Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மென்மேலும் உறுதியாகிறது யுத்த தீவிர எண்ணப் போக்கு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மென்மேலும் உறுதியாகிறது யுத்த தீவிர எண்ணப் போக்கு

யுத்தநிறுத்தம் செயன்முறையில் உள்ளது என்று கூறப்பட்டாலும், அது செத்துச் செயலிழந்து நாளாகி விட்டது. உக்கிப்போன காகிதத்தில், உருக்குலைந்த எழுத்துக்களில் அது பதிவு செய்யப்பட்டிருப்பதோடு சரி. உண்மையில் நடைமுறையில் அது இல்லை.

யுத்த நிறுத்தம் இருப்பதாக ஒரு புறம் கூறிக்கொண்டே மறுபுறம் பெரும் யுத்தச் செயற்பாடுகளும், இராணுவ நட வடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் அதிசயப் பூமி இது.

பொதுவாக யுத்த நிறுத்த விடயத்தில் என்றில்லை, தேசிய இனப்பிரச்சினை தொடர்பான சகல அம்சங்களி லுமே இவ்வாறு இரட்டைவேட நிலைப்பாடே தரப்புகளி னால் இங்கு வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன என்பதும் கண்கூடு.

புதிதாக ஆட்சிப்பீடம் ஏறிய ஜனாதிபதி மஹிந்தரின் அரசு யுத்த வெறிப் போக்கில் தீவிரமாக இருக்கின்றது, அமைதி வழியில் பேசித் தீர்க்கும் நேர்மையும் பற்றுறுதி யும் அதற்கு இல்லை என்பதே தமிழர் தரப்பின் பிரதான குற்றச்சாட்டு.

ஆனால் அதை சர்வதேச மட்டம்வரை எதிர்க்கிறது அரசுத் தலைமை. இனப்பிரச்சினைக்கு இறுதித் தீர்வு அமைதிப் பேச்சின் மூலம்தான், நாம் இப்போது அதற்குப் புறம்பாக "பயங்கரவாதி'களால் கிளப்பப்பட்டுவரும் அச்சு றுத்தல்களை மட்டுமே முறியடித்து வருகின்றோம் என்று அரசுத் தலைமை திரும்பத் திரும்ப அடித்துக் கூறி வருகி றது.

ஆனால் அது முற்றிலும் பொய் என்பதை அரசுத் தலை மையின் முக்கிய தரப்பே தனது வாயால் இப்போது உறு திப்படுத்தியிருக்கின்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அடுத்து இன்று அரசுக்குள் வலிமை மிக்கவராகவும், முழுப் பாதுகாப்புப் படைகளையுமே கட்டி ஆளும் அதிகாரம் உடையவராகவும் விளங்குபவர் ஜனாதிபதி மஹிந்தவின் சகோதரரும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோத்தபாய ராஜ பக்ஷதான். அவர்தான் இந்த உண்மையை வெளிப்படுத் தியிருக்கிறார்.

இராணுவ ரீதியில் தமிழர் தரப்பை அடக்கி வெற்றிகொள்வதில் அரசு முனைப்பாகவும் உறுதியாகவும் இருப் பதைத் தெளிவுபடுத்துவதன் மூலம், அமைதி வழித் தீர்வு சாத்தியமற்றது என்பதைக் கோடி காட்டியிருக்கிறார் அவர்.

""விடுதலைப் புலிகளிடமிருந்து கிழக்கைக் கைப்பற்றி யமை போல, விரைவில் வன்னியையும் கைப்பற்றுவோம். நாம் எதிர்காலத்துக்கு யுத்தத்தைத் தொடரவிட்டு வைத்து விட்டுப் போகமாட்டோம். போரை வெற்றிகரமாக முடிவுக் குக் கொண்டுவருவோம்'' என்று சூளுரைத்திருக்கின் றார் அவர்.

