Jump to content

மோசமான வறட்சியில் சோமாலியா : 3 இலட்சம் பேர் உயிரிழக்கலாம் என அச்சம் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மோசமான வறட்சியில் சோமாலியா :  3 இலட்சம் பேர் உயிரிழக்கலாம் என அச்சம் !

By DIGITAL DESK 2

16 NOV, 2022 | 09:58 AM
image

2011 ஆம் ஆண்டு சோமாலியாவில் ஏற்பட்ட பஞ்சத்தில் 10 இலட்சம் பேர் வரை உயிரிழந்தனர்.

அதேபோன்ற வறட்சி நிலையை சோமாலியா இந்த ஆண்டும் எதிர்கொண்டுள்ளது.

எதிர்வரும் மாதங்களில் சோமாலியாவின் நிலைமை மேலும் மோசமாகலாம் என ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், இவ்வாண்டு டிசம்பருக்குள் சோமாலியாவில் 3 இலட்சம் பேர் வரை உயிரிழக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

வரலாற்றில் பண்டைய எகிப்து உள்ளிட்ட நாடுகளுடன் ஏற்றுமதி செய்து செல்வ வளமிக்க நாடாகவே சோமாலியா இருந்திருக்கிறது.

ரோமானிய அரசுகளுக்கு முந்தைய வரலாற்றை சோமாலியா கொண்டிருந்தது என்றாலும், காலப்போக்கில் போர்கள், நோய்கள், வறட்சி காரணமாக சோமாலியா தனது வளத்தை இழந்து பொருளாதாரத்தில் பின்தங்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டது.

ஆனால், சோமாலியாவின் தற்போதைய நிலை என்பது அந்நாடு சந்தித்துக் கொண்டிருக்கும் மோசமான வறட்சியாகவே பார்க்கப்படுகிறது.

சோமாலியாவில் சுமார் 70 இலட்சம் மக்கள் மனிதாபிமான உதவிகளுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இலட்சக்கணக்கான குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில்தான் சர்வதேச நாடுகளின் உதவியை சோமாலியா கோரியுள்ளது.

somalia-05.jpg

நீருக்காக காத்திருக்கும் சோமாலியா மக்கள்

சோமாலியாவின் வறட்சிக்கு காரணம் என்ன ? - ஆபிரிக்க கண்டத்தின் கொம்பு பகுதியில் அமைந்துள்ள சோமாலியாவில், நிலையான அரசு அமையாதது, கடந்த நான்கு வருடங்களாக பருவமழை பெய்யாமல் தவறியது வறட்சிக்கு முக்கியக் காரணமாக பார்க்கப்படுகிறது.

வறட்சியினால் சோமாலியாவில் பயிர்களின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. சோமாலியாவின் முக்கிய மேய்ச்சல் விலங்குகளான ஒட்டகம், ஆடு மற்றும் மாடுகள் சாப்பிடுவதற்கு போதிய தாவரங்களும் தண்ணீரும் இல்லாமல் போகின. இதன் பொருட்டே லட்சக்கணக்கான கால்நடைகள் பலியாகின.

காலநிலை மாற்றத்தால் மிக மோசமாக பாதிக்கப்படும் நாடுகளில் சோமாலியாவும் ஒன்று. இதனாலேயே வறட்சியினால் சோமாலியா மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது.

சோமாலியாவின் நிலப்பரப்பு மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில், மையப் பகுதிகள் கிளர்ச்சியாளர்களால் தன்னிச்சையாக செயல்படுகின்றன.

இதனால் நிவாரண உதவிகளை சோமாலியாவின் அனைத்துப் பகுதிகளுக்கு கொண்டு செல்ல முடியாத சூழலில் சோமாலியா அரசு உள்ளது என்பது அந்நாடு எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

கடந்த 40 வருடங்களில் இல்லாத அளவு வறட்சியினால் குழந்தைகள் மரணம் அதிகரித்து வருவதாக சோமாலிய அதிகாரிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

மேலும் ரஷ்யா - யுக்ரைன் போர் காரணமாக சோமாலியாவுக்கு சர்வதேச நாடுகளிலிருந்து கிடைக்கும் நிதி உதவிகள் கிடைப்பதில் தாமதம் நீடிக்கின்றது.

