை பயக்கும்

தொடர்ச்சியான குளிர் காலநிலை நிலவும் நாடுகளில் ‘வெப்பமான பூமி’ என்ற யோசனை மேலோட்டமாக பார்க்கும் போது சுவாரசியமான ஒன்றாகத் தெரியலாம்.

ரஷ்ய அதிபர் புடினின் ஒரு கருத்தை உதாரணமாகக் கூறலாம். "வெப்பமான ரஷ்யாவில், மக்கள் குளிர் தாங்கும் உடைகளுக்கு குறைவாக செலவழிப்பார்கள் மற்றும் தானிய அறுவடை அதிகரிக்கும்" என்று 2003ஆம் ஆண்டில் புடின் ஒரு கருத்தை தெரிவித்தார். இந்தப் பார்வை ரஷ்ய சமூக ஊடகங்களில் இன்றும் வெளிப்படுகிறது.

இங்கு பிரச்னை என்னவென்றால், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் எந்தவொரு ஆதாயமும் கிரகம் முழுவதும் ஏற்படும் பெரும் பாதிப்பால் அர்த்தமற்றதாகிறது.

ஐபிசிசியின் மதிப்பீட்டின்படி, இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் புவியின் சராசரி வெப்பநிலை 1.5 செல்சியஸ் அதிகரித்தால், காலநிலை மாற்றத்தால் உலகிற்கு 54 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சேதம் ஏற்படும். இதுவே, 2 செல்சியஸ் அதிகரித்தால் 69 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சேதம் ஏற்படும்.

மத்திய கிழக்கு நாடுகளில் விவசாய நிலங்கள் பாலைவனமாக மாறுவதைக் காணலாம். பசிபிக் தீவு நாடுகள் உயரும் கடல்மட்டத்தின் கீழ் மறைந்து போகலாம். மேலும், பல ஆப்பிரிக்க நாடுகள் உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்படலாம்.

வானிலை வெப்பமாகவும் வறண்டதாகவும் மாறிவருவதால் ரஷ்யா போன்ற குளிர் நாடுகளில் கூட ஏற்கனவே காட்டுத்தீ அடிக்கடி ஏற்படுகிறது.

கடல் மட்டம் உயரவில்லை, இது அலைகளின் செயல்

 

பனிப்பாறைகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் கூற்றுப்படி, அதிகரித்து வரும் பசுமை இல்ல வாயுக்களால் சமீபத்திய தசாப்தங்களில் ஏற்பட்ட வெப்பமயமாதலின் 90 சதவிகிதத்தை கடல்கள் ஏற்கனவே உறிஞ்சிவிட்டன.

இதனால் பனிப்பாறைகள் உருகத் தொடங்கியுள்ளது. மேலும் வெப்பநிலை அதிகரிப்பதால் கடல்களும் விரிவடைகின்றன.

சமூக ஊடகங்களில், காலநிலை மாற்றத்தை சந்தேகிப்பவர்கள் கடல்மட்ட உயர்வை ‘அலைகளின் வேலை’ என்று கூறுவதைப் பார்க்க முடிகிறது.

அலைகளின் எழுச்சி மற்றும் வீழ்ச்சி காலப்போக்கில் சமநிலையை அடையும் சிறிய தினசரி மாற்றங்களைக் குறிக்கின்றன. ஆனால், கடந்த 100 ஆண்டுகளில் மட்டும் உலக கடல் மட்டம் 160 முதல் 210 மிமீ வரை உயர்ந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இது 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியை விட சற்று அதிகம் எனக் கூறும் எடின்பர்க் பல்கலைக்கழக இயற்பியல் பேராசிரியர் கென் ரைஸ், இந்தச் செயல்முறையின் வேகம் அதிகரித்து வருவதாகக் கூறுகிறார்.

இந்த மாற்றம் வெறும் கண்களுக்கு அரிதாகவே தெரிந்தாலும், இது ஏற்கனவே தெளிவான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடல்மட்டம் உயரும்போது கரையோர அரிப்பு துரிதப்படுத்தப்பட்டு வெள்ள அபாயம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

விரைவான நடவடிக்கை எடுக்காவிட்டால், 2100ஆம் ஆண்டின் இறுதியில் கடல் மட்டம் 2 மீ உயரும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இதன் பொருள், தற்போது கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மில்லியன் கணக்கான மக்கள், குறிப்பாக ஆசியாவில் வசிக்கும் மக்கள் விரைவில் தங்கள் பகுதிகளில் வெள்ளம் சூழ்வதையோ அல்லது நீருக்கடியில் இருப்பதைக்கூட பார்க்கலாம்.

