Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கானல் நீராக மாறிவரும் தீர்வுக்கான யோசனைத் திட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கானல் நீராக மாறிவரும் தீர்வுக்கான யோசனைத் திட்டம்

இலங்கையின் தேசிய இனப் பிரச்சினைக்கு அமைதி வழியில் தீர்வு காண்பதற்கான யோசனைத் திட்டத்தைத் தயாரித்து சிபார்சு செய்யவெனத் தம்மால் அமைக்கப்பட்ட அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு விடயத்தில் ஜனாதிபதி ராஜபக்ஷ இருதலைக் கொள்ளி எறும்பு நிலையில் நிற்கிறார் என்பதைக் கடந்தவாரம் இப்பத்தியில் சுட்டிக்காட்டியிருந்தோம். "ஒரு புறம் வேடன்; மறுபுறம் நாகம்' என்ற நிலைமை.

சர்வதேச சமுதாயத்தைத் திருப்திப்படுத்துவதற்கு அமைதி வழியில் தீர்வு காண்பதற்காகத் தென்னிலங்கையின் இணக்கப்பாட்டை உருவாக்கும் ஆக்கபூர்வமான எத்தனத்தில் தாம் ஈடுபட்டிருக்கிறார் எனக் காட்டுவதன் மூலம் உலக சமூகத்தை சமாளிப்பதற்கு இந்த அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு என்ற தந்திரோபாய விவகாரத்தை மூடையை அவிழ்க்கிறார் அரசுத் தலைவர் என்பதை ஏற்கனவே பல தடவைகள் இப்பத்தியில் சுட்டிக்காட்டியிருந்தோம்.

இதுபோல, இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை சூடு பிடித்தவேளை முதல் காலத்துக்குக் காலம், அவ்வப்போது அந்தந்த நேரத்தில் ஆட்சியில் இருந்த அரசுத் தலைவர்களால் வட்டமேசை மாநாடு, சர்வகட்சிக் கூட்டம், அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் சந்திப்பு என்று பல்வேறு ஆலாபனைகள் மேற்கொள்ளப்பட்டன என்பதையும் அவை எல்லாம் வெறும் கண்துடைப்பு நாடகங்களாக அரங்கேறி பலனின்றி உயிரை விட்டமைபோல, இப்போதும் இந்த அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் கூட்டமும் வெறும் அபத்த அத்தியாயமாக அரங்கேறி முடியப்போகின்றது என்பதையும் கோடி காட்டியிருந்தோம்.

அதுவே யதார்த்தமாகிவிடும் என்பதை கள நிலைவரங்கள் இப்போது எமக்கு உணர்த்துகின்றன.

அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவில் அங்கம் வகிக்கும் பெரும்பாலான கட்சிகள் தீர்வு யோசனைக்கான அடிப்படை குறித்து சில விடயங்களில் இணக்கத்துக்கு வந்திருக்கின்றன. அனைத்துக் கட்சிக் குழுவின் தலைவர் அமைச்சர் திஸ்ஸ விதாரணவும் இந்த விடயத்துக்கு உடன்பட்டிருக்கின்றார். தேசிய இனப்பிரச்சினையில் சம்பந்தப்பட்ட மற்றைய பிரதான தரப்பான தமிழர்களுக்கு, இவ்வாறு பெரும்பாலான கட்சிகளின் இணக்கத்தில் உருவாகியுள்ள யோசனைத்திட்டம் ஏற்புடையதா, தமது நியாயமான அபிலாஷைகளை எதிர்பார்ப்புகளை வேணவாவை இந்தத் திட்டம் நிறைவுசெய்யும் என அவர்கள் கருதுகின்றார்களா என்பவையெல்லாம் இன்னும் தெரியவில்லை; வெளிப்படுத்தப்படவில்லை.

