Jump to content

பெண்களிடையே அதிகரித்து வரும் கோபம், மன அழுத்தம், கவலை – என்ன காரணம்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களிடையே அதிகரித்து வரும் கோபம், மன அழுத்தம், கவலை – என்ன காரணம்?

பெண்களிடையே அதிகரித்து வரும் கோபம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

மாதிரி படம்

3 மணி நேரங்களுக்கு முன்னர்

கேல்லப்பின் வருடாந்திர கருத்துக்கணிப்பு, கடந்த 10 ஆண்டுகளில் உலகளவில் பெண்களிடையே கோபம் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கிறது. இதற்குக் காரணம் என்னவாக இருக்கும்?

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், தஹ்ஷா ரெனி தனது சமையலறையில் நின்று கொண்டிருந்தபோது, அவருடைய நுரையீரலின் ஆழத்திலிருந்து ஓர் ஆழமான, இருண்ட, வெற்று அலறல் வெளிப்பட்டது. அது அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

“கோபம், நான் எளிதில் அடையக்கூடிய உணர்ச்சியாக இருந்து வருகிறது,” என்று அவர் கூறுகிறார்.  ஆனால், இப்படி அவர் முன்பு உணராததைப் போல் இருந்தது.

அப்போது பேரிடர்க்காலம். பொறுத்தது போதும் என்பதைப் போல் உணர்ந்தார். அதற்கு முந்தைய 20 நிமிடங்களில் அவருக்குக் கோபத்தை ஏற்படுத்திய அனைத்து விஷயங்களையும் உரக்கப் பட்டியலிட்டப்படி வீட்டைச் சுற்றி நடந்தார்.

 

ஆனால், வாய்விட்டு அலறிய பிறகு அவர் ஒருவித விடுதலையை உணர்ந்தார்.

ஹிப்னோதெரபிஸ்ட்டும் வாழ்வியல் பயிற்சியாளருமான தஹ்ஷா, உலகெங்கிலும் உள்ள பெண்களை ஜூம் செயலி மூலம் கூட்டினார். அவர்களுக்கு ஆத்திரத்தைத் தரும் அனைத்தையும் பேசவும், அதைப் பற்றிக் கத்தவும் செய்கிறார்.

கேல்லப் வேர்ல்ட் கருத்துக் கணிப்பின் 10 ஆண்டுக்கால தரவுகளில் பிபிசி பகுப்பாய்வின்படி, பெண்கள் அதிகம் கோபமடைந்து வருகின்றனர்.

ஒவ்வோர் ஆண்டும் கருத்துக்கணிப்பு 150க்கும் மேற்பட்ட நாடுகளில் 120,000க்கும் அதிகமான மக்களிடம் நடத்தப்படுகிறது. அதில் அவர்களிடம் கேட்கப்பட்ட பல கேள்விகளில் ஒன்று, “கருத்துகணிப்பு நடத்தப்படும் நாளுக்கு முந்தைய நாளில் எந்த உணர்ச்சியை குறிப்பாக, கோபம், சோகம், மன அழுத்தம், கவலை போன்ற எதிர்மறை உணர்வுகளில், அதிகமாக உணர்ந்தீர்கள்?”

இதில் ஆண்களைவிட பெண்கள் இதை அடிக்கடி உணர்கிறார்கள்.

பிபிசியின் பகுப்பாய்வு மூலம், 2012 முதல் இரு பாலர்களும் சீராக சோகம், கவலை போன்ற உணர்ச்சிகளை உணர்வது சீராக அதிகரித்திருந்தாலும், ஆண்களைவிட அதிகமான பெண்கள் சோகத்தையும் கவலையையும் உணர்கிறார்கள்.

கோபம், மன அழுத்தம் என்று வரும்போது, ஆண்களுடனான இடைவெளி அதிகரித்து வருகிறது. 2012ஆம் ஆண்டில் இருபாலர்களும் ஒரே அளவில் கோபத்தையும் மன அழுத்தத்தையும் வெளிப்படுத்தினர். ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, பெண்கள் ஆறு சதவீத வித்தியாசத்தில், ஆண்களை விடக் கோபமாக இருக்கிறார்கள், அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். அதிலும் தொற்றுநோய்ப் பேரிடர் காலத்தில் இதில் குறிப்பிடத்தக்க வேறுபாடு இருந்தது.