சோமாலியா எதிர் கொண்டுள்ள இந்த சூழல் விரைவில் மாற வேண்டும் என்று ஐ. நா.வின் சர்வதேச மனித உரிமை அமைப்பும் கோரிக்கை விடுத்துள்ளது.

https://www.virakesari.lk/article/140159

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோமாலியா வறட்சி: இரண்டு சகோதரிகளின் உயிரைக் காப்பாற்ற போராடும் சிறுவன்

 

தாஹிர்

பட மூலாதாரம்,BBC/ ED HABERSHON

 

படக்குறிப்பு,

தாஹிர்

46 நிமிடங்களுக்கு முன்னர்

தாஹிரின் சகோதரர் பசியால் இறந்துவிட்டார். தற்போது அவருடைய இரண்டு சகோதரிகள் நோய் மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் போராடிக்கொண்டுள்ளனர். கடந்த 40 ஆண்டுகளாக மிக மோசமான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள சோமாலியாவிலிருந்து வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளான ஒரு குடும்பத்தை மீண்டும் சந்திக்க பிபிசியின் ஆண்ட்ரூ ஹார்டிங் பைடோவாவுக்கு சென்றார்.

எச்சரிக்கை - இந்தக் கட்டுரையில் உள்ள சில விஷயங்கள் உங்களுக்கு சங்கடத்தைத் தரலாம்.

பதினோரு வயது தாஹிர் பைடோவாவின் எல்லையில் இருக்கும் தன்னுடைய குடிசை வீட்டில் இருந்து பிரதான சாலைக்கு அருகில் உள்ள தகரத்தால் மேற்கூரை போடப்பட்டுள்ள பள்ளிக்குச் செல்கிறார். தன்னிடம் உள்ள ஒரே சட்டை மற்றும் கால் சட்டையை அவர் அணிந்துள்ளார். மேலும் அவர் கையில் ஒரு புதிய புத்தகம் உள்ளது.

பள்ளியின் ஒரே ஆசிரியரான அப்துல்லா அகமது, கரும்பலகையில் வாரத்தின் ஆங்கில நாட்களை எழுதுகிறார். தாஹிரும் அவருடைய 50 வகுப்பு தோழர்களும் ‘சனி, ஞாயிறு, திங்கள்...’ என்று சத்தமாக வாசிக்கிறார்கள்.

 

சில நிமிடங்களுக்கு குழந்தைகள் உற்சாகமாக இருந்தனர். ஆனால், விரைவில் அவர்கள் கொட்டாவி விடவும் இருமவும் தொடங்கினர். பசி மற்றும் உடல்நலக் குறைபாட்டின் அறிகுறிகளான இவை, பைடோவாவைச் சுற்றியுள்ள பாறை நிலம் முழுவதும் கடுமையான சத்தம் போல எதிரொலித்தது. 40 ஆண்டுகளாக சோமாலியாவைத் தாக்கிய மிக மோசமான வறட்சியால் இடம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு சமீபத்திய மாதங்களில் பைடோ அடைக்கலம் கொடுத்துள்ளது.

"இந்தக் குழந்தைகளில் குறைந்தது 30 குழந்தைகள் காலை உணவை உட்கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். சில சமயங்களில் தங்கள் பசியைச் சொல்ல என்னிடம் வருகிறார்கள்" என்கிறார் அகமது.

 

சோமாலியா பள்ளி

பட மூலாதாரம்,BBC/ ED HABERSHON

 

படக்குறிப்பு,

சோமாலியா பள்ளி

இந்தக் குழந்தைகள் கவனம் செலுத்துவதற்கு அல்லது வகுப்பிற்கு வருவதற்கு கூட சிரமப்படுவதாகவும் அவர் கூறுகிறார்.

