Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் Review: நாயகன் வடிவேலுவால் கூட படத்தைக் காப்பாற்ற முடியாதது சோகம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் Review: நாயகன் வடிவேலுவால் கூட படத்தைக் காப்பாற்ற முடியாதது சோகம்!

912411.jpg  
 

காமெடி கடத்தல் மன்னன் ஒருவன் அசல் ரவுடிகளை கதறவிட்டு, ஓடவிட்டால்... அதுதான் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’. பணக்கார வீட்டு நாய்களை குறிவைத்து கடத்தி அதன் உரிமையாளர்களிடம் பணம் பறிக்கும் ‘காமெடி’ கடத்தல் மன்னன் நாய் சேகர் (வடிவேலு). இடையில் நிஜ ரவுடி ஒருவரின் நாயைக் கடத்தி சிக்கலில் மாட்டிக்கொள்கிறார். பின்னர் ஊரைவிட்டு கிளம்பலாம் என நினைக்கும்போது, அவரது சொந்த நாயையே ஒருவர் கடத்தி வைத்து, அதன் யோகத்தால் கோடிகளில் புகழடைந்திருப்பதை அறிந்து, அதை மீட்க புறப்படுகிறார். இறுதியில் தனது நாயை நாய் சேகர் மீட்டாரா? இல்லையா? அதற்கிடையில் அவருக்கு வந்த பிரச்சினைகளை எப்படி சமாளித்தார்? - இதுதான் படத்தின் திரைக்கதை.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் மீண்டும் வடிவேலு. பார்வையாளர்கள் பார்த்துப் பார்த்து ரசித்து குலுங்கி சிரித்த தனது தனித்துவ உடல் மொழியை வார்த்திருக்கிறார். அவருக்கான அறிமுகக் காட்சிகள் கூஸ்பம்ஸ்! கிட்டத்தட்ட ஒரு மாஸ் ஹீரோவுக்கு இணையான அந்த இன்ட்ரோ காட்சி ரசிக்க வைக்கிறது. அந்த தனக்கான பாடிலாங்குவேஜில் ஸ்டைலாக நடந்து வருவது, வசனமற்ற காட்சிகளிலும் தனது முகபாவனையால் சிரிக்க வைப்பது, இங்கிலீஷ் பேசும் அந்த ஸ்டைல், டம்மியான தன்னை மாஸாக காட்ட நினைத்து பல்பு வாங்குவது என ஈர்க்கிறார். ஆனாலும், இயல்பான அந்த வின்டேஜ் வடிவேலு ஏனோ மிஸ்ஸிங்!.

ஆனந்த்ராஜ் நகைச்சுவைக் காட்சிகளுக்கான பக்கா மெட்டீயரில். ரிட்டையர்டு ரவுடியை வைத்து, டம்மி கூட்டாளிகளுடன் அவர் நடத்தும் ‘கடத்தல்’ தர்பார் பல இடங்களில் ரசிக்க வைக்கிறது. இரண்டாம் பாதியில் வரும் ராவ் ரமேஷின் நடிப்பு கவனம் பெறுகிறது. ரெடின் கிங்க்ஸ்லீ வழக்கமான தனது பாணியில் சில இடங்களில் புன்முறுவலையும், ஒரு சில காட்சிகளில் சத்தமாக சிரிக்கவும் வைக்கிறார். செட் ப்ராபர்டிகளாக வருகிறார் ஷிவாங்கி. பிரசாந்தை முதல் பாதியுடன் முடித்து அனுப்பும் இயக்குநர் அந்த இடத்தில் இரண்டாம் பாதிக்கு ஷிவானியை தேர்ந்தெடுத்துள்ளார். தவிர முனிஷ்காந்த், லொள்ளு சபா ஷேஷூ, கேபிஒய் ராமர், கேபிஓய் பாலா, லொள்ளு சபா மாறன், மனோபாலா தேவையான நடிப்பை பதிவு செய்கின்றனர்.

சுராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தின் முதல் பாதி திரைக்கதையில் நகைச்சுவை வறட்சி தலைவிரித்தாடுகிறது. காமெடியை எதிர்நோக்கி காத்திருக்கும் பார்வையாளர்களுக்கு ஆனந்த்ராஜ் திரையில் தோன்றுவது சற்று ஆறுதல். மற்றபடி, வடிவேலு நாய் கடத்துபவர் என காட்ட நினைத்து வைக்கப்பட்ட பெரும்பாலான காட்சிகள் உப்பு சப்பில்லாதவை. ஆனந்த்ராஜ் - வடிவேலு நேருக்கு நேர் சந்திக்கும் காட்சிகள் சுவாரஸ்யம். நிறைய காமெடி நடிகர்கள் இருந்தும் அவர்களால் திரைக்கதைக்கு தேவையான நகைச்சுவை கொடுக்க முடியாததாலும், அழுத்தமில்லாத காட்சிகளாலும் வடிவேலுவால் கூட முதல் பாதியைக் காப்பாற்ற முடியவில்லை.

‘கொண்டைக்கு கோகனேட் ஆயில்’, ‘நீங்க டாக்டரா டையலாக் ரைட்டரா’, ‘பங்களாவா இங்க இருக்காரு பாரு சிங்கிளா’ என ரைமிங் டயலாக்குகள் சில இடங்களில் கைகொடுக்கின்றன. இரண்டாம் பாதியில் கண்தெரியாத மாற்றுத்திறனாளியாக ஸ்கோர் செய்கிறார் வடிவேலு. இடையில் வரும் பாஸ்வேர்டு காமெடியும், க்ளைமாக்ஸும் சிரிப்பலையை எழுப்புகின்றன. இதைத்தாண்டி படத்தில் பெரிய அளவில் சிரிக்கவோ, ரசிக்கவோ, அழுத்தமான திரைக்கதைக்கோ எந்த இடத்திலும் இடமளிக்காதது கைபேசியை கையிலெடுக்க தூண்டுகிறது.

‘அப்பத்தா’ பாடலுக்கான பின்னணி இசையை பெரும்பாலான இடங்களில் பிணைத்து, காமெடி காட்சிகளுக்கான இசையை தேவைக்கேற்ப கொடுத்திருக்கிறது சந்தோஷ் நாரயணனின் ஃபேன்பாய் மூவ்மென்ட். வடிவேலுவுக்கான ஆடைகள் தேர்வு கிட்டத்தட்ட ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ சந்தானத்தின் உடைத் தேர்வை நினைவுபடுத்தியது.

வடிவேலு தன்னால் முடிந்த நடிப்பையும், உழைப்பையும் செலுத்தியிருப்பது பளிச்சிடுகிறது. ஆனால், அவரை இன்னும் பயன்படுத்தியிருக்கலாம் என தோன்றுகிறது. குறிப்பாக மொத்தப் படமும் முழுமையற்று ஒரு சில காமெடி காட்சிகளை மட்டும் பார்த்த உணர்வைத் தருகிறது. தவிர கதையாகவோ, திரைக்கதையாகவோ எந்த இடத்திலும் அழுத்தம் மேலோட்டமாக நகரந்தது பலவீனமான எழுத்தை உறுசெய்கின்றன.

மொத்தத்தில் வடிவேலுவின் ‘நாய் சேகர்’ பார்வையாளர்கள் மனதில் நீங்கா இடத்தில் நிலைகொள்ளும் என கருதினால், அது சில காமெடிக் காட்சிகளைத் தாண்டி பெரிய அளவில் ஆட்கொள்ளாமல் கடந்திருக்கிறது.

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் Review: நாயகன் வடிவேலுவால் கூட படத்தைக் காப்பாற்ற முடியாதது சோகம்! | Naai Sekar Returns review - hindutamil.in

  • கருத்துக்கள உறவுகள்

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்: விமர்சனம்!