இது அமெரிக்காவில் தெரபிஸ்டாக இருக்கும் சாரா ஹார்மனை ஆச்சர்யப்படுத்தவில்லை. 2021ஆம் ஆண்டின் முற்பகுதியில் அவர் தன்னிடம் ஆலோசனைக்கு வரும் பெண்கள் அடங்கிய ஒரு குழுவை வெளியே ஓரிடத்தில் நின்று, வாய்விட்டு சத்தம் போட வைத்தார்.

“நான் வீட்டிலிருந்தபடி வேலை செய்து கொண்டிருந்தேன். இரண்டு இளம் குழந்தைகளுக்குத் தாய். இந்தத் தீவிரமான விரக்தி தான் முழுமையான ஆத்திரத்தை ஏற்படுத்தியது,” என்று அவர் கூறுகிறார்.

ஓராண்டு கழித்து மீண்டும் முன்பைப் போலவே மீண்டும் களமிறங்கினார்.

“அதுதான் வைரலானது,” என்று அவர் கூறுகிறார். இது அவருடைய ஆன்லைன் அம்மாக்கள் குழுவிலுள்ள ஒரு செய்தியாளரால் எடுக்கப்பட்டது. திடீரென உலகம் முழுவதுமிருந்து செய்தியாளர்கள் அழைத்தனர்.

தொற்றுநோய்ப் பேரிடரின் சுமை அவர்கள் மீது விழுவதாக ஏற்பட்ட தீவிர விரக்தியைப் போன்ற அனைத்து பகுதிகளிலும் உள்ள பெண்கள் உணரக்கூடிய ஒரு விஷயத்திலேயே தான் கை வைத்துள்ளதாக சாரா நம்புகிறார்.

பெண்களிடையே அதிகரித்து வரும் கோபம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

2020ஆம் ஆண்டு, நிதி ஆய்வுகளுக்கான நிறுவனம், இங்கிலாந்தில் உள்ள எதிர்பாலின உறவுகளிலுள்ள கிட்டத்தட்ட 5,000 பெற்றோர்களிடம் நடத்திய ஆய்வில், தாய்மார்கள் ஊரடங்கு காலத்தில் தந்தையைவிட அதிகமான வீட்டுப் பொறுப்புகளை மேற்கொள்வதைக் கண்டறிந்தனர்.

இதனால், அவர்கள் தங்கள் பணி நேரத்தைக் குறைத்துக் கொண்டனர். குடும்பத்தில் அதிக வருமானம் ஈட்டுபவர்களாக இருந்தபோதும் இப்படித்தான் இருந்தது.

சில நாடுகளில், கணக்கெடுப்பு நடத்தப்பட்ட நாளுக்கு முந்தைய நாளில் கோபத்தை உணர்ந்ததாகக் கூறும் பெண்கள் மற்றும் ஆண்களின் எண்ணிக்கையில் உள்ள வேறுபாடு உலக சாராசரியைவிட அதிகமாக உள்ளது.

பெண்கள் முன்னேற்றம் காண்கின்றனரா?

பிபிசி 100 பெண்களின் 10வது ஆண்டை ஒட்டி, 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையோடு இப்போதைய நிலையை ஒப்பிட்டுச் சொல்லுமாறு 15 நாடுகளைச் சேர்ந்த பெண்களிடம் கேட்கச் சொல்லி சவந்தா காம்ரெஸ்ஸிடம் பிபிசி கூறியது.