ஆறு வாரங்களுக்கு முன்பு, தெற்கு சோமாலியாவின் இந்தப் பகுதிக்கு நாங்கள் சென்றபோது, தங்கள் குடிசைக்கு வெளியே தாய் ஃபாத்துமாவின் அருகில் அமர்ந்து, தாஹிர் அழுதுகொண்டிருந்தார்.

அதற்கு சில நாட்களுக்கு முன்பு, அவரது தம்பி சலாத் வறண்டு கிடக்கும் கிராமத்தில் இருந்து பைடோவாவுக்குச் செல்லும் வழியில் பட்டினியால் இறந்தார்.

இங்கிருந்து சில மீட்டர் தூரத்தில்தான் சலாத் அடக்கம் செய்யப்பட்டார். தற்போது அந்த இடத்தைச் சுற்றி அடைக்கலம் தேடி புதிதாக வந்தவர்கள் கட்டிய குடிசைகள் உள்ளன.

 

மகன் மற்றும் மகள்களுடன் ஃபாத்துமா

பட மூலாதாரம்,BBC/ ED HABERSHON

 

படக்குறிப்பு,

மகன் மற்றும் மகள்களுடன் ஃபாத்துமா

தன்னுடைய சகோதரிகளைப் பற்றி தான் கவலைப்படுவதாக தாஹிர் கூறுகிறார். கடுமையாக இருமிய ஆறு வயது மரியம், தனக்கு தலைவலிப்பதாக கூறினார். அருகே நான்கு வயது மாலியூன் சோம்பலாக அமர்ந்திருந்தார்.

"இவள் உடல் சூடாக இருக்கிறது. இவளுக்கு அம்மை இருப்பதாக நான் நினைக்கிறேன். இவர்கள் இருவருக்கும் அம்மை இருக்கலாம்" என்று ஃபாத்துமா மாலியூனின் நெற்றியில் கை வைத்தார்.

ஊட்டச்சத்து குறைபாட்டால் நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமடைந்த பல இளம் குழந்தைகள் சமீப மாதங்களில் பைடோவாவில் பரவிய தட்டம்மை மற்றும் நிமோனியாவிற்கு பலியாகினர்.

பைடோவாவின் மாகாண மருத்துவமனையில், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தீவிர சிகிச்சை வார்டில் உள்ள உடல் மெலிந்த குழந்தைகளின் கைகளில் மருந்துகளையும், மூக்கில் ஆக்ஸிஜன் குழாய்களையும் சொருகுகிறார்கள்.

பல குழந்தைகளின் கை மற்றும் கால்களில் கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டது போன்று கருமையாகவும் கொப்புளமாகவும் இருந்தன. இது நீண்ட நாள் பட்டினியின் கடுமையான எதிர்வினை.

 

சோமாலியா குழந்தை

பட மூலாதாரம்,BBC/ ED HABERSHON

"எங்களுக்கு கூடுதலாக சில உதவிப்பொருட்கள் கிடைத்துள்ளன. ஆனால் அவை போதுமானதாக இல்லை" என்கிறார் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் அப்துல்லாஹி யூசுப்.

"தற்போது உலகம் சோமாலியாவின் வறட்சியைக் கவனிக்கிறது. சர்வதேச நன்கொடையாளர்கள் இங்கு வருகை தருகிறார்கள். இதற்கு எங்களுக்கு போதுமான உதவி கிடைக்கிறது என்று அர்த்தமல்ல. அது விரைவில் நடக்கும் என்று நம்புகிறேன். இது நம்பிக்கை இழந்த சூழல்" என்றும் அவர் கூறுகிறார்.

ஆறு வாரங்களுக்கு முன்பு அவர் நிலைமை அச்சுறுத்துவதாகக் கூறினார். ஆனால், இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை சற்று குறைந்திருப்பதாக அவர் கூறுகிறார். சில நாட்களாக பெய்த மழை குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதைவிட பயிர் செய்வதில் சில குடும்பங்களின் கவனத்தைத் தூண்டியிருக்கலாம் என்றும் அவர் கூறுகிறார்.