அநுராதபுரம், கல்கிரியாகமவில் ஊர்காவல் அணி ஒன்று பயிற்சி முடித்து வெளியேறும் நிகழ்வில் கடந்த ஞாயிறன்று கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியிருக்கிறார்.

அதாவது, தேசிய இனப்பிரச்சினையில் சம்பந்தப்பட்ட தரப்பான விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியில் அழித்தொழிப்பது ஒன்றே தமது அரசின் நோக்கம் என்பதைச் சொல்லாமல் சொல்லியும் அதேவேளை தெட்டத் தெளி வாகவும் அவர் உணர்த்தியிருக்கின்றார்.

தாம் காணும் இந்தக் கனவில் அவர் வெற்றி பெறுவாரா, புலிகளை முழு அளவில் அடக்கி, தான் எண்ணியதைச் சாதித்துக் காட்டுவாரா என்பவையெல்லாம் வேறு விட யம்.

இவரைப்போல இந்தப் பதவியையும் பாதுகாப்புப் பிரதி அமைச்சர், படைத் தளபதி, ஜனாதிபதி என்று பல்வேறு பிறபதவிகளையும் முன்னர் அலங்கரித்தபடி இதே போல சூளுரைத்த பலர் இப்போது அந்தப் பதவிகளை விட்டு நீங் கிய நிலையில், அந்த சூளுரைகள் மட்டும் நிறைவேறா மல் அப்படியே எஞ்சி தொங்கி நிற்கின்றன என்பது கூட வேறு விடயம்.

ஆனால் இத்தகைய சூளுரைகள் அமைதி முயற்சி களுக்கான கொஞ்ச நஞ்ச வாய்ப்பையும் அடியோடு தகர்த்து, நிரந்தரமாக குழிதோண்டிப் புதைத்துவிடும் என்பது முக்கியமான அம்சமாகும்.

பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கூறி யுள்ள மற்றொரு கருத்தும் இங்கு நோக்கற்பாலது.

""கடந்த மூன்று தசாப்தகாலமாகப் புலிகள் தங்களின் தோல்விகளை மூடிமறைக்க சர்வதேச அழுத்தத்தையே வகையாகப் பயன்படுத்தி வந்தனர். ஆனால் இனிமேல் அதற்கெல்லாம் இடமளிக்கப்படமாட்டாது.'' என்றும் அவர் உறுதிபடக் கூறியிருக்கின்றார்.

அதாவது புலிகளுக்கு எதிராகத் தாங்கள் மேற்கொள் ளப் போகும் இராணுவக் கெடுபிடி நடவடிக்கையில் சர்வ தேச அழுத்தத்தைக் கவனத்தில் கொள்ளப் போவதே யில்லை என்பதை வேறு வாசகங்களில் வெளிப்படுத்தியி ருக்கின்றார் அவர்.

ஆக, இது சர்வதேசத்துக்கான ஒரு செய்தியாகவும் கொள்ளத்தக்கது. இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் இங்கு தீவிர யுத்த வெறிப் போக்குக் கொண்ட தரப்பினர், சர்வதேச அழுத்தங்களையும், கருத்துக்களையும் எவ்வ ளவு தூரத்துக்கு உதாசீனம் செய்யத் தயாராக இருக்கிறார் கள் என்பதை கோடி காட்டும் கருத்தும் கூட இது.

"கெடு குடி சொற் கேளாது!' என்பார்கள். இலங்கைத் தேசிய இனப்பிரச்சினை விடயத்திலும் அரசுப் படை களின் வழிகாட்டிகள் சர்வதேச சமூகத்தின் சொல்லைக் கேட்க இனிமேல் தயாரில்லை என்பதற்கு இது நல்ல உரைகல்.

இலங்கை இனப்பிரச்சினையில் சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு அடிக்கடி அறிக்கைகள் வெளியிட்டு நல்லுப தேசம் செய்து வரும் சர்வதேச சமூகத்துக்கு இக்கருத்துச் சமர்ப்பணம்.

-உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.