  • ஒவ்வொரு நாட்டிலும் கணக்கெடுப்பட்ட பெண்களில் குறைந்தது பாதி பேர், தங்கள் சொந்த நிதிசார்ந்த முடிவுகளை 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைவிட இப்போது எடுக்க முடிவதாகக் கூறுகிறார்கள்.
  • அமெரிக்கா, பாகிஸ்தான் தவிர ஒவ்வொரு நாட்டிலும் குறைந்தது பாதிப் பேர் தனது துணையுடன் தனது சம்மதம் குறித்து விவாதிப்பது பெண்களுக்கு எளிதாக இருப்பதாகக் கருதுகிறார்கள்.
  • பெரும்பாலான நாடுகளில், கணக்கெடுப்பட்டவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பெண்கள், சமூக ஊடகங்கள் தங்கள் வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியதாகக் கூறினர். அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் இந்த அளவு 50 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தது.
  • 12 நாடுகளில் 40% அல்லது அதற்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தும் சுதந்திரம் குறித்த விஷயத்தில் தான் கடந்த 10 ஆண்டுகளில் தங்கள் வாழ்க்கை மிகவும் முன்னேறியுள்ளது எனக் கூறுகிறார்கள்.
  • அமெரிக்காவில் கணக்கெடுப்பட்டவர்களில் 46% பேர் 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட மருத்துவரீதியாகப் பாதுகாப்பான கருக்கலைப்பை அணுகுவது பெண்களுக்குக் கடினமாக இருப்பதாகக் கருதுகின்றனர்.

மனநல மருத்துவர் லக்ஷ்மி விஜயகுமார், இந்த நாடுகளில் அதிகமான பெண்கள் கல்வியறிவு பெற்றவர்களாகவும் வேலையிலும் பொருளாதார ரீதியாகவும் சுதந்திரமாகிவிட்டதால் ஏற்பட்ட பதற்றங்களின் விளைவு இது என்று நம்புகிறார்.

“அதேநேரத்தில் அவை பழைமையான, ஆணாதிக்க அமைப்புகள், கலாசாரத்தால் இணைக்கப்பட்டன. வீட்டில்  ஓர் ஆணாதிக்க அமைப்புக்கும் வீட்டிற்கு வெளியே ஒரு விடுதலை பெற்ற பெண்ணுக்கும் இடையிலுள்ள முரண்பாடு மிகுந்த கோபத்தை ஏற்படுத்துகிறது,” என்று அவர் கூறுகிறார்.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலையும் சென்னையில் அவர் இதைக் காண்கிறார்.

பெண் கோபம்

“ஆண்கள் சாவகாசமாகச் சென்று ஓய்வெடுப்பதையும் தேநீர் கடைகளுக்குச் செல்வதையும் புகை பிடிப்பதையும் பார்ப்பீர்கள். ஆனால், மறுபுறம் பெண்கள் பேருந்து அல்லது ரயில் நிலையத்திற்கு விரைந்து செல்வதைக் காண்பீர்கள். வீடு திரும்பியவுடன் என்ன சமைக்கலாம் என்று அவர்கள் சிந்திக்கிறார்கள்.”

கடந்த காலத்தில், பெண்கள் கோபமாக இருப்பதாகச் சொல்வது பொருத்தமானதாகக் கருதப்படவில்லை. ஆனால் அது மாறி வருவதாகக் அவர் கூறுகிறார். மேலும், “இப்போது அவர்களுடைய உணர்ச்சிகளைக் கொஞ்சம் அதிகமாக வெளிப்படுத்த முடிகீறது. அதனால் கோபமும் அதிகமாக உள்ளது,” என்கிறார் அவர்.

பெண்களின் வேலையில் பெருந்தொற்று பேரிடரின் தாக்கமும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம். ஐநா பெண்கள் பாதுகாப்பு அமைப்பின் தரவு ஆய்வாளர் ஜினெட் அஸ்கோனாவின் கூற்றுப்படி, 2020க்கு முன்பு பெண்கள் பொதுவெளி வேலைத்திறனில் பங்கெடுக்கும் முன்னேற்றம் மெதுவாக நடந்தது. ஆனால், 2020ஆம் ஆண்டில் அது நின்று போனது. இந்த ஆண்டு 169 நாடுகளில் பணியாற்றும் பெண்களின் எண்ணிக்கை 2019ஆம் ஆண்டு இருந்த எண்ணிக்கைக்குக் கீழே இருக்குமென்று கணிக்கப்பட்டுள்ளது.

“நம்மிடம் பாலினத்தை பிளவுபடுத்தும் வகையிலான தொழிலாளர் சந்தை உள்ளது,” என்று அமெரிக்காவை சேர்ந்த பெண்ணிய எழுத்தாளர் சோரயா செமலி கூறுகிறார். அவர் கோபத்தைப் பற்றி 2019ஆம் ஆண்டில் ரேஜ் பிகம்ஸ் ஹெர் என்ற நூலை எழுதியுள்ளார்.