இது மிகவும் தாமதம்

காலநிலை மாற்றம் தொடர்பான தலைப்புச் செய்திகளைக் கண்டு கவலைப்படாமல் இருப்பது கடினம். கடைசி வாய்ப்புகள் மற்றும் சிவப்பு எச்சரிக்கைகள் பற்றிய அனைத்து பேச்சுகளும் மிகப்பெரியதாக இருக்கலாம்.

இது, இனி எதுவும் செய்ய முடியாது என்று எண்ணைத்தையும் சிலருக்கு கொடுக்கலாம்.

நமக்கு இரண்டு வழிகள் இல்லை. காலநிலை ஏற்கனவே மாறி வருகிறது. அந்த மாற்றங்களின் தாக்கம் வரவிருக்கும் நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு உணரப்படும்.

ஆனால் ஒரு நல்ல செய்தியும் உள்ளது. முன்னெப்போதும் இல்லாத இந்த நெருக்கடியை எதிர்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பது நமக்குத் தெரிந்திருப்பதற்கு காலநிலை விஞ்ஞானிகளுக்கு நன்றி கூற வேண்டும்.

பசுமை இல்ல வாயு உமிழ்வை நாடுகள் மிகப்பெரும் அளவில் குறைக்க வேண்டும். மேலும், ஏற்கனவே வளிமண்டலத்தில் உள்ள வாயுக்களைக் கைப்பற்றுவதற்கான வழிகளையும் உருவாக்க வேண்டும்.

அரசியல் தலைவர்கள் ஒன்று கூடி பருவநிலை மாற்றத்திற்கு எதிரான அவர்களின் செயல் திட்டங்களை விவாதிக்க நல்ல வாய்ப்பு என்பதால் COP27 போன்ற உச்சிமாநாடுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

நமது பாதிப்பைக் குறைக்க நாம் எடுக்கும் ஒவ்வொரு செயலும் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது என்று கூறும் விஞ்ஞானி கில்பர்ட், நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்பு சுருங்குகிறது, ஆனால் அது இன்னும் இருக்கிறது, அந்த வாய்ப்பை நாம் பயன்படுத்த வேண்டும் என்கிறார்.

