Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கேரளாவில் வைரலான ஆட்சியரின் செயல்: குழந்தையைக் கையில் ஏந்திக்கொண்டு மேடையில் பேசியது ஏன்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கேரளாவில் வைரலான ஆட்சியரின் செயல்: குழந்தையைக் கையில் ஏந்திக்கொண்டு மேடையில் பேசியது ஏன்?

 

கேரளாவில் குழந்தையோடு மேடையில் பேசிய ஆட்சியர்

பட மூலாதாரம்,COURTESY: DIVYA S IYER

4 மணி நேரங்களுக்கு முன்னர்

கடந்த வாரம், கேரளாவில் பெண் மாவட்ட ஆட்சியர் ஒருவர் தனது 3 வயது மகனை தனது கைகளில் வைத்துக்கொண்டு ஒரு நிகழ்வில் உரையாற்றிய காணொளி வைரலாகப் பரவியதோடு, சமூக ஊடகங்களில் கலவையான விவாதத்தையும் தொடக்கி வைத்தது. டெல்லியில் உள்ள பிபிசி செய்தியாளர் கீதா பாண்டே இது குறித்து அலசுகிறார்.

பல ஆண்டுகளுக்கு முன்பு என் மகன் குழந்தையாக இருந்தபோது, நான் சில நேரங்களில் அவனை வேலைக்குச் செல்லும்போது, குறிப்பாக வார இறுதி அல்லது விடுமுறை நாட்களின்போது உடன் அழைத்துச் செல்வேன்.

நான் பல நாட்களாகச் சந்திக்க முயன்ற அமைச்சருடைய அலுவலகம், நேர்காணலுக்கான நேரத்தை விடுமுறை நாளில் கொடுத்தது. நான் உடனடியாக அதை ஏற்றுக்கொண்டு, என் மகனையும் அமைச்சரை நேர்காணல் செய்யச் சென்றபோது உடன் அழைத்துச் சென்றேன்.

ஒரு சிறுவன் தனது அலுவலகத்திற்கு வந்ததைக் கண்டு அமைச்சர் மகிழ்ச்சியடைந்தார். அவர் என் மகனுடன் சிறிது நேரம் பேசினார். மேலும் அவனுக்கு சிற்றுண்டியும் பானமும் கொண்டு வருமாறு தனது ஊழியர்களிடம் கூறினார்.

 

பல இந்திய நிறுவனங்கள் அதிக பெண்களைப் பணியிடத்தில் தக்க வைக்க குழந்தைகளுக்கு இசைவான கொள்கைகளை அறிமுகப்படுத்துகின்றன. மேலும் அமெரிக்கா, கனடா போன்ற சில நாடுகளில் குழந்தைகளைப் பணியிடத்திற்கு அழைத்து வர பெற்றோர்கள் ஊக்குவிக்கப்படும் தேசிய தினத்தைக் கொண்டாடுகிறார்கள்.

பத்தனம்திட்டா மாவட்டத்தின் ஆட்சியராகப் பணியாற்றும் திவ்யா எஸ் அய்யர், அக்டோபர் 30ஆம் தேதி மாலை திரைப்பட விழா ஒன்றின் நிறைவு விழாவிற்குத் தனது குழந்தையை அழைத்துச் சென்றபோது எழுந்துள்ள விவாதம் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

திவ்யா எஸ் அய்யர் என்னிடம், இது தனது மகனை உடன் அழைத்துச் சென்ற முதல் பணி நிகழ்வு இல்லை என்று கூறினார்.

“அது நான் வழக்கமாக மல்ஹருடன் நேரத்தைக் கழிக்கும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் மல்ஹரை அழைத்துச் சென்றேன். அரை மணி நேரத்திற்கு மேலாக வெளியில் விளையாடிக் கொண்டிருந்தார்ன். மேடையில் நான் இருப்பதைக் கண்டதும் என்னை நோக்கி ஓடி வந்தான். அதற்கு அடுத்து நடந்தது ஒரு தாய் மற்றும் குழந்தையின் தன்னிச்சையான எதிர்வினை,” என்று அவர் கூறினார்.