பராமரிப்பு போன்ற பெண்கள் ஆதிக்கம் செலுத்தும் தொழில்களில் தொற்றுநோய்ப் பேரிடரால் வீழ்ச்சி ஏற்படுவதாகக் கருதுகிறார்.

“இது மிகக் குறைந்த ஊதியம் தரப்படும் வேலை. இந்த மக்களிடையே அடக்கி வைக்கப்பட்ட, திசைதிருப்பப்பட்ட அதிகளவு கோபத்தைக் கொண்டுள்ளனர். மேலும் எந்தவிதமான சட்டபூர்வ எல்லைகளுமின்றி அயராது உழைக்க வேண்டுமென்று எதிர்பார்க்கப்படுவதோடு இது அதிகத் தொடர்பு கொண்டுள்ளது.

பெண்களிடையே அதிகரித்து வரும் கோபம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இதேபோன்ற இயக்கவியல் பெரும்பாலும் எதிர்பாலின திருமண உறவுகளில் காணப்படுவதாக அவர் கூறுகிறார்.

அமெரிக்காவில், பெண்கள் மீதான தொற்றுநோய்ப் பேரிடரின் சுமை குறித்து அதிகம் எழுதப்பட்டுள்ளது. ஆனால், கேல்லப் வேர்ல்டின் கருத்துக் கணிப்பு முடிவுகள் அங்குள்ள பெண்கள் ஆண்களைவிடக் கோபமாக இருப்பது குறிப்பிடப்படுவதில்லை.

“அமெரிக்காவிலுள்ள பெண்கள் கோபத்தை மிகவும் அவமானமாக உணர்கிறார்கள்,” என்று சோரயா செமலி கூறுகிறார். மேலும், அவர்களுடைய கோபத்தை மன அழுத்தம் அல்லது கவலை எனப் பதிவு செய்ய அதிக வாய்ப்புள்ளது.

குறிப்பிடத்தக்க வகையில், அமெரிக்க பெண்கள் ஆண்களைவிட அதிகளவு மன அழுத்தம், கவலை எனப் பதிவு செய்துள்ளனர்.

மற்ற இடங்களிலும் அதுதான் உண்மை. ஆண்களைவிட அதிகமான பெண்கள் பிரேசில், உருகுவே, பெரு, சிப்ரஸ், கிரேக்கம் ஆகிய நாடுகளில் மன அழுத்தத்திற்கு ஆளாவதாகக் கூறினர். பிரேசிலில் 10 ஆண்களில் நான்கு பேர் நாளின் பெரும்பகுதியில் மன அழுத்தத்தை உணர்ந்ததாகத் தெரிவித்தனர். அவர்களோடு ஒப்பிடுகையில் 10 பேரில் 6 பேர் அதைத் தெரிவித்தனர்.

பொலிவியா, பெரு, எக்வடோர் ஆகிய நாடுகளும் பாலினங்களுக்கு இடையே பெரிய வேறுபாட்டைக் கொண்டுள்ளன.

பொலிவியா, எக்வடோரில் ஏறக்குறைய பாதி பெண்கள் முந்தைய நாளின் பெரும்பகுதியில் வருத்தத்தோடு இருந்ததாகக் கூறியுள்ளன. இது ஆண்களைவிட 15 சதவீதம் அதிகம்.

ஆண்களைவிட பெண்கள் எதிர்மறை உணர்ச்சிகளை அதிகமாக உணரும் போக்கு இந்த நாடுகளில் 2012 வரை செல்கிறது. மேலும் பல நாடுகளில் இது மோசமாகி வருகிறது.

ஆனால், அமெரிக்காவிலும் பிற இடங்களிலும் உள்ள பல பெண்கள் “இனி பொறுக்க முடியாது” என்ற நிலைக்கு இப்போது வந்துள்ளனர் என்று தஹ்ஷா ரெனி கருதுகிறார்.

