Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பல நாடுகள் இலங்கைக்கு நிதி உதவியை நிறுத்த எச்.எஸ்.பி.ஸி. மட்டும் கடன் வழங்கப் போகிறதா? - ரணில்

Featured Replies

அந்த வங்கியின் நிiறைவேற்று அதிகாரியிடம் ரணில் கேள்வி

முழு நாட்டையும் யுத்தத்தில் சிக்கவைத்துக் கொண்டு, ஸ்தீரமற்ற பொருளாதாரத்தில் சிக்கிக் கிடக்கும் இலங்கை அரசிற்கு கடன் வழங்கலாமா? என்பது குறித்துத் தீர்மக்கமாகச் சிந்தித்து முடிவு எடுங்கள்.

இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் எச்.எஸ்.பி.ஸி. வங்கியின் பிரதமநிறைவேற்று அதிகாரி ஸ்டீபன் கே.கிறீனிடம் கேட்டுள்ளார்.

இது தொடர்பாக - இலங்கையின் யுத்த நிலைமை மற்றும் பொருளாதாரத் தன்மை போன்றவற்றை விளக்கி ரணில், ஸ்டீபனுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தள்ளார். அக்கடிதத்திலே மேற்கண்டவாறு கேட்டுள்ளார்.

அக்கடிதத்தில் அவர் மேலும குறிப்பிட்டள்ள விடயங்கள் வருமாறு :-

இலங்கை அரசிற்கு 5 ஆயிரத்து 600 கோடி ரூபா கடன் வழங்குமாறு இலங்கை மத்திய வங்கி உங்களிடம் கேட்டுள்ளததை நாம் அறிவோம். இந்த விடயம் இலங்கை நாடாளுமன்றத்திற்கு அறிவிக்கப்படவில்லை. எந்த நோக்கிற்காக இப்பெருந் தொகையான பணம் பயன்படுத்தப்படப் போகின்றது என்று அரசு அறிவிக்கவுமில்லை.

இந்தக் கடன் வழங்கும் திட்டம் இலங்கை மக்களின் நிதியை நிச்சயம் நாசமாக்கி விடும் என்பதை ஒரு பொறுப்புள்ள எதிர்கட்சித் தலைவர் என்ற வகையில் நான் உங்களுக்கு அறிவிப்பது பொருத்தமானது என்று கருதுகிறேன்.

நாட்டிலுள்ள யுத்த நிலைமையைக் கருத்திற் கொண்டு சமாதானத்திற்கான ஒரு சூழலை உருவாக்கக் கோரி ஜேர்மன் மற்றும பிரிட்டன் போன்ற நாடுகள் இலங்கைக்கு வழங்கவிருந்த நிதி உதவியை ஏற்கனவே வழங்காமல் நிறுத்திவிட்டன.

தற்போதைய யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து நியாயமான அரசியல் தீர்வோன்றை முன்வைக்க இலங்கை அரசால் முடியாமல் இருப்பதன் காரணமாக ஜப்பான், அமெரிக்கா மற்றும் இந்தியா பேன்ற நாடுகளும் நிதி உதவியை நிறுத்தி வைக்க முடிவெடுத்துள்ளன.

2007 மார்ச் மாதம் புலிகள் கட்டுநாயக்கா விமானப்படைத்தளம் மீது தாக்குதல் நடத்தினர். எதிர்காலத்தில் ஏனைய பொருளாதார நிலைகள் மீது தாக்குதல் நடத்தப் போகிறோம், என்றும் புலிகள் எச்சரித்தனர்.

இந்த நிலைமையை முடிவுக்குக் கொண்டுவர உடனடியாகப் புலிகளுடன் பேச்சைத் தொடங்குமாறு நான் பல தடவைகள் இந்த அரசைக் கேட்டுக் கொண்டேன். அவை எவையும் நடைபெறவில்லை.

இதன் காரணமாக வெளிநாட்டு முதலீடுகள் இலங்கைக்கு வருவது குறைந்தது. இதனால், ஏற்பட்ட நிதிப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காகவே அரசு இந்தக் கடனைப் பெறத் திட்டமிட்டுள்ளது என்று நான் நினைக்கின்றேன்.

2007 - ஜூலையில் வருடாந்த பணவீக்கம் 17.6 வீதமாக இருந்தது.

இந்தக் கடன் தொகை மூலம் இராணுவச் செலவை அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது என்று நான் நினைக்கிறேன்.

கடந்த 12 மாதங்களாக இலங்கை ரூபா, அமெரிக்க டொலர் ஒன்றுக்கு எதிராக 10 வீதம் வீழ்ச்சியடைந்துன்ளது என்பதையும் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இவை மக்கள் மீது பாரிய சுமையாகவுள்ளன.

கொழும்புத்துறைமுக விரிவாக்கம், தெற்கு நெடுஞ்சாலை, புத்தளம் - பேராதெனிய நெடுஞ்சாலை, அம்பாந்தோட்;ட துறைமுக நிர்மாணம் மற்றும் நுரைச்சோலை அனல் மின் நிலைய நிர்மானம் ஆகிய பாரிய திட்டங்களுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே நிதி உதவிகளை இலங்கைக்கு வழங்கியுள்ளன. அப்படியாயின் இப்போது பெறப்படும் கடன் எந்தத் திட்டத்திற்காகப் பயன்படுத்தப் போகின்றது என்று அரசு கூறவில்லை.

இந்தக் கேள்வியை நான் ஓகஸ்ட் மாதம் 23ம் திகதி பிரதமரிடம் கேட்டேன். அவரால் பதில் கூறமுடியவில்லை.

இந்த உண்மைகளை நான் உங்களிடம் முன் வைத்துனள்ளேன். இதன் அடிப்படையில் இலங்கைக்குக் கடன் வழங்க வேண்டுமா, இல்லையா என்று நீங்கள் யோசித்து முடிவெடுங்கள்.

குறிப்பட்ட கால எல்லைக்குள் கடனை இந்த அரசால் நிச்சயம் திருப்பித்தர முடியாது. எதிர்கால ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியில் இந்தக் கடனைத் திருப்பிக் கொடுப்பதற்கான பொறுப்பை நாம் ஏற்கமாட்டோம் என்பதனையும் நான் கூறிக் கொள்ள விரும்புகிறேன். என அக்கடிதத்தில ரணில் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி : சுடர் ஒளி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.