Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கர்நாடகாவில் மலர் சந்தை கடைகளுக்கு சீல் - ரூ. 100 கோடி நஷ்டத்தை எதிர்கொள்ளும் தமிழக விவசாயிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கர்நாடகாவில் மலர் சந்தை கடைகளுக்கு சீல் - ரூ. 100 கோடி நஷ்டத்தை எதிர்கொள்ளும் தமிழக விவசாயிகள்

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,ஏ.எம். சுதாகர்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • 18 நவம்பர் 2022
 

கர்நாடகா மலர் சந்தை

கர்நாடகாவில் மலர் சந்தை கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதால் அவற்றை நம்பி தமிழ்நாட்டில் இருந்து தினமும் லட்சகணக்கான ரூபாய் மதிப்புக்கு பூக்களையும் மலர்களையும் அனுப்பி வந்த விவசாயிகள் கடுமையான வருவாய் இழப்பை எதிர்கொண்டுள்ளனர்.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ரூபாய் ரூ. 100 கோடிக்கும் அதிகமான நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளதாக கூறுகின்றனர். என்ன நடக்கிறது அங்கே?  விரிவாக படிக்கலாம்.

தமிழ்நாட்டில் நீலகிரி, கொடைக்கானல், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் மலர்கள், கர்நாடகா மாநிலம் பெங்களூரு வில்சன் கார்டன் பகுதியில் உள்ள மலர்ச் சந்தைக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

குறிப்பாக, திருவண்ணாமலை, செங்கம், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, மத்தூர், அத்திகானூர், சந்தூர், காவேரிப்பட்டணம், கிருஷ்ணகிரி அணை உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மல்லி, முல்லை, சம்பங்கி உள்ளிட்ட மலர்கள் பெங்களூருக்கு அனுப்பப்படுகின்றன.

 

தினமும் அதிகாலை 4 மணி முதல் பூக்களை பறிக்கும் விவசாயிகள், காலை 6 மணி முதல் 11 மணி வரை 150-க்கும் மேற்பட்ட சரக்கு வாகனங்களில் பூக்களை பெங்களூருக்கு அனுப்பி வருகின்றனர்.

இதேபோல, ஓசூர், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, தளி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ரோஜா, ஜெர்பரா உள்ளிட்ட கொய்மலர்கள் அதிகளவில் பெங்களூரு மலர் சந்தைக்கு செல்கின்றன. இங்கிருந்து விமானம் மூலம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் , வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

மலர் சந்தை கடைகளுக்கு  சீல்

 

கர்நாடக மலர் சந்தை

இந்நிலையில், கர்நாடக மாநிலம்  மலர்ச் சந்தையில் உள்ள கடைகளுக்கு அம்மாநில அலுவலர்கள் சீல் வைத்துள்ளனர். இதனால், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தமிழகத்தில் இருந்து அங்கு விற்பனைக்கு செல்லும் மலர்கள் தேக்கம் அடைந்தன.

இந்த நடவடிக்கை காரணமாக தமிழக, கர்நாடக விவசாயிகளுக்கு தினமும்  ரூ.10 கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

எங்கு தொடங்கியது பிரச்னை?

இது தொடர்பாக ஓசூரை சேர்ந்த தேசிய தோட்டக்கலைத்துறை வாரிய இயக்குநர் பால சிவ பிரசாத்திடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்

"கர்நாடக மாநிலத்தில் உள்ளது வில்சன் கார்டன். இங்கு 300க்கும் மேற்பட்ட பூக்கடைகள் உள்ளன. அதில் நூற்றுக்கணக்கான கடைகளை தமிழர்கள் வைத்துள்ளனர்.

தமிழ்நாட்டில் இருந்து கிருஷ்ணகிரி, நீலகிரி, தருமபுரி, தஞ்சாவூர் சென்னை, சேலம் உட்பட பல மாவட்டங்களில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட மலர்கள் இங்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

 

கர்நாடகா மலர் சந்தை

 

படக்குறிப்பு,

பால சிவ பிரசாத்

ஆனால் வில்சன் கார்டன் அமைந்துள்ளது குடியிருப்பு பகுதி அதனால் பூக்கடைகள் அதிகாலை இரண்டு மணி முதலே துவங்குவதால் அங்கு வாகனங்கள் அதிகமாக வந்து செல்கின்றன.

மேலும் பேக்கிங் செய்யும் போதும் அதிக சத்தம் எழுப்புவதாக கூறி வில்சன் கார்டன் வெல்ஃபேர் அசோசியேஷனை சேர்ந்தவர்கள் கர்நாடக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தனர்.

இந்த வழக்கு நிலுவையில் இருந்தது. இந்த நிலையில் மார்க்கெட் கடைகளை மூன்று நாட்களுக்குள் காலி செய்யும்படி நீதிமன்றம் நவம்பர் 9ஆம் தேதி தீர்ப்பு அளித்தது.

ஆனால் அதற்கு முன்னதாக, ஐந்தாம் தேதியே நாளொன்றுக்கு 40 கடைகள், 50 கடைகள் வீதம் மாநகராட்சி நிர்வாகம் போலீஸ் துணையுடன் சீல் வைக்கத் தொடங்கியது.

இதனால் திருவண்ணாமலை, திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து கர்நாடகா வில்சன் கார்டன் பூ மார்க்கெட்டிற்கு செல்லும் பூக்களை தமிழக விவசாயிகளால் அனுப்ப முடியவில்லை.

மேலும் சேலத்தில் இருந்து அரளிப்பூ  நீலகிரியில் இருந்து செல்லும் பூக்களும் விற்பனைக்கு செல்லவில்லை.