“ஒருவிதத்தில் அது மாற்றத்தை எளிதாக்குகிறது. அவர்கள் அதற்குத் தங்கள் கோபத்தைப் பயன்படுத்துகிறார்,” எனக் கூறுகிறார்.

“உங்களுக்கு ஆத்திரமும் கோபமும் தேவை. சில நேரங்களில் நிலையைச் சமாளிக்க, மக்கள் நீங்கள் சொல்வதைக் கவனிக்க வைக்க, இவை உங்களுக்குத் தேவை” என்று ஐ.நா பெண்கள் பாதுகாப்பு அமைப்பில் ஜினெட் அஸ்கோனா ஒப்புக் கொள்கிறார்.

தரவு செய்திப்பிரிவு: லியானா பிராவோ, கிறிஸ்டின் ஜீவன்ஸ், ஹெலினா ரோசிக்கா

வலேரியா பெராசோ, ஜார்ஜினா பியர்ஸ் ஆகியோர் இதில் கூடுதல் செய்தியளித்துள்ளனர்.

கணக்கெடுப்பு முறைகள்

பெண்கள் கோபம் ஆய்வு

பட மூலாதாரம்,GETTY IMAGES

கேல்லப் ஆண்டுதோறும் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் 120,000 பேரிடையே ஆய்வு செய்கிறது. இது உலகின் வயது வந்தோரில் 98 சதவீதத்திற்கும் அதிகமான மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. தோராயமாக தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய பிரதிநிதித்துவ மாதிரிகளைப் பயன்படுத்துகிறது. நேர்காணல்கள் நேருக்கு நேர் அல்லது தொலைபேசி மூலம் மேற்கொள்ளப்படுகின்றனர். இதில் கிடைக்கும் கண்டுபிடிப்புகளிலுள்ள பிசிறுகள், நாடு மற்றும் கேள்விக்கு ஏற்ப மாறுபடும். மாதிரி அளவுகள் சிறியதாக இருக்கும்போது, சான்றாக, பதில்களின் தொகுப்பைப் பாலினரீதியாகப் பிரிக்கும்போது, பிசிறு அதிகமாக இருக்கும். 2021 கேல்லப் கருத்துக்கணிப்பிற்கான முழு தரவு அட்டவணைகளை இங்கே பதிவிறக்கம் செய்யலாம்.

சவந்தா காம்ரெஸ், எகிப்து (1,067), கென்யா (1,022), நைஜீரியா(1,018), மெக்சிகோ (1,109), அமெரிக்கா (1,042), பிரேசில் (1,008), சீனா (1,025), இந்தியா (1,107) இந்தோனீசியா (1,061), பாகிஸ்தான் (1,006), சவுதி அரேபியா (1,012), ரஷ்யா (1,010), துருக்கி (1,160), பிரிட்டன் (1,067), யுக்ரேன் (1,009) ஆகிய நாடுகளில் 17 அக்டோபர் முதல் 16 நவம்பர் வரை 18 வயதுக்கு மேற்பட்ட 15,723 பெண்களை இணையவழியில் ஆய்வு செய்தது.

வயது மற்றும் பிராந்தியத்தின் அடிப்படையில் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள பெண்களை முன்னிறுத்தும் வகையில் தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டன. ஒவ்வொரு நாட்டின் முடிவுகளுக்குமான பிழை விளிம்பு, +/- 3. முழு தரவு அட்டவணைகளையும் இங்கே காணலாம்.