KaviDec 10, 2022 09:16AM
ஷேர் செய்ய : 
ZoitLokS-vadivelu-1.jpg

அட்லி இயக்கத்தில் 2017ஆம் ஆண்டு வெளிவந்த “மெர்சல்” படத்திற்கு பிறகு கடந்த ஐந்து வருடங்களாக  நடிகர் வடிவேலு தமிழ் படங்களில் நடிக்கவில்லை.

லைகா புரடெக்ஷன்ஸ் தயாரிப்பில் மருதமலை, தலைநகரம் போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய சுராஜ் திரைக்கதை வசனம் எழுதி இயக்கிய நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் கதையின் நாயகனாக வடிவேலு நடிக்கிறார் என்கிற அறிவிப்பு வெளியானது. அப்போது தமிழ் பேசும் சமூகம் அந்தப் படம் வெளியாகும் நாளை ஆசையுடன் எதிர்பார்த்து காத்திருந்தது.

ஐந்து ஆண்டுகாலமாக வடிவேலு நடித்த புதிய படங்கள் வெளியாகவில்லை என்றாலும் தொலைக்காட்சி, வலைதளங்கள், வாட்சப், மீம்ஸ்கள் என தமிழ் பேசும் மக்களின் அன்றாட வாழ்க்கையில் எப்போதும் இருந்தார். அவரை அகன்ற திரையில் காண காத்திருந்தனர்.

இந்நிலையில் தான் நேற்று (டிசம்பர் 9) உலகம் முழுவதும் “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்” வெளியானது.

இப்படத்தில் நாய்சேகர் என்ற  கதாபாத்திரத்தில் வடிவேலு, சிவாங்கி கிருஷ்ணகுமார், ரெடின் கிங்ஸ்லி, ஷிவானி நாராயணன், ஆனந்தராஜ், முனிஷ்காந்த், ஆர்.ஜே.விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேசு, பூச்சி முருகன், மனோபாலா மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். டிரெய்லரில் வடிவேலுவை ‘இந்தியாவின் முதல் நாய் கடத்தல்காரன்’ என்று அறிமுகப்படுத்தினார்கள்.

வடிவேலு நடந்தால், நின்றால், பேசினால், அழுதால், சிரித்தால் எல்லாமே பார்ப்பவர்களை மனம்விட்டு சிரிக்க வைக்கும் அற்புத கலைஞன். ஐந்து ஆண்டுகளுக்கு பின் அவர் நடிப்பில் வெளியாகும் படம் நகைச்சுவையில் அதகளம் செய்யும் என்ற எதிர்பார்ப்பில் படத்தை பார்த்தவர்களுக்கு பெரும் ஏமாற்றம் ஏற்பட்டது.

புதிய மொந்தையில் ஊற்றிய பழைய கள்ளாகவே இருக்கிறது, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் கதையும், அதில் இடம்பெற்றுள்ள நகைச்சுவை காட்சிகளும்.

அப்படி என்னதான் கதை

வடிவேலுவின் பெற்றோர்களுக்கு குழந்தை இல்லாமல் இருந்து வருகிறது.  குழந்தை வரம் வேண்டி கோவிலுக்கு செல்கின்றனர். அப்போது அங்கு ஒரு சித்தரும் வருகிறார். பசியுடன் இருக்கும் அவருக்கு உணவளித்து உதவும், வடிவேலு பெற்றோருக்கு அந்த சித்தர்  நாய் ஒன்றை பரிசாக கொடுக்கிறார். 

அந்த நாய் வந்த நேரம் அந்த தம்பதிகளுக்கு குழந்தை ஒன்று பிறக்கிறது. அவர் தான் நாய் சேகர்(வடிவேலு). 