மோசமடையும் சூழல்

மீண்டும் முகாமிற்கு திரும்புவோம், பொதுக் குழாயில் இருந்து ஒரு பிளாஸ்டிக் கேனில் பிடித்த தண்ணீரை ஃபாத்துமா வீட்டிற்கு கொண்டுவந்தார். தாஹிர் ஒரு கிண்ணத்தை சுத்தம் செய்வதற்காக குடிசையிலிருந்து வெளியே வருகிறார்.

"என் பையன் எனக்குப் பெரிய உதவி. அவன் பெண் குழந்தைகளுக்கு நிறைய உதவி செய்கிறான்" என்கிறார் ஃபாத்துமா.

அவர் தண்ணீரைக் கொதிக்க வைக்கும்போது, அவருடைய தொலைபேசி ஒலித்தது. 60 வயதான அவர் கணவர் அதான் நூர், இஸ்லாமிய போராளிக் குழுவான அல்-ஷபாப்பின் கட்டுப்பாட்டில் இருக்கும் அவர்களுடைய கிராமத்தில் இருந்து அழைத்தார்.

அவருடன் பேசி முடித்ததும், “அவர் சோளம் பயிரிட்டிருப்பதாக கூறினார். அவர் நன்றாக இருக்கிறார். அவர் விரைவில் வந்துவிடுவார். ஆனால், எங்கள் கால்நடைகள் அனைத்தையும் இழந்துவிட்டோம். பயிர்களை மட்டும் வைத்து பிழைப்பு நடத்த வழியில்லை, அதனால் நான் இங்கு இருக்கிறேன். அந்த வாழ்க்கை முடிந்துவிட்டது” என்று ஃபாத்துமா கூறினார்.

"நிலைமை இன்னும் மோசமாகி வருகிறது. உணவு, பாதுகாப்பு மற்றும் தண்ணீரைத் தேடி நிறைய பேர் இங்கு வருகிறார்கள். பல குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் இறக்கின்றனர். அரசு மற்றும் சர்வதேச சமூகம் இந்த நிலைமையை பஞ்சமாக கருதுமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்று சமூக கூட்டத்தில் பேசிய பைடோவாவின் மேயர் அப்துல்லா கூறினார்.

அந்தக் கூட்டம் நடைபெற்ற அரங்கத்திற்கு உள்ளே ராணுவ ஜெனரல் ஒருவர் உள்ளூர் மக்களை அல்-ஷபாப்பிடம் இருந்து அதிகரித்து வரும் அச்சுறுத்தல் பற்றி எச்சரித்துக் கொண்டிருந்தார். வெடிக்கும் சாதனங்கள் மற்றும் பதுங்கியிருந்து தாக்குபவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கும்படி அவர் கேட்டுக்கொண்டார்.

சோமாலிய அரசுப் படைகளும் போராளிப் படைகளும் தாக்குதலை விரிவுபடுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சில கிராமப்புற சமூகங்களை அணுகுவதை மேலும் கடினமாக்குகிறது.

ஃபாத்துமா தனது இரண்டு நோய்வாய்ப்பட்ட குழந்தைகளையும் அவர்கள் குடிசையின் அழுக்குத் தரையில் ஒரு போர்வையில் படுக்க வைத்தார்.

குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல நாம் கேட்டபோது பாரம்பரிய மூலிகை மருந்துகளை பின்பற்றுவதாக் கூறி அவர் மறுத்துவிட்டார். பின்னர் சோர்வாக இருந்த பாத்துமாவும் குழந்தைகளின் அருகில் படுத்துக் கொண்டார்.