https://www.bbc.com/tamil/articles/c3gx4e4yx42o

கணவர்கள் அவதானம்🤭

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இரண்டு மில்லியன் ரூபாவிற்கும் மேல் மோசடி செய்த உக்ரைன் (Ukraine) பிரஜைகள் இருவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேபர்கள் இருவரும் தனியார் வங்கி ஒன்றின் ஆண்டு நிறைவுக்கு பரிசுகள் தருவதாக முகப்புத்தகத்தில் விளம்பரம் செய்து இந்த பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர். குறித்த விளம்பரத்தைப் பார்த்து இணைப்பை உள்ளிடுபவர்களின் வங்கிக் கணக்குத் தகவல் உட்பட பல தனிப்பட்ட தகவல்கள் அதில் சேர்க்கப்பட வேண்டும். கைது நடவடிக்கை இவ்வாறு பிரவேசிக்கும் நபர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்ட பணத்தை ஒரு குழுவினர் மோசடி செய்து செல்வதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன்படி, விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறை உத்தியோகத்தர்கள் உனவடுன பிரதேசத்தில் இருந்து இது தொடர்பான மோசடி இடம்பெறுவதை கண்டுபிடித்துள்ளனர். விசாரணை அதிகாரிகள் அங்கு சென்று 2 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர்கள். நீதிமன்ற உத்தரவு கடந்த 5 நாட்களுக்கு முன்னர் இந்த நாட்டுக்கு வந்துள்ள இவர்கள், டெலிகிராம் குழு ஒன்றின் ஊடாக இந்த மோசடிகளை மேற்கொண்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. சந்தேகநபர்கள் இன்று (28) கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். https://ibctamil.com/article/ukrainians-arrested-for-money-laundering-gifts-1727533926?itm_source=parsely-api#google_vignette
    • களுத்தரா....,  மாத்தரா...., குருனிகலா...., கல்லே.... 😂
    • காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக ஒரு சமிக்கை காட்டினால் மட்டுமே ஜனாதிபதி உண்மையான மாற்றத்தை கொண்டுவந்ததாக கூற முடியும் - வவுனியா வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் 28 SEP, 2024 | 03:37 PM ஜனாதிபதி காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக ஒரு சமிக்கையை காட்டினால் மட்டுமே உண்மையான மாற்றத்தை கொண்டுவந்தார் என எங்களால் கூற முடியும் என்று வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத் தலைவி சி.ஜெனிற்றா தெரிவித்தார். இன்று (28) தனது இல்லத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,  யுத்தம் முடிவடைந்து 15 வருடங்கள் கடந்துள்ளது. இறுதி யுத்தத்தின்போது சிறுவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் செல்வீச்சுக்களினாலும் விமான குண்டு தாக்குதலாலும் உடல் சிதறி படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதற்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை.  மேலும், இறுதி யுத்தம் முடிவடைந்த  நிலையில் குடும்பம் குடும்பமாக இடம்பெயரும்போது  தங்களது பிள்ளைகளை கையிலே ஒப்படைத்தனர். இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட பள்ளி மாணவர்களும் பச்சிளங்குழந்தைகளும் ஆயுதம் ஏந்தி போராடியவர்களா? இவர்களுக்கு என்ன நடந்தது? கடந்த எட்டு தசாப்த காலமாக பதவி வகித்த எட்டு ஜனாதிபதிகளுக்கே யுத்தத்தை நடாத்திய பொறுப்பு இருக்கிறது. இந்நிலையிலே கையில் ஒப்படைக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நிகழ்ந்தது என்று தெரியாமல் வீதியிலே போராடிக் கொண்டிருக்கிறோம். ஆட்சியாளர்கள் மாறுகின்றார்கள், ஆட்சியும் மாறுகின்றது. தற்போது மாற்றம் ஒன்று நிகழ்ந்துள்ளது என்றாலும் கூட அது எந்த வகையில் எமக்கான மாற்றத்தை தரும் என்பது தெரியாது. சர்வதேச நீதி நெறிமுறைமையை மட்டுமே நாம் இன்று வரை நம்பியிருக்கின்றோம். குறிப்பாக உள்ளக முறையில் எந்தவித நம்பிக்கையும் இல்லாத காரணத்தினால் நாங்கள் சர்வதேச நீதிப் நெறிமுறைக்காகவே இதுவரை போராடிக்கொண்டிருக்கின்றோம்.  