அதே நேரம் வறுமையில் வாடிக் கொண்டிருந்த அந்த குடும்பத்திற்கு வசதி வந்து சேர்கிறது. ஒரு கட்டத்தில் வீட்டில் வேலை செய்து வரும் ஒருவர் அந்த ராசியான நாயை திருடி சென்று விட திருடியவர் பணக்காரனாகி விடுகிறார். நாய் சேகரின் குடும்பம் மீண்டும் பழையபடி வறுமை நிலைக்கு செல்கிறது.

அந்த நாயை தேடி கண்டுபிடிப்பதற்காக தனது குழுவை அழைத்துக் கொண்டு நாயை தேடிச் செல்கிறார் வடிவேலு, அவர் இறுதியில் அந்த நாயை மீட்டாரா? என்ன நடந்தது என்பது குறித்த கதை தான் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்.

அதேசமயம் பணக்காரர்களின் நாய்களையும் கடத்தி பணம் பறிக்கும் வேலையில் வடிவேலு ஈடுபட்டு வருகிறார். 

அப்படி தன் குழுவினருடன் ஒரு நாயை கடத்திக் கொண்டு வருகிறார். அந்த நாய் வில்லன் ஆனந்தராஜுடையது என்பது தெரிய வருகிறது. அங்கிருந்து தான் பிரச்சனை ஆரம்பம் ஆகிறது.

ஹைதராபாத்தில் இருக்கும் வசதியானவரிடம் இருந்து தன் குடும்பத்திற்கு  ராசியான நாயை நாய் சேகர் மீட்க முயற்சிப்பதை இரண்டாம் பாதியில் காட்டியிருக்கிறார்கள். 

அந்த முயற்சியில் நாய் சேகர் ஜெயித்தாரா என்பதுதான் படத்தின் இரண்டாம் பாகத்தின் கதை. நாய்களை கடத்தும் கதைநாயகன் என்பது வித்தியாசமான கதையாக இருந்த போதிலும் திரைக்கதையை குதறி எடுத்திருக்கிறார்கள். இப்படத்தின் முதல் பாதி திரைக்கதையில் நகைச்சுவை வறட்சி தலைவிரித்தாடுகிறது. 

வடிவேலு நாய் கடத்துபவர் என காட்ட நினைத்து வைக்கப்பட்ட பெரும்பாலான காட்சிகள் எரிச்சல் அடைய வைக்கிறது. ஆனந்த்ராஜ் – வடிவேலு நேருக்கு நேர் சந்திக்கும் காட்சிகள் சுவாரஸ்யம்.  காமெடி நடிகர்கள் கூட்டமாக இருந்தும் அவர்களால் திரைக்கதைக்கு தேவையான நகைச்சுவையை கொடுக்க முடியாததாலும், அழுத்தமில்லாத காட்சிகளாலும், வடிவேலு தன்னால் முடிந்த நடிப்பையும், உழைப்பையும் கொடுத்தும்ப்கூட படத்தை காப்பாற்ற முடியவில்லை.

படம் எப்படி இருந்தாலும் சில படங்கள் வணிகரீதியாக திரையரங்குகளில் கல்லா கட்டிவிடும். படத்தின் பெயர் அறிவித்த நாள் முதல் “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்” படத்தின் தகவல்கள், அதிகாரபூர்வ செய்திகள், முதல் சிங்கிள்ஸ், பாடல் வெளியீடு, டிரைலர் வெளியீடு என எல்லாவற்றிலும் பிரம்மாண்டத்தையும், பிரமிப்பையும் ஏற்படுத்தி வந்தது. 

அதற்குரிய வரவேற்பு திரையரங்குகளில் நேற்றையதினம் காலைக்காட்சி முதலே இல்லை என்கின்றனர் தியேட்டர் வட்டாரத்தில். அதனை முதல் நாள்” நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்” தமிழ்நாடு முழுவதும் சுமார் ஐம்பது லட்ச ரூபாய் அளவில் மொத்த வசூல் செய்துள்ள தகவல் உறுதிப்படுத்துகிறது.

 

https://minnambalam.com/cinema/naar-sekar-returns-movie-review/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.