https://www.bbc.com/tamil/articles/ck7el8dwdm2o

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கல்வியறிவுள்ள, பல்வேறு தொடர்புகளுள், ஆழுமையுள்ளசுமந்திரனும் சாணக்கியனும் TNA க்குத் தலைமை தாங்கி  வழிநடாத்த வேண்டும்,...👍 ஏனப்பா,.. ஒரு குசும்புக்கு எழுதினாலும் விசுகர் தடியோடதான் நிக்கிறார் கண்டியளோ,..🤣
    • புதிய ஜனாதிபதி அநுரவின் கட்சிக்கு கணிசமான அளவு வாக்குகள் வடக்கு/கிழக்கில் வரும் பொதுதேர்தலில் கிடைக்கலாம். ஆனால் அவை ஆசனத்தை பெறுவதற்கு போதுமானதாக அமையுமா என்பது சந்தேகமே.
    • நாங்கள் சிறுவயதில் காலைக்காட்சி, மாலைக்காட்சி, கடற்கரைக்காட்சி என்று சோதனையில் வந்த கேள்விகளுக்கு ஏற்றமாதிரி கட்டுரை எழுதுவது போலத் தான் இருக்கின்றது இந்த பகிரங்கக் கடிதம்.  இதை எழுதியவர் ஜனாதிபதி தேர்தலை பகிஷ்கரிக்கச் சொன்னவராக இருக்கலாம், இல்லாவிட்டால் இலங்கைச் சிங்கள ஒற்றை ஆட்சிப் பாராளுமன்றம் தேவையில்லை, எங்களின் ஒற்றுமை மட்டுமே முக்கியம், அதை சர்வதேசத்திற்கு காட்டினால் போதும் என்று சொன்னவராக இருக்கலாம். ஒரு அணுக்கமான அரசியல் செய்வோம் என்று சொன்னவராக இருக்கலாம். இன்னும் சில வகைகளும் இருக்கின்றன. ஒவ்வொன்றிலும் நியாயங்கள் இருக்கிறது தானே........... நாங்கள் எழுதிய காலை, மாலை, கடற்கரை காட்சிக் கட்டுரைகள் போலவே. சொன்னவர் யார் என்று தெரிந்தால் தான், இதில் இருக்கும் சொற்களையும், வசனங்களையும் கடந்து, அதில் மறைந்திருக்கும் உட்பொருளை விளங்கிக்கொள்ள முடியும். நித்தியின், ஜக்கியின் மற்றும் பல குருக்களின் பக்தர்களும் இதையே தான் சொல்கின்றனர். குருவின் தனிப்பட்ட வாழ்க்கையை விட்டு விட்டு, குரு சொல்வதை மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள் என்று....... உங்கள் குருக்களே தங்கள் சுகபோக வாழ்க்கைகளுக்காக மட்டுமே பேசிக் கொண்டிருக்கின்றார்கள். இறுதியில் உங்களையும், உங்கள் குடும்பங்களையும் நடுத்தெருவில் நிற்பாட்டுவார்கள் என்று தானே நாங்கள் அவர்களுக்கு எதிர்க் கருத்துகள் சொல்லுகின்றோம். இதை எழுதியவர் கூட அப்படியான ஒருவராக இருக்கலாம். இப்பொழுது பாராளுமன்றம் முக்கியம், அங்கு போவது முக்கியம், அதிகாரம் முக்கியம்............. என்கின்றனர். உண்மையே, இவை எல்லாம் முக்கியம். இவை எப்போதும் முக்கியமானவையாக இருந்தன. அத்துடன், இதைச் சொல்பவர் முன்னர் என்ன சொல்லியிருந்தார் என்று அறிதலும் முக்கியம் தானே............    
    • 👆 Thank God, I have not been so ruthless as the guy above in dealing with relatives. I seem to be fair enough 👇    
    • கொழும்பில் போட்டியிடும் தமிழரசு கட்சி..! பங்காளி கட்சிகளுக்கு கால அவகாசம் இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டமானது பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது நிறைவுக்கு வந்துள்ளது.  இதற்கமைய, ரெலோ மற்றும் ப்ளொட் ஆகிய கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து மூன்று நாட்களுக்குள் தமது முடிவு எட்டப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  அத்துடன், கொழும்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சி போட்டியிடுவதாகவும் இதற்கான வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கு ஒரு குழுவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  அடுத்த கூட்டம்  அதேவேளை, குறித்த விடயங்கள் தொடர்பில் எதிர்வரும் 03ஆம் திகதி மீண்டும் கூட்டம் நடத்தப்பட்டு தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும், நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவு வழங்கியவர்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் கடிதம் ஒன்றை முன்வைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இதன்போது, கிட்டத்தட்ட 2018ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை இடம்பெற்றிருக்க கூடிய அனைத்து விடயங்கள் தொடர்பிலும் விளக்கம் கோர வேண்டுமே தவிர தற்போது நடந்த விடயங்கள் தொர்பில் மாத்திரம் விளக்கம் கோரப்பட கூடாது எனவும் கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், மத்தியக்குழு கூட்டமானது, பல்வேறுபட்ட வாத பிரதிவாதங்களுக்கு மத்தியில் முடிவுக்கு வந்துள்ளது.  