300க்கு மேற்பட்ட தங்களது பிள்ளைகள் எங்கே என்று தெரியாமல் போராடிக்கொண்டிருந்த தாய், தந்தையரை இழந்த நிலையிலும் அவர்களின் ஏக்கத்துக்காகவும் நாம் தொடர்ச்சியாக போராடிக் கொண்டிருக்கின்றோம். இலங்கையில் சர்வதேச சிறுவர் தினத்தை கொண்டாடுபவர்களுக்கு ஒரு வேண்டுகோளினை விடுக்கின்றோம். எமது உறவுகள் எத்தனை பச்சிளம் குழந்தைகளையும், பாடசாலை மாணவர்களையும் இழந்து அவர்கள் மீண்டும் வருவார்களா என்ற ஏக்கத்துடனும் தவிப்புடனும் வாழ்ந்து வருகின்றனர். இவர்களை  உங்கள் பிள்ளைகளாக நேசியுங்கள். எனவே, சர்வதேச சிறுவர் தினமான ஒக்டோபர் முதலாம் திகதியன்று வடக்கு, கிழக்கு தழுவிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுக்க உள்ளோம்.  அந்த வகையில் வவுனியா மாவட்டத்தில் பழைய பேருந்து நிலையத்துக்கு முன்பாக காலை 10 மணிக்கு இந்த போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளோம். எனவே இப்போராட்டத்துக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இலங்கை அரசானது 75 வருடகாலமாக தமிழ் மக்களை ஏமாற்றி இருந்தது. பரம்பரை பரம்பரையாக 08 ஜனாதிபதிகள் மாறி மாறி ஆட்சி செய்திருந்த நிலையிலே எங்களுக்கு எந்தவித மாற்றங்களும் நிகழவில்லை. எனவே, எந்த நிலையிலும் எந்த ஒரு அரசையும் நம்பவில்லை.  காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக  ஜனாதிபதியாக பதவியேற்க முன்னர் குறிப்பிட்டிருந்தார்.  குறிப்பாக, சர்வதேச பொறிமுறையின் ஊடாக உண்மைகளை கண்டறிந்து, குற்றவாளிகளுக்கு தண்டனையை பெற்றுக்கொடுத்து மீள் நிகழாமையை உறுதிப்படுத்தும் நிலையில் புதிய ஜனாதிபதியை பற்றி யோசிக்க முடியும். எந்த ஜனாதிபதி வந்தாலும் எமக்கான தீர்வு கிடைக்கப் பெற வேண்டும் என்பதையே சர்வதேசத்திடம் கேட்டுக்கொள்கிறோம். எனவே, புதிய ஜனாதிபதி ஏதாவது ஒரு சமிக்கையை காட்டினால் மட்டுமே உண்மையான மாற்றத்தை கொண்டுவந்தார் என எங்களால் கூற முடியும் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/194991
    • நஸ்ரல்லாவை சாய்த்த இஸ்ரேல்: நிலை தடுமாறி அமைதியாய் நிற்கும் ஈரான் ஈரான் (Iran) ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நஸ்ரல்லா (Nasrallah)படுகொலை செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் (Israel) அறிவித்தும், ஈரான் அமைதி காத்து வருவது அந்நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இஸ்ரேலின் அறிவிப்பிற்கு ஹிஸ்புல்லா, லெபனான் தரப்பிலிருந்தும் எவ்வித உறுதிபடுத்தப்பட்ட தகவல்களும் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில், லெபனானில் இஸ்ரேலின் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர், இதற்கு எதிராக ஈரான் மற்றும் ஏமன் நாடுகளில் பொதுமக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஈரானின் செயற்பாடு எவ்வாறானெதொரு பின்னணியில், இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு எதிராக ஈரான் அமைதியாக இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக, இத்தகைய சூழலில் ஈரான் கடுமையான பதிலடிகளை வழங்கும், ஆனால் இப்போது மிதவாதம் காட்டுவதாக உள்ளதாக ஈரானின் செயற்பாடுகள் அமைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், இது ஈரானில் உள்ள பழமைவாதிகள் மத்தியில் பாரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், எதிர்காலத்தில் இது அரசியல் மாற்றங்களுக்கு காரணமாக இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இறுதி இலக்கு லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்றிரவு நடத்தப்பட்ட தொடர் வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பின் மொத்தம் 18 பேர் முக்கிய தளபதிகள் இருந்த நிலையில்,17 பேரை இஸ்ரேல் ஏற்கனவே படுகொலை செய்தது. இறுதியாக நஸ்ரல்லா மட்டுமே உயிருடன் இருந்த நிலையில் தற்போது அவரும் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.  https://ibctamil.com/article/death-of-hassan-nasrallah-pressure-on-iran-1727524484#google_vignette
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 3 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.