 

ஆட்சியர் திவ்யா எஸ் அய்யர்

பட மூலாதாரம்,CREDIT: ANANTHAKRISHNAN

அந்தக் காணொளியை முகநூலில் முதலில் பகிர்ந்த மாநிலங்களவை துணை சபாநாயகரும் விழாவின் முக்கிய அமைப்பாளருமான சித்தயம் கோபகுமார், “மல்ஹர் இந்த நிகழ்ச்சிக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொண்டு வந்துள்ளார்,” என்று எழுதினார்.

மகிழ்ச்சியான குறுநடை போடும் குழந்தை மேடையில் ஓடுவதைப் பலரும் சமூக ஊடகங்களில் பாராட்டிப் பேசினர். ஆனால் சிலர் அதில் உடன்படவில்லை. திவ்யா எஸ் அய்யரின் நடத்தை “பொருத்தமற்றது” என்றும் அவர் தனது குழந்தையை அழைத்துச் சென்று “நிகழ்ச்சியை அற்பமாக்கினார்” என்றும் கூறி வருகின்றனர்.

“இந்த எதிர்வினைகள் எதிர்பாராதவையாக இருந்தன,” என்கிறார் ஆட்சியர் திவ்யா எஸ் அய்யர். மேலும், “இதுவோர் அதிகாரபூர்வ நிகழ்வல்ல. இதில் இரண்டு பார்வைகள் இருக்கும் என்று நினைக்கவில்லை,” என்றும் விளக்கினார்.

“குழந்தைகள் சாதாரணமாகச் செல்லாத இடங்களுக்கு அழைத்துச் செல்வது அவர்களின் எல்லையை விரிவுபடுத்த உதவுகிறது. அவர்கள் ஆரோக்கியமான முறையில் வளர உதவுகிறது என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

“குழந்தைப் பருவம் என்பது ஊதப்பட்ட பலூன்கள், டெடி பேர்களைப் பற்றியது மட்டுமில்லை. இது நிஜ வாழ்க்கை அனுபவங்களைப் பற்றியது. என் மகன் என்னை அதிகம் பார்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் அவனுடைய தாய் என்பதையும் தாண்டி, நான் ஒரு பெண் என்பதையும் ஓர் அதிகாரி என்பதையும் அவர் உணர வேண்டும்,” என்று அவர் கூறினார்.

பெரும்பாலான எதிர்வினைகள் மிகவும் ஊக்கமளிப்பதாக இருந்தது. ஒருவேளை, “ஒவ்வொரு குடும்பமும் இதை எதிர்கொள்வது” அதற்குக் காரணமாக இருக்கலாம் என்றும் கூறினார்.

“நான் ஒவ்வொரு நாளின் 24 மணிநேரமும் ஓர் அதிகாரி. அதேபோல் ஒவ்வொரு நாளின் 24 மணிநேரமும் நான் ஒரு தாயும்கூட. நமக்குப் பல பொறுப்புகள் இருக்கின்றன. அவற்றில் எதையுமே என்னால் புறக்கணிக்க முடியாது. இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து பணி-வாழ்க்கை சமநிலையைக் கண்டறிய வேண்டும். இதை ஏற்றுக்கொள்வது ஏன் சிலருக்குக் கடினமாக உள்ளது என்பதைத்தான் நான் புரிந்துகொள்ள முயல்கிறேன்,” என்றார்.

இதுவோர் அலுவல்பூர்வ நிகழ்வு என்ற தவறான எண்ணத்தாலும் அதிகாரப் பதவிகளில் இருக்கும் பெண்க ஒரு குறிப்பிட்ட பாணியில் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படும் பாலினரீதியிலான பார்வையாளும் இந்த எதிர்வினை வந்திருக்கலாம் என்று கூறினார்.

 

பணியிடத்திற்குக் குழந்தைகளை அழைத்துச் செல்லுதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

“வன்மம் ஒருபுறம் இருக்க, இந்த சர்ச்சை நமது சமூகத்தில் பணியாற்றும் தாய்மார்களின் அவல நிலையைப் பற்றிய் ஒரு வெளிப்படையான விவாதத்திற்கு வழிவகுத்தது. இதனால் இந்தப் பிரச்னையைப் பற்றி அதிகக் கவனம் ஏற்படுத்தப்பட்டது,” என்று சபரிநாதன் இந்தியன் எக்ஸ்பிரஸில் குறிப்பிட்டுள்ளார்.

நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் தனது குழந்தையை ஐ.நா. பொதுச் சபைக்கு அழைத்து வந்ததையும் ஆஸ்திரேலிய செனட்டர் லாரிசா வாட்டர்ஸ் தனது குழந்தைக்கு நாடாளுமன்றத்தில் தாய்ப்பால் கொடுத்ததையும் சுட்டிக்காட்டி, “பணியிடங்கள் மாறவேண்டும், இதனோடு உடன்பட வேண்டும்,” என்று எழுதினார்.

ஆட்சியர் திவ்யா எஸ் அய்யரின் முடிவு குழந்தை பராமரிப்புக்கான தேவையால் பேசப்படவில்லை என்றாலும், இது உழைக்கும் பெண்களின் பிரச்னைகள், குறிப்பாக தினக்கூலி தொழிலாளர்கள், வீட்டு வேலை செய்பவர்கள் போன்ற தங்கள் குழந்தைகளை பணியிடத்திற்கு தினமும் கொண்டு செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஏழை மக்களின் பிரச்னைகளைப் பற்றிய விவாதத்திற்கு வழிவகுத்துள்ளது.

“இது மிகவும் நியாயமற்றது” என்கிறார் வரலாற்றாசிரியரும் பெண்ணிய ஆய்வாளருமான ஜே தேவிகா. “சமூக ஊடகங்களில் அவர் ஏன் இவ்வளவு விமர்சனங்களைப் பெற்றார், ஏன் இதுகுறித்து விமர்சிக்கிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை? இது அதிகாரபூர்வ நிகழ்வு இல்லை. பிறகு ஏன் இந்த வம்பு?”

 

பணியிடத்திற்குக் குழந்தையை அழைத்துச் செல்லுதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த சர்ச்சை, பெண்கள் எதைச் செய்தாலும் அவர்கள் மதிப்பீடு செய்யப்படுகிறார்கள் என்பதைக் காட்டுகிறது என்று அவர் கூறுகிறார்.

“முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை குழந்தைகளின் தேவைகளுக்கு மதிப்பளிக்காத தாய் என்று விமர்சித்த காலம் நினைவிருக்கிறதா? இப்பொது திவ்யா மிகவும் உணர்ச்சிமிக்க தாய் என்று ட்ரோல் செய்யப்படுகிறார்.

“பெண் கட்டுமானத் தொழிலாளர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு வேலைக்குச் செல்வதைக் கண்டு இந்த விமர்சகர்கள் அனைவரும் கோபமடைவதைப் பார்க்க விரும்புகிறேன். அவர்கள் தங்கள் கோபத்தை அத்தகைய அட்டூழியங்களை நோக்கிச் செலுத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன்,” என்று கூறுகிறார் தேவிகா.

இருப்பினும், பிரபல பாடலாசிரியர் ராஜீவ் அலுங்கல் போன்ற சிலர், “ஆட்சியர் மேடையில் நடந்துகொள்ள வேண்டிய விதத்தில் நடந்து கொள்ளவில்லை,” என்று கூறுகின்றனர்.

ராஜீவ் அலுங்கல் ஒரு தொலைக்காட்சி சேனலிடம், “நான்கு வயதிலிருந்தே தனது மகனை பொது நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் செல்கிறேன். ஆனால், நான் அவனை உட்கார வைத்துவிட்டு நகர வேண்டாம் எனக் கூறுவேன்,” என்று கூறினார்.

“இது ஓர் உரையாடலைத் தொடக்கியுள்ளதே இதில் கிடைத்த மிகப்பெரிய நல்ல விளைவு,” என்று ஆட்சியர் திவ்யா எஸ் அய்யர் கூறுகிறார்.

https://www.bbc.com/tamil/articles/c4nrnpwpnwvo

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.