அதேவேளை, கூட்டத்திற்கு பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், "தமழிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் காலை முதல் மாலை வரை நடைபெற்றது. இதன்போது ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னரான விடயங்கள் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் கூடி ஆராய்ந்தோம். ஜனாதிபதி தேர்தலில் கட்சி எடுத்த 3 தீர்மானங்களுக்கு மாறாக செயற்பட்டவர்கள் தொடர்பாக ஆராயப்பட்டது. அதிலே அப்படியாக கட்சியின் முடிவை மீறி செயற்பட்டவர்களிடம் விளக்கம் கோருவது என முடிவு எடுக்கப்பட்டது. அரியநேத்திரனை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என பலமான கருத்துக்கள் சொல்லப்பட்டிருந்தாலும், முதலாம் திகதி எடுத்த தீர்மானத்தில் தேர்தலில் இருந்து விலக வேண்டும் என்று கோரியிருந்தோம். அதற்கு அவருடைய விளக்க கடிதத்தில் பதில் சொல்லப்பட்டிருக்கவில்லை. அது காலம் கடந்து கிடைத்தாலும் வாசித்து காட்டப்பட்டது. ஆகவே அது சம்மந்தமாக கேட்டு விட்டு தீர்மானங்களை எடுக்கவுள்ளோம். முக்கிய விடயமாக ஆராயப்பட்டது நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆகும். நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்காக நாங்கள் விசேட அறிவிப்பை மனவுவந்து விடுவதற்கு தீர்மானித்துள்ளோம். அதாவது தமிழ் தேசிய பரப்பில் இருக்கிற கட்சிகள் விசேடமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெவ்வேறு காலகட்டங்களில் விலகிப் போன கட்சிகள் திரும்பவும் எங்களுடன் சேர்ந்து தேர்தலை முகங்கொடுங்க விரும்பினால் வரமுடியும். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகிச் சென்றவர்கள் வருகிற தேர்தல் சவால் மிக்க தேர்தலாக இருப்பதால் இணங்கி வந்து இந்த தேர்தலில் போட்டியிட முடியும். தமிழரசுக் கட்சியின் பெயரிலும், அதன் சின்னத்திலும் தான் கடந்த காலங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக போட்டியிட்டோம். அந்த விதமாக இந்த தேர்தலில் போட்டியிட நாங்கள் தீர்மானித்துள்ளோம். அப்படியாக அந்த அழைப்பை ஏற்று வந்தால் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வேட்ப்பாளர்களை நிறுத்துவது தொடர்பில் கலந்துரையாடி முடிவு எடுப்போம். அப்படி அவர்கள் வராவிட்டால் இலங்கை தமிழரசுக் கட்சி தனித்து போட்டியிடும். திருகோணமலை, அம்பாறை மாவட்டங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ளோம். அங்கே ஒரு தமிழ் உறுப்பினர் மட்டும் தான் தெரிவு செய்யப்படும் நிலை இருப்பதால் அந்த விடயங்களை அந்த மாவட்ட கிளைகளுடன் பேசி முடிவுக்கு கொண்டு வரலாம் என தீர்மானித்துள்ளோம். அதற்கு மேலதிகமாக இம்முறை வடக்கு - கிழக்குக்கு வெளியே உள்ள கொழும்பு உட்பட தமிழர்கள் வாழும் ஏனைய மாவட்டங்களிலும் போட்டியிட பரிசீலனை செய்யப்பட்டுள்ளது. விடுக்கப்பட்டுள்ள அழைப்பு  எதிர்வரும் 4 ஆம் திகதி வேட்புமனுத் தாக்கல செய்தல் ஆரம்பிக்கவுள்ளதால் பிரிந்து சென்றவர்கள் மீள வருவது தொடர்பாக மிக விரைவாக அவர்களது பதிலை எதிர்பார்க்கின்றோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்ற கட்சிகள் வந்து இணைவதற்கு அழைப்பு விடுத்துள்ளோம். அதற்கு வெளியே வேறு கட்சிகள் வந்தால் அதனை பரிசீலிக்கலாம். ஏனெனில் எங்களது கட்சியில் இருந்து பிரிந்து போனவர்களது கட்சியும் மேலும் பிரிந்து இருக்கின்றது. அவர்களை உள்வாங்கும் போது சில ஆட்சேபனைகள் இருக்கும். அது பற்றி பேசியே முடிவு எடுப்போம். ஆனால் தீர்மானமாக அழைப்பு விடுப்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்களை வாருங்கள் சேர்ந்து பயணிப்போம் என்று புன்முறுவலோடு அவர்களை அழைக்கின்றோம். புதியவர்களை தேர்தலில் உள்வாங்குவது, இளைஞர்களை உள்வாங்குவது தொடர்பிலும் நீண்ட நேரம் பேசினோம். அதனை சரியாக நாம் அணுகுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. மக்களிடத்தில் இது தொடர்பான பாரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. விசேடமாக தேசிய மக்கள் சக்தி பெற்ற வெற்றிக்கு பிற்பாடு அத்தகைய எண்ணப்பாடு எங்களது பிரதேசங்களிலும் உயர்ந்துள்ளது. அது நல்ல விடயம். இளைஞர்கள், ஆளுமையுள்ளவர்கள், படித்தவர்கள், பெண்கள் என அவர்களுக்கான பிரதிநித்துவத்தை உறுதி செய்யும் வகையில் தான் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். அதற்கான நியமனக்குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு இறுதி முடிவுகளை எடுக்கும். ஆனால் மாவட்ட ரீதியாக கலந்து ஆலோசித்து தான் அந்த முடிவுகள் எடுக்கபடும். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்கள் சிலர் எம்முடன் பேசியுள்ளார்கள். தம்முடன் இணையுமாறு அவர்கள் அழைப்பு எதனையும் விடவில்லை. நாங்கள் பிரதானமான தமிழ் கட்சி. இது வரைக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக வேறு கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட்ட போது தேர்தலுக்கு முகம் கொடுத்தது இலங்கை தமிழரசுக் கட்சியின் பெயரிலும், அதன் சின்னத்திலுமே தான். அதே முறையில் நாங்கள் இந்த தேர்தலையும் சந்திப்பதற்கு பிரதான கட்சி என்ற வகையில் நாங்கள் அவர்களுக்கும் அழைப்பு விடுகின்றோம்” என குறிப்பிட்டுள்ளார்.  https://tamilwin.com/article/ilankai-tamil-arasu-katchi-meeting-in-colombo-1727533785?itm_source=parsely-detail
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 3 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.