இவ்வாறாக, ஒரு நாளைக்கு தமிழக கர்நாடக மலர் விவசாயிகளுக்கு ரூ 10 கோடி முதல் ரூ12 கோடி வரை மலர்  நஷ்டம் ஏற்படுகிறது. கர்நாடக அரசாங்கம் பூக்கடைக்காரர்களுக்கு நிரந்தரமாக ஒரு மார்க்கெட் அமைத்துக் கொடுத்திருந்தால் இந்த பிரச்னை வந்திருக்காது. அதனால் கர்நாடக அரசாங்கம் அங்கிருக்கும் மலர் வியாபாரிகளை காக்க உடனடியாக நிரந்தர மார்க்கெட் ஒன்றை அமைத்துத் தர வேண்டும்.

அப்படி செய்தால் தான் இந்த தொழில் தொடர்ந்து நடக்கும். இந்த தொழிலை நம்பி கர்நாடக மற்றும் சுற்றுவட்டார பகுதியில் மட்டும் ஒரு லட்சம் பேர் இருக்கின்றனர் அவர்களுடைய வாழ்வாதாரமும் தற்போது பாதிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல தமிழக அரசும் கர்நாடக அரசுடன் பேசி  நிரந்தர மார்க்கெட் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் எந்த பிரச்னை என்றாலும் எப்போதும் பாதிக்கப்படுவது மலர் வியாபாரிகள் தான். உதாரணத்திற்கு கொரோனா காலகட்டங்களிலும் , காவிரி நீர் பிரச்சினையிலும் மற்றும் மொழிப் பிரச்சனை என எந்த பிரச்னை வந்தாலும் அதில்  முதலில்  பாதிக்கப்படுவது பூத்தொழில்தான்.eதமிழ்நாட்டில் ஓசூரில் அமைக்கப்பட்டுள்ள இன்டர்நேஷனல் ஃபிளவர் ஆக்ஷன் சென்டரை தமிழக அரசு உடனடியாக செயல்பட வைத்தால் இது போன்ற கடினமான காலங்களில் மலர் விவசாயிகள் மலர் வியாபாரிகள் மர தொழிலாளர்கள் பாதிக்கப்படாமல் காக்க  முடியும் என்கிறார் பால சிவ பிரசாத்.

"நிலைமை இன்னும் மோசமாகும்"

 

கர்நாடகா மலர் சந்தை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூரைச் சேர்ந்த மலர் பண்ணை உரிமையாளர் மனோஜ் குமார், "கர்நாடகாவில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் நாங்கள் வேறு வழியில்லாமல் உள்ளூர் சந்தையில் பூக்களை விற்கிறோம்," என்று கூறினார்.

"தற்போது திருமண சீசன் என்பதால் நேரடியாக சென்று விற்பனை செய்து வருகிறோம். ஆனால்  கர்நாடகாவுக்கு அனுப்பி அங்கு விற்பனை செய்த போது கிடைத்த லாபத்தில் தற்போது பத்து சதவீதம் கூட கிடைப்பதில்லை. மேலும் இந்த திருமண சீசன் இன்னும் ஓரிரு மாதங்களில் முடிவடைந்து விடும் பிறகு பூக்களே விற்க முடியாத நிலை வரும்," என்று அவர் தெரிவித்தார்.

 

 

கர்நாடகா மலர் சந்தை

 

படக்குறிப்பு,

மனோஜ் குமார்

"கடந்த ஒரு ஆண்டில் மட்டும் உரம் மற்றும் கெமிக்கல் விலை 150 சதவீதத்திலிருந்து 200 சதவீதம் வரை விலை உயர்ந்துள்ளது இதனால் நாங்கள் மலர்கள் உற்பத்தி செய்வதற்கு செலவு அதிகமாகின்றது இந்த நிலையில் தான் மலர்களை விற்பனைக்கு அனுப்ப முடியாத நிலையும் வந்திருக்கிறது.

கர்நாடக மாநில பூ மார்க்கெட் தான் தெற்கு இந்தியர்களுக்கு ஒரு மிகப்பெரிய வியாபார மையம் அங்கு நிரந்தர மார்க்கெட் இல்லாததால் தற்போது அங்குள்ள வியாபாரிகளும் இங்குள்ள உற்பத்தியாளர்களும் மற்றும் தொழிலாளர்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம் . இது போன்ற கடின காலங்களைக் கடக்க அரசாங்கம் ஓசூர் இண்டர்நேஷனல் ஃபிளவர் ஆக்சன் சென்டரை உடனே செயல்படுத்த வைக்க வேண்டும்," என்கிறார் மனோஜ் குமார்.

"வேலையின்றி தவிக்கிறோம்"

மலர்களை பேக்கிங் செய்யும் தொழிலாளர் சுமதி, "பூக்களை கர்நாடகவுக்கு விற்பனைக்கு அனுப்பும்போது பேக்கிங் செய்யும் பணியில் நாங்கள் ஈடுபடுவோம் எங்கள் குடும்பத்திற்கு தேவையான அளவு அதில் ஊதியம் கிடைத்து வந்தது தற்போது ஒரு வாரத்துக்கும் மேலாக கடைகள் சீல் வைக்கப்பட்டுள்ளதால் வேலை இல்லாமல் தவிக்கிறோம். வேறு வழியின்றி உள்ளூர் சந்தையில் சென்று பூ விற்பனை செய்யும் மாற்று வேலையை செய்து வருகிறோம். இன்னும் சில நாட்களில்  இந்த  வேலையும் எங்களுக்கு பறிபோகும் நிலை வரும் என்கின்றனர். எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை," என்கிறார்.

https://www.bbc.com/tamil/articles/c13kld30gm3o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.