ஆனால் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு ஓர் ஆக்கபூர்வமான தீர்வுத் திட்ட யோசனையை உருவாக்கி, சிபார்சு செய்யும் கட்டத்தை அடைந்து விட்டது என்பது, ஜனாதிபதி மஹிந்தரின் அரசுக்கு முண்டு கொடுத்து நிற்கும் பௌத்த சிங்களப் பேரினவாத சக்திகளால் பொறுக்க முடியாத சகிக்க இயலாத விடயமாகி விட்டது. அதனால் அவை சீறிச் சினந்து கொண்டு பாயப் புறப்பட்டிருக்கின்றன. அதையே இப்போது காண்கிறோம்.

பெரும்பான்மைக் கட்சிகளின் உத்தேச தீர்வுத்திட்ட யோசனையின் அடிப்படை விவகாரங்களில் "நாட்டின் ஆட்சி முறை ஒற்றையாட்சிக்கு உட்பட்டதாக இருக்கும்' என்ற விடயம் வலியுறுத்தப்படவில்லை. ஒற்றையாட்சி முறையைக் கைவிடுவதாக அமைந்திருக்கின்றது என்பதை ஒரு விவகாரமாக்கப் பார்க்கின்றன இந்தப் பேரினவாதக் கட்சிகள். "ஒற்றையாட்சி' என்ற பதத்தைக் கைவிடும் யோசனை அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளின் சிபார்சில் அடங்கியிருக்குமானால் அதைத் தென்னிலங்கையின் கருத்தாக ஏற்று அதனடிப்படையில் அமைதி முயற்சிகளைத் தொடர அரசு எத்தனிக்குமானால் அரசுக்கான ஆதரவு வாபஸ் பெறப்படும் என்ற எச்சரிக்கையை இந்தப் பேரினவாதக் கட்சிகள் வெட்டு ஒன்று துண்டு இரண்டாக அரசுத் தலைமைக்குத் தெரிவித்துவிட்டன என்கின்றன விடயமறிந்த வட்டாரங்கள்.

வருட இறுதியில் வரும் வரவு செலவுத்திட்டம் மீதான நாடாளுமன்ற வாக்கெடுப்பின்போது அரசைக் கவிழ்ப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.கவும், மங்கள சிறிபதி அணியும் மும்முரமாகத் தயாராகி வருகின்றன என்ற பீதியில் உறைந்து கிடக்கும் அரசுத் தலைமை, இந்தச் சந்தர்ப்பத்தில் மற்றைய பௌத்த சிங்களப் பேரினவாதக் கட்சிகளையும் பகைத்து, அவற்றையும் தனக்கு எதிரணியில் கொண்டு போய் நிறுத்தி, தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போடத் தயாராக இல்லை.

ஆக, இந்தப் பேரினவாதக் கட்சிகளின் நிபந்தனைக்கு வற்புறுத்தலுக்கு அடிபணிவதைத் தவிர வேறு வழியில்லை என்ற காரணத்தினாலும் பேரினவாத சக்திகளின் அழுத்தத்தை துச்சமென ஒதுக்கி, இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வு காண்பதில் உறுதியாகச் செயற்படும் திடசங்கற்பம் இந்த அரசுத் தலைமைக்கு இல்லாத காரணத்தாலும் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் முடிவை எட்டும் விவகாரத்தைத் தள்ளிப் போட்டு அதன்மூலம் நெருக்கடியைத் தற்காலிகமாகச் சமாளிக்கத் தீர்மானித்து விட்டது அது.

எனவே, காலத்தை இழுத்தடிக்கும் அரசின் வழமையான பாணியை, தலைமேற்கொண்டு ஆற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு. ஆண்டுகள் கழிந்தாலும் தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயமான நீதியான உருப்படியான யோசனைத்திட்டம் ஒன்றை அதனால் உருவாக்கித் தரவோ பிரேரிக்கவோ முடியாது என்பது மென்மேலும் உறுதியாகி வருகின்றது என்பதே இன்றைய நிலைவரமாகும்.

- சுடர் ஒளி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.