தன்னுடைய போர்வையில் இருந்து அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த தாஹிர், அவர்கள் நலமடைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்றார். பின்னர், அந்த சொற்றொடரை மேலும் இரண்டு முறை அவர் கூறினார்.

https://www.bbc.com/tamil/articles/crgk2pg24m2o

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நஸ்ரல்லாவை சாய்த்த இஸ்ரேல்: நிலை தடுமாறி அமைதியாய் நிற்கும் ஈரான் ஈரான் (Iran) ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நஸ்ரல்லா (Nasrallah)படுகொலை செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் (Israel) அறிவித்தும், ஈரான் அமைதி காத்து வருவது அந்நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இஸ்ரேலின் அறிவிப்பிற்கு ஹிஸ்புல்லா, லெபனான் தரப்பிலிருந்தும் எவ்வித உறுதிபடுத்தப்பட்ட தகவல்களும் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில், லெபனானில் இஸ்ரேலின் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர், இதற்கு எதிராக ஈரான் மற்றும் ஏமன் நாடுகளில் பொதுமக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஈரானின் செயற்பாடு எவ்வாறானெதொரு பின்னணியில், இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு எதிராக ஈரான் அமைதியாக இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக, இத்தகைய சூழலில் ஈரான் கடுமையான பதிலடிகளை வழங்கும், ஆனால் இப்போது மிதவாதம் காட்டுவதாக உள்ளதாக ஈரானின் செயற்பாடுகள் அமைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், இது ஈரானில் உள்ள பழமைவாதிகள் மத்தியில் பாரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், எதிர்காலத்தில் இது அரசியல் மாற்றங்களுக்கு காரணமாக இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இறுதி இலக்கு லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்றிரவு நடத்தப்பட்ட தொடர் வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பின் மொத்தம் 18 பேர் முக்கிய தளபதிகள் இருந்த நிலையில்,17 பேரை இஸ்ரேல் ஏற்கனவே படுகொலை செய்தது. இறுதியாக நஸ்ரல்லா மட்டுமே உயிருடன் இருந்த நிலையில் தற்போது அவரும் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.  https://ibctamil.com/article/death-of-hassan-nasrallah-pressure-on-iran-1727524484#google_vignette
    • இஸ்ரேலின் தாக்குதலில் ஹசன் நஸ்ரல்லா பலி- உறுதி செய்தது ஹெஸ்புல்லா அமைப்பு 28 SEP, 2024 | 07:08 PM ஹெஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலின் வான்தாக்குதலில் தனது தலைவர் கொல்லப்பட்டதை உறுதி செய்துள்ளது. லெபனான் தலைநகரின் தென்புறநகர் பகுதியில் சியோனிஸ்ட்கள் மேற்கொண்ட துரோகத்தனமான நடவடிக்கையில் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார் என ஹெஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது. இஸ்ரேலிற்கு எதிராக தொடர்ந்தும் போராடப்போவதாக உறுதியளித்துள்ள ஹெஸ்புல்லா அமைப்பு காசாவிற்கும் பாலஸ்தீனத்திற்கும் தொடர்ந்தும் ஆதரவளிக்கப்போவதாக தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/195018
    • அனுரவின்... தேசிய மக்கள் சக்தி கட்சி, நாளை 29.09.2024 அன்று புலம் பெயர் தமிழர்களுடன் இணையவழி (Zoom meeting)  சந்திப்பு ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளதாக அறிய முடிகின்றது.  கேள்வி பதில் அரங்கு. பங்கு கொள்வோர்... # இராமலிங்கம் சந்திர சேகர். (நிறைவேற்றுக் குழு உறுப்பினர்) # சிவா சிவப்பிரகாசம். (மலையக தேசியக்குழு உறுப்பினர்) # எம்.ஜே.எம். பைசல்.  (நிறைவேற்றுக் குழு உறுப்பினர்) # ஜனகா செல்வராஜ்.  (நிறைவேற்றுக் குழு உறுப்பினர்) வழிப்படுத்தல்: எம். பெளசர். காலை 10:00 மணி - கனடா. மதியம் 2:00 மணி ஐரோப்பா. மதியம் 3:00 இங்கிலாந்து. மாலை 7:30 இலங்கை நேரப்படி இந்த சந்திப்பு நிகழும். Meeting ID : 831 9644 1969 Pass Code: 660804 Contact - Fauzer 0776613739 (Mob.) 0044 7817262980 (WhatsApp)
    • இது நான் இருக்கும் இடத்தில் இருந்து 150 மைல் தொலைவில்.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 3 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.