Jump to content

அமெரிக்காவில் நடு வானில் மோதி, விழுந்து நொறுங்கிய விமானங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் நடு வானில் மோதி, விழுந்து நொறுங்கிய விமானங்கள்

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,ஜார்ஜ் ரைட்
  • பதவி,பிபிசி நியூஸ்
  • 31 நிமிடங்களுக்கு முன்னர்
 

அமெரிக்காவில் விமான விபத்து

பட மூலாதாரம்,TWITTER

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நடைபெற்ற விமான கண்காட்சியில் இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தைச் சேர்ந்த இரண்டு விமானங்கள் மோதி விபத்துக்குள்ளாகின.

இரண்டு விமானங்களும் தாழ்வான உயரத்தில் ஒன்றையொன்று மோதுவதையும், அதில் ஒரு விமானம் பாதியாக உடைவதையும் காணொளிகளில் பார்க்க முடிகிறது. அவை தரையில் விழும்போது தீப்பிழம்பு ஏற்பட்டதையும் காண முடிகிறது.

டல்லாஸ் அருகே நடைபெற்ற ஒரு நினைவு கூறல் நிகழ்வில் இரண்டு விமானங்களும் பங்கேற்றிருந்தன. அதில் ஒரு விமானம் போயிங் பி-17 ஃப்ளையிங் ஃபோர்டஸ் வகையைச் சேர்ந்தது.

இரு விமானங்களிலும் எத்தனை பேர் இருந்தனர், அதில் இருந்த எவரேனும் உயிர் பிழைத்தார்களா என்ற விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை.

 

இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தப்படும் என அமெரிக்காவின் ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் தெரிவித்துள்ளது.

அமரிக்க முன்னாள் ராணுவ வீரர்களைக் கௌரவிப்பதற்காக இந்த விழா ஆண்டுதோறும் நடைபெறும். மூன்று நாள் நடைபெறும் இந்த நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய நிலையில், 4,000 முதல் 6,000 மக்கள் இதை கண்டு ரசித்தார்கள்.

டல்லாஸ் மேயர் எரிக் ஜான்சன் இதை மோசமான துயரம் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

 

இரண்டாம் உலகப்போர் காலகட்ட விமானங்கள் மோதி விபத்து

பட மூலாதாரம்,GIANCARLO@GIANKAIZEN

 

படக்குறிப்பு,

இரண்டாம் உலகப்போர் காலகட்ட விமானங்கள் மோதி விபத்து

“காணொளிகள் இதயத்தை நொறுங்கச் செய்கின்றன. இன்று நம் குடும்பங்களை மகிழ்விக்கவும், கற்பிக்கவும் வானில் ஏறிய ஆன்மாக்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் உறுதி செய்யப்படவில்லை எனத் தெரிவித்த எரிக் ஜான்சன், தரையில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் கூறினார்.

சனிக்கிழமை விமான சாகச கண்காட்சியில் பல விமானங்கள் பங்கேற்க இருந்ததாக இந்த நிகழ்வின் இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.

இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனிக்கு எதிரான வான்வழிப் போரில் வெற்றி பெறுவதில் பி-17 விமானம் முக்கிய பங்கு வகித்தது.

மற்றொரு விமானம், பி-63 கிங்கோப்ரா வகையைச் சேர்ந்தது. இந்தப் போர் விமானம் அதே போரில் சோவியத் ஒன்றியத்தின் விமானப்படையால் பயன்படுத்தப்பட்டது.

https://www.bbc.com/tamil/articles/c0k5rjdrnxzo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விமான சாகசத்தின் போது விபத்து : 6 பேர் பலி - அமெரிக்காவில் சம்பவம்

By DIGITAL DESK 2

13 NOV, 2022 | 01:29 PM
image

அமெரிக்காவில் 2ஆம் உலக போர் விமானங்களின் சாகச நிகழ்ச்சியில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்திருக்க கூடும் என அஞ்சப்படுவதாக  டல்லாஸ் நகர மேயர் எரிக் ஜோன்சன் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் டல்லாஸ் நகரில் விமான படை சார்பில் 2ஆம் உலக போர் காலத்தின் விமானங்கள் அடங்கிய சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இதில் பங்கேற்ற, பெரிய ரக போயிங் பி-17 குண்டுகள் வீசும் விமானம் மற்றும் ஒரு சிறிய ரக பெல் பி-63 கிங்கோப்ரா என்ற விமானமும் விண்ணில் பறந்து சென்றன.

BREAKING: Mid-air collision of B-17 and P-63

இந்த இரு விமானங்களும் குறிப்பிட்ட அடி உயரத்தில் பறந்து சென்றபோது, நடுவானில் திடீரென மோதி விபத்தில் சிக்கின. இந்த சம்பவத்தில் நேராக முன்னோக்கி சென்ற போயிங் விமானத்தின் மீது அதன் இடதுபுறத்தில் சென்று சிறிய விமானம் மோதியுள்ளது.

இரண்டு விமானங்களும் விபத்தில் துண்டுகளாக உடைந்து சிதறின. தொடர்ந்து தரையில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்வையாளர்களாக இருந்தவர்கள் வீடியோவாக எடுத்துள்ளனர். பலர் அதிர்ச்சியில் உறைந்தனர்.

எனினும், விமானத்தில் இருந்த விமானிகளின் நிலை என்னவென தெரியவில்லை என டல்லாஸ் மேயர் எரிக் ஜோன்சன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இரண்டும் போர் விமானங்கள் வகையை சேர்ந்தவை. இதில், போயிங் விமானம், ஜெர்மனிக்கு எதிராக இரண்டாம் உலக போரில் வெற்றி பெற முக்கிய பங்காற்றிய, 4 என்ஜின்கள் கொண்ட, குண்டு மழை பொழியும் விமான வகையாகும்.

Dallas-Airshow-Crash-02.jpg

இவற்றில் மற்றொரு சிறிய விமானமும், போர் விமானமாகும். இரண்டாம் உலக போரின்போது, தயாரிக்கப்பட்ட இந்த விமானம் சோவியத் விமான படையால் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

இந்த விமான சாகச நிகழ்ச்சியில் 40-க்கும் கூடுதலான, 2ஆம் உலக போர் காலத்து விமானங்கள் பங்கேற்றன. இதுபற்றி விமான படையை சேர்ந்த பெண் செய்தி தொடர்பாளர் லீ பிளாக், ஏ.பி.சி. செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, போயிங் ரக விமானத்தில் 5 பேர் மற்றும் சிறிய விமானத்தில் ஒருவர் என மொத்தம் 6 பேர் பயணித்துள்ளனர் என நம்பப்படுகிறது என கூறியுள்ளார்.

இதனால், இந்த 2ஆம் உலக போர் விமானங்களின் வான்சாகச நிகழ்ச்சியில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்திருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

விமான விபத்து வீடியோக்கள் மனது நொறுங்கும் வகையில் உள்ளன. நமது குடும்பத்தினரை மகிழ்விப்பதற்காகவும், அதுபற்றிய கல்வியறிவை புகட்டுவதற்காகவும் விண்ணுக்கு பறந்து சென்றவர்களின் ஆன்மாவுக்காக வேண்டி கொள்ளுங்கள் என மேயர் ஜோன்சன்  தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

https://www.virakesari.lk/article/139871

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.